Monday, 10 August 2015

குருச்சந்திரயோக முரண்பாடுகள்    2

"நேசமாமூன்றில் வந்து நிகழ் குரு சோமன் கூடில்
நாசமே மிவற் கடம்மை நல்லவரைவன்மை போமோ
பாசமாஞ் சுபரேயென்று பார்கவுநம்பலாகா
மோசமஞ்சகோதரங்கண் முடிவது குறிதப்பாதோ "
           மூன்றில் குருவும்  சந்திரனும் இணைந்திருக்க நன்மமைகள் எதுவும் செய்யமாட்ட்டார்கள்.இவர்கள்
சுபர்கள் என தீர்மானிக்கக்கூடாது  சகோதரர்க்கு நன்மையில்லை ஆயுள் பாதிக்கும்.

"குருமதி நான்கில் கூடக் கொம்பனையாளே
                                                                                       கேளாய்
வருவது அன்னைக்காகா அங்கிச நாசமாகும்
திருகதுமில்லை கண்டாய் செல்வரும் பாரகில்
கருவுடன் மாதர் நாசங்கண்டிடுங்குறி தப்பாதே "
                  குருவும், சந்திரனும் இணைந்து நான்கில் இருந்தால் தாயருடைய வம்சம் நாசமாகும் சுபர்கள்  இவர்களை பாராதிருக்கில் ஜாதகன் கர்ப்பத்தில் இருக்கும் போதே தாய் மரணமடைவாள்.

'வியாழமுந்திங்கள் கூடிவேறொரு கிரகம் பாரா
சகாய மறைந்தினிற்கச் சந்தம் புத்திரநாசம்
நியாய மாய்ச்சுபரே யேன்று நினைவதி
                                                                         நினைக்கலாகா
துபாமாய்ப் பார்த்துச் சொல்வாயுபமது குறிதப்பாதே                      
     குருவும் சந்திரனும் இணைந்து ஐய்ந்தில் இருந்து   இவர்களை வேருஎந்தகிரங்கள் பார்க்காமல் இருந்தால் அந்த ஜாதகனுக்கு புத்திநாசமாகும். இவர்கள் சுபர்கள் என என்ன வேண்டாம் இவர்களின் நிலை அறிந்து பலன் கூற வேண்டும்.
           
"பாரப்பா இன்னுமொரு புதுமை கேளு
     பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை
     செந்திருமால் தேவியும் விலகி நிற்பன்
கூறப்பா குமரிய வளில்லாமல் தான்
       குமரனுட வங்கிசமும் நாசமாச்சு
ஆரப்பா அயன் விதியைக் கூறலுற்றேன்
          அப்பனே புலிப்பாணி பாடினேனே"
             வளர் சந்திரனும் குருவும் இணைந்து ஏழில் இருந்தால் ஜாதகருக்கு மனைவியில்லை,  செல்வம் இல்லை, இவனது வம்சம் நாசமகும், பிரமன் எழுதிய விதியாகும்.

குருமதி கூடியேசிற் கோலமாய் நின்றாகில்
மருவிவர் சுபரேயென்று மகிழ்ச்சியாய்ச் சொல்ல
                                                                                  வேண்டாம்
வருவது களத்திரவானி வங்கிஷ நாசமாகும்
திருகதுயில்லை கண்டாய் தெரிந்துரை
                                                                             குறிதப்பாதே
       குருவும் சந்திரனும் இணைந்து ஏழில் இருந்தால்  இவர்களை சுபர்கள் என எண்ணவேண்டாம். மனைவியில்லாமல் வம்சம் நாசமாகும்.மனைவிக்கு கண்டாம்.ஆராய்ந்து பலன் கூறவேண்டும்.

"சந்திரனோடு ஞான சதுர்மறை குருவே கூடி
வர்துயிர் லக்ன தெட்டில் வாழ்ந்து உதித்தமாந்தர்
பந்து நற்பாகம் விட்டு பரதேசியாகி தேவன்
சத்தம்வார் அடிபணிந்து கவலையற்றிருப்பராமே "
      குருவும் சந்திரனும் இணைந்து எட்டில் இருந்தால் ஜாதகர் பந்தபாசம். குடும்ப சுகத்தைத் துறந்து இறைவன் புகழ் பாடி கவலையற்று திரிவர்கள்.

"திங்களுடனே பொன்னன் சேர்ந்து
                                                              கேந்திரத்தினின்றால் மங்கள மாகயோகம் மகிழ்ச்சியாம் ஆறெட்டாகில்
சங்கையுண்டாகும் பூமி தனமெலாம் நாசமாகும்
மங்கையர் வெறாம் அன்னிய தேசம்
                                                                  போயலைகுவாரே
       சந்திரனுடன் குரு இணைந்து கேந்திரத்தில் இருந்தால் மாகயோகம். மகிழ்ச்சியாகும்.ஆறு, எட்டில் இணைந்திருந்தால் செல்வம், மனைவி, பூமி எல்லாம் நாசமாகும்.இரண்டாம் திருமணம் ஏற்படும். வெளிநாடு போய் ஆலைவார்கள் நன்மையிறது.

"மதியரசோடு கூடி மகிழ்ச்சியாய் நவத்தினிற்க
மிகுதியோரவரைப் பாராதிருக்கிலுமாதே கேளாய்
சதியவர் செய்யும் தீமை சத்துருபிதாவுக்கா
விதியது முடியுந்தப்பாக்குறியது கூறாய்மாதே "
     சந்திரனும் குருவும் இணைந்து ஒன்பதில் இருக்க மற்றற கிரகங்கள் இவர்களைப் பாராமலிருந்தால் ஜாதகர் செய்யும் கொடுமைகள் தந்தைக்கு மரணத்தைத்தரும்.

"உதித்தது விரைய வெட்டி லொளிர்மதியரசன் கூடித்
திதித்தனிறாரகிற்றிற பலனுறுதியாகும் "
               வளர்சந்திரனும், குருவும்  இணைந்து 8-12-ல் இருந்தால் தனீத்தனியாக இருந்தாலும் பவத்திற்க
உறிய பலன்கள் கிடைக்கும்.ஆயுள் பலம கிடைக்கும்

"பொன்னனை சோமன்றன்னிற்பதுமையா
                                                                            மூன்றிலாறில்
வின்னமா மெட்டில்பந்தில் விளங்கு
                                                        பன்னிரண்டினின்றால்
தன்னுடன் பிறந்தார் சேதந்தானிய மாடு மக்கள்
வின்னமாய்ப்பதியை விட்டும் வீட்டை விட்டோடு
                                                                                         மன்னே
                     குரு சந்திரன் இணைந்து 3-6-8-10-12-ல் இருந்தால் ஜாதகரின் சகோதரம் சேதம் தானியம், மாடு, மக்கள், சுகம், கணவன் /மனைவி பிரிவு ஏற்படும், வாழ்வில் சுகம் கிடைக்காது

ஆய்வு தொடரும்.

ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment