Thursday, 6 August 2015

பரிவார்தனை யோகம்

பரிவர்த்தனை  யோகம் _  1

      ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு பவத்தின் அதிபதி மற்றொரு பாருவத்திலும், மற்றொரு பாவத்தின் அதிபதி இந்த பாவத்திலும் மாறி அமர்ந்திருந்தால்  அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படும்.
                      உதாரணமாக லக்னாதிபதி ஒன்பதில் அமர்ந்திருக்க ஒன்பதாம் அதிபதி லக்னத்தி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை   யோகம் ஏற்படுகின்றது. இது போலவே மற்றவற்றிற்கும் பார்க்க வேண்டும்.

"கூசாது கோணாதி கேந்திராதி
குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு
திரளான தானியங்கள் கூடும் பாரு "
     1-5-9-ஆம் அதிபதிகளும் 4-7-10-ஆம் அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் உலகை ஆள்வார்கள். அதிகம் செல்வம் பெறுவார்கள்.

"உள்ளசன் மாதிலாபத்திலுற வேயந்லாபாதி
தள்ளுஞ்சன்மந்தனிலிருக்கத் தனத்தானதான்
                                                                               பத்திலுறக்
கொள்ளும்பத் தோனிரண்டுறவே கொண்டு
                                                               சென்மந்திரமாக
வள்ந்திரயோகமென வழுத்தும் பலன்களினி
                                                                                 துரைப்பாம்"
  லக்கினாதிபதி 11-ல், 11 ஆம் அதிபதி லக்கினத்தில்,
2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால்  ஜாதகர்  இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள்.சுகபோக வாழ்வு அமையும்.

இந்த பரிவர்த்தனை யோகம்

1- சுப பரிவர்த்தனை யோகம்
2- அசுப பரிவர்த்தனை யோகம்
3- சம பரிவர்த்தனை யோகம்

கிரகங்கள் ஒன்றுக்கொன்று1,5,9ஆக பரிவர்த்தனை  பெற்றால் தங்களது திசாபுத்தியில் யோக பலனைத்தருவார்கள். இந்த பாவகங்களுக்கிடையே பாவாதிபதிகள் மாறி அமரும் போது சுப பலன்களை அனுபவிப்பர்கள்.
                 கடக குரு, மீனச்சந்திரன் பரிவர்த்தனை ராஜயோகத்தை தரும். மொத்தத்தில் 1,5,9 ஆக அமையும்.பரிவர்த்தனையில் ஆதிபத்யகாரக பலன் விருத்தியடையும்.கிரகங்கள் 1,4,7,10 ஆக பரிவர்த்தனை பொற்றால் தங்களது திசா புத்தியில் யோகபலன் கிட்டும்.ஆனால் கடக குரு, தனுசு சந்திரன் யோகத்தை தராது.தீய பலன்களைத்தரும்.சூரியன், சனி பரிவர்த்தனை நன்மையே தராது.
   பல தீபிகையில் தைன்ய, கல மாகயோகங்கள் என பரிவர்த்தனை யோககங்களை, விளக்கியுள்ளர்கள்
தைன்ய யோகம் 30,கலயோகம் 8,மகாயோகம் 28 மொத்தம் 66 ஆகும்.

"தானென்ற கோள்களது மாறி நிற்க்க
தரணிதனில் பேர் விளங்குத் தனமுள்ளோன்"
      கிரகங்கள் இடம் மாறிப் பரிவர்த்தனையாக நிறக் அந்த ஜாதகருக்கு இப்பூமியில் பேரும் புகழும் பொருளும் கிடைக்கும்.

"பார்க்கவன் நிதி வீடேகப்பகர் குரு மாறி நின்றால்
தீர்க்காய் லாப யோகம் செல்வமும் ஆகமாகும்
மூர்க்கமாயிருப்பன் யார்க்கும் முடிவு நளதொலையு
                                                                                     மட்டும் "
சுக்கிரன் 2-ல் இருக்க குருவுடன் பரிவர்த்தனையாகி குரு வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும். இருந்தால் செல்வம் பெருகும் ஆயுள் முடியும் வரை வீரனாய் இருப்பான்.
 
"மதியுமே கரிவீடேக மந்தனும் மாறி நின்றால்
பதிதனயோகம் பாக்கியமதிகமாகும்
துதிபெற அரசர போகன் சொல்மொழி
பெலமிலாதான் மதிகரிதிசையில் போகம்
                                                              வரவுயர்ந்த வாழ்வே "
   சனி, சந்திரன் வீட்டிலும், சந்திரன், சனி வீட்டிலும் இருந்தால் பாக்கியம் பெருகும், சந்திரன் திசையில் சனி திசையில் மேலும் மேலும் உயர்வு தருவார்கள்.
          குறிப்பு : சந்திரன், சனி, கும்பமாக அமைந்தால் யோகம் தருவதில்லை. (6-8 ஆக இருப்பதால்)      
2 - 12 ஆக அமையும் பரிவர்த்தனைகள்
1-2, 2-3,3-4,4-5,5-6,6-7,7-8,8-9,9-10,10-11,11-12,1-12 என்ற இந்த12 நிலையில் இந்த பாவாதிபதிகளுக்கிடையே ஏற்படும். பரிவர்த்தனை பாவாத்பாவ அடிப்படையில்
2-12 ஆக அமையும்.லக்கினாதிபதி 2-ல் நின்றால், 2ம்
அதிபதி 2 க்கு 12 ஆம் இடமான லக்னத்தில் நிற்பார். இதில் லக்னம் வகை காரகம். பலம் பெறும். 2 ஆம் இடகாரகம் பலம் குறையும்.
 துலா லக்னத்திற்கு 12-ல் சுக்கிரன் நீசம் நலம் தரும்
தனுசு  லக்கினத்திற்கு 2-ல் குரு நீச்சம் நலம் தராது.
         2-12 ஆக பரிவர்த்தனைகளில் பாவிகளின் தொடர்பு இருந்தால் கெடுபலன்கள் அதிகமாகும். பாவமும் பாவாதிபதிகளும் சுபத்தன்மை பெற்றால் தீயபலன் குறைந்து சுபபலன் கிடைக்கும்.
3-11 ஆக அமையும் பரிவர்த்தனைகள்
1-3,2-4,3-5,4-6,5-7,6-8,7-9,8-10,9-11,10-12,1-12,2-12 என்ற இந்த. 12 நிலையில் ஏற்படும்.  பரிவர்த்தனையானது பாவாத்பாவ அடிப்படையில் 3-11 ஆக அமையும் ஒன்றுக்கொன்று உபஜெய பாவங்கள். பாவாதிபதிகளுக்கிடையேயான பரிவர்த்தனைகளானதால் காரக வழி பலன்களில்
ஜாதகரின் சுயமுயற்சியே கூடுதலாய் இருக்கும். நண்பர்கள், சகோதரர் ஆதரவு கூடும். ஜாதகர் தனது பராக்கிரமத்தால் உயர்வடைவார்கள்.பொதுவாய் இந்த 3-11 ஆக அமையும் பரிவார்த்தனைகள் தீய பலன்களை தருவதில்லை.
             காலபுருஷதத்துவப்படி விருச்சிக சனி, மகர செவ்வாய் .ரிசப சந்திரன், கடக சுக்கிரன். ரிசப குரு மீன சுக்கிரன் இந்த  உச்சநிலை பரிவார்த்தனைகள் காரகபலன் சோபிக்கவே சேய்யும்.   அதேபோல்
துலா சூரியன், சிம்ம சுக்கிரன்.கும்ப செவ்வாய், மேஷச சனி இவ்வமைப்பில் நீச நிலையிலும் பாதகாதிபத்தியம் உள்ளதால் ஜாதகர் தீய பலன்கள் இவர்களின் தசா புத்திகளில் தருவர்கள்.

தொடரும்…………………

ப.சூரியஜெயவேல்
9600607603 

No comments:

Post a Comment