Monday, 10 August 2015

குருச்சந்திரயோக முரண்படுகள்

குருச்சந்திரயோக முரண்படுகள்

           சந்திரயோகங்களில் குருச்சந்திரயோகம்  முக்கியமானது.குருவும்,சந்திரனும்  இணைந்திருந்தால் குருச்சந்திரயோகம் ஆனால்  குருவும் சந்திரனும் இணைந்திருந்தால்  ஜாதகருக்கு எந்தவிதத்திலும் நன்மையை தராது.            அனைத்து நூல் ஆசிரியர்களும் குரு, சந்திர இணைவு நன்மையை தராது என்று கூறுகின்றார்கள். குரு, சந்திரனுடன் இணைந்து ஒரே ராசியில் அமைந்தால் குருச்சந்திர யோகத்தை மட்டும் சிறப்பித்து கூறவில்லை, நாம் ஆராய்வோம்.

கூறப்பாயின்ன மொருபுதுமை சொல்வேன்
            குமரனுக்கு குருச்சந்திர பலனைக் கேளு
சீரப்பா செம் பொன்னும் மனையுங்கிட்டும்
   ஜெனித்த தொரு மனை தனிலே தெய்வங்காக்கும்
கூறப்பா கோதையரால் பொருளும் சேரும்
    குவலயத்தில் பேர்விளங்கோள் கடாட்சமுள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானால்
         அப்பலனை யறையாதே  புவியுளோர்க்கே
                    குருச்சந்திரன் இணைந்திருந்தால் பொன் பொருள் தெய்வ அருள் பெண்களால் தனலாபம். புகழ் பெற்று வாழ்வார்கள். குரு சந்திரன் நின்ற ராசியாதிபதி மறைந்தால் சுப்பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது.

பிறையுடன் குருவுங் கூடியே வருங்கால்
       பேதையாம் மனதினில் துக்கம்
குறையுடன் அரசர் பகையது உண்டாகும்
     குறைமதியாகிடில் துண்பம்
நிறைமதியாகில் மன்னர்களுறவு
     நேயரால் பூமிபொன்வரத்து
தசைமிசை சுகங்கள் தையலர் மைந்தர்
       சகல பாக்கியங்களுமாமே
            தேய்பிறை சந்திரனுடன் குரு இணைந்தால்  தீமையான பலனைத்தரும். வளர்பிறைச் சந்திரனுடன் குரு இணைந்தால் நன்மையான பலன்களைத் தரும். இவர்களது தசை, புத்தியில் பெண்களால், புத்திரர்களால் நன்மையும் சகல சுகபோக வாழ்வு அமையும்

தொடரும் ஆய்வுகள்

ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment