விருச்சிகம் லக்கினத்திற்கு திருமணவாழ்வு
விருச்சிக ராசி லக்கினமாக அமைந்தவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். அவசரப்படாதவர்கள். கிணற்று நீரை வெள்ளமா அடித்து செல்லும் என்ற அழுத்தமான உணர்வுள்ளவர்கள். தன்னை இழக்காமழும் இழந்தால் அதில் என்ன லாபம் என்ற குறிக்கோள் உள்ளவர்கள்.இவர்களின் கணவன்/மனைவி கட்டுப்படுத்துதில் வெகு சாமார்த்தியசாலிகள் தன்னுடைய ஆரோக்கியம்.தொழில்.பணம்.புகழ் தவறுகள் போன்றவற்றில் இருக்கும் பலவீனங்களை வாழ்க்கை துணைவரிடம் வெளிப்பாடுத்தாமல் தங்களின் பலத்தை மட்டுமே காட்டுவதில் சாமர்த்தியசாலிகள்.இவர்கள் செக்ஸ் தான் வாழ்க்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்த்துதான் வாழ்க்கை என்பதிலேயே ஆர்வம் அதிகம் உடையவர்கள். இவர்களின் அன்பு நிரந்தரமானது. ஸ்திர லக்கினம் ராசியில் பிறந்த பெண்களிடம் மிகச் சரியாக இருக்கும்.குடும்ப விளக்காகத் திகழ்பவர்கள். இவர்கள்தான் கணவன்/மனைவி ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதில் சாமர்த்தியசாலிகள். என்றாலும் இவர்கள் வாழ்கையில் பிரிவு என ஒன்று நிககழுமேயானால் அது நிரந்தரமாவைதான். எதிதரப்பு மன்னிப்புக்கள் அல்லது புனர்வாழ்வு பெறமுடியாது.வசதியான இடத்தவராகவே அமையும்.மிகையாகச் செலவுகள் செய்வார்கள்.தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாகவே அஅமையும்.
விருச்சிக லக்கினத்திற்கு
ஏழில் சூரியன் இருந்தால் திருமணம் தாமதமாகும்.நல்ல வாழ்க்கைத் துணைவர்கள் அமைமைவார்கள். வரும் மனைவி/கணவன் சற்று காரசாரமாகயிருப்பார். தகுதி இருக்கின்றது.
ஏழில் சந்தின் இருந்தால் வாழ்க்கை சோபிப்பதில்லை.சிருக்கு மறுவாழ்வில் இன்பம் கணமுடியும். ஆண்களின் நடத்தையை கொடுத்து விடுகின்றது.பெண்கள் வலிய வந்து சேருவார்கள்.
தேய்பிறைச்சந்திரன் இருக்க, குரு பார்க்காமல், பாவிகள் பார்த்தால் ஜாதகரின் ஆயுள் குறையும்.மனைவி தீய சிந்தனை செயல்லுடையவர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் என்ன செய்வது உன்னைத்தான் நான்அடிக்க வேண்டும்.திருமணம் தாமதமாகும்.இரு திருமணம் அமையும் வாய்புள்ளது.ஆத்திரக்காராகவும் சாமர்த்தியமாக நடந்துகொள்ள தெரியாதவராக இப்பார்கள். பரவாயில்லை அடிக்கிற கைதானே அணைக்கும். வா வாழ்ந்து பார்ப்போம்.இது ஒரு ஆண்மகனின் நிலை.
பெண்களுக்கு இருந்தால் நான் எப்படிதான் உண்னைக் கடித்து குதறினாலும். உக்கு பாதுகாப்பு நான் தான் என்று நினைக்கிற அஇல்லே ! என்ன செய்வது குடும்ப வாழ்க்கை என்றாகி விட்டது.நம் தலையெழுது இப்படி…! என்ற நிலைதான் பிறிவுனூடே ஊடல் உண்டு இதுதாங்க இல்லறம்.
ஏழில் புதன் இருந்தால் சிறப்பல்ல.சுவாரஸ்யமற்ற
இல்லறமாகும்.துஷ்டரும் கெட்ட நடத்தையுள்ளவார். சிலர் மறுமணம் செய்து கொள்வார்.காதலில் விருப்பம் உடையர்.
வேண்டிய தாரம் புந்தி மேவின்முற் றார நாசம்
ஏழில் புதன் இருந்தால் முதல் மனைவிக்கு அற்ப ஆயுள்.
ஏழி குரு இருப்பதும் சிரப்பல்ல குழந்தை பாக்கியம் அற்பம்.கணவன் /மனைவியின் அன்பு குறையும்.பெண்களுக்கு பெருமைமிகு வாழ்க்கையென உலகம் போற்றும். இவர்களின் உள்ளம் தான் வாழ்க்கையின் நிலையை அறியும்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் ஆண்/பெண் இருவருக்கும் இளமையியல் திருமணத்தை நடத்தி வைக்கும். அல்லது கால தாமதத்தை ஏற்படுத்தும்.அந்நி பெண்களிடம் ஆசை உள்ளவர். காலம் கடக்க கடக்க அடிக் கரும்பில் இருக்கும் சுவை நுனிக் கரும்பில் இருக்காது என்ற நிலைதான் இவர்களின் இல்லற. வாழ்கையில் தெரியும்.
பெண்களுக்கு! ஏழில் சுக்கிரன் இருந்தால் கணவனின் நடத்தை எந்த வகையிலாவது கெடும். இர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்துள்ள இன்னொருத்தி வருவாள்.
சுக்கிரன் 6-8-12-ல் சுக்கிரன் இருக்க தனித்திருக்கவே, மிகவும் விரும்புவர்கள்.
பூண்டதேள் உதிப்ப ஏழில் புகர்நிற்கின்
விபச்சா ரத்தை வேண்டிய தாரம்
விருச்சிக லக்கினத்திற்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் நடத்தை தவறும் மனைவி அமைவாள்.
ஏழில் சனி இருந்தால் மனைவியின் மௌன கோபத்திற்கு ஆளாகவும் என்றாழும் வாழ்வு சிப்றபுடன் அமையும்.இரண்டு திருமணம் நடக்கும். தைரியமில்லாதவர்கள்.
ஏழில் ராகு இருந்தால் துணைர்கள் நோயாளியாக இருப்ப்பார்கள்.அவமானமும்.பொருள் நஷ்டம் ஏற்படும்.வாழ்வில் மகிழ்ச்சி குறைவுள்ளவர்கள்.
ஏழில் கேது இருந்தால் கெடுதல் எற்படும். மனைவி மக்களை பிரிந்து வாழும் சுழ்நிலை எற்படும்.மீறிய காமத்தால் தீய சகவாசம் எற்படும். மனைவி இடு மருந்து அல்லது விஷத்தை கொடுப்பாள்.செய்வினை தோஷம் பதிக்கும்
ப. சூரியஜெயவேல
தனுசு லக்கினத்திற்கு திருமணவாழ்வு
தனுசு ராசி லக்கினத்தில் பிறந்தவர்கள் இல்லற சிந்தனையில் "டயலமா " எனும் இரட்டை சிந்தனை
உடையவர்களாக இருப்பர்கள்.
இவர்களின் கணவன்/மனைவி புரிந்துகொள்வது எஎளிதாயினும்.இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும்" அவள் " சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கறுதும் அப்பாவிகள். இவர்களின் உணர்ச்சிக்கும் கோபத்திற்க்கும் அர்த்தமே இல்லை என்று இவர்களின் மனைவி/கணவன் கூறும் பரிதாபநிலைக்குரியவர்கள்.
இவர்களின் குடும்பம் மற்றும் செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்களின் பலர் வயது வித்தியாசம் பாராமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உடையவர்கள் அல்லது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை அற்றவர்கள். மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மகா சமர்த்தர்கள்.குறிப்பிட்ட வயதுக்குப் பிகு இவர்களின் பாலுணர்வு சக்தி குறைய வாய்ப்புண்டு.
இல்லறத்தை ஒர் லட்சிய நோக்கில்லாமல் நடத்துபவர்கள். தன் வாழ்க்கைத் துணையாளரின் உணர்ச்சிகளை ஒரு நோடிப்பொழுதில் தகர்த்து எறிந்துவிட்டு வெளியேறுபவர்கள்.
கருத்துக்களை இன்று இந்த இரவு. இந்த நோரத்தில் தன் துணைவர்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டுமென்று அலுவலகத்தில் சிந்திப்பார்கள்.ஆனால் அன்று நல்ல கறுத்துக்களை,இல்லற முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன்/மனைவியிடம் பேசமுடியாத சூல்நிலையை சந்திப்பார் கொடுப்பினை இல்லாதவர்கள்.
மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் என்னாலும் இல்லறத்தில் மரியாதைக்குரியவர்கள்தான் ! ஆனால் அது எத்தனை பேர் வாழ்க்கையில் சாத்தியமாகின்றது.
இவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள்.ஆனால் நிரபராதிகள் !இந்த உண்மையை இவரின் வாழ்க்கைத் துணையாளர் தம் பிறவியில் உணரப் போவதில்லை. இவர்களால் உணர்த்தவும் முடியாது.
பொதுவில் இவர்கள் இல்லற வாழ்கையில் ஒளிதரும் விளக்கின் அடிபீடம் போன்றவர்கள்.
முதலில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து தெறிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.இதற்க்கு மனே பலம் அவசியம்.
சுக்கிரன் லக்கினம், 4-ல் இருந்தாலும்,
புதன் 6-8-9-10-11-ல் இருந்தாலும்,
சந்திரன், செவ்வாய் சனி இணைந்திதாலும், பார்த்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் அமையும்.
சூரியன் 4-ல் இருந்தாலும், புதன், குரு இணைந்திருந்தாலும் புதனை செவ்வாய் பார்த்தாலும், திருமணத்திற்கு பின் யோகம் தரும்.
தனுசு ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு "தண்டாமரையின் ஊடே தண்டே நூகரா வண்டூகம்"
ஏழில் சூரியன் இருந்தால் தாமரையின் கீழ் தவளை இருந்தாலும் அதன் அருமையை உணராது. போல் இவர்கள் கணவன் /மனைவியின் பெருமையை அறியாமல் போய்விடுவார்கள். பெண்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும். திருமணம் தாமதம் ஆகும்.
ஏழில் சந்திரன் இருந்தால் மலரும் சுடும் பன்னீரும் நாக்கில் கொப்பளத்தை ஏற்படுத்தும். வசந்தமும் கோடை வெயிலாக மாறும் என்ற நிலையை வாழ்கையில் சந்திப்பார்கள். தீய நடத்தையுள்ளவர்கள் தொடர்பு கிட்டும். கணவன் /மனைவிக்கு அடிக்கடி சண்டை நடக்கும்.மனையை இழந்து மறுமணம் செய்து கொள்வர்கள். அழகியவர்கள் அமையும்.
ஏழில் செவ்வாய் இருந்தால் வரும் வாழ்கைத் துணையாளரின் உள்ளம் பால் இருக்கும். பாவம் உதடுகள் தான் தேளின் விஷத்தை கக்கும். இந்த அமைப்புடையவர்கள். பாவபட்டவர்ககள் அல்லலது பரிதாபத்துக்குரியவர்கள்.
ஏழில் புதன் இருந்தால் இல்லற வாழ்க்கையின் கதவுகளை மூடிவிடும். வாழ்கையில் இவர்கள் இல்லற சுகத்தை இலக்கியங்களில் படித்து மகிழலாம்.அன்னிய பெண்களிடம் ஆசையுள்ளவர்கள்.தந்திசாலியாகவும் இருப்பார்.
ஏழில் குரு இருந்தால் இவர்களுக்கு நல்லதுதான் இதுவும் ஒர் இனிய இல்லறம் தான்.ஆனால் கொண்டதே கோலம்.கண்டதே காட்சி என்று வாழ்க்கைத் துணையால் உலகம் புரியாமல் அடம் பிடிப்பார்கள். பிரிவு ஒன்று வந்தால் நிரந்தமயிவிடும்.பெண்களுக்கு ஏழில் குரு இருந்தால் கணவனை உதாசீனப் படுத்தி பேசும் குணம் இருக்கும்.தன்னைப் பற்றியே உயர்வான கருத்துக்கள் மேலோங்கிக்காணப்படும். இப்படிப்பட்டவர்களின்.இல்லறம்.
இனிய இல்லறமா ? தீர்மானிப்பது யார் ?
ஏழில் சுக்கிரன் இருந்தால் துணைவர்களிடம் பகைமை பாராட்டுவார்.மனைவிக்கு கண்டம் ஏற்படும். திருமணம் தாமதமாகும்.இரண்டு திருமணம் அமையும்.
ஏழில் சனி இருந்தால் வாழ்க்கையை நல்ல உறுதியோடு கொண்டு செல்வார்கள். பெண்களுக்கு அவமானம் ஏற்ப்படும். அடிக்கடி சண்டை போடுவர்கள். பிர பலர் தொடர்பு இருக்கும். மணவாழ்வில் சுகம் இருக்காது. மறுமணம் ஏற்படாலம்.அடிக்கடி நோய்வாய்ப்படுவர்கள். அலைந்து திரிவர்கள்.
ஏழில் ராகு இருந்தால் வெளியுர் செல்லும் நிலை ஏற்ப்படும். மனைவி/கணவன் பிரிவு ஏற்ப்படும். பெண்களால் அவமானம் ஏற்ப்படும். யாரையும் ஏளிதில் நம்பமாட்டார். மணவாழ்வில் மகிழ்ச்சி குறைவுன்டாகும்.
கேது ஏழில் இருந்தால் தீய பெண்களின் தொடர்பு ஏற்ப்படும். துணைருக்கு மன பயம் ஏற்ப்படும். அதித காமியாக இருபப்பார். குப்பங்கழுடன் வாழ்கை அமையும் .மனைவி இடுமருந்திடுவாள். அன்னியர் வைக்கும் மருந்தாள்
பதிக்கும்.
குறிப்பு : ஏழில் கேது இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விஷத்தால் பதிப்பு ஏற்ப்படும். இவருக்கு எந்த கிரகங்கள் தொடர்புள்ளாது என்பதை கவணித்து கூரவேண்டும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
W.no : 9159915081
No comments:
Post a Comment