Wednesday, 12 August 2015

மன்மத லீலை வென்றொர் ?

jeyavelan81@gmail.com
                 மன்மத லீலை வென்றோர்   ?

ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ்  உணர்வுகள்
உண்டு.இதில் ஆண்களுக்கு அதிகமா?,  பெண்களுக்கு அதிகமா? என்று பாகுபடுத்திச் செல்ல முடியாது இந்த செக்ஸ்  அனைவருக்கும்  பொதுவானது.
         ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்ப்ப செக்ஸ் உணர்வு அதிகம் உள்ளவரா இல்லையா என்பதைச் செல்ல முடியும்.அவர்களுக்கு வரும் பால் வினைநோய் பற்றியும் அறிய முடியும்.

                     பொதுவாக மேசம், சிம்மம், தனுசுராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும் .

      ரிசபம், கன்னி, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.
 
    துலாம், கும்பம்  பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.ஆனால் இவர்கள் அதிகமாக வெளிகாட்டிக் கொள்ளமாட்டார்கள் .

     மிதுன ராசியில் பிறந்தவர்கள் பேச்சு, சிந்தணை, செயலில் அனைத்திலும் செக்ஸ் தாண்வமடும்.

         கடகம்,விருச்சிகம்,மீனம் ராசியில் பிறந்தவர்கள் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருக்கும்.

      நட்சதிரங்களுக்கும் செக்ஸ் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
       அசுவினி, மிருகசீரிடம்,  மகம், உத்திரம், அனுசம்,  மூலம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும்.
          பரணி, திருவாதிரை, புனர்பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, திருவாணம், பூராடம், ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.

            கார்த்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம் , சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், சதையம், பூரட்டாதி,  உத்திரட்டாதி சராசரி செக்ஸ் உணர்வு இருக்கும். அதைவெளியெ காட்டிக் கொள்ளமாட்டார்கள் அதற்காக ஏங்குவார்கள்.

   செக்ஸ்  ஆர்வமின்மை, ஆர்வம், மிருதுதன்மைகள் அமையும் ஜாதகம் எப்படி இருக்கும்  என்பதை பார்ப்போம்.
      லக்கினாதிபதி சனியாக இருந்து செவ்வாய்,கேது பார்வை, தொடர்பு இருந்தால் ஆர்வம் குறையும்.
               லக்கினத்தில் கேது, சனி இருந்தால் ஆர்வம் குறையும் .
            ராகு சனிக்குயிடையே எட்டாம் வீடு இருந்து, குருவின் பலம்குறைந்தால் ஆர்வம் குறையும்.
        சனி, சூரியன், ராகு இணைந்திருந்தால் ஆர்வம் குறையும்.
    கேது, சனி அல்லது செவ்வாய், சனி சந்திரனை பார்த்தால் ஆர்வம் குறையும்.
      புதன் எட்டாம் அதிபதியாகி.எட்டில் ராகு, சனி அல்லது கேது, சனி இருந்தால் ஆர்வம் இருக்காது
எட்டில் புதனும்,சனியும் இருந்தால் ஆர்வம் குறையும்
 
        ஒரு ஆண் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் ஆண் ரராசியில் இருந்தால் பெண்களால் நண்மையிரது.
         
       ஒரு பெண் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பெண் ராசியில் இருந்தால் ஆண்களால் நண்மையிரது.
     எட்டில் செவ்வாய், ஆறில் சனி, இரண்டில் சூரியன் இருந்தால் ஒயாது செக்ஸ்  உறவில் ஈடுபடுவர்கள்.
    புதன், சுக்கிரன் ஏழில் இணைந்தால் நல்ல துணையும் சுகமான இன்பத்தை அனுபவிப்பார்கள்.
           மிதுனம், துலாம், ரிசபம், இவைகளில் சுக்கிரன்  இருந்தாலும், ஏழில் சுக்கிரன் இருந்தாலும் காம உணர்வு அதிகம்.
       சுக்கிரன் 1-5-9-ல் இருந்தால் அந்த ஜாதகர்  ஆயுள் முழுவதும் பெண்களின் அங்க அவயங்களைப்பற்றி            எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி சூரியனாகில் உஷ்னத்தால் பாதிக்கப்படும்.கடினமாக அமையும்.
    எட்டாம் அதிபதி சந்திரனாகில் குளிற்வுடன் நீண்ட இன்பம் தரும
             எட்டாம் அதிபதி செவ்வாயனால் உறுப்புகள் கடினமாகவும், வெறித்தனம், ஈடுபடும்போது எரிச்சல், வலியும் ஏற்படும்.
     எட்டாம் அதிபதி புதனால் பலகினமும், தாழ்வு மனப்பான்மை, ஏற்படும்.  எட்டாம் அதிபதி குருவானால் உறுப்புகள் பலமுடன் இருக்கும், அளவான திருப்தியான சுகம் கிடைக்கும்.
           எட்டாம் அதிபதி சுக்கினாகில் அழக உடல் உறுப்புகள். குழைவுடன் இருக்கும். இன்பத்தை அடைவதற்கு தடையிராது.
 எட்டாம் அதிபதி சனியானால் அழகாற்ற உறுப்புகள், ஒழுங்கற்றவை, அறுவறுக்க தக்கதகவும், துர்நாற்றம் விசும்.
  எட்டில் உள்ளள, பார்த்த கிரகங்களின் நிலைகலை ஆராய்ந்து பலன் கணவேண்டும்.

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்ன தோள்.
       இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர். சோர்வு நீங்கிப் புத்துணர்வுடன்தளிர்ப்பதால் இவள் உடல்.அமிழ்தத்தால் ஆகியது என்றே கருதுறேன்.
 
  புகருந் தனனதிரி கூடிக் கோணமேகப் பொன்னவன் நோக்கிட வேயிவனைப்
புணர்மாமுகை மடவார் பலர் தொடர்வார்க மடைவாரின்
பூங்கணை மன்மதன் பாங்குடையான்
  லக்கினத்திற்கு 2-3- ஆம் அதிபதிகளுடன் சுக்கிரன்
இணைந்து. 1-5-9-ல் ஒன்றில் இருந்து குரு இவர்க ளைப் பார்க்கமால் இருந்தால் ஜாதகர் பல பெண்க ளைக்கூடி மகிழ்வர்கள். எளிதில் பல பெண்களை வசீகரம் செய்து பலர் இவரது செயலுக்கு மயங்கி சுகம் அனுபவித்து. போவர்கள் மன்மதனைப் போல் சுகம் தருவார்.

பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
     பாம்புடனே மூன்றோனும் தீயனாகில்
 கூறப்பா யெத்திடத்தில் கூடிட்டாலும்
        குமரி கள்ளப் புருஷனையும் கூடுவாளாம்
ஆராப்பா அகந்தனிலே யிவள்தான் மூப்பி
      ஆளனுமே இவள் சொல்லை மீறுவதில்லை
ஊரப்பா வூரருகில் கடலும்முண்டு
          உத்தமனே யிருக்குமடா ஆறுமாரே
                         மூன்றாம் அதிபதியுடன் ராகு, கேது இணைந்திருந்தால் ஜாதரின் மனைவி /(ஜாதகியின் கணவன) பிறரை கூடி மகிழ்வர்கள் இவர்கள் தான் மூத்தவர்கள். இவர்களின் மனைவிக்கு ஜாதகர் அடங்கி நடப்பார்கள்.சொல்லை மீறி நடக்க மாட்டான்.
இவர்களின் ஊருக்கருகில் நீர் நிலைகள் இருக்கும்.
   இந்த விதி ஆண் /பெண் இருவருக்கும் பொருந்தும். இந்த அமைப்புள்ள ஜாதகர் /ஜாதகியார்களை நாம் தான் நழ்வழிகாட்ட வேண்டும்.நாமது கடமையாகும்

குருவருல் இருந்தால் திருவருள் கிட்டும்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்   1109
ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment