Thursday, 31 March 2016

கிரகங்களின் பலம் பலவீனம்

வக்ர பலவீனம் பங்கமடைதல்


               சுபர்களாகிய புதன் , குரு , சுக்கிரன் வக்ரமானால் பலவீனம் .அவை தமது சொந்த மற்றும் காரகத்துவ வீடுகளுக்கு சுப பலன்களை அளிப்பதில்லை .

ஆனால்

    தமது சொந்த வீட்டில் இருந்தால்தமது காரகத்துவ வீட்டில் இருந்தாலோ, தமது உச்சம் பெற்று இருந்தாலோ , வேறு சுபரால் இணைவு பார்வை மூலம் சம்பந்தம் பொற்றாலோ,வக்ர பலவீனம்
பங்கமடைந்து பலம் பெறுகின்றனர் .

அதே போல

     பாவபுதன் அல்லது பாவ சுக்கிரன் வக்ரமானால் பலவீனமான பாவராகி மற்றொரு பாவரோடு இணைவு ,பார்வை மூலம் சம்பந்தம் பெற்றிருந்தாலோ

அல்லது 

6-8-12-ல் இருந்தாலோ
நீசம் பொற்றிருந்தாலோ
வக்ர பலவீனம் பங்கமடைந்து
பலம் மிக்க பாவராகி மிகுந்த பாவ பலனை கொடுப்பர்கள் .
     

நீச்சம் & பங்கமடைதல்

                நீசக்கோள் பலவீனமாது என்று கருதப்பட்டாலும் அது தன் பலத்தைஇழப்பதில்லை. இக் கோளின் பலம் பலவீனமானாலும் ,இந்த நீசக் கோள் சுபரானாலும் ,தன்னுடைய காரகத்துவ வீட்டிலிருந்தால் அந்த வீட்டின் பலத்தைப் பெற்று தனது வீட்டிற்கும்.சுப பயனைத்தரும் .
             ஒரு ஜாதகத்தில் நீச்சம் பெற்று வலுவிழுந்த சுப கிரகம் வலுவில்லாத சுப பலன்களைத் தரும். அதைப் போலவே , நீச்சம் பெற்று வலுவிழந்த ஒரு பாவகிரகம் வலுவில்லாத அசுப பலன்களைத்தரும் .
    ஒரு நீச்சம் பெற்ற பாவகிரகம் ஜாதகர்களுக்கு எந்தவித தடையின்றி தொடர்ந்து சுப பலன்களைத்தரும் .
  (உ ம்) மகர குரு 2-5-7-10-11-ல்
             கடக செவ்வாய் 3-6-ல் பலமானவை
    நீசமான சுபக்கோள் எந்த சுப கோள் இணைவு , பார்வையில் சம்பந்தம் பெற பலம் பெறுகிறது .
               நீசமான பாவகோள் அல்லது சனி 6-8-12-ல் இருக்க நீசம் பங்கமாகி வலிமை மிக்க பாவராவார் ,
    நீச பாவக் கோள் சனியுடன் இணைவு , எதிர்வு ,பார்வை மூலம் சம்பந்தமாக அல்லது
          நீசச் சனி பாவக் கோளுடன் இணைவு எதிர்வு,பார்வை மூலம் சம்பந்தமாக வலிமை மிக்க பாவராவார் .

சூரியன் துலாம் , சந்திரன் விருச்சிகம் ,
செவ்வாய் கடகம் , புதன் மீனம் ,
குரு மகரம் , சனி மேசம்


ப.சூரியஜெயவேல்
9600607603


No comments:

Post a Comment