Tuesday, 11 August 2015

திருமணவாழ்வு        -6

      ஏழில் சந்திரன் இருந்தால் பெண்களை கவரும் தன்மையுள்ளவர்கள் அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொள்வான் அன்பும்,பாசமுள்ள வாழ்கைத் துணை அமையும்.ஆனால் உருதியான சிந்தனை இருக்காது. அடிக்கடி நோய்வாய் படுவார்கள்.நல்ல மனைவி அமையும்.பிடிவாதம் உள்ளவர்கள்.மனைவியின் மார்பகம் கவர்ச்சியுடையதாக இருக்கும் மனைவிமிது அன்பு அதிகம் உள்ளவர்.அழகுடன் இருப்பார்கள்.
    ஏழாம் அதிபதியின் நட்சத்திரதிபதி சந்திரனால் உடல் உறவில் உச்ச கட்டம் எய்திடுவார்கள்.
   சந்திரன் ஆட்சி,உச்சம் சுபஸ்தானம் சுபர் இணைவு  இருப்பின் வாழ்வில் நலம் கிடைக்கும்.
ஏழில் சந்திரன் இருந்து குருவின் பார்வை இல்லா மல் இருந்தால் காதல் திருமணம் நக்கும்.
    ஏழில் சந்திரன்,சுக்கிரன் இணைந்திருந்தால் வாழ் வில் கள்ளக் காதல் ஏற்படும்.பருவ வயதுள்ள பெண் களை ஒரு கை பார்த்து விடுவார்கள்.

குரு மதி கூடி ஏழில் கோலமாய் நின்றார்ஆகின்
மருவி சுபரே என்று மகிழ்ச்சியாய் சொல்ல.            வேண்டாம்
மது களத்திர ஆனி வாங்கிலும் நாசம்ஆகும்
திருத்தும் இல்லை கண்டாய் தெரிந்துரை குறி தப்பாது
 ஏழில் சந்திரன்,சனி இணைந்திருந்தால் மறுமணம்
ஏற்படும்.பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் தன் கணவனை புறக்கணிப்பாள்.வேறொருவரை திரு மணம் நடக்கும். வாழ்வு சுகமுடன் அமையும்.

ஆரப்பா யின்ன மொரு புதுமை கேள்
அம்புலியும் அசுரகுரு ஏழில் நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
சீரப்பா செல்வத்தினையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவாள் ஸ்தனங்குலுங்க வருவாள் பாரே

சில விடும் கலைகள் தேய்ந்த மதி சில
பாவி கூட இளகிய ஏழாய் அன்ய காமி
        தேய் பிறைச் சந்திரன் பாவிகளுடன் இணைந்து
ஏழில் வீற்றிருந்தால் ஜாதகர் பிறன் மனைவியை இச்சிப்பான்.

தாரேசன் மதியு மாகிச் சத்திய பாவ மத்யம்
போரேறு பாவர் அம்சம் பொருந்திடில் கடினி யாகி
ஆரேனும் எண்ணாளாகி அடிபட்டுக் கொண்டெந் நாளும்
பேரேதுர் மார்க்கி என்ற பேருள தாரம் எய்தும்  ! 
  ஏழாம் அதிபதி சந்திரனாகி பாவிகளுடன் தொடர்பு பொற்றிருந்து. நவாம்சத்திலும் சந்திரன் பாவர் வீட்டில் இருந்தால் ஜாதகரின் மனைவி முரட்டுத்தன
முடையவள். யாரையும் மதிக்க மாட்டாள். தினமும் பல துன்பங்கள் அனுபவிப்பாள் தீய பழக்கம் உள்ளவாள் பழிசொல்ளுக்கு அளவாள்.

ப.சூரியஜெயவேல்
    9600607603

No comments:

Post a Comment