Sunday 27 December 2015

கவனியுங்கள் ! கோச்சாரத்தை !

கவனியுங்கள்  !
                                                 கோட்சாரத்தை   !

         கோட்சார பலனை நாம் பார்க்கும் போது பிறந்த காலச் சந்திரனுக்கும் கோச்சாரக் கிரகத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கண்டுவந்தோம்.
நாடி ஜோதிட முறையில் கிரக இணைவு முறைகளில் கோட்சார பலன்களை துள்ளிதமாக கணமுடியும்.பிந்த கால கிரகங்களை கோட்சார கிரகங்கள் இணையும் காலங்களில் ஜாதகர்/ஜாதகி  வாழ்வில் நிகழும் தற்காலிக மாற்றங்களையும் அறிய முடிகிறது.

குறையாது கோசாரம் கோள்வலியைக் கண்டு
 நிறைப்பில்சேர்
                       கிரங்களின் கோச்சார வலிமை கவனித்து பலன் கூறுங்கள்.

                   ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும். என்பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்
                        வருடக்கிரகங்கள். சனி குரு ராகு கேது இவர்களுடைய சஞ்சாரத்தை முதலில் பார்ப்பபோம்.
குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் சஞ்சரிப்பார்.
சனி ஒரு ராசியில் 2-1/2 ஆண்டுகாலம் சஞ்ரிப்பார்.
ராகு/கேது 1-1/2 ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள்.
            செவ்வாய் 1-1/2 மாதம் வக்ர அகும்போது ஒரே ராசியில் நீண்ட நாட்கள்  சஞ்சரிப்பார்.

நல்லதொரு சூரியற்குஞ் சுக்கிரற்கும்
            நலமான புதனுகக்கும் மாதமொன்றாம்
செல்லுநா ளிரண்டேகால் திங்கட்காகும்
              செவ்வாய்க்கு மாதமொன் றரையதாகும்
   வல்லதோர் சனி தனக்கு வருடமி ரண்டரையாம்
                வகையான வியாழனுக்கு வருட மொன்றாம்
சொல்லவே ராகுகே துக்குத்தானும்
             சுகரு மெடான்றறையா யிருப்பான் பாரே

               மாதக் கிரகங்கள் சூரியன்,புதன்,சுக்கிரன், தினக்கிரகம் சந்திரப் பற்றியோ யாரும் சிந்திப்பது இல்லை.
    கோட்சார விதிகள் பல விதி முறைகள் உள்ளாது.
கோட்சார பலன்கள் மட்டும் கண்போம்.
           ஒரு கிரகம் தன் இருக்கும் ராசிக்கு,  கோச்சாரத்தில் 10-ல் வரும்போது அந்த கிரகம் அந்த ராசிக்கு சுப பலன்களை தருவர்கள்.

   சனியின் கோச்சார பலன்கள்
       லக்கினத்திற்கு அல்லதுஜென்மராசிக்கு பன்னிரண்டு வீடுகளில் கோச்சார சனியின் பலன்கள்.

ஜென்மம் விட்டிரண்டுநான் கைந்திலேதான்
    திசைவியத்தில் மந்தன் வரப் பலனைக்கேளு
தன்மமிலாப் பலர்பகைநோய் சிறை முடக்கம்
    தனச்செலவு பதிவிட்டுப் பின்படுத்தும்
இன்பமிலா தலைசலுட னுற்றார் சாவு
   இனியபேர் கெட்டுவிடுங் கால்கையொன்றில்
துன்பமிகும் ஏழரைநாட் டானுப்போ  
   துடர்கழுத்திற் கத்திவைப்பா னுயிர்
                                                                  கொல்லானே
        லக்கினத்திற்கு 2-4-5-12 -ல் கோச்சார சனி வந்தால் உற்றார், உறவினர் பகையும், நோய்பதிப்பும், சிறை செல்வர்கள், காரியாங்கள் முடக்கம், வின் செலவீனம் அதிகமாகும்,அதிக துண்பத்தை தரும், இரத்த உறவினர்க்கு மரணம் ஏற்படும். நற்பெயர்க்கு கலங்காம் ஏற்படும். துண்பங்கள் அதிகமாகும்.ஏழரை சனியைப்போல் கழுத்தில் கத்திவைப்பது போல் இருக்கும் நிளைகளைத்தரும்.

காரியொன் றிரண்டைந் தேழு கண்டமீ ராறெட்
                                                                             டுற்றால்
கூரிய கைகால் வாதங்குட்டமும் பந்து நாசம்
சீரிய மனைவி மக்கள் சிநேகிதர் ஜனவிரோதம்
மீறிய பித்தநோவால் வீடுவிட் டோட்டுந் தானே
    லக்கினத்திற்கு 10-7-8-12-ல் கோச்சார சனி வந்தால் கை, கால் முடங்கும் வாத, பித்த நோய் ஏற்படும்.உறவினர் இழப்பு ஏற்படும்.மனைவி, மக்கள், நண்பர்கள், பந்துஜென விரோதம் ஏற்படும்.வீட்டைவிட்டு வெளியூர் வசிக்க நேரும்

நாலுடனென்றோ டைந்து நவிலெட்டிற் காரி
                                                                                நிற்கக்
காலுடன் கைநோய் பித்தங் காரிகை கலங்
                                                                              காட்டும்
பாலுடன் மடந்தை சாவு பாரிவன் பிணிநோய்
                                                                                    சால
சூலுடன் கீழே வீழும் சூனியமென்பர் தாமே
      லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-5-8-ல் கோச்சார சனி வந்தால் கை, காலும் பதிக்கும். வாத பித்த நோய் ஏற்படும். கணவன், மனைவியால் சண்டை சச்சரவு ஏற்படும். பெண்கள் இறப்பு ஏற்படும்.நோயால் அதிக துண்பங்களை அனுபவிப்பார்கள்.

கண்டங்க ளீரா றெட்டிற் காரிகா னென்ன
                                                                            செய்யும்
தெண்டங்கள் மிகவுண் டாக்குந் திரவியம் நாச
                                                                                மாகும்
கொண்டதோர் மனைவி வேறாங் குறித்திடுஞ்
                                                                  செட்டு நஷ்டம்
பண்டுள நாடு விட்டுப் பரதேசம் போவா
                                                                         னென்னே
  லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-7-10-8-12-ல் கோச்சார சனி வந்தால் அதிகமாக விறையாமாகும், சொத்து, செல்வம் நாசமாகும். மனைவி பிரிவினை ஏற்பட்டு வேறு மனைவி வருவாள்.பிறந்த இடம் விட்டு பல ஊர் சுற்றுவர்கள்.

காலடி முறிவு குத்து கடுவிஷங் காயங் குட்டம்
சூலடி வயிறு நெஞ்சு தொடைவலி யிளைப்புத்
                                                                                 தாகம்
மேலடி கண்ணோ யச்சம் விஷமுடன் மான
                                                                                பங்கம்
நீலனுந் திகோணத்தில் நின்றிடிற் சர்ப்ப
                                                                               வாதை
             கால்கலில் முறிவு, குத்துக்காயங்கள், கடுமையான விஷ பதிப்பை தரும்.வயிறு பதிப்பை தரும்.நெஞ்சு, தொடையில் வலி,கண் நோய், இளைப்பு நோய், தாகம் ஏற்படும். தன்மானத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், பயம், விஷபயம், சனி திரிகோணங்களில் இருந்தால் சர்ப  விஷத்தால் துண்பம் ஏற்படும்.

பத்திலே சனிதான் நிற்கிற் பதிகுலைந் தவதி
                                                                                யாகும்
செத்திடு மாடுகன்று சிலுகுடன் மனிதர் சாவாம்
வித்துபூ விளைவு குன்றும் வெகுபொருள் செத
                                                                                மாகும்
பத்திய மான பங்கம் பதியைவிட்
                                                             டோட்டுந்தானே
    லக்கினத்திற்கு, ராசிக்கு 10-ல் சனி வந்தால் வாழ்வில் குழப்பம் அதிகமாகும்.ஆவாதிகள் ஏற்படும். மாடு, கன்று, உறவினர் இறப்புகள், பூமி விளைச்சால் குறையும்.அனைத்தது பொன், பொருள் நாஷ்டமகும்.வீட்டை விட்டு வெளியோருவர்கள்.

1- ல் விபத்து,மன பயம், தகுதியாற்ற வாழ்வு அமையும்.
2 - அவமானங்கள், திருட்டு, கடன் ஏற்படும், .
3 - சம்பத்து,தந்தைக்கு பதிக்கும்,புத்திர பதிப்பு
தொழில் வகையில் பிறச்சனை ஏற்படும்.
4 -வயிற்று நோய், கர்மவினை அனனுபவிப்பார்   தாய்க்கு பதிப்பு ஏற்படும்.
5 -மன பயம்,திருமண தாமதமாகும், புத்திர தோஷம்,
6 -சத்துரு ஜெயம்,கடன் அதிகமாகும்,
7 -தைரியம், செயலில் வெற்றி கிட்டும்.
8 - ஆயுள் கூடும், திருமத்திற்குப்பின் அவமானம்,
9 -உடல் பலவீனம்,தந்தைக்கு உறவு பதிக்கும், மரணம் ஏறப்பட வாய்புள்ளாது.
10 -துண்பம்,தொழில் வகையில் லாபம் கிட்டும்
11 -யோகம்,ஆசைகள் நிறைவேரும்,
12 -நஷ்டம்,கடன் சுமை, கடங்கள் ஏற்படும்.

                மேற்கண்டவை பொதுப்பலன்கள், உங்களுடைய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலைக்கு ஏற்ப்ப மறுபடும்.

       ஜென்ம லக்கினத்திற்கு 9ஆம் பாவாதிபதி
11-ல் இருந்து, 3-ல் சனி இருந்து.கோச்சாரத்தில்
சனி 11-ல் சம்சாரம் செய்யும்போது ஜாதகர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும்.
        ஜென்ம லக்கினத்திற்கு 3-ஆம் அதிபதி நவாம்சதில் இருக்கும் ராசிக்குரிய மாதத்தில் அல்லது இதற்கு திரிகோண மாதத்திலாவது ஜாதர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும் மாதமாகும்.
    2 -11 - ஆம் பாவதிபதிகள் நவாம்சத்தில் இருக்கும் ராசியில், அல்லது  அதற்கு 5-9 ல் கோச்சார சனி சஞ்சரிகும்போது  ஜாதகர் /ஜாதகியின் தாயாதி வர்க்கத்தில் விபத்தும், உறவினர் பகைமையும், மனைவி வர்க்கத்தில் நாசமும், பொருட்கள், சொத்து நாசம் ஏற்படும்.
    10-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது அதற்கு 5-9 -ல் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் /ஜாதகியின் சகோதர, சகோதரிக்கு துண்பத்தை தரும் .குழந்தைகழுக்கு நோய் எற்படும். தாயருக்கும் வர்க்கத்திற்கும் பீடையும்   நஷ்டத்தையும் தருவர்கள்.
        லக்கினத்திற்கு 8-ஆம் பாவாதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசிக்கு,அல்லது 5-9- ஆம் ராசியில் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் / தந்தைக்கு கெண்டம்,மரணம், துண்பம் எற்படும் .  லக்கினத்திற்கு 6-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது 5-9-ஆம் பாவத்தில் கோச்சார சனி வந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உடல்நிலை பதிக்கும், பயம் உண்டாகும், குற்றம் சுமத்தப்படும்.
     லக்கினம், சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஐந்தாம் ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்கலில் சந்ததிகளுக்கு பதிப்பையும், விபத்தும், மரணம் பயம் ஏற்படும்.
   ஒவ்வொரு பாவத்திற்கும் அதனுடைய எட்டாம் பாவத்தில் சனி கோச்சாரத்தில் சம்சாரம் செய்யும் காலங்களில் எட்டாம் அதிபதியின் திசா புத்தி நாடந்தால் அந்த பாவத்திற்க்குரிய நபருக்கு விபத்து மரண பயம் ஏற்படும்.
                     
                 1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் இந்த பாவங்களின்
10-ஆம் பாவாதிபதி பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு தொழிலில் சிறப்பு அடைவர்கள்.
                    2+4+11-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு பூமி லாபம், பெண்களால் நன்மை, வாகன யோகமும் கிடைக்கும்.
       1+11-ஆம் பாவாதிபதிகளின்+குரு இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு செல்வ வளம் கிடைக்கும்.

                  2+9+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செயும் காலங்களில் கேதுவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகிக்கு பண இழப்பு, அதிக துக்கம், துபம் தரும்.
                     1+3+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் கேதுவால் பார்க்கபட்டால் அல்லது சனியால் பார்த்தாலும் சகோதரர்களுக்கு துண்பத்தை தருவார்.
                    2+7+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில், சனி அல்லது கேது பாதத்தால் செல்வம் நஷ்டம், அதிக துண்பத்தை அடைவார்
             1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் சனியை கேது பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திர பதிப்பும். ராகு சனியும் இணைந்தால் மனைவிக்கு தோஷத்தை தரும்.
    6+8+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடராசியில் கோச்சார சனி சஞ்சாரஞ் செய்யும்போது இரவில் பிறந்தவர்களுக்கு கண்டாம், மரணம் பயம் ஏற்படும். பகலில் பிறந்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட ராசிக்கு ஏழாவது ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும்போது விபத்து, மரணம் பயம் ஏற்படும்.
      ஜெனன ஜாதகத்தில் சனி, ராகு, மாந்தி இவர்கள் இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரண தண்டனை ஏற்படும்.
     ஜெனன ஜாதகத்தில் செவ்வாய், ராகு இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரணம் ஏற்படும்.
      1+சந்திரன் + சூரியன் +4ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் தாயாருக்கு விபத்து, மரணத்தை தரும்.
    1+சந்திரன் +சூரியன் +9-ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் தந்தைக்கு விபத்து, மரணன பயம் ஏற்படும்.
    1+சூரியன் +சந்திரன் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் மனபயம், நோய் பாதிப்பு ஏற்படும்.
   
  ப.சூரியஜெயவேல்
9600607603

Saturday 19 December 2015

செல்வச் சீமானாக வாழ ஜாதக விதிகள் !

 

செல்வச் சீமானாக வாழ  ஜாதக விதிகள்   !

   ஜாதகர், ஜாதகி அதிர்ஷ்டசாலிகளாகத் திகழ, செல்வச் சீமான்களாக வாழ கிரக அமைப்புகள்
எப்படி இருக்க வேண்டும். என்பது பற்றி "உடுதசா தீபிகை "பல விதிகள் உள்ளன தற்கால அனுபவத்திலும் இவையாவும் பொருந்தி வருகின்றன.

1)   லக்கினாதிபதி 5-ல் இருக்க, 5-ஆம் அதிபதி குருவாக இருந்தாலும், லக்கினாதிபதியும்
5-ஆம் அதிபதியும், ஒருவருகொருவர் பார்த்து கொண்டாலும் ஜாதகர் /ஜாதகி சிறப்பான
ராஜயோகத்தைத் தருவார்கள்.

____________________________________________
|    செ       |                    |     சு          |                    |
|    கு         |                    |     ரா        |       சூ         |
|________  |___________|_________  |__________ |
|                 |                                       |        பு         |
|                 |                                       |       சந்       |
|_________|                                       |__________  |
|                 |                                       |                    |
|                 |                                       |                    |
|_________ |____________________ |__________ |
|                 |       கே      |                   |                   |
|                 |          ல     |                   |     சனி     |
|_________|__________|__________ |__________|
   ஜோதிட மோதை திரு. சி.ஜி. ராஜன் அவர்கள்
            லக்கினாதிபதி 5-ல், 5-ஆம் அதிபதியும் குருவும்,லக்கினாதிபதி செவ்வாயும் இணைந்து சிறப்பன ராஜயோகத்தையும், நீண்ட புகழையும் அடைந்தார்.

2 )         7-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும் இணைந்து எங்கு இருந்தாலும் ஜாதகர், ஜாதகி ராஜயோகத்தை அடைவர்கள்.

___________________________________________
|                 |                  |                    |                    |
|                 |                  |         கே     |                    |
|_________|__________|__________ |___________|
|                 |                                       |        சூ       |
|                 |                                       |          பு       |
|_________ |                                      |___________|
|                 |                                       |                    |
|    சனி     |                                      |      செ       |
|_________ |____________________ |__________ |
|                 |          ல     |                   |  சு   சந்     |
|                 |        ரா      |                   |         கு      |
|_________|__________ |__________|_________   |
           திரு.ஹென்றி போர்டு
(பிரபலமான கார் தயாரிப்பாளர்)
7-ஆம் அதிபதி சுக்கிரன்
9-ஆம் அதிபதி சந்திரன்
11-ல் குருவுடன் இணைந்துள்ளார்கள்.
    குரு 2-5-ஆம் அதிபதி 11-ல் இருப்பது சிறப்பன யோகத்தை தரும்.கோடீஸ்வர யோகத்தை அடைந்தார்.

3)   4-ஆம் அதிபதி 10-ல் இருக்க,10-ஆம் அதிபதி    4-ல்  இருக்க, 9-10-ஆம் அதிபதியின் பார்த்தால் ஜாதகர், ஜாதகி சிறப்பான பாக்கிவான்கள்.

_____________________________________________
|                 |    சூ   செ  |                    |                     |                                |  குரு  சு |       பு           |                   |                     |
|                 |     சனி       |                    |  ராகு         |
|_________ |__________  |__________ |___________|
|                 |                                          |                    |
|                 |                                          |       ல.        |
|_________ |                                         |___________|
|                  |                                         |                    |
|                  |                                         |                    |
|_________ |______________________|_________ _ |
|                 |                     |                    |                    |
|    கே       |                     |    சந்          |                    |
|_________ |___________|__________ |_________  _|  
புத்த மததின் தலைவர் கௌதம புத்த மகான்
 
4-ஆம் அதிபதி 10-ல் சுக்கிரன்
10-ஆம் அதிபதி 10-ல் செவ்வாய்
9-ஆம் அதிபதியும் 10-ல் குரு அமைந்து இளமையில் ராஜயோகத்தை அனுபவித்து. பின் அனைத்தும் துறந்து உலக புகழ்பெற்றார்.

4)   9-10-ஆம் அதிபதிகளை குரு பார்த்தால் சிறப்பான யோகத்தை அனுபவிப்பார்கள்.
(தர்மகர்மமாதிபதி யோகம் சிறப்படையும்)

______________________________________________
|       ல        |                     |                   |                      |
|      செ      |       ரா          |                   |       சந்         |
|__________|_ __________ |__________|____________|
|                  |                                          |                      |
|                  |                                          |                      |
|_________ |                                          |____________|
|    சூ   பு   |                                          |                      |
|  சு  சனி  |                                          |                      |
|_________ |_______________________|____________|
|                  |                   |                      |                      |
|                  |                   |         கே       |      குரு       |
|_________ |__________ |___________ | ___________ |  

         (ராக்பெல்லர் புதல்வர், செல்வந்தார்)
ஜீனியர் ராக்பெல்லர் - 531 மில்லியன்

5)   1-4-5-9-ஆம் அதிபதிகள் இணைந்து 9-ல் அல்லது 2-ல் இருந்தால் ஜாதகர் உயர்ஆம்  குடும்பத்தில் பிறந்தவர்கள். அதிக வாகனங்களுக்கு அதிபதியாக இருப்பர்கள். புகழ் அடைவர்கள்.

_____________________________________________
|    சூ  பு   |                     |                    |                     |
|  சு சனி  |                     |   ரா           |                     |
|_________ |___________|__________ |__________  |
|                  |                                        |                     |
|                  |                                        |    ல             |
|_________ |                                        |___________ |
|                  |                                        |                     |
|      செ     |                                         |       குரு     |
|_________ |______________________|__________  |
|                 |                    |                    |                     |
|                 |      கே        |                    |      சந்         |
|_________ |__________ |___________|___________|
கல்வி தந்தை டாக்டர் அழகப்பா அவர்கள்.

1-ஆம் அதிபதி 3-ல் இருந்து 9-ஆம் வீட்டை பார்க்கிறர் இவர் நின்ற அதிதி புதன் 9-ல்.

4-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் 2-ஆம் அதிபதி 9-ல்

5-ஆம் அதிபதி செவ்வாய் நின்ற அதிபதி சனி 9-ல் உள்ளார்கள்.

9-ஆம் அதிபதி குரு,2-ஆம் அதிபதி சூரியன் பரிவர்த்தனை பெற்று உள்ளார்கள்.

  1-4-5-9-ஆம் அதிபதிகள், 2-ஆம் அதிபதிகளுக்கு தொடர்பு பெற்று உள்ளது .செல்வ வளம், செல்வக்கும், புகழ் பல பாராட்டுகள் பெற

6)  5-ஆம்  அதிபதியும் 9-ஆம் அதிபதியும் இணைந்து லக்கினத்தில் இருந்தாலும், அல்லது லக்கினாதியுடன் இணைந்தாலும் அல்லது, 4-ல் இருந்தாலும், அல்லது 10-ஆம் அதிபதியுடன் இணைந்தாலும் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி, அமைச்சர், போன்ற பதவிகளை வகிப்பார்.செல்வம், சுகபோக வாழ்வு அமையும்.
_____________________________________________
|                   |                      |                   |                  |
|                   |         கே       |                   |                  |
|__________|____________|________ __|_________ |
|                   |                                          |                  |
|                   |                                          |                  |
|__________|                                          |__________|
|                   |                                          |         ல     |
|                   |                                          |      பு         |
|__________|_______________________|__________|
|                   |        சந்        |       சு         |     சூ செ |
|                   |         சனி    |      ரா         |      குரு   |
|__________|____________|__________ |__________|
முன்னாள் பாரதிய ஜனதா செயலாளர்  ராஜா
5-ஆம் அதிபதி குருவும், 4-9-ஆம் அதிபதி செவ்வாயும் லக்கினாதிபதி சூரியனும் இண=×ைந்துள்ளர்கள்.உயரிய அந்தாஸ்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.

7)  எந்த கிரங்களும் 5-9-ஆம் அதிபதிகளுடன் இணைந்தாலும், பார்த்தாலும் விசேஷ சுப பலனைத்தருவார்கள்.
_________________________________________
|                |                  |                  |     ல          |
|                |                  |                  |   ரா செ    |
|______ __|_________ |__________|__________ |
|                |                                     |   சனி        |
|                |                                     |    சு            |
|________ |                                     |__________ |
|                |                                     |                   |
|                |                                     |        பு        |
|_________|___________________ |__________|
|     சந்     |                   |                 |       சூ       |
|     கே     |                   |                 |   குரு       |
|_________|__________|_________|__________|
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
5-ஆம்  அதிபதி சுக்கிரன், 9-ஆம் சனி இணைந்து சிறப்பான யோகத்த்தை தந்தது.

8)      9-ஆம் வீடு குருவின் வீடாகி, 5-ஆம் அதிபதியுடன் சுக்கிரன்இணைந்து பலம் பெற்று இருந்தால் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
( மேஷம், கடகம் லக்கினங்களுக்கு மட்டும்)
__________________________________________
|                  |                  |                 |                    |
|                  |   ரா          |                 |                    |
|__________|_________ |_________|___________|
|                  |                                    |                    |
|                  |                                    |        ல        |
|_________ |                                    |___________|
|                  |                                    |                    |
|                  |                                    |                    |
|__________|___________________|___________|
|                  |                   |     சந்     |    சூ    பு    |
|                  |                   |    கே      |    செ  சு    |
|__________|__________|________ |__கு_சனி_|
செங்கிஸ்கான் ஜாதகம்  !
9-ஆம் வீடு குருவின் வீடு
5-ஆம் அதிபதி செவ்வாய்
செவ்வாய் சுக்கிரன்இணைந்து 9-ஆம் அதிபதியுடன் இணைந்துள்ளர்.
சுக்கிரன் நீச்ச பங்கம் அடைந்துள்ளர்.

9)   மகரம் அல்லது கும்பம் லக்கினமாக, லக்கினத்தில் சனி இருந்து புதன் இணைந்தாலும், பார்த்தாலும் மிகப் பெரிய செல்வந்தர், சுகபோக வாழ்வு அமையும்.
____________________________________________
|                  |                   |                   |    செ சு       |
|                  |                   |     குரு      |      ரா          |
|__________|__________|__________|_______ ____|
|      சனி    |                                      |                     |
|     ல          |                                      |                     |
|__________|                                      |___________ |
|                  |                                      |      சூ           |
|                  |                                      |      பு            |
|__________|____________________|___________ |
|                  |                   |                  |                     |
|       கே     |      சந்       |                  |                     |
|__________|__________|__________|___________|
திரைப்பட இயக்குனர் திரு.ஷங்கர் அவர்கள்
கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி, புதன் 7-ல் இருந்து சனியை பார்வையிடுகிறார் .செல்வ வளத்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.

10)  ரிஷபம் அல்லது துலாம் லக்கினமாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், பார்த்தாலும். சூரியனும், செவ்வாயும் இணைந்தாலும், பார்த்தாலும் ஜாதகர், ஜாதகி செல்வ வளமும், சுகபோகமும், புகழும் கிட்டும்.
___________________________________________
|                 |       சூ        |                  |                    |
|        பு      |      சு          |   சனி      |    கே          |
|_________ |__________|__________|__________ |
|                 |                                      |                    |
|                 |                                      |                    |
|_________ |                                     |___________|
|    செ       |                                     |                    |
|    குரு     |                                     |                    |
|_________ |__________________ _|___________|
|     ரா       |                   |                 |                    |
|     சந்      |                   |       ல      |                    |
|_________|__________|_________ |___________|
திரு. சச்சின் அவர்கள் ஜாதககம்
      துலாம் லக்கினம் லக்கினாதிபதி சுக்கிரன் லக்கித்தை பார்க்கிறர், சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம் பெற்று நான்காம் பார்வையிடுகிறர் சுக்கிரன், சூரியனை
செல்வ வளமும், சுகபோக வாழ்வும் அமைந்து உலக புகழ் அஅடைந்தார்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Thursday 19 November 2015

சரம் ஸ்திரம் உபய ராசியில் சனி

நிலைமையாம் சரத்தினில் நிலனே இருக்கில்
         நிலையோடா தீனமே பேதம்
பலன் நிலை அன்னிய தேச சஞ்சாரம்
        பாலர்க்கே பூமியும் விரையம்
தலமதை விட்டே அன்னிய தேசம்
       தனம் சுயார்ச்சியமது பெறுவன்
பெலமொடு செல்வம் உண்டு அதிகாரம்
       பெண்ணினால் கலகம் என்று ஓதே
      சனி சர ராயில் இருந்தால் நட்புறவு இருக்காது .வெளியூர் பயணம், சொத்து விரையமாகும்.வீட்டை விட்டு வெளியூர் செல்வான். சுயசம்பாத்தியம் அடைவான். செல்வங்கள் கிட்டும். அதிகாரமும்கிட்டும். பெண்களால் நன்மையில்லை.

சனி திரத்தில் இருக்கின் மன்னவர் நேயன்
     சந்சல மனதுடையவன்
இனிய நற் குணவான் இருவித்தை உடையன்
      இன்மாம் அன்னிய தேசம்
தனியனாம் வர்க்கம் தன்னிலே பகைத்து
       சஞ்சலத்துடன் அன்னியர் தனையே
கனிவதாய் கூடிக்தனம் பொருள்தனையே
      கதித்த தர்மத்தினை செய்வான்
        சனி ஸ்திர ராசியில் இருந்தால் அரசு வகையில் நன்மை,  சலனமுள்ள மனம், நல்ல குணமுடையவர்கள். இருவிதமன தொழில் உள்ளவர்கள். சுகமாகும் வெளியூரில் வாழ்வு .உறவினர் பகைத்து, சலனமுடன் அன்னியர்களிடம் கூடி சம்பாத்தியம் கொள்வர்கள். இனிமையாக தர்மத்தை செய்வர்கள்.

காரியே உபயம் தன்னிலே இருக்கில்
      கடினமாம் தொழில் இருவிதத்தால்
மீறியே இருவர் பூமியை வாங்கல்
        விரையமா தீனமே சுபங்கன்
தேரிய மனையாள் வர்க்கமே தோடம்
        ஜொகமதில் புத்திர செல்வம்
கூறிய புத்தி பாக பூர்விகம்
       குணமொடு கூறிய நட்பே
      சனி உபய ராசியில் இருந்தால் கஷ்டம், இருவித தொழில் செய்வர்கள். இருவருடைய சொத்தை வங்கு வற்குவர்கள்.சுகங்கள் விரையாமகும்.மனைவிக்கு தோஷம். புத்திர பக்கியம் கிட்டும். பூர்விகத்தால் நன்மைகிட்டும்.குணமுடன் வாழ்வர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Monday 9 November 2015

சரம் ஸ்திரம் உபயராசியில் குரு

மன்னன் சரத்தில் தானிருக்க
      வலுவாய்ப் பிறந்த ஜாதகர்க்க
துன்னு மேன்மை அதிகாரம்
      சுயரச்சிதமே நிலைமையதாம்
கன்னன் மொழியான் நட்புடையன்
      கன்னி திசையில் பூர்வீகம்
அன்னை வழியால் செல்வீகம்
      ஆறைந்தனில் புத்திரனே
        குரு சர ராசியில் இருந்தால் உயார்ந்த அதிகாரம், சுயசம்பாத்தியம், குழந்தைகளால் நன்மையும், கன்னி திசையில் பூர்வீகம், அன்னை வழியில் செல்வம் கிடைக்கும் .பூகழுடைய புத்திரன் அமையும்.

சிறந்த திரத்தில் குருவிருக்குச்
      செனித்த பாலன் திறம் கேளும்
பிறந்த நிலைமை விட்டு ஏகும்
       பெரியோர் கூட்டம் உண்டாகும்
சிறந்த அன்னை வழி துக்கம்
        செல்வம் உண்டாம் பாதினாறில்
அறமும் தெய்வப்பக்தி உளான்
       அரசர் மகிழ்ச்சி உடையவனே
      குரு ஸ்திர ராசியில் இருந்தால் பிறந்த நிளைகள் மறும்.பெரியார்கள் தொடர்பு கிட்டும். அன்னை வழியில் நன்மையில்லை. 16-வயதில் செல்வம் கிடைக்கும்.தெய்வ பக்திமான், தர்மசீலன். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

மந்திரி உபயம் தன்னிலே இருக்க
         வந்த ஜாதகர்க்(கு) இனிய பலன்கேள்
தந்திர மனத்தன் பெண்களால் தனமும்
       தரணியில் இனியனாய் இருப்பன்
முந்திய பூர்வ பூமியால் வழக்கு
       முற்றிலும் வியாச்சிய மில்லை
சந்ததி விருத்தி தருமத்தில் புத்தி
        சர்ந்திடும் தாட்சன்யம் உளனே
         குரு உபய ராசியில் இருந்தால் சுப பலனைக் கேளுங்கள் .தந்திரமுடன் இருப்பார்கள். பெண்களால் செல்வம் கிட்டும்.
உலகில் அனைவருக்கும் அன்புடன் இருப்பார்கள்.பூர்வீக சொத்து வழக்கு, இழப்பு ஏற்படும். குழந்தைச் செல்வம் கிட்டும். தர்மசிந்தனை உள்ளவர்கள்.

Friday 6 November 2015

சரம் ஸ்திரம் உபயராசியில் புதன்

சரம் ஸ்திரம் உபய ராசியில்  புதன்

புந்தியே சரத்தின் நின்றிடப் பிறந்தோர்
       புந்தியும் பெண்சுகம் உடையார்
வந்திடும் அரசர் பேட்டியா (ல்) மகிழ்ச்சி
      மன்னவர் உறவு எனல் ஆகும்
சந்ததி பேதம் பெண்ணுளது அன்னியம்
      சார்ந்திடும் காலத்தில் புத்திரன்
விந்தையாம் பூமி சுயார்ச்சிதம் நிலைமை
        மிக்க செல்வங்கள் என்று ஓதே
      சரராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள். நற்சிந்தனையும், பெண்களால் நன்மையும். பேட்டியால் லாபம், பொரியோர்களின் உ றவும் கிட்டும்.பெண்குழந்தை கிட்டும். அன்னியத்தில் வாழ்வு அமையும். சரியன காலங்களில் புத்திர பாக்கியம் அமையும்.சுய சம்பாதிப்பார்கள், பூமி, சொத்து,செல்வங்கள் அமையும்.

திரமது தன்னில் மாலுமே நிற்க
       ஜனித்த ஜாதர்க்கு இனியபலன் கேள்
உர மெனும் வித்தை திரவியலாபம்
       உண்மையாம் அரசன் மகிழ்ச்சி
பரவிய பூமி புத்திரலாபம் பலதொழில்
       தன்னினும் முயற்சி
கரமது தன்னில் தழுப்பது விண்ணம்
       கருதுவர் நிலைமை இவ்விதமே
     ஸ்திர ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள் தொழில் வளம், செல்வ வளம், பல பூமி லாபம், பல தொழில் செய்வார்கள், சுய முயற்சியால் பலம் பெருவார்கள்.கையில் உணம் இருக்கும்.

உருதியாம் உபயராசியில் புந்தி
       உற்ற ஜாதகர்க்கு இனிய பலன்கேள்
கருதிய மெய்யன் யோகியர் நட்பன்
       கவிதைகள் கணித நூல் கற்பன்
இருநிலை உடையவன் இனிய தர்மங்கள்
       இடரில்லாத இயற்றி ஞானியர் பால்
பெருகிய நட்பன் அன்னியர் நேயன்
        பந்துடன் பகை உளனாமே
     உபய ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள்
உண்மையானவர்கள், யோகியர்களிடம் உறவு உள்ளவர்கள்.கவிஞர்கள்,கணிதநூல் வல்லுந‌ர்
இருவித செயல்பாடுள்வர்கள்.பிறக்கு உதவிகள் செய்வர்கள். தடையில்லாமல் ஞானியர்க்கு பணிவிடை செய்வர்கள். உறவினர் பகைமையுள்ளவர்கள். அன்னியரிடம் உறவுள்ளவர்கள்.

Thursday 5 November 2015

சரம் ஸ்திரம் உபய ராசியில் சந்திரன் பலன்

உங்களுடைய சந்திரன் சரத்தில் இருந்தால் ?

கடகம் அதில் வளர் மதியே நின்றிடிலோ நன்மை
       கலை துலையாம் கடனலே நீற்கத் தீதாம்
திடமில்லை அன்னைக்கு நலிவாகும் தேகம்
      சிறப்பில்லை பூர்வம் விட்டுபிரிதால் காட்டும்
விலைமாதர் தமைக்கூடி வேதனைகள் படுவன்
     மேதினில் தேய்மதிக்கு செல்வம் மிக உளனாம்
உடை ஆடை அணியவலன் உண்மைஉடையன்
                                                                                        காண்
      உற்ற மனையாள் வழியில் செல்வம் உளன்
                                                                                 அல்லால்
          உங்களுடைய சந்திரன் உங்கள் ஜாதகத்தில்  வளர்பிறை சந்திரன் கடகத்தில் சிறப்பான  வாழ்வு அமையும் .
     மேஷம், துலாம், மகரம் இவைகளில் இருந்தால்  நன்மை தருவதில்லை அன்னைக்கு உடல் பலவீனம் அடிக்கடி நோய் ஏற்படும்.நீங்கள் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்வீர்கள். பிறர் தொடர்பு ஏற்பட்டு வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
      மேஷம், துலாம், மகரம் தேய்பிறைச் சந்திரன் இருந்தால் செல்வ வளமை கிட்டும்.சிறப்பன ஆடைகளை அணிவர்கள்.நேர்மையுடன் இருப்பார்கள். மனைவி /கணவன் வாழியில் செல்வம் கிடைக்கும்.

சடலம் அதில் பிணியிலான் யோகியர்க்கு
                                                                             அன்பன்
சாந்தகுணத் தன்மையொடு தனியர்க்குவரும்
                                                                     தொழிலான்
கடகமதில் அமர மதிக்கு அரிட்டமதுகண்டாம்
கருது சுகமில்லை அதில் கடன்அதிகம் படுவன்
மடைதிறந்த புனல் எனவே அன்னியதேசத்தின்
மாறி வருதல் பேதவலுவுடைய செல்வ
தடைல்லை அன்னியரால் பூமி நிதி சேர்க்கை
தன சவுக்கியம் உள்ளவனாம் தன்மை
                                                                        இதுவாமே
         ஜாதகர் /ஜாதகிக்கு நோய் பதிப்புகள் இருக்காது. யோகிகளுக்கு உதவிகள் செய்வார்கள். கடகந்தில் சந்திரன் இருந்தால் தாயருக்கு கண்டம் ஏற்படும்.சுகவாழ்வில்லை. அதிக கடன் ஏற்படும். வெளியூரில் வசிப்பார்கள்.செல்வம் கிட்டும். அன்னியரால் பூமி, செல்வ சேர்க்கை கிட்டும். செல்வ வாழ்வு அமையும்.

ஸ்திர ராசியில் சந்திரன் நின்ற பலன் !

திர மென்னும் ராசிதனில் தேய்மதியே நிற்கச்
     சனித்த ஜாதகனுடைய திறமையது கேளாய்   உரம் பாக்கியம் சேரும் உண்மையது எண்பால்
    உற்ற துணையால் பாக்கியம் என்ப அறிது
                                                                           கண்டாய்   விரய மந்திரி அரசர் மகிழ்ச்சி உளதாங்கே
மேதினியில் யோகமுளன் அன்றி இச்செல்வன்   பரவிய சஞ்சலம் உடையன் கோபி எனலாகும்        பலர் பெண்ணை பரவிஅனுபவிப்பன்
                                                                       எனக்கூறே
     ஸ்திர ராசி் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் தேய்பிறை சந்திரன் இருந்தால் செல்வம் பாக்கியங்களும் கிட்டும்.துணைவர்களால் பாக்கியம் கிட்டும்.உயர் பதவி, மகிழ்சியான வாழ்வு அமையும். உலகப் பூகழ் அடைவர்கள். மனசஞ்சலம் அடைவர்கள்.கோபப்படுவர்கள். பிறர் தொடர்பு ஏற்படும்.

திர ராசிதனில் வளர் மதியே நிற்க
  ஜனித்தோன் தன்திறமையது செப்பக்கேளாய்
விரவிய (வா) தீனமது வேறாய் செல்வ
மிகுந்திடுமே சுயார்ஜிதகன் நிலையாம் அன்றி
பரவிய மன்னர் நேயன் யோகி நாட்பாம்
    பலவித்தை மேலோரால்  பெருகிநிற்கும்
திரவியமும் விரையமதாம் சகோதிரங்கள்
  சிறந்திருப்பார் அன்னித்தில் என்று சொல்ளே
              ஸ்திர ராசியில் வளர்பிறை சந்திரன் இருந்தால் சிந்தனைகள் வேறாய்  இருக்கும், செல்வ வளம் கிட்டும்.சுய சம்பாதிப்பார்கள். உயர்நிலையில் உள்ளவர்கள் நட்பும் உறவு கிட்டும்.பல தொழில்கள் செய்வர்கள். சகோதரர்க்கு பதிப்புகள் ஏற்படும். வெளியூரில் சிறப்புடன் இருப்பார்கள்.

உபய ராசியில் சந்திரன் நின்ற பலன்

சிறந்த வளர்மதி உபயராசி தன்னில்
       சிறந்து நிற்கில் செல்வீகன் பெண்பால்
                                                                          தன்னால்
பிறந்த மனைபாழகும் மூன்றாம் பூமி
        பலன்என்பர் இருபாகம் பூமி ஏகன்
வரம்தனிலும் தத்து புத்திரன் ஆகும்செல்வன்
      வாலிபத்தில் சுகம்முடித்தம் மனையில் கூடி
இருந்தவர்க் (கு)  அன்னிய கர்மம் செய்வன்
                                                                                அன்றி
       ஏழில் அரசர்மெச்சும் வித்தை இனிது
                                                                       உள்ளோன்
     வளர்பிறை சந்திரன் உபயராசியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைகளில் இருந்தால் பெண்களால் பிறந்தவீடு பாழகும்.பிறருடைய சொத்தை அனுபவிப்பார்கள். இரண்டு பிரிவு இருக்கும். வரத்தில் பிறந்தவர்கள். சிலர் தத்து புத்திரர்கள் ஆவர்கள்.இளமையில் திருமணம் ஆகும்.அன்னியர்க்கு கர்மம் செய்ய சூல்நிலை ஏற்படும். பலர் பாராட்டும்படியான தொழில்நுட்பம் உள்ளவர்கள்.

கொண்ட உபயந்தனில் தேய்மதியே நிற்க
    குறித்த ஜாதகரின் பலனைக்கேள்
கண்டிடுவய்யோக முளான் கன்னியரின்
                                                                          பகைவன்
     கருத்துடையர்தமைக்கூடி கனமாக வாழ்வன்
உண்டாகும் மன்னவராற் செல்வீகன் தான்
     யோகியர் கடமைக்கூடு உண்மையாளன்
தொண்டர்களை அஞ்ஞாறும் சேர்ந்துநட்பாய்
     சூழ்ந்திருப்பன் யோகியெனச் சொல்லதாமே
     உபயராசியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைளில் தேய்பிறை சந்திரன் இருந்தால் பெண்களால் நன்மையில்லை, தலைசிறந்த அறிவுடைய பொறியோர்களிடம் தொடர்புடையவர்கள்.உயர் அந்தஸ்தை பெறுவன்.ஞானிகளுக்கு பணிவிடை செய்வர்கள். எப்போதும் இவர்களை சுற்றி பலர் இருப்பர்கள். ஞான மார்க்கத்தை அடைவர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Wednesday 4 November 2015

சரம் ஸ்திம் உபயம் ராசியில் செவ்வாய் பலன்கள்

சரத்தில் செவ்வாய் இருந்தால்

பலம் எனும் சரத்தினில் நிலமகன் நிற்கப்
       பற்றியே  பிறந்த சாதகன் தான்
குலமதில் சீலன் அரசனம் போலக்
       கொள்கை காணி யோகவன் சத்துரு
கலகி காண் களத்திதேகம் நலியும்
         கனமுடன் பொருள் உளன்என்க
விலகியே பூமி அன்னியதேசம்
         ஏவுவன் சுகமுளன் இவனே
     சரராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள்  சிறந்த தலைமை பதவிகள், அதிகார தோற்றம் உள்ளவர்கள். பூமி லாபமுள்ளவர்கள்.எதிரிகள் பயப்படுவர்கள்.மனைவியின் உடல் பலவீனமடையும்.பொருள் சேர்க்கை ஏற்படும். பிறந்த ஊரைவிட்டு வெளியுரில் சுகமுடன் வாழ்வர்கள்.

ஸ்திரத்தில் செவ்வாய் இருந்தால்

வக்கிரன் திரத்தில் நின்றிடில் பூமி
         வலுவொடு சுயார்ச்சிதம் மேன்மை
தக்கவன் செல்வன் யோகவான் தாரம்
        தரணியில் பகையுளான் ஆகும்
பக்குவமுடன் அன்னியர் தமக்குப்
      பல விதத்திலும் மிகு நட்பாம்
மிக்க பேதகன் அன்னிய தேடம்
       மேவியே இருப்பன் என்றுரையே
      ஸ்திரராசியில் செவ்வாய் இருந்தால் சொத்து, பூமி லாபம், சுய சம்பாத்தியம் சிறப்புடன் அமையும்.செல்வ வளம், யோகம் கிட்டும். உலகில் மனைவியுட பகையுணர்வு உள்ளவர்கள். பிறறுடன் நட்புறவுடன் இருப்பர்கள்.

உபய ராசியில் செவ்வாய் இருந்தால்

கூறக்கேள் நிலமகன் தான் உபயமாகிக்
   குலவிநிற்கும் வேளை தனில் ஜனிப்பாராகில்
மாறக்கேள் பூர்வம் விட்டு அன்னியதேசம்
    மாறியே கன்னிகைமருவி நிற்பன்
வேறாக மனதுள்ளும் பகையே காட்டு
     மேதினில் இருவித்தை நிலத்தால் செல்வன்
கூறு சுயார்ஜிதபூமி ஸ்திரம் என்சொன்ன
    குறியான கன்னிகை குணம் என்றுஒதே
                 உபய ராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள்.பூர்வீகத்தை விட்டு வெளியூரில் வசிப்பார்கள்.பிற பெண்கள் தொடர்பு இருக்கும்.பகையுணர்வு இருக்கும்.இருவித தொழில்களைச் செய்வார்கள். சுயமாக பூமி, சொத்து சம்பாதிப்பார்கள். பெண்களின் குணம் அமைந்திருக்கும்.

ப.சூரியஜெயவேல்
9600607603 

Monday 2 November 2015

வண்ணங்களில் வாழ்வியல்

வண்ணங்களில் வாழ்வியால்

அனைவருக்கும் தீபாவளி நால்வாழ்த்துக்கள்

                தீபாவளி வந்துவிட்டது அனைவரும் தம்முடைய வருமானத்திற்கு ஏற்ப புதிய ஆடை, ஆபாரணங்கள் வாங்கு வதற்கு தயாரகிக் கொண்டிருக்கிறோம்.
               அம்மா,அப்பா,கணவன்,மனைவி,  குழந்தைகள்,  தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, மாமன் மகள்,மகன்,  அத்தை மகள், மகள், வேலைக்காரர்கள் இப்படி நீண்டு கொண்டோ செல்லும். ஆனால் ஒருவருடைய வண்ணம் ஒருவருக்கு பிடிக்காது.இப்படி பல மற்றங்கள் இருக்கும். யார் என்ன வண்ண ஆடை அணிந்தால் வாழ்வில் நலம் கிடைக்கும். என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்வேம்
      சிலர் பார்ப்பதற்க்கு சுமராக இருப்பர்கள் ஆனால் அற்புதம ஆடை அணிந்து சூப்பராக இருப்பர்கள். சிலர் பார்ப்பதற்க்கு அழககா இருப்பர்கள் ஆனால் ஆடைகள் பழைய கிழிந்த ஆடைகள் அணிந்திருப்பர்கள் அழகற்று கணப்படுவர்கள்.

 " ஆடையில்லா மனிதன் அரை மனிதன் "

              ஒருவருக்கு ஆடை மிக முக்கியம், அவர்களுடைய செயல் திறன், செல்வக்கு, அணியும் ஆடைகளைவைத்தே முடிவு செய்து விடாலம்.
   இவைகளை ஜோதிடத்தின் மூலம் அறிவேம்.

சூரியன் :- கிருத்திகை, உத்திரம், உத்திராடம் -
                     முதன்மை வண்ணம் : -   சிகப்பு,
                      பிற வண்ணங்கள் :ஆரஞ்சு, தங்க
                      நிறம்.

சந்திரன்  :- ரோகிணி, அஸ்தம், திருவோணம் -
                     முதன்மை வண்ணம்   :- வெள்ளை
                     பிற வண்ணங்கள் :-வெளிர் பச்சை,
                     திராட்சை வண்ணம்

செவ்வாய் :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -
                       முதன்மை வண்ணம் :- சிகப்பு,
                       பிற வண்ணம் :-சிகப்பு கலந்த
                       அனைத்து வண்ணங்கள்.

புதன் :- ஆயில்யம், கேட்டை, ரேவதி -
               முதன்மை வண்ணம் :- பச்சை
               பிற வண்ணம் :-மஞ்சள் கலந்த நீலம்
               பச்சை தொடர்புள்ளவை

குரு :- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -
             முதன்மை வண்ணம் :- வெண்மஞ்சள்
             பிற வண்ணம் :- சந்த நிறம், இளம்
             சிவப்பு,

சுக்கிரன் :- பரணி, பூரம், பூராடம் -
                     முதன்மை வண்ணம் : வெண்நீலம்
                     பிற வண்ணம் :-வெளிர்ப் பச்சை,
                     சிவப்பு கலந்த மஞ்சள்

சனி :- பூசம், அனுசம், உத்திரட்டாதி -
            முதன்மை வண்ணம் :- கறுப்பு
             பிற வண்ணம் :-அடர் நீலம், அடர் பச்சை,
             சாம்பல் நிறம், கருமை கலந்த வண்ணம்.

ராகு :- திருவாதிரை, சுவாதி, சதையம் :-
             முதன்மை வண்ணம் :- கருமஞ்சள்
              பிற வண்ணம் :-சாம்பல் நிறம்
           
கேது :-அசுவினி, மகம், மூலம் -
             முதன்மை வண்ணம் :-கரும்பச்சை
              பிற வண்ணம் :-பச்சை கலந்த நீலம்
              மஞ்சள் கலந்த நீலம்.

      கிரகங்கள் வழியே ஏற்படும் தாக்கங்கள் ஒரு மனிதன் பிறக்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்தால் சில நன்மைகளை அடையமுடியும்.
   ஒவ்வொரு கிரங்களுக்கு உறிய வண்ணங்களும் உள்ளாது.

        மேல் கண்ட நட்சதிரங்களில் பிறந்தவர்கள் அதர்க்கூறிய வண்ணங்களை பயன்படுத்தல் நலம் கிடைக்கும்.
          உங்களுடைய நட்சத்திரத்திற்கு எற்ற வண்ணங்களை அதிகம் இக்கும்படி தேர்ந் தெடுங்கள்.உங்கள் உடலுக்கு தேவையான நன்மையான அதிர்வுகளை நீங்கள் அடைய வாய்புள்ளது.
    உங்கள் ஆடைகள்,படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையனை உறைகள்,பல இடங்களில் பயண்படுத்துங்கள்.
                             அனைத்து வண்ணங்களில் மிக அடர்த்தியான வண்ணங்களை தவிர்த்து இளம் வண்ணங்களை உபயோகிப்பது அதிக பலன்களைத்தரும்.

      நீங்கள் பயண்படுத்தும் வண்ணங்களால் பதிப்பு ஏற்படும். பச்சத்தில் தகுந்த ஆலோசனைப்படி வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கவணத்தில் கொள்ள வேண்டும். அனைவரும்.

            யார்? யார் ஆடை அணியும் தன்மைகள் அவர்களின் ஜாதக அமையும் நிலைகளை ஆராவேம்.

4-ஆம்  வீடும் சந்திரனுக்கு தொடர்பிருக்கும் கிரகத்தின் நிலை போறுத்து ஆடை அணிவர்கள்.

சந்திரன் பலவானாகில் சாற்றும்வத்      
                                                           திரமே நன்றாம்
சந்திரனுடனே ராகு சார்ந்திடச் சீலை பீறல்
சந்திரன் வியாழத் தோட சலவையும் சிவப்புமாகும்                                                                      சந்திரன் சுங்கனோடு பலவர்ணம் சாற்ற லாமே

                சந்திரன் ஆட்சி. உச்சம் பலம் பெற்றிருந்தால் ஜாதகர்/ஜாதகி நல்ல ஆடைகளை அணிவர்கள்.
         சந்திரன் குருவுடன் இணைந்திருந்தாலும். பார்த்தாலும்,சலவைசெய்யப்பட்ட சுத்தமான ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் சுக்கிரன் இணைந்திருந்தாலும் பார்த்தாலும் விதவிதமான வண்ணம், புதிய ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் ராகு இணைந்திருந்தாலும் பார்த்தாலும் கிழிந் ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் சனி இணைந்திருந்தாலும் பார்த்தாலும் அழுக்கடைந்த ஆடைகளை அணிவர்கள்

புனைகழல் மதியும் தெய்வமந்திரி புகர்மால் கூடி
அனைவரும் செயும் கூட வச்சிரா பரண மாகும்

         சந்திரனுடன் குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபர்கள் கூடியிருக்க இவர்களுடன் செவ்வாயும் கூடினால் ஜாதகர்/ஜாதகிக்கு பொன் அணிகலன், வைர அணிகலன்களும் அணிவர்கள்.
      ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்திற்கு தொடர்பு உள்ள கிரகங்கள் நிலைகலைப் பொருத்து என்ன வகையான அணிகலன்கள் அணிவர்கள் என்பதை தெளிவாக கணமுடியும். ஆராய்ந்து பார்க்கவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ப.சூரியஜெயவேல்
9600607603

Wednesday 28 October 2015

இரு திருமணவாழ்வு

இரு திருமணம் ( மனைவி - கணவன்)

    பெண்களின் விஷயத்தில் ஆண்கள் எல்லோரும் ஒரேமாதிரி மட்டுமல்ல. ஒரு மாதிரியும் கூட என்னதான் மனைவி அழகாக இருந்து அன்பாகவும். அரவணைப்பாகவும். நடந்து கொண்டாலும் சிலர் எப்படியும். புதிய உறவை நாடுவார்கள். ஆண்களுக்கு மனதில் எண்ணம் இருக்கும்.புதிய உறவை நாடுவர்கள் எல்லா ஆண்களும். அவர்களின் உறவு மனைவிக்கு தெரியாமல் போகலாம் ஆனால் இல்லாமல் இருக்காது.
     சர, ஸ்திர, உபய லக்கினங்களின் ராசியில் பிறதவர்களளின் இல்லறத்தைப் பற்றிய பொதுவான பலன்கள் பல உள்ளாது.ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஏழாமாதிபதியின் நிலை, அதற்கு அஏற்ப்ப பலன்கள் மறுபடும்.
   இல்லறம் எல்லாவகையிலும் நல்லறமாக இருக்க வேண்டுமானால் உங்கள் லக்கின தொடர்பான கிரகங்களும், ஏழாம் பாவத் தொடர்பும் பெற்ற கிரகங்களுக்கும் நல்லதொரு ஒற்றுமை இருக்க வேண்டடும் எத்தனை சதவிகிதங்கள்.ஒற்றுமை ஏற்படுகின்றதோ அந்தளவிற்கு இல்லறம் சிறப்புடன் விளங்கும்.
     எந்தனை சதவிதங்கள் ஒற்றுமை குறைகிறதோ அந்தளவிற்கு குடும்ப வாழ்கையில் அதிருப்தி ஏற்படும்.
       திருமணவாழ்க்கை என்றும் எடுத்துக் கொண்டால் லக்கின திரிகோணங்களில் ஏழாமாதிபதி இருப்பாது. ஏழில் ஐயாந்து, ஒன்பாதம் அதிபதிகள் இருப்பது திருப்தியாற்ற வாழ்வைவை தந்து விடுகிறது.
    லக்கினாதிபதிக்கு ஏழாம் அதிபதியின் நிலைக்கு ஏற்ப்ப பலன் நடக்கும்.
  பாதகாதிபதி இருகும் அமைப்பை பெற்ற உபய லக்கினங்களில் பிறந்தவர்களின் இல்லற வாழ்வில் தீய கிரகங்களும் பாவங்கிரங்களும் செயல்படத் துவங்கினால் அவ்வாழ்கை ஒர் செயற்கைத்தனமாது.அங்கே வீசும் வீசும் மணமும் செற்கையானது தான். இப்படிப்பட்ட ஏழாம் பாவமானது அடித்தள நாதத்தின் வைரத்தையே மாற்றும் சக்தி பெற்றவையாகும்.
   ஆண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகருடைய தந்தைக்கு அல்லது தாத்தாவுக்கு நிச்சயம் இரண்டு திருமணம் நடக்கும்.
   ஏழாம் அதிபதி அல்லது லக்கினாபதி இவர்கள் அஸ்தமனம் அடைந்திருந்தாலும், லக்னாதிபதி இரண்டாமிடத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி சப்தம ஸ்தானத்தில் இருந்தாலும் சப்தமாதிபதி சுப அசுப கிரகங்களுடன் இணைந்தாலும் மறுமணம் அமையும்.
    ஆண் / பெண் ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து கேந்திர கோணத்தில் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்து ஏழாம் அதிபதி மறைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
        சுக்கிரன் கேதுவுடன் இணைந்து 2-5-8-11-ல் இருந்தால் மனைவி பிரசவ காலத்திற்குப்பி்ன் தாம்பத்திய சுகத்திற்கு சரியில்லாததால் மறுமணம் அமையும் அல்லது பிற தொடர்பு ஏற்படும்.
    லக்கினாதிபதி ஆறில் இருந்தாலும், ஏழாம் அதிபதியுடன் ஐந்தாம் அதிபதியும் குரு இணைந்திருப்பின் இவர்களுக்கு மறுமணம்.
      ஆண் /பெண் ஜாதகத்தில் 11 ஆம் அதிபதி 7-ல்  அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் கூடினாலும், 7-ஆம் அதிபதி 6-8-12-ல்  மறைந்தால் இரண்டு தாரம் அமைந்துவிடும். 7-ஆம்  வீட்டையும், 7-ஆம் அதிபதியையும் குரு பார்த்துவிட்டால் இரண்டு மனைவியுடன் வாழ்வார்.

தயையுள யேழோன் தானும் சனியாகி எட்டில்
                                                                                   நிற்க
நயமான புகரு மாறில் நல்கியே யிருப்பதாலே
வியமாகுந் தார மென்றோம் மேவிடு மிரண்டா
                                                                                  மாது
     ஏழாம் வீட்டுக்கு அதிபதி சனியாகி எட்டில் இருக்க, சுக்கிரன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள் இரண்டா வது திருமணம் செய்துகொள்வர்கள்.
     ஏழாம் அதிபதி சனியுடன் அல்லது ராகுவுடன்   இணைந்திருப்பின் ஒருவரை விரும்பி கொஞ்ச காலம் அவரோடு வாந்த பின் ஏமாற்றத்தை சந்தித்து பின் வேறு திருமணம் ஏற்படும்.
      ஆண் /பெண் ஜாதகத்தில் 12-ஆண் அதிபதி லக்கினத்தில் செவ்வாயுடன் இணைந்திருந்தால் , லக்கினாதிபதியும் ஏழாம் அபதியும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.லக்கினம், லக்கினாதிபதியை குரு பார்த்தால் இருவருடன் வாழ்வார்கள்.
       சுக்கிரன் சூரியன் ரிசபம்,சிம்மம், விருச்சிகம்,கும்பத்தில் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
   சுக்கிரனும், செவ்வாயும், ராகுவும் இணைந்து மிதுனம், கன்னி, மீனம் -இருந்தால் மறுமணம்.
             ஏழாம் அதிபதி் பாவிகளுடன் 6-12-ல் இணைந்திருந்தாலும், பாவர்கள் பார்த்தாலும் இரண்டு திருமணம் அமையும்.
      ஏழாம் அதிபதி வக்கிரம், அஸ்தங்கம் பெற்றாலும், அல்லது ஏழாம் வீட்டிற்கோ, ஒன்பதாம் வீட்டிற்கோ பாவ கிரகங்களின் பார்வை அல்லது இணைவு இருந்தாலும், லக்கினாதிபதி பன்னிரண்டில் இருப்பினும் ஜாதகர் /ஜாதகிக்கு மறுமணம் ஏற்படும்.

    ஆண் /பெண் ஜாதகத்தில் 6-8-12-ஆம் அதிபதிகள் இணைந்து 4-7-10-ல் இருந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து எங்கு அமர்ந்திருந்தாலும் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.ஒரே வீட்டில் அக்கா /தங்கை மணந்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

செப்பக்கேள் ஏழதில் சுக்கிரன் நின்றால்
              தேவிக்கு மத்தியத்தில் கண்டமுள்ளான்
ஒப்பவே தாரமது மூன்றும் உள்ளான்

கதிர்மகன் ஏழில் கலந்திட விருந்தால்
              கன்னிகை களத்திர மிரண்டாம்

   ராகு 10-11-ல் இருந்தாலும் செவ்வாய் 2-4-7-8-ல்
இருந்தாலும் சுக்கிரன் பாவகிரக பார்வை அல்லது இணைந்து மேஷம், கடகம்,துலாம், மகரத்தில் இருந்தாலும் மறுமணம்.

அரவ மேழிடத்தி லனுகியே யிருந்தால்
       ஆமேதா னேழதிலே ராகுநின்றால்
செப்பினேன் தவறாது மனைவி ரெண்டோன்
     ஆண்/பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து கேந்திர கோணங்களில் அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து 7-ல் (அ) 11-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
ஒரே வீட்டில் அக்கா /தங்கையை மணமுடிப்பார்
           இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தாலும் பாவகிரம் ஏழில் பாபிகள் ஏழில் செவ்வாய் 12-ல்  இருந்தாலும். இரண்டு திருமணம்.
     ஏழாம் அதிபதியும் 11- ஆம் அதிபதி இணைந்து இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் மறுமணம் ஏற்படலாம்
       ஆண் /பெண் ஜாதகத்தில் 12 -ஆம் அதிபதி ஏழில் அமைந்து இவர்களுட செவ்வாய் இணைதிருந்தால், இவர்கள் இருந்த வீட்டின் அதிபதி 6-8-ல் இருந்தால் இரண்டு திருமணம்.
   ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
    ஆண் /பெண் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியுடன் சூரியன் இணைந்து ஏழில் இருக்க அல்லது ஏழாம் அதிபதி சூரியனைக் கூடி இரண்டில் இருக்க, 12-ஆம் அதிபதியுடன் செவ்வாயும் இணைந்தால் இரண்டு திருமணம்
       பாவிகள் 1-2-7-ல் இருந்து  லக்கினாதிபதி வக்கிரம் அடைந்திருந்தாலும் மறுமணம.
     இரண்டாம் வீட்டையும், (அ)ஏழாம் வீட்டையும் குரு பார்த்துவிட்டால் மறுமணம் அமையும்.

சத்தம வட்டமாதி தன்னுடன் பாவரேனும்
ஒத்துடந்த் தானத்தில் பல பாவரேனும்
சித்தமாம் வியத்தின் மன்னன் சேயுடன்
                                                                 கூடினாலும்
ஒத்த நல்விவாகம் ரெண்டாயுறும்
                                                              புறிவன்தானே
   லக்கினத்திற்கு ஏழில், எட்டில் பாவிகள் இருந்தாலும், இவ்வீட்டின் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலும்,, பன்னிரண்டாம் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலு இரண்டு திருமணம் அமையும்.

துணைவர்களுக்கு உடல் நலமின்மை, அற்பாயுள் ஜாதக அமைப்புகள்.

  2-7-ல் பாவிகள் இருப்பது 2-7-ஆம் அதிபதியின் தொடர்பு, பார்வை பெற்றிருப்பதும்.
   சுக்கிரன் பாபிகளுடன், பாபகாத்தரி யோகம் பெறுவதும் சுக்கிரனுக்கு 4-8-ல் பாவிகள் அமைவது இருமணம் அமையும்.
    ஏழாமாதிபதி எட்டில், எட்டாமாதி ஏழில் இருந்தால் இருந்தாலும், ஆறாமாதி ஏழில், ஏழாமாதிபதி ஆறில் இருந்தாலும் துணைவரல் துண்பம.இரண்டுதிருமணம்.
   
மாரனுக்கு கிரண்டு தாரம் மருவிடு மென்று சொல்வோம்
கூறுவீ ரந்தச் சங்கை கேதுவு மேழில் தங்கக்
காரியும் வியத்தி லாகக் கழறினோ மந்தச் சங்கை
        ஜாதகனுக்கு இரண்டு மனைவி அமையும் என்பதை கூறுகிறோம்.எழில் கேது இருக்க பன்னிரண்டில் சனியிருந்தால் இரண்டு திருமணம் நடக்கும்.
    சந்திரனும், சனியும் இணைந்து ஏழில் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
    ஏழில் சூரியனுக்கு செவ்வாயும் இருப்பின்
களத்திர மரணம் ஏற்படும், இதனால் மறுமணம் ஏற்படும்.
   செவ்வாய், சுக்கிரன், சனி ஏழில் இருந்தாலும், லக்கினாதிபதி எட்டில் இருந்தாலும் மறுமணம் அமையும்.
   பாவிகள் 7-8-ல் இருந்து 12-ல் செவ்வாய் இருந்தால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்வர்கள்.
    ஒரு பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.

நாடி ஜோதிடப்படி இரண்டு திருமணம்

    ஜீவகாரகனான குருவை ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் தொடர்புகொண்டலும், பார்த்தாலும் ஜாதகருக்கு ஒனன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வார்கள்.
    குருவுக்கு 1-5-9, 3-7-11,
    வக்கிர குருவுக்கு 2-12 பெண் கிரகங்கள் இருந்தால் ஒன்றுக்கு மமேற்ப்பட்ட திருமணம் நடக்கும்.
  சந்திரன்  - வயதில் மூத்த பெண்கள்
  சுக்கிரன் - இளம்வயது பெண்கள்
  புதன்        -  மிகவும் இளம்வயது பெண்கள்

 
   
ப.சூரியஜெயவேல்
9600607603 

Sunday 4 October 2015

சந்திரனால் ஏற்படும் யோகங்கள்

சந்திரனால் அமையும் யோகங்கள்

       சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.
1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம்,  5)அமலா யோகம்,6) வசுமதி யோகம்,  7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள்.  இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .
           1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.
    சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற   சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம்   


    ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில்   சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும்,  இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.
     ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.
          சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.
       சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.
   வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.

இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த
                                                                                         காலை
முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை
சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்
சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்
     சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.

சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்
தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்    
காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்
தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே
        சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிvxzvxzcbmப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.

பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு
     பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்
கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்
      சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு
கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்
     கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு
ஆரப்பா போகருட கடாசத்தாலே
     அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
                  சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்
சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

  சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம்  உள்ளவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.
       சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.
    சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.
       சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

அனபயோகம்


       சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் படும் சிறப்பன யோகங்களில் ஒன்று அனபயோகம்.
      சந்திரனுக்கு பன்னிரண்டில் புதன், குரு, சுக்கிரன்  செவ்வாய், சனி யாராவது இருப்பார்களானால் இந்த யோகம் ஏற்படுகிறது.
            இந்த யோகத்தில் பிறந்த. ஜாதகர் /ஜாதகிக்கு அழகான உடைகளை உடுத்துவர்கள்,  கம்பீரமான தோற்றம், நோயற்றவர்கள். நல்லாழுக்கம், பதவி உயர்வு, மன கட்டுபடுள்ளவர்கள், மக்ககள் மத்தியில்   புகழ் அடைவர்கள். சின்றின்ப பிரியர்கள்ள்.

மதிக்கு முன்னே சுபர் நிற்கிற்றனனாப யோகம்
மந்திரி வல்லமைக் கல்வி மாதர்கள் சொற்கேட்பன்
அதிகத்த யிரிய மொழுக்க மலிமானன் குணவான்
       சந்திரனுக்கு முன்னே பன்னிரண்டில் சுபர்கள் இருந்தால் அனப யோகம் அமையும். ஜாதகர் மந்திரி அரசு உயர்பதவி, பலம் பெற்றவன், கல்வியில் தேர்ச்சி பெற்றவான், பெண்கள் சொல்படி நடப்பன் .ஒழுக்கம் உள்ளவர்.அனைவரிடமும் அன்புடன் இருப்பார்கள்.

       சந்திரனுக்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் சண்ட்டையில் பிரியமுள்வர்கள் .முன் கோபமுடையவர்கள், தீய எண்ணம், சமுகத்தில் தலைமை பொறுப்பும், கர்வம் உள்ளவர்கள்.

      சந்திரனுக்கு புதன் சங்கீத சாஸ்திரத்தில் ஆர்வம், எழுத்து திறமைசாலிகள் அரசு மரியாதையும்,
சாமர்த்தியம் உள்ளவர்கள், உயர் பதவியும் பலசதனைகள் புரிவர்கள் .

சந்திரனுக்கு பன்னிரண்டில் குரு அரசு மரியாதையும், நல்ல புத்திரரும் சுபசெலவும், அரசியல், தொடர்பும், ஆராய்ச்சி மனப் பான்மை, உயர் கல்வி,  புகழ் அன்புடையவர்,( இது சகடையோகம்)

     சந்திரனுக்கு பன்னிரண்டில் சுக்கிரன் சுகமானவாழ்வும், பெண்களுக்கு  பிரியமுள்ளவனாகவும், அரசு மரியாதை, நாற்கால் பிரணியும். வாகனயோகம் அமையும்.

           சந்திரனுக்கு பன்னிரண்டில் சனி தலைமைப் பொறுப்பு, மக்கள் போற்றும், புகழ் பெறுவர்கள், பசுக்கள் உடையவர்கள் .பெண்களிடத்தில் தொடர்புள்ளவார்கள், பிடிவாத குணம். திருமண வாழ்வில் சில குழப்பம் எற்படும்.பிறரின் செல்வங்களை  அனுவிப்பார்கள்.

சுனப யோகம்
அனபயோகம்  இரு யோகங்களும்.
சுனப யோகங்கள்  : - 31
அனபயோகங்கள்  : -  31

5-கிரகங்களும் ஒவ்வென்றாய் சந்திரனுக்கு  2- ல்
5- கிரகங்களும் இரண்டிரண்டாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் மூன்று மூன்றாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் நான்கு நான்காய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் ஐய்தும் சந்திரனுக்கு  2-ல்
5+10+10+5+1 = 31+31=62 மொத்தம்.


துரு  துரா யோகம்


  ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டு
 சூரியன், ராகு, கேது தவிற குஜாதி
 ஐவர் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இருந்தால்  துரு துரா யோகம் அமையும்.
    சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பிருந்தால் யோகம் பங்கம் அடையும்.
    ஜாதகர் /ஜாதகிக்கு நிறைந்த செல்வம், வகனம், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். ஆண்மீக ஈடுபாடு உள்ளவர், உயர் குடும்பம், பொன் பொருள் சோர்க்கையும், அரசு வகையில் ஆதாயமும் உயர்ந்த பதவியும் சகல சுக போகங்கள் கிடைக்கும்.

அன்புலி இரு மருங்கில் ஆதவன் நீங்மற்ற  
                                               ஐம்பொரும் கோள்களுள்ளே
ஆருயிர் நண்பர்வாழ பண்பினைக் காக்கும் உற்ற
                                                                பால்வளம் ஓங்கும்
வேண்டும் பொன் பொருள் யோகம் கிட்டும் பொறுப்
                                                           பொருகடமை ஆற்றும்
       சந்திரனுக்கு இரண்டில், பன்னிரண்டில் சூரியனைத் தவிர பஞ்சமதி ஐய்வர்கள் இருந்தால் நண்பர்க்கு உதவி நல்ல பழக்க வழக்கம். சகல வசதிகளும், பசு, பால்வளம், பொன்பொருள் புகழ் ஜாதகருக்கு  அமையும்.

உத்பந்த போக சுகபுக்தத நவாஹ நாட்ய
ஸத்யா காந்விதோ துருதுரா பவர் சுபருத்ய.!
             துருதூர யோகத்தில் பிறந்தவர்கள் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள். நல்ல நண்பர்கள் உடையவர்கள்.

துரையாஞ் சனிக்குச் சுக்கிரர்க்கு நடுவே  சோமன்
                                                                           தனிருந்தால்
உறையாயனபாயோ மிதில் பலன் கணீதியுளன்
                                                                                          போகி
உதையான் மன்னர் கைப் பொருளைத்தான் கைக்
                                                   கொள்வன் குலசிரேட்டன்
புரையாசார பாவன் தனியவான்
                                                          புறக்கிராகமணியாமே
     சனிக்கும் சுக்கிரனுக்கு  மத்தயில் சந்திரன் இருந்தால் ஜாதகர்கு நீதி தவரதவனும், பெண்கள் சுகம் விரும்பியும், கிராமங்களை அரசாளும் பதவியில் இருப்பார்கள். அரசங்க பொருள்களை அனுபவிப்பார்கள். உயர் குலத்தில் பிறந்தவர்கள். தர்மசிந்தனைகள் உள்ளவர்கள்.
(அனப யோகம்  என்று கூறுகிறர்கள்)

சந்திரற்கிரண் டீராறில் தங்கு வோரிரு பேர் மூவர்
வந்தவர் பலனறிந்து வருவாங் கிசையும் நீசம்
அந்த கோள் பகைக்கண்டே யதன் வலிதறிந்து
                                                                            கொண்டும்
சொந்தமாயு ரைப்பதென்றுசொல்லினர் கணித
                                                                                    வல்லோர்
     சந்திரனுக்கு இரண்டு, பன்னிரேண்டில் இரண்டு, அல்லது மூன்று கிரகங்கள் இருந்தால் அவர்களின் பலம் அறிந்து பலன் கூற வேண்டும். நவாங்கிசாதிபதியின் பலம், பகை, நீசம் நிலைகலை ஆராய்து பலன்கலை கூற வேண்டும்.

துருதுரா யோகதின் பலன்  :-

1) செவ்வாய் - புதன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால்
ஜாதகர் /ஜாதகி பொய்யன், புத்திசாலி, பேராசைக்காரன், பிறரிடம் குற்றங்குறைகள் காண்பான், காமமிக்கவன், வயதில் மூத்தவர்களின் தொடர்புள்ளவர்கள்.

2) செவ்வாய் - குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி புகழ் உடையாவர்கள், குணசீலர், விரேதிள் உள்ளவர்கள், சுய முயற்சியால் முன்னேறுவர்கள்.

3) செவ்வாய் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி  திட பலம் உள்ளவர்கள். அழகன், செல்வந்தர்கள்,சுக போகவாழ்வும், நற்குணமுள்ளவர்கள்,சபல எண்ணமுடையவர்கள்.

4) செவ்வாய் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வளம் குறையும், முன்கோபம், எதிரிகளுடன் போராடுவர்கள். தீய நடத்தை சிந்தணையுள்ளவர்கள்.தீயர் தொடர்புள்ளவர்கள்.

5) புதன் -குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகி / ஜாதகர் கல்வி,கேள்வியில் வெற்றியும், பத்திமான் புகழ் பெற்றவர்கள், நல்லவர்கள், நட்புடையோன், சாமர்த்தியமாய்ப் பேசுவதில் வல்லவர்கள் சுக போக வாழ்வு அமையும்.

6) புதன் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இசை, சங்கீதம், ஆடல் பாடல்களில ஈடுபாவர்கள், இனிய பேச்சும், மிகுந்த புத்திசாலிகள் தைதையசாலிகள், அழகுடையவர், அஎல்லோருடைய அன்பிற்கும் பாரட்டிற்கும் உரியவர்கள்.

7) புதன் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகி /ஜாதகர் சராசரியான கல்வி செல்வம் உள்ளவர்கள், பந்துக்களுடன் சேராதவர்கள், சுற்றியலைபவன், அந்தஸ்துள்ளவர்கள்.சோம்பேறி.

8)  குரு -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வ வளம், கலைத்திறன், சாமர்த்தியசாலி, புகழ்பெற்றவர்கள், தர்மசிந்தனை, அமைதியனவர்கள்.

9) குரு -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வம், கல்விமான், ஞானவன், மரியாதை உள்ளவர்கள், சுக வாசியாகவும், சுகபோக வாழ்வு அமையும்.

10)  சுக்கிரன் -சனி சந்திரனுக்கு  2-12 ல இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வ வளம், அரசு மூலமாக நன்மைகள் கிடைக்கும். முதன்மை தலைவராகவும் இருப்பர்கள். பெண்களால் தொல்லை ஏற்ப்படும்.

துருதுரா யோகங்கள் கீழ் கண்ட விதத்தில் அமையும்
1) 2-ல் ஒருவர் 12-ல் ஒருவர் இருப்பதனால் 20 - வகை
2) 2-ல் ஒருவர் 12-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
    12-ல் ஒருவர் 2-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
3) 2-ல் ஒருவர் 12-ல் மூவர்    இருப்பதனால் 20- வகை
    12-ல் ஒருவர்  2-ல்  மூவர்   இருப்பதனால் 20 -வகை
4) 2-ல் ஒருவர் 12-ல் நால்வர் இருப்பதனால் 5- வகை
     12-ல் ஒருவர் 2-ல் நால்வர் இருப்பதனால்  5- வகை
5) 2-ல் இருவர் 12-ல் இருவர் இருப்பதனால்  15-வகை
    12-ல்இருவர் 2-ல்   இருவர் இருப்பதனால் 15-வகை
6) 2-ல்  இருவர் 12-ல் மூவர்    இருப்பதனால்  10-வகை
     12-ல் இருவர் 2-ல் மூவர்    இருப்பதனால் 10- வகை
                                                          மொத்தம் = 180 வகைள்
           
 
மேற்படி யோகங்களைத் தரக்கூடிய கிரங்கள் ஆட்சி, உச்ச ராசியிலும். நட்பு வீடுகளிலும் இருந்தால் சுப பலனைத்தரும் ஜாதகர் /ஜாதகி சுப பலன்  அமையும்.
   சந்திரனுடன் ராகு, கேது இணைந்திருந்தாலும், சந்திரனுக்கு 11-ல் ராகு, கேது இருந்தாலும் நீச்சம், பகைவர்கள் தொடர்பிருந்தால் பலன் பதிக்கபடும்.

கேமத்துரும யோகம்


              சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் எந்த கிரகங்களும் இல்லாவிட்டால் கேமத்துரும யோகம் ஏற்படும். தீய பலனைத்தரும்.
    இந்த யோக பங்காத்திற்கு பல விதிகள் உள்ளாது.
பலன்கள் :-  ஜாதகர் /ஜாதகி பெரும் செல்வந்தனாக இருந்தாலும் துண்பத்தையும் துயரங்களையும் அனுபவிப்பார்கள். தன் குடும்பத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்வர்கள்.அடிமைத் தொழில் புரிவர்கள். உறவினர்களை மதிக்க மாட்டார்கள்.தன் நிலைகலைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.வின் வர்த்தை பேசுவார்கள்.

வளந்த கேமத்துமத்தில் மன்னர் அயிடினும்
                                                                               மலிதுன்பன்
விளிந்த நீச நிகிபனும் மிகுந்த கலாபி பிரேசியனே
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்கள் உயந்த அந்தஸ்த்ததில் இருந்தாலும் காலப் பேக்கில் அனைத்தும் இழந்து  விடுவர்கள்.பாவி பரதேசி வாழ்க்கை வாழ்வார்கள்.

கேமேத்ருமே மலி ந துக்கி நநீச நிஸ்ஸ்வா
ப்ரேஷ்யா  :கலாச்சந்ரு பதேர் அபிவும் சஜாதா !
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தும் இழந்தூ வவிடுவார்கள்.

கேமத்துரும யோகபங்கம்
…………………………………………………

         சந்திரனுக்கு 3-6-10-11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும், 4-7-10-ல் குரு இருந்தாலும் தீய பலன் குறையும். நற்பலன்கள் கிடைக்கும்.
            சந்திரனுக்கு சுபர்களின் பார்வை இணைவு இருந்தால் கேமத்துரும யோகம் பங்கமாகிவிடும்
    சந்திரன் லக்கினத்திற்கு கேந்திர /கோணங்களில் இருந்தாலும் யோகம் பங்கமாகிவிடும்
       





சந்திரனால் அமையும் யோகங்கள்

       சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.
1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம்,  5)அமலா யோகம்,6) வசுமதி யோகம்,  7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள்.  இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .
           1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.
    சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற   சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம்   1

    ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில்   சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும்,  இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.
     ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.
          சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.
       சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.
   வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.

இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த
                                                                                         காலை
முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை
சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்
சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்
     சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.

சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்
தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்    
காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்
தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே
        சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிvxzvxzcbmப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.

பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு
     பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்
கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்
      சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு
கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்
     கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு
ஆரப்பா போகருட கடாசத்தாலே
     அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
                  சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்
சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

  சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம்  உள்ளவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.
       சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.
    சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.
       சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

அனபயோகம்

       சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் படும் சிறப்பன யோகங்களில் ஒன்று அனபயோகம்.
      சந்திரனுக்கு பன்னிரண்டில் புதன், குரு, சுக்கிரன்  செவ்வாய், சனி யாராவது இருப்பார்களானால் இந்த யோகம் ஏற்படுகிறது.
            இந்த யோகத்தில் பிறந்த. ஜாதகர் /ஜாதகிக்கு அழகான உடைகளை உடுத்துவர்கள்,  கம்பீரமான தோற்றம், நோயற்றவர்கள். நல்லாழுக்கம், பதவி உயர்வு, மன கட்டுபடுள்ளவர்கள், மக்ககள் மத்தியில்   புகழ் அடைவர்கள். சின்றின்ப பிரியர்கள்ள்.

மதிக்கு முன்னே சுபர் நிற்கிற்றனனாப யோகம்
மந்திரி வல்லமைக் கல்வி மாதர்கள் சொற்கேட்பன்
அதிகத்த யிரிய மொழுக்க மலிமானன் குணவான்
       சந்திரனுக்கு முன்னே பன்னிரண்டில் சுபர்கள் இருந்தால் அனப யோகம் அமையும். ஜாதகர் மந்திரி அரசு உயர்பதவி, பலம் பெற்றவன், கல்வியில் தேர்ச்சி பெற்றவான், பெண்கள் சொல்படி நடப்பன் .ஒழுக்கம் உள்ளவர்.அனைவரிடமும் அன்புடன் இருப்பார்கள்.

       சந்திரனுக்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் சண்ட்டையில் பிரியமுள்வர்கள் .முன் கோபமுடையவர்கள், தீய எண்ணம், சமுகத்தில் தலைமை பொறுப்பும், கர்வம் உள்ளவர்கள்.

      சந்திரனுக்கு புதன் சங்கீத சாஸ்திரத்தில் ஆர்வம், எழுத்து திறமைசாலிகள் அரசு மரியாதையும்,
சாமர்த்தியம் உள்ளவர்கள், உயர் பதவியும் பலசதனைகள் புரிவர்கள் .

சந்திரனுக்கு பன்னிரண்டில் குரு அரசு மரியாதையும், நல்ல புத்திரரும் சுபசெலவும், அரசியல், தொடர்பும், ஆராய்ச்சி மனப் பான்மை, உயர் கல்வி,  புகழ் அன்புடையவர்,( இது சகடையோகம்)

     சந்திரனுக்கு பன்னிரண்டில் சுக்கிரன் சுகமானவாழ்வும், பெண்களுக்கு  பிரியமுள்ளவனாகவும், அரசு மரியாதை, நாற்கால் பிரணியும். வாகனயோகம் அமையும்.

           சந்திரனுக்கு பன்னிரண்டில் சனி தலைமைப் பொறுப்பு, மக்கள் போற்றும், புகழ் பெறுவர்கள், பசுக்கள் உடையவர்கள் .பெண்களிடத்தில் தொடர்புள்ளவார்கள், பிடிவாத குணம். திருமண வாழ்வில் சில குழப்பம் எற்படும்.பிறரின் செல்வங்களை  அனுவிப்பார்கள்.

சுனப யோகம்
அனபயோகம்  இரு யோகங்களும்.
சுனப யோகங்கள்  : - 31
அனபயோகங்கள்  : -  31

5-கிரகங்களும் ஒவ்வென்றாய் சந்திரனுக்கு  2- ல்
5- கிரகங்களும் இரண்டிரண்டாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் மூன்று மூன்றாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் நான்கு நான்காய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் ஐய்தும் சந்திரனுக்கு  2-ல்
5+10+10+5+1 = 31+31=62 மொத்தம்.


துரு  துரா யோகம்

  ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டு
 சூரியன், ராகு, கேது தவிற குஜாதி
 ஐவர் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இருந்தால்  துரு துரா யோகம் அமையும்.
    சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பிருந்தால் யோகம் பங்கம் அடையும்.
    ஜாதகர் /ஜாதகிக்கு நிறைந்த செல்வம், வகனம், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். ஆண்மீக ஈடுபாடு உள்ளவர், உயர் குடும்பம், பொன் பொருள் சோர்க்கையும், அரசு வகையில் ஆதாயமும் உயர்ந்த பதவியும் சகல சுக போகங்கள் கிடைக்கும்.

அன்புலி இரு மருங்கில் ஆதவன் நீங்மற்ற  
                                               ஐம்பொரும் கோள்களுள்ளே
ஆருயிர் நண்பர்வாழ பண்பினைக் காக்கும் உற்ற
                                                                பால்வளம் ஓங்கும்
வேண்டும் பொன் பொருள் யோகம் கிட்டும் பொறுப்
                                                           பொருகடமை ஆற்றும்
       சந்திரனுக்கு இரண்டில், பன்னிரண்டில் சூரியனைத் தவிர பஞ்சமதி ஐய்வர்கள் இருந்தால் நண்பர்க்கு உதவி நல்ல பழக்க வழக்கம். சகல வசதிகளும், பசு, பால்வளம், பொன்பொருள் புகழ் ஜாதகருக்கு  அமையும்.

உத்பந்த போக சுகபுக்தத நவாஹ நாட்ய
ஸத்யா காந்விதோ துருதுரா பவர் சுபருத்ய.!
             துருதூர யோகத்தில் பிறந்தவர்கள் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள். நல்ல நண்பர்கள் உடையவர்கள்.

துரையாஞ் சனிக்குச் சுக்கிரர்க்கு நடுவே  சோமன்
                                                                           தனிருந்தால்
உறையாயனபாயோ மிதில் பலன் கணீதியுளன்
                                                                                          போகி
உதையான் மன்னர் கைப் பொருளைத்தான் கைக்
                                                   கொள்வன் குலசிரேட்டன்
புரையாசார பாவன் தனியவான்
                                                          புறக்கிராகமணியாமே
     சனிக்கும் சுக்கிரனுக்கு  மத்தயில் சந்திரன் இருந்தால் ஜாதகர்கு நீதி தவரதவனும், பெண்கள் சுகம் விரும்பியும், கிராமங்களை அரசாளும் பதவியில் இருப்பார்கள். அரசங்க பொருள்களை அனுபவிப்பார்கள். உயர் குலத்தில் பிறந்தவர்கள். தர்மசிந்தனைகள் உள்ளவர்கள்.
(அனப யோகம்  என்று கூறுகிறர்கள்)

சந்திரற்கிரண் டீராறில் தங்கு வோரிரு பேர் மூவர்
வந்தவர் பலனறிந்து வருவாங் கிசையும் நீசம்
அந்த கோள் பகைக்கண்டே யதன் வலிதறிந்து
                                                                            கொண்டும்
சொந்தமாயு ரைப்பதென்றுசொல்லினர் கணித
                                                                                    வல்லோர்
     சந்திரனுக்கு இரண்டு, பன்னிரேண்டில் இரண்டு, அல்லது மூன்று கிரகங்கள் இருந்தால் அவர்களின் பலம் அறிந்து பலன் கூற வேண்டும். நவாங்கிசாதிபதியின் பலம், பகை, நீசம் நிலைகலை ஆராய்து பலன்கலை கூற வேண்டும்.

துருதுரா யோகதின் பலன்  :-

1) செவ்வாய் - புதன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால்
ஜாதகர் /ஜாதகி பொய்யன், புத்திசாலி, பேராசைக்காரன், பிறரிடம் குற்றங்குறைகள் காண்பான், காமமிக்கவன், வயதில் மூத்தவர்களின் தொடர்புள்ளவர்கள்.

2) செவ்வாய் - குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி புகழ் உடையாவர்கள், குணசீலர், விரேதிள் உள்ளவர்கள், சுய முயற்சியால் முன்னேறுவர்கள்.

3) செவ்வாய் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி  திட பலம் உள்ளவர்கள். அழகன், செல்வந்தர்கள்,சுக போகவாழ்வும், நற்குணமுள்ளவர்கள்,சபல எண்ணமுடையவர்கள்.

4) செவ்வாய் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வளம் குறையும், முன்கோபம், எதிரிகளுடன் போராடுவர்கள். தீய நடத்தை சிந்தணையுள்ளவர்கள்.தீயர் தொடர்புள்ளவர்கள்.

5) புதன் -குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகி / ஜாதகர் கல்வி,கேள்வியில் வெற்றியும், பத்திமான் புகழ் பெற்றவர்கள், நல்லவர்கள், நட்புடையோன், சாமர்த்தியமாய்ப் பேசுவதில் வல்லவர்கள் சுக போக வாழ்வு அமையும்.

6) புதன் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இசை, சங்கீதம், ஆடல் பாடல்களில ஈடுபாவர்கள், இனிய பேச்சும், மிகுந்த புத்திசாலிகள் தைதையசாலிகள், அழகுடையவர், அஎல்லோருடைய அன்பிற்கும் பாரட்டிற்கும் உரியவர்கள்.

7) புதன் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகி /ஜாதகர் சராசரியான கல்வி செல்வம் உள்ளவர்கள், பந்துக்களுடன் சேராதவர்கள், சுற்றியலைபவன், அந்தஸ்துள்ளவர்கள்.சோம்பேறி.

8)  குரு -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வ வளம், கலைத்திறன், சாமர்த்தியசாலி, புகழ்பெற்றவர்கள், தர்மசிந்தனை, அமைதியனவர்கள்.

9) குரு -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வம், கல்விமான், ஞானவன், மரியாதை உள்ளவர்கள், சுக வாசியாகவும், சுகபோக வாழ்வு அமையும்.

10)  சுக்கிரன் -சனி சந்திரனுக்கு  2-12 ல இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வ வளம், அரசு மூலமாக நன்மைகள் கிடைக்கும். முதன்மை தலைவராகவும் இருப்பர்கள். பெண்களால் தொல்லை ஏற்ப்படும்.

துருதுரா யோகங்கள் கீழ் கண்ட விதத்தில் அமையும்
1) 2-ல் ஒருவர் 12-ல் ஒருவர் இருப்பதனால் 20 - வகை
2) 2-ல் ஒருவர் 12-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
    12-ல் ஒருவர் 2-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
3) 2-ல் ஒருவர் 12-ல் மூவர்    இருப்பதனால் 20- வகை
    12-ல் ஒருவர்  2-ல்  மூவர்   இருப்பதனால் 20 -வகை
4) 2-ல் ஒருவர் 12-ல் நால்வர் இருப்பதனால் 5- வகை
     12-ல் ஒருவர் 2-ல் நால்வர் இருப்பதனால்  5- வகை
5) 2-ல் இருவர் 12-ல் இருவர் இருப்பதனால்  15-வகை
    12-ல்இருவர் 2-ல்   இருவர் இருப்பதனால் 15-வகை
6) 2-ல்  இருவர் 12-ல் மூவர்    இருப்பதனால்  10-வகை
     12-ல் இருவர் 2-ல் மூவர்    இருப்பதனால் 10- வகை
                                                          மொத்தம் = 180 வகைள்
           
 
மேற்படி யோகங்களைத் தரக்கூடிய கிரங்கள் ஆட்சி, உச்ச ராசியிலும். நட்பு வீடுகளிலும் இருந்தால் சுப பலனைத்தரும் ஜாதகர் /ஜாதகி சுப பலன்  அமையும்.
   சந்திரனுடன் ராகு, கேது இணைந்திருந்தாலும், சந்திரனுக்கு 11-ல் ராகு, கேது இருந்தாலும் நீச்சம், பகைவர்கள் தொடர்பிருந்தால் பலன் பதிக்கபடும்.

கேமத்துரும யோகம்

              சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் எந்த கிரகங்களும் இல்லாவிட்டால் கேமத்துரும யோகம் ஏற்படும். தீய பலனைத்தரும்.
    இந்த யோக பங்காத்திற்கு பல விதிகள் உள்ளாது.
பலன்கள் :-  ஜாதகர் /ஜாதகி பெரும் செல்வந்தனாக இருந்தாலும் துண்பத்தையும் துயரங்களையும் அனுபவிப்பார்கள். தன் குடும்பத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்வர்கள்.அடிமைத் தொழில் புரிவர்கள். உறவினர்களை மதிக்க மாட்டார்கள்.தன் நிலைகலைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.வின் வர்த்தை பேசுவார்கள்.

வளந்த கேமத்துமத்தில் மன்னர் அயிடினும்
                                                                               மலிதுன்பன்
விளிந்த நீச நிகிபனும் மிகுந்த கலாபி பிரேசியனே
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்கள் உயந்த அந்தஸ்த்ததில் இருந்தாலும் காலப் பேக்கில் அனைத்தும் இழந்து  விடுவர்கள்.பாவி பரதேசி வாழ்க்கை வாழ்வார்கள்.

கேமேத்ருமே மலி ந துக்கி நநீச நிஸ்ஸ்வா
ப்ரேஷ்யா  :கலாச்சந்ரு பதேர் அபிவும் சஜாதா !
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தும் இழந்தூ வவிடுவார்கள்.

கேமத்துரும யோகபங்கம்
…………………………………………………

         சந்திரனுக்கு 3-6-10-11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும், 4-7-10-ல் குரு இருந்தாலும் தீய பலன் குறையும். நற்பலன்கள் கிடைக்கும்.
            சந்திரனுக்கு சுபர்களின் பார்வை இணைவு இருந்தால் கேமத்துரும யோகம் பங்கமாகிவிடும்
    சந்திரன் லக்கினத்திற்கு கேந்திர /கோணங்களில் இருந்தாலும் யோகம் பங்கமாகிவிடும்