Friday, 7 August 2015

பரிவர்த்தனை யோகம் - 2பரிவர்த்தனை யோகம் - 2 4-10 -ஆக அமையும் பரிவார்த்தனைகள் 1-4,2-5,3-6,4-7,5-8,6-9,7-10,8-11,9-10,10-1,11-2,12-3 இந்த நிலைகளில் ஏற்படும் பரிவார்த்தனைகள் பாவத் பாவ அடிப்படையில் 4-10 என்ற கேந்திர அமைப்பில் அமைகின்றது. ஒற்றைப்படை, இரட்டைப்படை ராசிகளில் ஏற்படும் கிரகங்களின் பரிவர்த்தனை ஏற்படும் இதனால் சில கெடுபலன்கள் நிகழும். ராசிகளின் பார்வை பலம் இல்லாதாலும், கிரகங்களில் செவ்வாய், சனி 4-10 பார்வை உள்ளதாலும், உபயராசிகளிலும், சரராசிகளிலும், ஸ்திரராசிகளிலும் பாரிவர்த்தனை பெறும் கிரகங்கள் சுப அசுப பலனை கலந்து தருவார்கள். புதன், குரு பரிவர்த்தனை நலம் தருவதில்ல்லை. 1-5 ஆக அமையும் பரிவர்த்தனைகள் 1-5,2-6,3-7,4-8,5-9,6-10,7-11,8-12,9-1,10-2,11-3,12-4 இந்த நிலைகளில் ஏற்படும் பரிவர்த்தனைகள் பாவத் பாவ அடிப்படையில் 1-5 ஆக கோணநிலையில் அமையும்.ஒரு பாவத்துக்கு 5-9க்கு பாவங்கள் பாவதிதிகள், சுபத்துவமும் யோகாதிபத்யமும் நட்பு நிலையு பெற்று யோகமே செய்வார்கள். சாதரணமாக கிரகங்கள் ஒன்றுக்கொன்று 1-5-9 ஆக அமர்ந்தாலே தங்கள் தாசபுத்தியில் யோகபலனை கூட்டுவார்கள்.மேல் கூறிய இந்த பாவங்களுக்கிடையே பாவாதிகள் மாறி அமரும். காரகபலன் சோபிக்கவே செய்யும்.திசாபுத்தி யோகம் செய்யும். ஆனால் கடகச் செவ்வாயும், விருச்சிகச் சந்திரனும் இந்த அமைப்பால் இரு கிரங்களும் நீச பங்கம் ஏற்படாத பட்சத்தில் தீயபலன் கூடும்.சந்திர, செவ்வாய் தசா புத்தி அலை கழித்துவிடும். ஒற்றைபட பாவங்களின் பரிவர்த்தனைகள் அகச்சார்புடைய விஷயங்கள் சிறப்பை தரும். இரட்டைபட பாவங்களின் பரிவார்த்தனைகள் புறச்சார்புடைய விஷயங்கள் (பொருள் சார்ந்த) சிறப்பைத் தரும். 6-8 ஆக அமையும் பரிவார்த்தனைகள் 1-6,2-7,3-8,4-9,5-10,6-11,7-12,8-1,9-2,10-3,11-4,12-5 ஆக அமையும் பரிவர்த்தனைகள் பாவாத்பாவ அடிப்படையில் 6-8 ஆக அமையும்.லக்னாதிபதி 6-ல் நின்றால் 6-ஆம் அதிபதி 6-க்கு 8-ஆம் இடமான லக்னத்தில் நிற்பார்.இவ்வாறு கெடுபலனையே செய்வார்கள். ஒற்றை, இரட்டை ராசிகளில் மாறி நிற்பதாலும் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் மறைவு பெறுவதாலும் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் மறைவு பெறுவதாலும் ஆதிபத்ய காரக வகையில் பிரச்சனைகளும், பலன்களை நடை பெற தடையும் தாமதமும் ஏற்படும். தீய பலனும் ஏற்படும். (1-6) நோய், வழக்கு, கடன் பிரச்சனைகள்,எதிரிகள் தொல்லைகள் ஏற்படும். (2-7) குடும்பத்திலும், கூட்டுத்தொழிலில் பிரச்சனை, கண் நோய் ஏற்படும். (3-8) ஆயுள் பயம்,பலவித கஷ்டம்,சகோதரர்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். (4-9) தாய்,தந்தை ஆதரவு கிட்டாமை,வீடு,கல்வி தடை நிலபிரச்சனை,பூர்வீகதனம் அடையத் தடை ஏற்படும் (5-10) தொழில் லாபம் பெறத்தடை, தொழில் மாற்றம் ராஜயோக பலன் ஏற்பட்டாலும் திடீர் நஷ்டம் இழப்பு, அவமானம் வரும்,குழந்தையின் நலம் கெடும். (6-11) எங்கும் எதிலும் பிரச்சனை, தடை தாமதம். (7-12) போக சுகம் பெறத்தடை,களத்திர விரோதம் கூட்டுத் தோழில் பிரிவு ஏற்படும். (1-8) ஆயுள் விருத்தி, கஷ்டப்படவைக்கும், போராட்டமாகவே வாழ்வு அமையும்,லட்சியவாதிகள். (2-9) பூர்வீகம், தனம், தந்தை, பணம் வகையில் பிரச்சனை, குடும்பத்தில் சச்சரவு,வழக்கு ஏற்படும். (3-10) பழிச்சொல், அவமானம், ஜாதகர் /ஜாதகியின் நடவடிக்கை விமர்ச்சிக்கப்படும்.தொழில் அடிக்கடி மாற்றம் வரும்.அசட்டு தைரியம், பிரச்சனைகளை வலிய வரவழைத்துக்கொள்வர்கள். (4-11) சுயலாபங்களை போக சுகங்களை,வீடு, வாகனம் அடையத்தடை ஏற்படும். சொத்துகளின் மீது கடன் ஏற்படும். சீரான பொருளாதாரம் இராது. (5-12) பூர்வீக குறைகள், நிறைய இருக்கும், குழந்தைகளின் நலம் கெடும்.புத்தி மந்தம், இப்பாவதிபதிகளும் தம் பலத்தை இழந்து, சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால் மனநோய் வரும். காரகவகை பிரச்சனைகள் வலுக்கவே செய்யும். முக்கியமாக கடகம்,சிம்மம்,மகரம், கும்பம், அதிபதிகளில் பரிவர்த்தனை ஆதிபத்ய காரக பலனை வெகுவாக பாதிக்கவே செய்யும். மேஷசம்,விருச்சிகம் &ரிஷபம், துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இப்பரிவர்த்தனை அமையாது. (1-7) ஆக அமையும் பரிவர்த்தனைகள் 1-7,2-8,3-9,4-10,5-11,6-12,ஆக அமையும் பரிவர்த்தனை பாவத்பாவ அடிப்படையில் 1-7 குரு புதன்& சூரியன் சனி&சந்திரன் சனி&செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை ஆகிய கிரகங்களுக்கு இடையேதான் 1-7 ஆம் பரிவர்த்தனை நிகழும்.இங்கு பரிவர்த்தனையோடு பார்வையும் இணைகிறது. யோகம் ஏற்படும் என்றாலும் முரண்பட்ட இரு கிரங்களுக்கு இடையே இப்பரிவர்த்தனை நிகழ்வதால் ஆதிபத்ய பலனில் வளர்ச்சியும் கிரகங்களின் அடிப்படைகாரக பலனில் முரண்பாடும் நிகழவே செய்கிறது. உதாரணமாக சுக்கிரன், செவ்வாய் பரிவர்த்தனை களத்திரவகை பிரச்சனைகள், சூரியன், சனி பரிவர்த்தனை தந்தை, மகன் பரிவர்த்தனை தந்தை மகன் பிரச்சினைகளும் ஏற்படுவதைக் அனுபவத்தில் காணலாம். சாரப்பரிவர்த்தனை இரு கிரகங்கள் தங்களுக்குள் தங்கள் சுயசாரங்களை பரிமாறிக்கொள்வது சார பரிவர்த்தனை என்கிறோம்.சந்திரன் புனர்பூசம், குரு ரோகிணி நிற்பது சாரப்பரிவத்தனையாகும்.ஒரு கிரகம் தான் பெற்ற கிரகச் சாரத்தின் பலனையே செய்யும் என்பது விதி.எனவே இச்சாரப்பரிவர்தனை பெரும் யோகங்களையும் அல்லது வீழ்ச்சியையும் செய்யவல்லது.சார பரிவர்த்தனை பெரும், இருகிரகங்களின் நட்பு, பகை, ஆதிபத்யம், இருக்கும் ஸ்தானம் ஆகியவற்றை ஆராய்ந்து சார பரிவர்த்தனையின் பலம் காண்பது துல்லியமான ப.சூரியஜெயவேல் 9600607603

பரிவர்த்தனை  யோகம்   -  2

4-10 -ஆக அமையும் பரிவார்த்தனைகள்


  • 1-4,2-5,3-6,4-7,5-8,6-9,7-10,8-11,9-10,10-1,11-2,12-3 இந்த நிலைகளில் ஏற்படும் பரிவார்த்தனைகள் பாவத் பாவ அடிப்படையில் 4-10 என்ற கேந்திர அமைப்பில் அமைகின்றது.

   ஒற்றைப்படை, இரட்டைப்படை ராசிகளில் ஏற்படும் கிரகங்களின் பரிவர்த்தனை ஏற்படும் இதனால் சில கெடுபலன்கள் நிகழும். ராசிகளின் பார்வை பலம்  இல்லாதாலும், கிரகங்களில் செவ்வாய், சனி 4-10  பார்வை உள்ளதாலும், உபயராசிகளிலும், சரராசிகளிலும், ஸ்திரராசிகளிலும் பாரிவர்த்தனை பெறும் கிரகங்கள் சுப அசுப பலனை கலந்து தருவார்கள்.
     புதன், குரு பரிவர்த்தனை நலம் தருவதில்ல்லை.

1-5 ஆக அமையும் பரிவர்த்தனைகள்

1-5,2-6,3-7,4-8,5-9,6-10,7-11,8-12,9-1,10-2,11-3,12-4 இந்த நிலைகளில் ஏற்படும் பரிவர்த்தனைகள் பாவத் பாவ அடிப்படையில் 1-5 ஆக கோணநிலையில் அமையும்.ஒரு பாவத்துக்கு 5-9க்கு பாவங்கள் பாவதிதிகள், சுபத்துவமும் யோகாதிபத்யமும் நட்பு நிலையு பெற்று யோகமே செய்வார்கள். சாதரணமாக கிரகங்கள் ஒன்றுக்கொன்று 1-5-9 ஆக அமர்ந்தாலே தங்கள் தாசபுத்தியில் யோகபலனை கூட்டுவார்கள்.மேல் கூறிய இந்த பாவங்களுக்கிடையே பாவாதிகள் மாறி அமரும். காரகபலன் சோபிக்கவே செய்யும்.திசாபுத்தி யோகம் செய்யும். ஆனால் கடகச் செவ்வாயும், விருச்சிகச் சந்திரனும் இந்த அமைப்பால் இரு கிரங்களும் நீச பங்கம் ஏற்படாத பட்சத்தில் தீயபலன் கூடும்.சந்திர, செவ்வாய் தசா புத்தி அலை கழித்துவிடும்.
           ஒற்றைபட பாவங்களின் பரிவர்த்தனைகள் அகச்சார்புடைய விஷயங்கள் சிறப்பை தரும்.
           இரட்டைபட பாவங்களின் பரிவார்த்தனைகள்  புறச்சார்புடைய விஷயங்கள் (பொருள் சார்ந்த) சிறப்பைத் தரும்.

6-8 ஆக அமையும்  பரிவார்த்தனைகள்

1-6,2-7,3-8,4-9,5-10,6-11,7-12,8-1,9-2,10-3,11-4,12-5 ஆக அமையும் பரிவர்த்தனைகள் பாவாத்பாவ அடிப்படையில் 6-8 ஆக அமையும்.லக்னாதிபதி 6-ல் நின்றால் 6-ஆம் அதிபதி 6-க்கு 8-ஆம் இடமான லக்னத்தில் நிற்பார்.இவ்வாறு கெடுபலனையே செய்வார்கள். ஒற்றை, இரட்டை ராசிகளில் மாறி நிற்பதாலும் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் மறைவு பெறுவதாலும் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் மறைவு பெறுவதாலும் ஆதிபத்ய காரக வகையில் பிரச்சனைகளும், பலன்களை நடை பெற தடையும் தாமதமும் ஏற்படும். தீய பலனும் ஏற்படும்.

(1-6) நோய், வழக்கு, கடன் பிரச்சனைகள்,எதிரிகள் தொல்லைகள் ஏற்படும்.

(2-7) குடும்பத்திலும், கூட்டுத்தொழிலில் பிரச்சனை, கண் நோய் ஏற்படும்.

(3-8) ஆயுள் பயம்,பலவித கஷ்டம்,சகோதரர்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
   
(4-9) தாய்,தந்தை ஆதரவு கிட்டாமை,வீடு,கல்வி தடை  நிலபிரச்சனை,பூர்வீகதனம் அடையத் தடை ஏற்படும்

(5-10) தொழில் லாபம் பெறத்தடை, தொழில் மாற்றம்
ராஜயோக பலன் ஏற்பட்டாலும் திடீர் நஷ்டம் இழப்பு, அவமானம் வரும்,குழந்தையின் நலம் கெடும்.

(6-11) எங்கும் எதிலும் பிரச்சனை, தடை தாமதம்.

(7-12) போக சுகம் பெறத்தடை,களத்திர விரோதம் கூட்டுத் தோழில் பிரிவு ஏற்படும்.

(1-8) ஆயுள் விருத்தி, கஷ்டப்படவைக்கும், போராட்டமாகவே வாழ்வு அமையும்,லட்சியவாதிகள்.

(2-9) பூர்வீகம், தனம், தந்தை, பணம் வகையில் பிரச்சனை, குடும்பத்தில் சச்சரவு,வழக்கு ஏற்படும்.

(3-10) பழிச்சொல், அவமானம், ஜாதகர் /ஜாதகியின் நடவடிக்கை விமர்ச்சிக்கப்படும்.தொழில் அடிக்கடி மாற்றம் வரும்.அசட்டு தைரியம், பிரச்சனைகளை வலிய வரவழைத்துக்கொள்வர்கள்.

(4-11) சுயலாபங்களை போக சுகங்களை,வீடு, வாகனம் அடையத்தடை ஏற்படும். சொத்துகளின் மீது கடன் ஏற்படும். சீரான பொருளாதாரம் இராது.

(5-12) பூர்வீக குறைகள், நிறைய இருக்கும், குழந்தைகளின் நலம் கெடும்.புத்தி மந்தம், இப்பாவதிபதிகளும் தம் பலத்தை இழந்து, சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால் மனநோய் வரும். காரகவகை பிரச்சனைகள் வலுக்கவே செய்யும்.
     முக்கியமாக கடகம்,சிம்மம்,மகரம், கும்பம், அதிபதிகளில் பரிவர்த்தனை ஆதிபத்ய காரக பலனை வெகுவாக பாதிக்கவே செய்யும்.     மேஷசம்,விருச்சிகம் &ரிஷபம், துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இப்பரிவர்த்தனை அமையாது.

(1-7) ஆக அமையும் பரிவர்த்தனைகள்

1-7,2-8,3-9,4-10,5-11,6-12,ஆக அமையும் பரிவர்த்தனை பாவத்பாவ அடிப்படையில் 1-7 குரு புதன்& சூரியன் சனி&சந்திரன் சனி&செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை ஆகிய கிரகங்களுக்கு இடையேதான்  1-7 ஆம் பரிவர்த்தனை நிகழும்.இங்கு பரிவர்த்தனையோடு பார்வையும் இணைகிறது. யோகம் ஏற்படும் என்றாலும் முரண்பட்ட இரு கிரங்களுக்கு இடையே இப்பரிவர்த்தனை நிகழ்வதால் ஆதிபத்ய பலனில் வளர்ச்சியும் கிரகங்களின் அடிப்படைகாரக பலனில் முரண்பாடும் நிகழவே செய்கிறது.
     உதாரணமாக சுக்கிரன், செவ்வாய் பரிவர்த்தனை  களத்திரவகை பிரச்சனைகள், சூரியன், சனி பரிவர்த்தனை தந்தை, மகன் பரிவர்த்தனை தந்தை மகன் பிரச்சினைகளும் ஏற்படுவதைக் அனுபவத்தில் காணலாம்.

சாரப்பரிவர்த்தனை
         இரு கிரகங்கள் தங்களுக்குள் தங்கள்  சுயசாரங்களை பரிமாறிக்கொள்வது சார பரிவர்த்தனை என்கிறோம்.சந்திரன் புனர்பூசம், குரு ரோகிணி நிற்பது சாரப்பரிவத்தனையாகும்.ஒரு கிரகம் தான் பெற்ற கிரகச் சாரத்தின் பலனையே செய்யும் என்பது விதி.எனவே இச்சாரப்பரிவர்தனை பெரும் யோகங்களையும் அல்லது வீழ்ச்சியையும் செய்யவல்லது.சார பரிவர்த்தனை பெரும், இருகிரகங்களின் நட்பு, பகை, ஆதிபத்யம், இருக்கும் ஸ்தானம் ஆகியவற்றை ஆராய்ந்து  சார பரிவர்த்தனையின் பலம் காண்பது துல்லியமான பலனைத்தரும்.

தொடரும்……………

ப.சூரியஜெயவேல் jeyavelan 81@gmail.com

9600607603

No comments:

Post a Comment