Thursday, 5 November 2015

சரம் ஸ்திரம் உபய ராசியில் சந்திரன் பலன்

உங்களுடைய சந்திரன் சரத்தில் இருந்தால் ?

கடகம் அதில் வளர் மதியே நின்றிடிலோ நன்மை
       கலை துலையாம் கடனலே நீற்கத் தீதாம்
திடமில்லை அன்னைக்கு நலிவாகும் தேகம்
      சிறப்பில்லை பூர்வம் விட்டுபிரிதால் காட்டும்
விலைமாதர் தமைக்கூடி வேதனைகள் படுவன்
     மேதினில் தேய்மதிக்கு செல்வம் மிக உளனாம்
உடை ஆடை அணியவலன் உண்மைஉடையன்
                                                                                        காண்
      உற்ற மனையாள் வழியில் செல்வம் உளன்
                                                                                 அல்லால்
          உங்களுடைய சந்திரன் உங்கள் ஜாதகத்தில்  வளர்பிறை சந்திரன் கடகத்தில் சிறப்பான  வாழ்வு அமையும் .
     மேஷம், துலாம், மகரம் இவைகளில் இருந்தால்  நன்மை தருவதில்லை அன்னைக்கு உடல் பலவீனம் அடிக்கடி நோய் ஏற்படும்.நீங்கள் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்வீர்கள். பிறர் தொடர்பு ஏற்பட்டு வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
      மேஷம், துலாம், மகரம் தேய்பிறைச் சந்திரன் இருந்தால் செல்வ வளமை கிட்டும்.சிறப்பன ஆடைகளை அணிவர்கள்.நேர்மையுடன் இருப்பார்கள். மனைவி /கணவன் வாழியில் செல்வம் கிடைக்கும்.

சடலம் அதில் பிணியிலான் யோகியர்க்கு
                                                                             அன்பன்
சாந்தகுணத் தன்மையொடு தனியர்க்குவரும்
                                                                     தொழிலான்
கடகமதில் அமர மதிக்கு அரிட்டமதுகண்டாம்
கருது சுகமில்லை அதில் கடன்அதிகம் படுவன்
மடைதிறந்த புனல் எனவே அன்னியதேசத்தின்
மாறி வருதல் பேதவலுவுடைய செல்வ
தடைல்லை அன்னியரால் பூமி நிதி சேர்க்கை
தன சவுக்கியம் உள்ளவனாம் தன்மை
                                                                        இதுவாமே
         ஜாதகர் /ஜாதகிக்கு நோய் பதிப்புகள் இருக்காது. யோகிகளுக்கு உதவிகள் செய்வார்கள். கடகந்தில் சந்திரன் இருந்தால் தாயருக்கு கண்டம் ஏற்படும்.சுகவாழ்வில்லை. அதிக கடன் ஏற்படும். வெளியூரில் வசிப்பார்கள்.செல்வம் கிட்டும். அன்னியரால் பூமி, செல்வ சேர்க்கை கிட்டும். செல்வ வாழ்வு அமையும்.

ஸ்திர ராசியில் சந்திரன் நின்ற பலன் !

திர மென்னும் ராசிதனில் தேய்மதியே நிற்கச்
     சனித்த ஜாதகனுடைய திறமையது கேளாய்   உரம் பாக்கியம் சேரும் உண்மையது எண்பால்
    உற்ற துணையால் பாக்கியம் என்ப அறிது
                                                                           கண்டாய்   விரய மந்திரி அரசர் மகிழ்ச்சி உளதாங்கே
மேதினியில் யோகமுளன் அன்றி இச்செல்வன்   பரவிய சஞ்சலம் உடையன் கோபி எனலாகும்        பலர் பெண்ணை பரவிஅனுபவிப்பன்
                                                                       எனக்கூறே
     ஸ்திர ராசி் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் தேய்பிறை சந்திரன் இருந்தால் செல்வம் பாக்கியங்களும் கிட்டும்.துணைவர்களால் பாக்கியம் கிட்டும்.உயர் பதவி, மகிழ்சியான வாழ்வு அமையும். உலகப் பூகழ் அடைவர்கள். மனசஞ்சலம் அடைவர்கள்.கோபப்படுவர்கள். பிறர் தொடர்பு ஏற்படும்.

திர ராசிதனில் வளர் மதியே நிற்க
  ஜனித்தோன் தன்திறமையது செப்பக்கேளாய்
விரவிய (வா) தீனமது வேறாய் செல்வ
மிகுந்திடுமே சுயார்ஜிதகன் நிலையாம் அன்றி
பரவிய மன்னர் நேயன் யோகி நாட்பாம்
    பலவித்தை மேலோரால்  பெருகிநிற்கும்
திரவியமும் விரையமதாம் சகோதிரங்கள்
  சிறந்திருப்பார் அன்னித்தில் என்று சொல்ளே
              ஸ்திர ராசியில் வளர்பிறை சந்திரன் இருந்தால் சிந்தனைகள் வேறாய்  இருக்கும், செல்வ வளம் கிட்டும்.சுய சம்பாதிப்பார்கள். உயர்நிலையில் உள்ளவர்கள் நட்பும் உறவு கிட்டும்.பல தொழில்கள் செய்வர்கள். சகோதரர்க்கு பதிப்புகள் ஏற்படும். வெளியூரில் சிறப்புடன் இருப்பார்கள்.

உபய ராசியில் சந்திரன் நின்ற பலன்

சிறந்த வளர்மதி உபயராசி தன்னில்
       சிறந்து நிற்கில் செல்வீகன் பெண்பால்
                                                                          தன்னால்
பிறந்த மனைபாழகும் மூன்றாம் பூமி
        பலன்என்பர் இருபாகம் பூமி ஏகன்
வரம்தனிலும் தத்து புத்திரன் ஆகும்செல்வன்
      வாலிபத்தில் சுகம்முடித்தம் மனையில் கூடி
இருந்தவர்க் (கு)  அன்னிய கர்மம் செய்வன்
                                                                                அன்றி
       ஏழில் அரசர்மெச்சும் வித்தை இனிது
                                                                       உள்ளோன்
     வளர்பிறை சந்திரன் உபயராசியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைகளில் இருந்தால் பெண்களால் பிறந்தவீடு பாழகும்.பிறருடைய சொத்தை அனுபவிப்பார்கள். இரண்டு பிரிவு இருக்கும். வரத்தில் பிறந்தவர்கள். சிலர் தத்து புத்திரர்கள் ஆவர்கள்.இளமையில் திருமணம் ஆகும்.அன்னியர்க்கு கர்மம் செய்ய சூல்நிலை ஏற்படும். பலர் பாராட்டும்படியான தொழில்நுட்பம் உள்ளவர்கள்.

கொண்ட உபயந்தனில் தேய்மதியே நிற்க
    குறித்த ஜாதகரின் பலனைக்கேள்
கண்டிடுவய்யோக முளான் கன்னியரின்
                                                                          பகைவன்
     கருத்துடையர்தமைக்கூடி கனமாக வாழ்வன்
உண்டாகும் மன்னவராற் செல்வீகன் தான்
     யோகியர் கடமைக்கூடு உண்மையாளன்
தொண்டர்களை அஞ்ஞாறும் சேர்ந்துநட்பாய்
     சூழ்ந்திருப்பன் யோகியெனச் சொல்லதாமே
     உபயராசியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைளில் தேய்பிறை சந்திரன் இருந்தால் பெண்களால் நன்மையில்லை, தலைசிறந்த அறிவுடைய பொறியோர்களிடம் தொடர்புடையவர்கள்.உயர் அந்தஸ்தை பெறுவன்.ஞானிகளுக்கு பணிவிடை செய்வர்கள். எப்போதும் இவர்களை சுற்றி பலர் இருப்பர்கள். ஞான மார்க்கத்தை அடைவர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment