Wednesday, 9 September 2015

பாதகாதிபதி ஒரு பார்வை   -  1
                                 ( ஓர் சிரப்பாய்வு)

     ஒரு ஜாதகத்தை ஆராயும் போது ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கும் போது பலம் கணும் விதிகள் பல உள்ளாது. முக்கியமான விதி பாதகாதிபதிகள்.
விதி (1)
இதன் அதிபதிகள், பாதகஸ்தானங்களில் நின்ற கிரகங்கள், இணைந்த கிரகங்கள் கெடுபலன் தருகிறது.பாதகாதிபதிகள் சாரம் பெற்ற கிரகம் பல துண்பங்கள் தரும்.
    மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளை சர ராசியாகும்.
      ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளை ஸ்திர ராசியாகும்.
       மிதுனம், கன்னி, தனுசு மீனம் ஆகிய ராசிகளை உப ராசியாகும்.

சர லக்கித்திற்கு 11ஆம் அதிபதி

ஸ்திர லக்கித்திற்கு 9 ஆம் அதிபதி

உபய லக்கினத்திற்கு 7 ஆம் அதிபதி

   பொதுவாக பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் வலு பெற்று விட்டால் அந்த பாவ பலனை முழுவதும் கெடுத்து விடுகிறது. பாதகாதிபதி மற்ற ஸ்தானத்தில் அமைந்தது அதன் திசை புத்தி வரும் காலத்தில் எதிர்பாராத இழப்பு நஷ்டம் உண்டாகிறது
      சர லக்கினத்திற்கு  11 ஆம் வீடு பாதக ஸ்ததாம் என்பதால் பொதுவாக வருவாய் குறைவு, மூத்த சகோதரர் வகையில் நஷ்டம், வெற்றி வாய்பு குறைவு ஏற்படும்.
    ஸ்திர லக்கினத்திற்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் பிதுர்வழியில் அனுகூலம் இல்லாத நிலைகலை உண்டாகும்.
      உபய லக்கித்திற்கு  7-ஆம் வீடு பாதக ஸ்தாம் என்பதால் மனைவி வழியில், கூட்டுத்தொழில் மற்றும் நண்பர்களால் கெடுபலன் உண்டாகிறது.

சூடப்பா சர ராசி செனித்த போர்க்கு

       சுகமில்லை லாபாதிபதி யினாலே

ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்

      அப்பனே  அரசரிட தோஷமுண்டாம்

தேடப்பா திரவியமும் மளித்தாரானால்

      திரவான அசிட்டமடா தேட மாட்டான்

விடப்பா கோணத்திலிருக்க நன்று

       விளம்பினேன் புலிப்பாணி வினையைப் பாரே

  சர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியால்
எந்தவித நல்ல பலனும் ஏற்படாது.பொன், பொருள், நிலமும் ஆகியவை சேதமாகும்.அரசாங்கத்தால் கஷ்டங்களும், மரணத்தை தரும்.
  திரி கோணங்களில் இருந்தால் மேல் கண்ட தீய பலன்கள் நன்மையை தரும்.

பாரப்பா திரராசி செனித்த பேர்க்கு

        பாங்கான பாக்கியாதிபதியுமாகா

கூறப்பா கோணத்தில் கோலினாலும்

        கொற்றவனே பலனளிப்பன் அரசில்லாபம்

வீரப்பா மற்றிடந்தனியே நிற்க

        வெகு பயமாம் பலனில்லை வினையில் துன்பம்

சீரப்பா போகுரு கடாஷத்தாலே

          சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே

                          ஸ்திர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கியாதிபதி நல்ல வரல்ல ஆகாதவர். கோணங்களில் இருந்தால் நன்மைகளை தருவர்.
மற்ற இடங்களில் இருந்ந்தால் பயம், பலவித கஷ்ட நஷ்டங்களைத்தருவர் காரியக் கேடுகள் ஏற்படும்.

செப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு

              சிறந்ததொரு சப்தமனுமாகாதப்பா

ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த

              ஊழ்வினையைத் தடுப்பாருமுலகிலுண்டோ

தப்புவாய் திடல் நாசம் தனமும் நாசம்

               தார் வேந்தர் பகையுண்டு தேக துன்பம்

இப்புவியில் போகருட கடாஷத்தாலே

                  இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே

                         உபய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாமாதிபதி ஆகாதவன்.பொல்லாதவன். கஷ்டங்கள் அதிகம் நிலம், மனை,தனம் ஆகியவை நாசமடையும்.அரசு வகையில் துண்பம் .ஏழாம் அதிபதியின் நிலையாறிந்து நடப்பு தசாபுத்தியின் அடிப்படையில் பலன் கூறவும்.

   மேஷத்திற்கு  பதினொன்றாம் அதிபதி சனி

   கடகத்திற்கு பதினொன்றாம் அதிபதி சுக்கிரன்

   துலாத்திற்க்கு பதினொன்றாம் அதிபதி சூரியன்

   மகரத்திற்க்கு பதினொன்றாம் அதிபதி செவ்வாய்

                  செவ்வாய் சனி இருவரும் பகைவர்கள்
சனிக்கு கோணதிபத்தியம் இல்லை. மேசத்தில் சனி நிச்சம். செவ்வாய் கும்பத்தில் பகைதன்மை அடைகிரர்இதனால் பாதகதிபதியாகிரர்.
    சந்திரன் சுக்கிரன் இருவரும் பகைபவர்கள். சுக்கிரன் கோணதிபத்தியம் இல்லை கடகத்தில் சுக்கிரன் பகை.இதனால் பாதகாதிபதிகளாகிரர்.
    சுக்கிரன் சூரியன் இருவரும் பகைவர்கள். இருவருக்கும் பலமான திரிகோண பலமும் கேந்திர பலமும் இல்லை.துலாத்தில் சூரியன் நீச்சம். சிம்மzwத்தில் சுக்கிரன் பகை இதனால் பாதகாதிபதி தன்மை அடைகிரர்கள்.
     மகரத்திற்கு செவ்வாய்க்கு திரிகோண பலமில்லை இருவரும் பகைவர்கள் இதனால் பாதகத்தன்மை அடைகிரர்.
மகரயில் செவ்வாய் உச்சம் அடைகிரர் எப்படி  பாதிப்பை தருவர் .இருவரும் பகைவர்கள்.
( இருவருக்கும் குணபேத அடிப்டையில்)
   
ரிஷபத்திற்கு          ஒன்பதாம் அதிபதி      சனி
சிம்மத்திற்க்கு        ஓன்பதாம் அதிபதி     செவ்வாய்
விருச்சிகத்திற்கு   ஒன்பதாம் அதிபதி     சந்திரன்
கும்பத்திற்கு           ஒன்பதாம் அதிபதி      சுக்கிரன்
                        சுக்கிரன்  சனி  இருவரும்  நண்பர்கள். ரிஷபத்திற்கு சனி கோண /கேந்திர அதிபதியகிரர். லகினத்திற்கு பெரும்பாலும் தீங்கு செய்யமாட்டர்.
                  சூரியன் செவ்வாய் இருவரும் நண்பர்கள். சிம்மத்திற்கு கேந்திர /கோணதிபத்தியம் அடைகிரர் இருவரும் இணையமால் இருப்பின் நலம் தருவரர்.
          செவ்வாய்  சந்திரன்  இருவரும் சமம்.இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் நீச்சபலமடைவதில் பாதகம் செய்வர். சந்திரன், செவ்வாய் இணைவு, பார்வை பாதகம் தருவர்.
                   ஸ்திர ராசியில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபத்ய தோஷமில்லை.இவர்களுக்கு மேல் கண்ட தசா காலங்களில் தீய பலன்கள் நடை பெற்றால் வேறுபல காரணங்களும் இருக்கும்.
     மிதுனத்திற்கு ஏழாம் அதிபதி குரு .
     கன்னிக்கு        ஏழாம்  அதிபதி  குரு
     தனுசிற்கு         ஏழாம்  அதிபதி   புதன்
     மீனத்திற்கு      ஏழாம்  அதிபதி  புதன்
                  குருவும் புதனும்  பகைவர்கள்.குரு, புதன் இருவர்களும் சுபக்கிரகமாகக் கருதப்பட்டு இவர்கள் தங்களுக்கு மற்றோர் இடங்களாகிய பாவங்களை கேந்திர ஸ்தானமாகப் பெற்றுள்ளர்கள். இயற்கையிலேயே கேந்திர ஆதி பத்ய தோஷத்திற்கு ஆளாக்கப்படுவதால். பாதகாதிபத்திய அதிகமாக உபய லக்கினத்திற்கு பதிப்பை தருகிரர்கள்.
         குரு, புதன் 6-8-12-ல் இருந்தாலும். குரு நீச்சம் பெற்றால் நலம் தரும் வாய்புள்ளது.

ப.சூரியஜெயவேல்
9600607603
                                       

No comments:

Post a Comment