Thursday, 19 November 2015

சரம் ஸ்திரம் உபய ராசியில் சனி

நிலைமையாம் சரத்தினில் நிலனே இருக்கில்
         நிலையோடா தீனமே பேதம்
பலன் நிலை அன்னிய தேச சஞ்சாரம்
        பாலர்க்கே பூமியும் விரையம்
தலமதை விட்டே அன்னிய தேசம்
       தனம் சுயார்ச்சியமது பெறுவன்
பெலமொடு செல்வம் உண்டு அதிகாரம்
       பெண்ணினால் கலகம் என்று ஓதே
      சனி சர ராயில் இருந்தால் நட்புறவு இருக்காது .வெளியூர் பயணம், சொத்து விரையமாகும்.வீட்டை விட்டு வெளியூர் செல்வான். சுயசம்பாத்தியம் அடைவான். செல்வங்கள் கிட்டும். அதிகாரமும்கிட்டும். பெண்களால் நன்மையில்லை.

சனி திரத்தில் இருக்கின் மன்னவர் நேயன்
     சந்சல மனதுடையவன்
இனிய நற் குணவான் இருவித்தை உடையன்
      இன்மாம் அன்னிய தேசம்
தனியனாம் வர்க்கம் தன்னிலே பகைத்து
       சஞ்சலத்துடன் அன்னியர் தனையே
கனிவதாய் கூடிக்தனம் பொருள்தனையே
      கதித்த தர்மத்தினை செய்வான்
        சனி ஸ்திர ராசியில் இருந்தால் அரசு வகையில் நன்மை,  சலனமுள்ள மனம், நல்ல குணமுடையவர்கள். இருவிதமன தொழில் உள்ளவர்கள். சுகமாகும் வெளியூரில் வாழ்வு .உறவினர் பகைத்து, சலனமுடன் அன்னியர்களிடம் கூடி சம்பாத்தியம் கொள்வர்கள். இனிமையாக தர்மத்தை செய்வர்கள்.

காரியே உபயம் தன்னிலே இருக்கில்
      கடினமாம் தொழில் இருவிதத்தால்
மீறியே இருவர் பூமியை வாங்கல்
        விரையமா தீனமே சுபங்கன்
தேரிய மனையாள் வர்க்கமே தோடம்
        ஜொகமதில் புத்திர செல்வம்
கூறிய புத்தி பாக பூர்விகம்
       குணமொடு கூறிய நட்பே
      சனி உபய ராசியில் இருந்தால் கஷ்டம், இருவித தொழில் செய்வர்கள். இருவருடைய சொத்தை வங்கு வற்குவர்கள்.சுகங்கள் விரையாமகும்.மனைவிக்கு தோஷம். புத்திர பக்கியம் கிட்டும். பூர்விகத்தால் நன்மைகிட்டும்.குணமுடன் வாழ்வர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment