கன்னி :-
லக்கின ராயில் பிறந்தவர்கள தி்ருமணம் கட்டாயம் / நிபந்தனைகளின் பேரில் முக்கிய காரணத்தால் தெய்வானுகூலத்தால் போன்ற ஏதேனுமொருவகையில் நடைபெறும். கணவன்/மனைவியரிடையே நிரந்தரமான கவலைகள் தொடர்ந்து இருக்கும். ஜாதகர்/ஜாதகி சகிப்புத் தன்மை மற்றும் தியாகவுணர்வு கொண்டவர்களாக இருப்பது நலம் தரும். இல்லற சிந்தனையில் இரட்டைச் சிந்தனையுள்ளவர்கள். இவர்களை இவர்களின் மனைவி/கணவன் புரிந்துககொள்வது எளிதாயினும். இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும் அவர்கள் சரியாக புறிந்து கொள்ளவில்லை என்று எண்ணுவர்கள். இவர்களின் உணர்ச்சிக்கும் கோபத்திற்கும் அர்த்தமே இருக்காது. என இவர்களின் கணவன்/மனைவி புலம்புவர்கள்.இவர்களின் குடும்பம் மற்றும் செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்களில் பலர் அவயது வித்தியாசம் பாராமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள். வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை இல்லாதவர்கள். மனோ கற்பனையில் சுகம் காண்பதில் வல்லவர்கள். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு இவர்களுக்கு செக்ஸ் உணர்வு குறையும். வாழ்க்கையை ஒர் லட்சிய நோக்கில்லாமல் நடத்துபவர்கள்.தன் மனைவி/கணவனின் உணர்ச்சிகளை ஒரு நொடிப்பொழுதில் தகர்த்து எறிந்துவிட்டு வெளியேறுவர்கள்.கருத்துக்களை இன்று இந்த இரவு இந்த நேரத்தில் தன் கணவன்/மனைவியோடு பரிமறிக்கொள்ள வேண்டுமென்று அலுவலகத்தில் எண்ணுவர்கள். ஆனால் அன்று நல்ல கருத்துக்களை,இல்லற முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன்/மனைவியிடம் பேசமுடியாத சூல்நிலையை சந்திப்பர்கள்.கொடுப்பினை இல்லாதவர்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் ஆண்-பெண் இருவருக்கும் சிறப்பாகாது. திருமண தாமத்தை தரும்.தகுதியைவிட. எல்லாவகையிலும் குறைவான வாழ்க்கைத்துணைவர்கள் அமைவர். ஆனால் அவர்களை குறை சொல்வர்கள்.சண்டையும் சச்சரவுமாக இருக்கும்.ஆண்கள் பெண்களுக்கு அடங்கியிருப்பார்கள். துணைவர் நோயாளியாக இருப்பர்கள்.
ஏழில் சந்திரன் இருந்தால் நல்லதுதான்.இவர்களின் வாழ்வில் பல இளநங்கை குறிக்கிடுவார்கள்.அழகிய துணைவர்கள் அமைவர்கள். துணைவர்களின் மீது அதிக ஆசை உள்ளவர்கள். அதித உணர்வு உள்ளவர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மீன செவ்வாய் தோஷமில்லை.,அளவுக்கு மீறிய துண்பத்தையும், அவ மரியாதையையும், பிரிவினையைத்தரும். சண்டைடை போடுவர்கள். துணைவர்களுக்கு கண்டம் ஏற்படலாம்.மறுமணம் ஏற்படும். காதலில் ஏமாற்றங்கள் உண்டாககும்.
ஏழில் புதன் இருந்தால் பக்குவாமக வாழப்பழகிக் கொள்ளவேண்டும். விலகிப்போகும் பன்பை அறிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகின்றது.காரசாரமில்லாத ஒரு வாழ்க்கைங்களா என்று சப்பு கொட்டிக்கொள்வார்கள்.
ஏழில்குரு இருதால் இவர்கள் விவாகரத்து புத்தகத்தை படிப்பது நல்லது அல்லது ஒரு வழக்கறிஞனை நண்பனாக்கிக் கொள்வது அவசியம். அனைவருக்கும் தன்.பெண்கள் கணவனின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
கன்னி லக்கினத்திற்கு குரு நீச்சம், 8-12-ல் இருப்பின் திருமணவாழ்வு நலமுடன் அமையும்.
குரு ஆட்சி, உச்சம், பெற்றிருந்தால் இல்லறம் சிறப்புடன் அமையாது. 4-ல் இருந்தால் இல்லறம் சிறபுடன் அமையும்.
குருவும், செவ்வாயும் இணைந்தால் திருமணவாழ்வின் மகத்துவம் முழுவதும் ஒரு நொடிப் பொழுது மண்ணேடு மண்ணாகி விடும்.
குருவோடு சுக்கிரன் இனைந்தால் இருளுக்கு பின் ஒளி புயலுக்குப் பின் அமைதி என்றளவில் இல்லறம் அமையும்.
குருவும், சந்திரனும் இணைந்தால் திருமணத்திற்கு பிறகு இளைய பெண்களின் தொடர்பு, ஆண்களின் தொடர்பு ஏற்படும். (மானசீக நட்பாக இருக்கலாம்)
மற்ற கிரகங்களின் இணைந்திருந்தால் சிறப்பை தருவதில்லை. உவர்ப்பும், இனிப்பும் இணைந்ததாக அமையும்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் அழகிய துணைவர்கள் அமைவர்கள். துணைவர்களால் புகழ் அடைவர்கள். சிற்றின்பப்பிரியர்கள். இவர்களின் திருமணவாழ்விற்குப்பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். பெண்களுக்கு இளவரசியைப்போல் வாழ்வு அமையும்.
ஏழில் சனி இருந்தால் தன்னை உணராத ஒருவரை அதே சமையம் பிரச்சினைகள் தரத ஒருவர் அமைவர்கள். இருண்டு திருமணம் அமையும்.
ஏழில் ராகு இருந்தால் பிர் தொடர்பிருக்கும் பல பிரச்சினை ஏற்ப்படும். அகங்காரம் கொண்டவன் பிறரை மதிக்காதவர்களாக இருப்பார்கள்.வாழ்வில் சந்தோஷம் இல்லாதவர்கள்.
குரு, சுக்கிரன், இணைவு, பார்வை நலம் தரும்.
ஏழில் கேது இருந்தால் சோம்பேறி, கவலையுடையவர்கள்,அலைந்து திரிபவன், நோயுள்ள துணை. இரு தாரம் அமையும். பிரிவினை ஏற்ப்படும்.மருந்து, விஷத்தை உண்பபார்கள்.
குரு, சுக்கிரன் இணைவு, பார்வை நலம் தரும்.
திருமணம் நடக்கும் வயது : -20-25-30-35--ல் திருமணம் நடகும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
துலாம் :
லக்கினம் பிறந்தவர்களுக்கு தங்கள் உணர்ச்சிகளை உடன் தனித்துக் கொளள் விரும்புவர்கள்.இவர்கள் பகல்நேர உடல் உறவை விரும்புவர்கள்.கணவன்/மனைவியிடம் ரகசியங்களை மறைக்க தெரியதவர்கள்.இளமைக்காலத்தில் தாங்கள் கொண்ருந்த நட்பினை கூறிவிடுவார்கள். இவர்களது ரகசியாங்கள் நாளாக நாளாக எப்படியும் தெரிந்துவிடும்.அன்பும்,அதிகாரம் செலுத்துவதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல ஆனால் அன்பு நிரந்தரமானது .இவர்கள் கற்பூர உணர்ச்சி உள்ளவர்கள்.மேஷம் ஏழாம்பாவம் கோபப்படுவர்கள் .நிலையற்ற மனம், பணத்தில் ஆசையுள்ளவார்கள். யாரிடமவாது எதையாவது கேட்கும் எண்ணம் உள்ளவர்கள்.
இவர்களின் மனைவி அல்லது கணவன் எளிதில் வசியப்படுத்தி விடலாம்.எதிர்காலம் திட்டம் எதுவும் இருக்காது சுயநலமில்லாத எண்ணம் உள்ளவர்கள்.
இர்வகளின் பலவீனம் செக்ஸ் தன்.சில செயல்களில் மிஞ்சியே ஈடுபடக்கூடியவர்களாக இருப்பர்கள்.சின்ன விஷயங்ககளிலும் கூடக் கணவனிடம்/மனைவியிடம் பெரிதாகக் குற்றங்களைக் காண்பவர்களாக இருப்பர்கள். எதுவானலும் அவ்வப்போது முன்யோசனை இல்லாத தனது செயயல்பாடுகளால் தவிப்பர்கள்.
வாழ்வ்வை இனிதாக்கிக்கொள்ளும் திறமையுள்ளவர்கள்.சிலருக்கு சொத்து கிடைக்கும்.
எட்டில் செவ்வாய், குரு, சுக்கிரன் இருந்தால் இவர்களை திருமணம் செய்யாமல் இருப்பாது நலம் தரும்.
துலா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இவர்களின் திருமண வாழ்க்கை பாலைவனத்தில் பதியம் செய்யப்பட்ட ரோஜா செடி போல்,பயனற்று போவதைப் ஆராய்ந்து பார்த்தால் புலப்படும்.
செவ்வாய், சூரியன், சுக்கிரன் இணைந்தோ, பாத்தோ பரிவர்த்தனை பெற்றோ இருந்தாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் நடக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் இல்லறவாழ்வில் அதிக தீமையை தரும்.தாமததிருமணம்,இருவருக்கும் அடிக்கடி சண்டை எற்படும்.ரகசியமாக அன்னியர் தொடர்பு இருக்கும்.பெண்களால் நன்மையில்லை.
ஏழில் சந்திரன் இருந்தால் பிரச்சினை இல்லாத வாழ்க்கையாகும். இனிய இல்லறம்.பிறறால் மதிக்கப்படுவர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் வாழ்க்கை கோபதாபத்துடன் செல்லும் அவ்வப்போது ஒற்றுமையும் ஏற்படும்.வாழ்க்கை துணைவருக்கு எதிர்பாராத ஆரோக்கிய பாதிப்புக்கள் எற்படும்.தன் வீட்டுப் பெண்களுக்கு அவமனம் எற்படும்.செவ்வாய் தோஷம் இல்லை.
செவ்வாய் 1-2-9-11-ல் இருந்தால் துணைவர்கள் மூலம் பெண், பொருள் கிடைக்கும்.
அன்னகோல் உதய மாக அதற்கேழில் செவ்வாய் நிற்கின்
வின்னமாம் பாவர் பார்க்கின் விபச்சார களத்ர மாகும் !
துலாம் லக்கினமாகி ஏழில் செவ்வாய் இருக்க பாவர்கள் பார்க்க பிறந்தவர்களுக்கு ஜாதகருடைய மனைவி நடத்தையில் நலமில்லை.
ஏழில் புதன் இருந்தால் வாழ்க்கை நலமுடன் அமைய வழி வகுப்பிர்கள்.ஆனால் வாழ்கக்கை துணையாளர் வேறுபட்ட மனம் உடையவராக இருப்பர்கள். அதிக காம உணர்வுள்ளவர்கள். தாம்பத்ய சுகம் குரைவுள்ளவர்கள்.சஞ்சல சுபாவம் உடையவர்கள். வெளியில் சொல்ல முடியாமாலும். அவர்களை திருத்த முடியாது.மனம் போராட்த்தை புறிந்து கொள்ளமுடியாது.
புதன் 4-ல் இருக்க, சந்திதிரன், சனி இணைந்திருந்தாலும் சந்திரனை செவ்வாய் பார்த்தாலும் திருமணத்திற்கு பின் வாழ்வில் யோகத்தை அனுபவிப்பார்கள்.
ஏழில் குரு இருந்தால் ஆயிரம் வந்தாலும் சரி, போனாலும் சரி இந்த வாழ்க்கையே வேண்டாம்டா சாமி என்று புலம்புவர்கள். தைரியம் இல்லாதவர் பிறபலர் தொடர்பு இருக்கும். பெண்களுக்கு திருமண வாழ்வில் பிரிவு எற்படும்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும். வாழ்வில் அனைத்து இன்பங்களை அனுபவிப்பார்கள். அதிக விருப்பம், அதிக வெறுப்பும் எற்படும்.அதித காம உணர்வுள்ளவர்கள்.
சுக்கிரனும்,புதனும் இனைந்திருந்தால் தீய நடத்தையுள்ளவர்கள்.அதித காம உணர்வு, இவர்களுடன் செவ்வாய் இணைந்தால் வீபரீதமான முறையில் வேட்கையை தணித்துக்கொள்ள நேரிடும்.
1-3-6-8--9-11-12-ல் புதன் இருந்தாலும்.உறவில் திருமணம்
சனி, சுக்கிரன் ஜாதகத்தில் இணைந்திருந்தாலும், சுக்கிரன் சனியைப் பார்த்தோ இருந்தாலும். மாமனார் மாமன் குடும்த்துடன் பாசத்துடனும், பிரியத்துடனும் இருப்பர்கள்.
ஏழில் சனி இருந்தால் திருமணம் நடைபெறும். இனிய இல்லறம் அமையும். மண வாழ்க்கை துணையாளரை பாராட்டமட்டார்கள். அன்னி நாட்டுத்தொடர்பு எற்படும். இரண்டு திருமணம் எற்ப்படும்.
ஏழில் ராகு இருந்தால் திருமண வாழ்வு சிறப்பாகாது பெண்களால் அவமானம்
எற்படும்.கர்பத்தில் பிறச்சினை எற்படும். இரண்டு திருமணம் அமையாலம். யோகம் தருவர். மனைவிக்கு அதிகப்படியான த்தப்போக்கு எற்படும்.
ஏழில் கேது இருந்தால் திருமணவாழ்வில் குழப்பம் ஏற்படும்.அதித காம உணர்வு தீய நடத்தையுடையவர்.நோய் பாதிப்பு இருக்கும். இடுமருந்து இடுவார்கள்.அன்நியர்களால் துண்பம் ஏற்படும்.
திருமணம் நடக்கும் வயது : - 19-24-29-34-ல் நடக்கும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment