மேச லக்கினம் :-
மேச லக்கினத்தில் மேலாய்ப் பிறந்தவனை
மோட பங்கஞ் செய்திடுவன் மேதினியில் -கூறும்
சனி பத்து பதினென்றுக்குள் பாவி கொடுங்
காரியனும் - சீமானை
செத்தவன் கை வெத்திலைபோ லாக்கிடுவன்
பெண்டு பிள்ளை தன்னுடனே புவியில் வாழ
ஒட்டான் காண்
கண்டவர்கள் நேசங் கனங்குரைப்பன் - செல்வம்
தந்தானே யாமாகில் தரையிலிருக்க ஒட்டான்
சுந்தரனைக் கொல்லத் துணிந்திடுவன் - பொல்லா
சனி திசை யந்தியத்தில் ஜாதகனுக்கோரரிட்டம்
பண்ணிடுவன் நிச்சயமாய் பாருலகில் சுமக்கும்
மேசலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பத்து, பதினென்றாம் அதிபதி சனி திசா புத்தி நடந்தால் வாழ்வை பல பதிப்பை தருவர்.இறந்தவர் கையில் வெத்திலை போல் பயனற்றதாக ஆகிவிடும். மனைவி, குழந்தைகளுடன் வாழமுடியாத சூழலைதரும், மறியாதை குறைவு ஏற்படும். செல்வம் கிடைத்தால் மரணத்தை தருவர். குழந்தைக்கு மரணம் ஏற்படலாம். சனி திசை கடைசியில் மரணத்தை தருவர்.பல துண்பங்களை அனுபவிப்பர்கள்.
ரிசபலக்கினம்
எருதுதன் லக்கினத்தி லியல்பாக வந்த சேயை
கருதுங் குரு திசையில் கனங்குரைப்பன் -செல்லும்
இராஜ குரு திசையில் நலமான பண்டுகளும்
தூசி போலாக்கிடுவன் சொன்னேனே -இன்னும்
இல்லுமே காடிகளு மியல்பான பூஷணங்கள்
வெல்லும் வழக்காவே விரைந்தோடும் -போக
இவன் கொடுத்த பொன்னுக்கு யீடு முரி பட்டவனம்
அவனுமிவனோ டெதிர்த்திடுவன் -அன்றும்
இராஜ சபையேறி நீதிவார்த்தை சொல்லிடினும்
உச்சாக மெதிரிக்கி யுண்டாகும் -உண்மையுடன்
சாரு ருசி சோறுருசி தானரிய மாட்டான் காண்
வெருவாயை மென்று வெளி வருவன் -விருத்தாவில்
கூலிவேலை செய்து கூக்குரலை போட்டாலும்
கூலிதர ஒட்டான் காண் குரு ராஜன் -( பின்னும்
ஒடுவன் களத்திரத்தை உபாயமாய் போகித்து
பொருள் தாரே னென்று சொல்லி புக்கிடுவன்)-மிக்க
பார விலங்குடனே பந்தனத்தில் போட்டு வைப்பன்
கோலங்கல் செயும் குரு ராஜன் -சீலமுடன்
மாடாடு கன்றுகளு மனையிலிருந்தாலும்
பாடு மிக வந்து விடும் பலுகாது -யேராரும் சீவனத்தை தந்து சிவிகை பரியேத்தி வைப்பன்
போவதற்கு முன்னே பொசிக்கிடுவன் பரிதிசையை
நிச்சயமாய் சொல்லி விட்டென்ரிஷப லெக்கினத்
தோர்க்கு
பச்சதாப முள்ள படுகுருவும் - உச்சிதமாய்
இந்த விதி முறையை யெடுத்துரைத் தேனெல்
லோர்க்கும்
சுந்திரனை நிலைறிந்து சொன்னதுடன் இன்னமுங்
கேள்
ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு 8-11 ஆம் அதிபதி குரு தசையில் நல்ல பலன்களை துசிபோலக்கிடுவன் வீடு, பொன், பொருட்கள் செல்வங்கள் நீதிமன்ற வழக்கல் இழப்பும் ஏற்படும். இவர்கள் கொடுத்த பணம், பொன் பொருளுக்கு வாழக்கு தொடுப்பர்கள் நீதி வார்த்தை பேசினலும் எதிரி உண்டாகும்.அவர்களும் எதிர்ப்பர்கள்.நல்ல உணவு கிடைக்காது.வெருவாயைய் சுவைப்பபர்கள் பல வேலைகள் செய்தாலும் கூலி கிடைக்காது. விலங்குகளால் துண்பம் ஏற்படும்.
சிறப்பன. கால்நடைகள், கன்றுகாலிகள் வீட்டில் இருந்தாலும் நோய்கள் வந்து இறந்து விடும். யாரவது வேலை கொடுத்தாலும், பதவி தந்தாலும், திசை முடிவதர்க்குள்ளே நசமக்கி விடுவான். உறுதியுடன் கூறுகிறோன்.ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை பல துண்பங்களைத் தரும்.லக்கினாதிபதியின்,குருவின் நிலையை ஆராய்ந்து கூறவும். (மனைவி நிலை பதிப்பு ஏழாம் அதிபதியின் நிலை 8-ல் சனியின் தொடர்பு இருந்தால், ஆராய்ந்து கூறவும்)
மிதுன லக்கினம் :-
மிதுன மென்ற லக்கினத்தில் முன்னுதித்த
பாலனுக்கு சுக முடனே
சதி செய்ய வந்திடுவன் சற் குருவும்
மேய்யாகவே யிவனு மேவு திரிகோண முற்றால்
பையவே யிவனுக்கு பலன் கொடுப்பன்
வையகத்தில்
மற்ற விடந்தனிலே மன்ன னிருந்து விடில்
கட்டத் துணிக்கிக் கரமேந்திக் காத்திருப்பன் தொட்ட
கும்ப முலை மனையாளை கோபங் கொண்ட
தினமும்
துன்பந் துன்ப மென்று துலைத்திடுவன்
தன்னுடைய
யெல்லை விட்டு போனாலு மிழிவு வந்து நெர்ந்து
விடும்
கொல்ல ஒருக்கால் நினைப்பன் குரு தானே
கூறுகிறேன்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு துண்பம் தருவதற்க்கு குரு தசையில் துண்பம் தருவர். திரி கோணங்கலில் 5-9-ல் குரு இருந்தால் சுப பலனை தருவர்.மற்ற இடங்களில் குரு இருந்தால் உடுத்துவதற்கு துணி இல்லமால் கஷ்டப்படுவர்கள். மனைவியால் பலதுண்பங்களை அனுபவித்து. புலம்புவான் பூர்வீகம் விட்டு வெளியுர் சென்றால் அவப் பெயர் ஏற்படும். மரணத்திற்க்கு ஒப்பன கஷ்டங்களும் ஜாதகர் /ஜாதகிக்கு ஏற்ப்படும்.
கீழ் காணும் ஜாதகம் :-
சிறப்பன அரசு உத்தியோகம் பார்த்து வந்தர். 21 வயதில் குரு தசை ஆராம்பமானது. திருமணம் முறையாக அனாது மூன்று மாதம் தன் குடும்ப வாழ்வு அமைந்து. பிரிவு ஏற்பட்டது இன்றுவரை பிரிந்திருக்கிறர்கள். பிறகு பல தொழில் தொடங்கினார். சில காலத்தில் பதிப்பு நஷ்டம் ஏற்பட்டு பல லட்சங்களுக்கு கடனாளியாகிவிட்டார்.பூர்வீக செத்துகள் வழக்கு சிக்கி சிறமங்கள், கஷ்டகளை அனுபவித்தர்.
குரு தசை இவரை படாய் படுத்தயது.
கடக லக்கினம் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் :-
கர்க் கடக லெக்கினத்தில் காளை இந்திரஜித்து
வந்தான்
சற் குருவுக் கெதிரி சுக்கிரனே உக்கிரமாய்
அவன் திசை காலத்தி லந்த இந்திரஜித்தழிய
புவனம் புகழ் ராமன் புகழ்ந்திட்டான் மேதினியில்
அவன் திசைக் குள்ளாக அகமும் துலைந்து விடும்
அவனிவனை பரதேசி யாக்கிடுவன் நயமுடனே
யேந்த இடம் போனாலும் எருள அசுரகுரு பாவி
சுந்திரனைச் சந்தியினில் விட்டிடுவன் விந்தையுடன்
பந்தனத்தில் வைத்து பார விலங் கோடமைத்து
மைந்தனையு மன முறியச் செய்திடுவன் தொண்டு
வஸ்திரம் துவைக்க வைப்பன் வாழ்வுள்ள
மன்னனுக்கு
நத்தி கூலி கேட்கையிலே நலிந்திடுவன்
சொன்னேன்
தென்னாட்டை யாளும் தர்மதுரை யேமனுக்கு
திண்ணகமா யிவனுயிரை சேர்த்திடுவன் சீருடனே
கஞ்சி குடிக்கையிலே கவனங்கள் கோடியுண்டு
வெஞ்சினங் களில்லாமல் விழித்திருப்பன் என்றும்
சோறு கரியுண்கையிலே சொற் குற்றாம்
வந்துவிடும்
சாரூத்தி தின்ன தட்டிடுவன் பேதகமாய்
அய்யய்யோ யிவன் திசையி லவதிகள்
மேத்தவுண்டு
அய்யய்யோ யிவன் திசையு மாகாது பைய
கற் கடக லக்கினத்தில் ஆகாது சுங்கன்திசை
சொக்கட்டானாடித் தோற்றானே தர்மனுமே சொல்
நயமாய்
அறைந்திட்டேனவன் லபியை
அவனியிலுள்ளோரறிய
திரந்திட்டேன் திசானாதன் செயுங் கூறை தீவிரமாய்
கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருவுக்கு பகைவர் சுக்கிரன்.கடக சுக்கிரன் சுக்கிரன் பாவி. கடக லக்கினத்தில் பிறந்த இந்திரஜித் சுக்கிரன் திசையில் அழிந்தான்.உழகம் புகழும் ஸ்ரீராமனின் அருளல் அவனது ஆணவம் அழிந்தது.சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் ஜாதகர், ஜாதகி பரதேசியாக அலைவர்கள்,நடுத் தொருவில் நிற்க்க வேண்டியா சூழல் ஏற்படும். மனம் பேதலிக்கும்.வாழ் வங்கு வாழ்பவர்க்கு வேலைகள் செய்வார்கள், துணிகளை துவைப்பார்கள், செய்த வேலைக்குறிய கூலி கிடைக்காது.அரசு வகையில் தண்டனையும், உணவு உண்ணும் போது சண்டையும் சச்சரவும் ஏற்படும்.மகாபராதத்தில் சூது ஆடிய தர்மன் ஆஸ்தி, அந்தஸ்தும், நாடு, நகரம், தம்பிகள், மனைவி அனைத்தையும் இழக்கச் செய்தார். சுக்கிரனுடைய திசையில் இந்த நிலைகலை தருவார். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் திசையில் பலனை அனுபவிப்பார்கள்.
கீழ் உள்ள ஜாதகம் பெண்ணுடையாது.
சுக்கிர தசையில் முதல் திருமணம் 3/12 /2000,
25/4/2002 கணவர் இறப்பு,
மறுமணம் 24/1/2007, விவாகரத்து 2008. சுகபோக வாழ்வை பங்கமானது.நிம்மதியாற்ற வாழ்வு அமைந்து.
சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
சிங்க லெக்கினத்தில் சீராக வந்தவனை
பங்ப்படுத்திடுவன் பவுமனவன் சங்கையயற
அவன்திசை யேழுக்குள் அவதி மெத்த பட்டிடுவன்
அவனிவனை யாக்கிடுவன் அம்பலத்தில்
நலமுடனே
சுக பாக்கியாதி யென்று சொல்லிடுவர் நூல்
வல்லோர் சுகந்தர மாட்டான் காண் சொற்பனத்தில்
தகமையற்று
யெண்ணாது மெண்ணியே யேங்கி மன முரிவன்
பொன்னாபரண மெலாம் போக்கிடுவன் மண்ணும்
நச்சை நிலங்களெல்லாம் நாசமாய்த்
துலைத்திடுவன் சஞ்சலங்கள் பட்டிடுவான் சமயத்தில் கொஞ்சல்ல
சிங்க லெக்கினத்திற் காகாது சேய் திசையும்
சங்கரனைத் துதிசெய்தால் சற்று நலம் பொங்கும்
சிம்ம லக்கினத்தில் பிறந்த ஜாதகர், ஜாதகிக்கு செவ்வாய் ஏழு வருடங்களில் பல துண்பங்களைத் தருவார்.5-9-ஆம் அதிபதி என்று யோகம் தரமாட்டார். கணவில் துண்பத்தை தருவார்.பொன், பொருள், நிலங்கள் எல்லாம் துலைத்ததிடுவார்கள்.மன நிம்மதி இருக்காது.சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் தசையில் அதிக துண்பத்தை தருவார்.
ஆனால் ஸ்திர ராசிக்கு பாதகதிபத்திய தோஷம் அதிகம் பதிப்பதில்லை.
லக்கினாதிபதியும் சூரியனும் 4-9-ஆம் அதிபதியும் நட்பு கிரகங்கள். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோகதிபதியாக வருகிறார்.
சிம்ம லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் செவ்வாய் தசை நடந்தவர்கள் தங்ளுடைய அனுபவங்களை பதிவிட வேண்டுகிறோன்
கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
கன்னியா லக்கனத்தில் காளையிவன்
வந்துதித்தால்
பன்னுங் குரு ராஜன் படுபாவி - துண்ணூம்
பாவியவன் கோணத்தில் பக்குவமா யேரி விடில்
தாவி சுப பலனைத் தந்திடுவன் - வேகமுடன்
மற்ற விடந் தனிலே மன்னனிருந்து விடில்
கெட்ட பலன் தந்திடுவன் கேட்கணுமோ - நட்டமிலா
சுக சப்த மாதியென்று சொல்லிடுவர் சோதிடர்கள்
சுக மெத்த உண்டென்றும் சொல்லிடுவர்
பகையுடனே
சுகம் கிட்டாது எட்டாது சொற்பனத்தில் கூடயில்லை
அக மெல்லா மடவுக்குள் போய்விடுமே -
வெறுமையுடன்
நாடு சென்னால் தோப்பும் நலமா யிருந்தாலும்
பாடு வாசி தான் வருமே பலலில்லை வேறு
அட்டமன் வலுமை பெற்று ஆயுளைத் தந்து விடில்
மற்று மெவன் திசை யாலு மென்ன உற்ற
மன்னன் புத்தி யந்திரத்தில் மைந்தனையுமே
கொல்ல
தின்னகமா யிவனவனை சிதைத்திடுவன்
வண்ணமுடன்
கன்னியா லக்கினத்திற் காகாது தேவகுரு
சொன்னேன் அவன் விதியை சொல்லிடுவீர்
இன்னுமுங்கேள்
கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு பாவி 5-9-ல் இருந்தால் சுப பலனைத்தந்திடுவா...ர்.
மற்ற இடங்களில் இருந்தால் கெடுபலனையே தருவர்.4-7-ஆம் அதிபதி அவர். கணவில் கூட சுக வாழ்வு கிடைக்காது.சொத்து,தோப்பும் இருந்தாலும் நன்மையில்லை வெறுமையுடன் வாழ்வார்கள். எட்டாம் அதிபதி பலம் பெற்று நீண்ட ஆயுளைத் தந்தாலும்.மற்ற கிரகங்களின் திசையில் குரு புத்தி, அந்தரத்தில் மரணத்திற்கு சமன கஷ்டங்களும், கண்டங்களையும் தருவார்.கன்னி லக்கினத்திற்கு தேவகுரு பாதகதிபதி ஆவார்.சுபக் கிரங்கள் கேந்தித்திற்கு அதிபதியானால் கேந்திரதிபத்தியா தோஷத்தை தருவார்கள்.
கீழ் கணும் ஜாதகம் பெண்ணுடையாது
25 வயதிற்கு பிறகு குரு தசை வாந்தது. கணவன் விபத்தில் இரந்துவிட்டார்.இரண்டு குழந்தையுடன் தனிமையில் வாழ்கிறர்கள்.
துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
துலை யென்ற லக்கினத்தில் தோன்று சுறு
பாலனுக்கு
மலை போலே சூரியனும் படுபாவி நலங்குரைக்கும்
அவன்திசை யாறுக்குள் ஐஸ்வரிய மீந்தாலும்
அவனையும் கொன்றிடுவன் அண்ணலவன்
துன்பமொடு
அன்பதுக்கு மேலே அலரிதிசை வந்திடிலோ
துன்பமில்லை துணிந்திருப்பன் வையகத்தில்
சையோக வாலிபத்தில் சூரியதிசை வந்துவிடில்
குய்ய தந்திரம் செய்தாலும் கேழ்ப்பானோ கூறும்கோவிந்த ராஜனையும் குமரனையும் தான்
தொழவே மேவ
ஆவலுடன் பூசை செய்தால் வலுக் குறையும்
துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் பாவி.சூரியன் தசை ஆறுவருடமும் செல்வ வளம் தந்தால், ஆயுளை பங்கப்படுத்தி விடுவார். துண்பத்தை தருவார். ஐய்பதுக்கு பிறகு சூரியன் தசை நடமுறைக்கு வந்தால், துண்பம் இல்லை ஆயுள் பலமுடன் உலகில் வாழ்வர்கள். வாலிபத்தில் சூரியன் தசை வந்தால் முறையாக, கோவிந்தராஜனையும், முருகக்கடவுளையும் பூஜை செய்து வந்தால் துண்பம் குறையும்.
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
விருச்சிக லக்கினத்தில் வீரசூரன் வந்துதித்தால்
பொருமையுள்ள சுக்கிரனும் படுபாவி தரைதனிலே
பாவியிவன் திசையில் பாக்கியத்தை தந்தானால்
பூவி லுள்ள யாவருமே போற்றிடுவர் நேசமுடன்
காடி பரி இல்லுகளும் கனத்த மெத்தை மாடிகளும்
சோடிப்பாய் தந்திடுவன் சுக்கிரனும் சேஷமன்று
இந்த நல்ல வாழ்வுகளு இயல்பாக தந்தானால்
தந்த சுக்கிரன் கொன்றிடுவன் தப்பாமல் அந்த
முடன்
மெத்த துண்பந் தந்து மேதினியில் வைத்தானால்
சுற்றத்தார் யாவருமே துஷணிப்பர் கஷ்டமொடு
மற்று மெவன் திசையில் மன்னன் சுக்கிர புத்தி
தன்னில் நேறும்
சட்டமாய் கொன்றிடுவன் சுங்கன் காண்
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பாவி ( 7-12-ஆம் அதிபதி) சுக்கிரன் திசையில் பாக்கியங்கள் தந்தால் உலகில் உள்ள அனைவரும் புகழ்ந்திடுவர்கள்.மெத்தைவீடுகளும், மாளிகை, கிட்டும் .இயல்பாக தந்தால். மரணத்தையும் உறுதியாக தருவார். அதிக துண்பத்தை தந்தால் உறவினர்கள் மதிக்கமாட்டார்கள். கஷ்டங்களும் அனுபவிப்பார்கள். மற்ற கிரகங்களின் திசையில் சுக்கிர புத்தியில் மரணத்தை தருவர்.
ஆயுள் ஸ்தானம், லக்கினம், லக்கினாதிபதி, சூரியன், சந்திரன் பலமுடன் இருந்தால் மரணத்தை தரமாட்டார்கள்.அதர்கு சமமான துண்பத்தை தருவர்
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை,புத்தி நடக்கும் காலங்களில் மேல் கண்ட பலன்
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
தனுசு வென்ற வில்லுதனில் தானுதித்த பாலனுக்கு
கனத்தை குரைத்திடுவன் கணக்கனவன் -
வணக்கமுடன் சிந்தை கூரியனும் திரிகோண மேவிடில்
நந்து திருமாது நலளிப்பன் - சுந்தரமாய்
மற்ற விடந்தனிலே மதிமகனு மேவிடிலோ
கட்டத் துணியற்று கனங் குறைப்பன் - நட்டமுடன்
இவன் திசையிலாபம் யின்பமாய் தந்துவிடில்
இவனவனைக் கொல்ல யிரைவனவன்-புவிதனிலே
சுந்தினும் யோகத்தை சொன்னபடி செய்யாவிடில்
பந்தப்படுத்தி பல்லாண்டு நீண்டிருப்பன் -எந்தவிதம்
யின்ன மெவன் திசையில் யிவன் புத்தி வந்தாலும்
நண்ணு மந்தியத்தில் நிரியாணம் சாற்றிடுவாய்
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திரிகோணங்களில் இருந்தால் நல்ல மனைவி /கணவன் அமைவர்கள் சுகமுடன் வாழ்வு அமையும். சந்திரனின் மகன் புதன் மற்ற இடங்களில் இருந்தால் உடுத்துவதற்கு ஆடையின்றி தவிக்கும் நிலையைத் தருவார், சிறப்பன பலனைத்தந்தால், மரணத்தை தருவார், யோகத்தை தரவில்லை என்றால் பக்குவ படுத்தி பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் கிட்டும்.புதன் திசையில், புதன் புத்திகளில் நடக்கும்.
ஜாதகர் புதன் தசையில் கல்வி சிறப்பன முறையில் அமையவில்லை.தந்தையின் செல்வங்கள் படிப்படியாக குறைந்து சிறமமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறர். 42 வயதில் திருமணம் நடந்தது.
மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
மகரந்தனில் பிறந்த மைந்தன் சிறுபாலனுக்கு
மிக மோசஞ் செய்திடுவன் மங்கலனும் -மகிமையுடன்
சேய்திசை வந்தவுடன் தேடிவைத்த பொருள் நிலமும்
ஆய்ந்த புகழ் கீர்த்தி அகற்றிடுமே கூறும்
சோதிட நூல் வல்லோர் சுருதிமுறை வழுவாமல்
கூறும் சுகலாபாதி பதி யென்பர் - - சீருடனே
யெப்படியுமித்திசையில் ஜாதகருகோ வருத்தம்
தக்த மனக் கலக்கஞ் செய்திடுவன் சுத்தமுடன்
இன்னு மவனோ இணைந்த சுபக் கோள்களையும்
பண்ணுங் கொடுமை செய்யப் பகர்வான் காண்
அங்காரகனும்
இந்த நல்ல லக்கினத்திற் காகது செய்திசையும்
தொந்தமுள்ள ராசிபலன் சொல்லக்கேள் மற் கலசம்
மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மிக மிக பாதகம் செய்திடுவார்.செவ்வாய் திசை வந்தவுடன் புகழ், பொருள், நிலங்ள், வீடு, மனக்கலக்கம், அனைத்தும் நஷமகிவிடும்.
செவ்வாய் 4-11 ஆம் அதிபதியாவர். எப்பபடியும் இவர் திசையில் ஜாதகர்,ஜாதகிக்கு துண்பத்தை தருவர். இவருடன் சுபர்கள் இணைந்திருந்தாலும் அவர்களின் திசையிலும் துண்பத்தை தருவர்கள். இந்த லக்கினத்திற்கு செவ்வாய் திசை ஆகாது. நன்கு ஆராய்ந்து பாருங்கள்.
கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
கும்ப மென்ற லக்கினத்திற் குமரன் சிறு பாலனுக்கு
துன்பந்தரும் பீடை துலங்கிடுவன் அசுரகுரு
பளிங்கு திசை முழுதும் பணமும் புதை பொருளும்
துலங்கும் வயல் காடு துலைத்திடுவன் - இலங்கும்
சுக பாக்கியாதி யென்று சோதிட நூல் சொன்னாலும்
மிகப்பீடை பொருள் விரையம் மேவிடுமே - ஜெகத்தில்
இந்த திசை முழுதும் ஜாதகனுக் இன்னல் பிணி
விந்தையுடன் தந்திடுவன் மேன்மை பெறான் - சொந்த
கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு துண்பத் தரும் அசுர குருவன சுக்கிரன் பணம், பொருள், செல்வம், பூமி காடு அனைத்தும் இழந்து விடுவார்கள். சுக நான்கம், பாக்கியாதி ஒன்பாதம் அதிபதியான சுக்கிரன் அதிக துண்பத்தை நோய் தருவார் .திசை முழுவது மேன்மை கிட்டாது.
சுக்கிரன் இருக்கும் நிலைக்கு ஏற்ப பலன் நடக்கும்.
அனுபவத்தில் ஸ்திர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதகதிபதிகள் லக்கினாதிபதிக்கு நட்பு கிரகம் வரும். கேந்திரம்,கோணம் வீடுகளால் அமைவதால் தீமை குறைவக கிட்டும். அனைவரும் தங்கள் அனுபவங்களை பதியுங்கள்.
மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
மீனமென்ற லக்கினத்தில் மைந்தன் சிறு பாலனுக்கு
ஆன புதன் வெள்ளி ஆகாதாம் - நாணயமாய்
சாமன் சப்த மாதிபதி சட்டாடப் பொருள் பிணியும்
தாமத மில்லாமல் சற்றளிப்பன் நேம முடன்
இன்னமும் தேர்ப்பாகன் யின்ப சுகந் தந்திடுவன்
திண்மையுடன் மாரகத்தை செய்திடுவன் - கன்மமொடு
அட்டமத்து சுக்கிரனு மாகாது திசை முழுதும்
கஸ்ட மெத்தக் காட்டுக் கடுங்காவல் மெத்த
உண்டு பண்ணித் தனச் செலவும் ஒர் காசு மில்லாமல்
தொண்டனைப் போல் கேழ்க்கத் துலைத் திடுவன் என்றும்
யெந்தயிடம் போனாலும் பாவி கொடுந் திசையதனால்
சந்தோஷம் வாராது தரித்திரமே கொடிய
புகர் திசையில் தூதுவனும் புகழ் மோஷ வைகுண்டம்
நகரடையச் செய்திடுவன் நன்மையதால் தயங்கும்
இந்த விதிப்பாகம் யியல் தூது செப்பினன் காண்
சுந்திரக் கோள் நிலை யறிந்தும் சொல்லிடுவீர் நானும்
சோதிட நூல் தப்பாது சுருதி மொழி யாராய்ந்து
அனு போகத் தாலேயும் அறை அறை நாராயணன் யானும் பங்கமில்லா துரைத்தேன் பல நூலைக் கற்றுணர்ந்தோர்
இங்கிதனை யேற்றுக் கொண்டே யாதரிப்பீர்
மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் அதிபதி புதன், எட்டாம் அதிபதி சுக்கிரன் ஆகாதவார்கள்.இவர்களின் திசை புத்தியில், புதன் திசை தனதான்யம் பொன், பொருள் அழிவு ஏற்படும்.பயிர்தொழிலில் நஷ்டம், நோய்கள் ஏற்படும். மனைவிக்கு /கணவணுக்கு துண்பம் ஏற்படும் சுப பலனை தந்தால் மாரகத்தையும் தருவார்.
சுக்கிரன் திசையில் கஷ்டங்களும், சிறை தண்டனையும், கையில் காசு, பணம் இல்லாதவர்கள், அனைத்தையும் இழந்து விடுவார்கள்.எந்த இடங்களுக்கு போனாலும் நிம்மதியிராது.
எட்டாதி எவ்விடந்தா னிருந்திடத் தீதேகாட்டும்
எட்டாதி போலவேயாரும் இடுக்கங்கள் செய்யமாட்டார்
குட்டாக அறியமன்னா கூறுவேன் விபரமாக
கட்டாகக் கருத்தைநாட்டி கணிதங்கள் தெரிவாய்தானே
No comments:
Post a Comment