Friday, 6 November 2015

சரம் ஸ்திரம் உபயராசியில் புதன்

சரம் ஸ்திரம் உபய ராசியில்  புதன்

புந்தியே சரத்தின் நின்றிடப் பிறந்தோர்
       புந்தியும் பெண்சுகம் உடையார்
வந்திடும் அரசர் பேட்டியா (ல்) மகிழ்ச்சி
      மன்னவர் உறவு எனல் ஆகும்
சந்ததி பேதம் பெண்ணுளது அன்னியம்
      சார்ந்திடும் காலத்தில் புத்திரன்
விந்தையாம் பூமி சுயார்ச்சிதம் நிலைமை
        மிக்க செல்வங்கள் என்று ஓதே
      சரராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள். நற்சிந்தனையும், பெண்களால் நன்மையும். பேட்டியால் லாபம், பொரியோர்களின் உ றவும் கிட்டும்.பெண்குழந்தை கிட்டும். அன்னியத்தில் வாழ்வு அமையும். சரியன காலங்களில் புத்திர பாக்கியம் அமையும்.சுய சம்பாதிப்பார்கள், பூமி, சொத்து,செல்வங்கள் அமையும்.

திரமது தன்னில் மாலுமே நிற்க
       ஜனித்த ஜாதர்க்கு இனியபலன் கேள்
உர மெனும் வித்தை திரவியலாபம்
       உண்மையாம் அரசன் மகிழ்ச்சி
பரவிய பூமி புத்திரலாபம் பலதொழில்
       தன்னினும் முயற்சி
கரமது தன்னில் தழுப்பது விண்ணம்
       கருதுவர் நிலைமை இவ்விதமே
     ஸ்திர ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள் தொழில் வளம், செல்வ வளம், பல பூமி லாபம், பல தொழில் செய்வார்கள், சுய முயற்சியால் பலம் பெருவார்கள்.கையில் உணம் இருக்கும்.

உருதியாம் உபயராசியில் புந்தி
       உற்ற ஜாதகர்க்கு இனிய பலன்கேள்
கருதிய மெய்யன் யோகியர் நட்பன்
       கவிதைகள் கணித நூல் கற்பன்
இருநிலை உடையவன் இனிய தர்மங்கள்
       இடரில்லாத இயற்றி ஞானியர் பால்
பெருகிய நட்பன் அன்னியர் நேயன்
        பந்துடன் பகை உளனாமே
     உபய ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள்
உண்மையானவர்கள், யோகியர்களிடம் உறவு உள்ளவர்கள்.கவிஞர்கள்,கணிதநூல் வல்லுந‌ர்
இருவித செயல்பாடுள்வர்கள்.பிறக்கு உதவிகள் செய்வர்கள். தடையில்லாமல் ஞானியர்க்கு பணிவிடை செய்வர்கள். உறவினர் பகைமையுள்ளவர்கள். அன்னியரிடம் உறவுள்ளவர்கள்.

No comments:

Post a Comment