Tuesday 29 September 2015

கிரகங்களின் உறவு !


கிரகங்களின்  உறவு  !


      பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலுக்கு உறுதுணையாக இருக்க ரிஷி கணங்கள், பிரம்ம ரிசிகளைத் தனதுமானசீக புத்திரர்களாகத் தோற்றுவித்தார் அவர்களுள் ஏழு பேர் முக்கியமானவகள்.
மாரிச மகரிஷி முதலாமவர் இவருடைய புத்திரர் காசியப்பர். இவருக்குப் பதின்மூன்று மனைவிகள்.
முதல் மனைவிக்கு பிறந்தவர் சூரியன்.
     ஆங்கீரச மகரிஷியின் மகன் பிரகஸ்பதி என்கிற குரு அல்லது வியாழன்.
     அத்திரி மகரிஷியின் மகன் சந்திரன்.
     சந்திரனின் மகன் புதன்.
      வசிஷ்டமகரிஷியின் வழியில் சுமார் பத்து தலைமுறைக்குப் பின் பிறந்தவர் பரத்துவாசிகர் இவரது மகன்தான் செவ்வாய்.

ஒன்பது கிரகங்களின்  வம்சாவழிப் பட்டியல் !

சப்தரிஷிகளின் நேர்வழி வந்த கிரகங்கள்  - 3
1-சந்திரன்
2- குரு
3-சுக்கிரன்

இரண்டாம் தலைமுறையில் வந்த கிரகங்கள் - 2
1- சூரியன்
 2- புதன்

மூன்றாம் தலைமுறையில் வந்த கிரகங்கள்  - 3
1- சனி
 2- ராகு
3- கேது

பத்து தலைமுறைக்குப் வந்த கிரகம் செவ்வாய்
       
 
சூரியன் :- தந்தை, மூத்த மகன், திருமணத்திற்குபின் மாமனார், ஊரின் பெரிய மனிதர்கள்.

சந்திரன் :- தாயர், மாமியார், வயதானபெண்கள்,

செவ்வாய் :- இருபாலினத்திற்கும் சகோதரன், பெண்ணுக்கு கணவன், மைத்துனன்,

புதன் :- மாமா, இளைய சகோதரி, காதலி /காதலன்

குரு  :- முப்பாட்டனார், குழந்தைகள் ஆசிரியார்

சுக்கிரன் :- மனைவி, அத்தை, மூத்த சகோதரி, பெண்கள் தொடர்புடைய உறவுகள்.

சனி :- மகன், சித்தப்பா, வேலையாட்கள், ஆச்சாரக் குறைவானவர்கள்.

ராகு :- இருவகைத் தாத்தா  - கேது :-இருவகை பாட்டி

          அப்பா மகன் அறிவுறை கூறுபவர்களை யாரும் விரும்புவதில்லை சூரியன் சனி பகை
    மாமியார் மருமகள் வயதனவர்களை இளமையில் உள்ளவர்கள் விரும்புவதில்லை.சந்திரன் சுக்கிரன்
                    மேலாதிகாரி வேலையாள் அதிகாரம் செய்பவர்களை யாரும் விரும்பு வதில்லை செவ்வாய் சனி பகை

        சூரியனை ஆதாரமாக வைத்துத்தான் மற்ற நட்சத்திரகள் சுழன்று வருகின்றன வான மண்டலத்தில் இந்நிகழ்வு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை அறிவியலர் அறிவதற்கு முன்னதாகவே மகரிஷிகள் தோன்றி அறிந்துவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபாடுகளையும் கண்டறிந்து ஜோதிஷ சாஸ்திரம் ஆக்கினார்கள்.
           கிரகங்களின் உறவு நிலையில் உள்ள தன்மைகளளுக்கு ஏற்ப்ப பலன்களைத்தரும்.

சூரியன் :-
           சூரியன் சனி தந்தை மகன்
சூரியன் ரஜோகுணம்          சனி தமோகுணம்
                  ஒளி, வேகம்                     மந்தன், இருட்டு
                   அரசன், அதிகாரம்        சோம்பேறி
                   அறிவுத்திரன்                 வேலைக்காரன்
                எனவே தந்தை - மகன் ஆனாலும் இவை இரண்டும் தங்கள் எதிர்மறைக் குண இயல்பிற்கு ஏற்ப பகைமை அடைகின்றனர்.
 
சுக்கிரன் :- ஆடம்பரம், பெண் ஆசைகள், கர்வம், கவர்ச்சியானவர் .
ஆசைகள் இல்லாத ஆத்ம காரகனான சூரியனுக்கு  ஆர்வமின்மையால் சுக்கிரன் சூரியன் பகைவர்கள்.

ராகு  :- தாத்த, இருட்டைக் குறிப்பவர், ராஷசன்,  இதனால் இருவரும் பகைவர்கள்.
மேற்கூறிய விளக்கங்களால் சூரியனுக்கு சனி, சுக்கிரன், ராகு பகையாகின்றன.

 புதன் :- புத்தி, நண்பர்கள், உதவியாளர்
செவ்வாய் :- அதிகாரி, சக்தி, கர்வம், காவலர்
குரு :- வழி காட்டி, ஜீவகாரகன், மரியாதை, வெற்றி
கேது :- மோஷம், முனிவர்,
          இதனால்  இவர்களுடன் நட்பு கொள்கிறார்.

சந்திரன் :-மனம், தாய், மாமியார், செலவு,வயதனவர் செலவையும்
சுக்கிரன் :- மருகள், மனைவி, கார்வம், அழகிய தேற்றம் செல்வத்தையும் இதனால் இருவரும் பகைவர்கள்.

ராகு  :- இருட்டையும், மேகத்தைக் குறிக்கும்  சந்திரனின் ஒளியை மங்கச் செய்வதால், மாயா காரகனாகி மனதில் தவறான தோற்றங்களை ஏற்படுத்தி தீய எண்ணத்தை தருவதால் பகையாகிறது.

செவ்வாய் :- ரஜோகுணம் தன் முனைப்பு மற்றும் அகந்தைக்கு, மேல் அதிகாரி காரத்துவம் பெறுகிறது.
சனி வேலைக்காரன்,கர்வம் உள்ள வேலைக்காரன்  தனது எஜமானனின் வெறுப்பைச் சம்பாதிக்கிறான் மேலும் மேலதிகாரிகள் தனக்குக்கீழ் பணியாற்று வோரின் வெறுப்பை சம்பாதிக்கின்றனர். மேலதிகாரின் வெறுப்பைத் தூண்டிவிட்டு பகையைச் சம்பாதித்துக் கொள்வதால் சனியும் செவ்வாயும் தங்களுக்குள் பகை பெறுகின்றன.

ராகு தமோகுணம் பெற்று சோம்பேறித்தனம் உடையவராகிறார் ஆனால் செவ்வாய் சக்தியையும் வேகத்தையும் குறிக்கிறது எனவே செவ்வாயும்  ராகுவும் தங்களுக்குள் பகை பெறுகின்றனர்.
புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது பொதுவாக உடல் சக்தியும் மூலைபலமும் ஒத்துப் போவதில்லை உடல் பலமுள்ளவர் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் சிந்திக்கின்றனர் எனவே புதன் செவ்வாய் தங்களுக்குள் பகை பெறுகின்றன.
     
செவ்வாய் சுக்கிரன் நட்பு ஏனென்றால் சுக்கிரன் பெண்ணை,மனைவியை ,ஆடம்பரத்தைக் செல்வத்தை குறிக்கிறது .செவ்வாய் கணவனையும் எனவே இருவரும் நட்பு அடைகின்றனர்.
           குரு வழிகாட்டி அல்லது ஆசிரியர், ராஜகுரு செவ்வாயுடன் நட்புடன் உள்ளர்.
       சூரியன் ரஜோகுணம் அரசன், செவ்வாயும் ரஜோகுணம் தளபதி இருவரும் நட்புடன் உள்ளர்.

புதன் :-
           புத்திசாலி, ஆத்மகாரகன் சூரியனை விரும்பும் புத்திசாலித்தனம் வேலையை அதாவது சனியை விரும்புகிறார் புதன்.
      புதன் ராகுவிடம் பாசமுள்ளது. புதன் விஷ்ணு அமிர்தம் வழங்கியதால் அமரத்துவமான ராகு புதனுடன் நட்பு.
   புதன் (விஷ்ணு) சில சமயங்களில் பெண் ஆனபடியால் சுக்கிரனுக்கு நட்பு (புதன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிநாதனின் பால் இயல்புத் ஆண் /பெண் தன்மையை அடைவர்)
       புத்திசாலியான புதன் கர்வி செவ்வாயையும், மோட்ச கேதவையையும் தன் குணத்திற்கு ஒத்துவராதபடியால் விரும்புவதில்லை. கர்வமும் அறிவும் ஒன்றாக இணைவதில்லை, மோஷம் பெற விரும்புவதில்லை இதனால் புதனுக்கு செவ்வாய் கேது பகைவர்கள்.
சூரியன்- புதன் விஸ்தாரமான புத்தி
சந்திரன் -புதன் கற்பனை, அருள்
செவ்வாய் -புதன் வெட்டி பேசுதல் தர்க்கம், வாக்குவாதம்.
குரு -புதன் எல்லா முடிவிலும் மனிதாபிமானம் இருக்கும்.
சுக்கிரன் -புதன் நளினமான, உணர்ச்சி பூர்வம், சமுக சேவை
சனி -புதன் தீவிர சிந்தனை கருத்தாழம், வேதாந்தப்பிரியம்.

குரு :-
             சரியாகச் சொன்னால் குருவுக்கு பகைவர்கள் இல்லை குரு ஆசிரியர், புதன் மாணவர், ஒரு ஆசிரியர் ஒரு மானவரை கடிந்து கொள்ளலாம் ஆனால் அதற்காக அவருக்கு மாணவர் பகைவரல்ல குரு புதன் இணைவு புத்திசாலித்தனத்தைக் கொடுக்கிறது.ஏனெனில் குரு புத்தி விறைப்பானது.
ஆனால் சலனமுள்ள சந்திரனை குரு விரும்புவதில்லை, தொழில் குருவால் வழிகாட்டப்படுவதால் குருவுக்கு சனியைப் பிடிக்கும் குருவுக்கு சக்தி வேண்டும் எனவே செவ்வாயுடன் நட்பாகிறது, சூரியன் அரசனையும் ஆத்மாவையும் செல்வாக்குள்ள மனிதனையும் குறிப்பதால் குரு சூரியன் நட்பு அவர்கள்.

சுக்கிரன் :-
                     சுக்கிரனின் சில உறவுகள் மேலே விளக்கப்பட்டுள்ளன. சுக்கிரன் சனி வேலையைப் பிடிக்கும் செல்வம் வேண்டும். உழைப்பிருந்தால் தன் செல்வம் கிட்டும் இதனால் இருவரும் நட்பு
செவ்வாய் சக்தி தேவை இதனால் இருவரும் நட்பு
புதன் புத்திசாலி இதனால் இருவரும் நட்பு
ராகுவும் நட்பு, கேது மோஷம் பிரிவினை தருவதால் இருவரும் பகைவர்கள்.

சனி :-மேலே விளக்கப்பட்டுள்ளன சூரியன், சந்திரன் கேது பகைவர்கள் மற்றவர்கள் நட்பு.

ராகு :- சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள்

கேது :- பிரிவினையை தருபவர் இதனால் யாரும் இவரை விரும்புவதில்லை.
        ஒவ்வொரு கிரகத்தின் உணர்வு அடிப்படையில் நட்பு, பகையை வகுத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். இவர்களின் தோற்றுவிக்கும் காந்த அலைகள் தான் நமக்குப் பாதிப்பைத் தருகின்றது.  

ப.சூரியஜெயவேல்

9600607603


Thursday 24 September 2015


புதாதித்ய யோகம்

    புதனும் ஆதித்தன் என்னும் சூரியனும் இணைந்து  லக்கினத்திற்கு 1-4-8-ல் இருந்தால் புதாதித்ய யோகம் அமையும், புதன் நக்கோள்களில் மிகவும் சிறிய கிரகம் இவர் சந்திரனின் புதல்வன் ஆவார்.
          புதன் வலிமைபெற்றவர் முக்கியப் பிரமுகராக விளங்குவார். அரசாட்சி, பொது மக்கள் தொடர்பு மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்.மனோசக்தி புத்திக் கூர்மையாகவும், சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகிப் பவராகவும் தடையில்லாமல் பேசுவராகவும்.நகைச்சுவைப் பேசுவர், பிறர் செய்வதை அப்டியே உடன் செய்வர்கள்  .
      புதனது சஞ்சாரம் சூரியனை ஒட்டியே அமைந்திருக்கும் .ராசியில் சூரியனுக்கு அருகில் உலவிக் கொண்டிருப்பதால் ஒளி குறைந்தே காணப்படும்.புதன் ஒருவரே 8-ல் இருக்கும்போது நற்பலனைத் தருவர். எந்த வீட்டிலும் சுப பலத்துடன் இருந்தால் அவரால் நலங்கள் விளையும் இவர் சூரியனுடன் சேர்த்து ஒரே ராசியில் இருக்கும் போது புதஆதித்திய  யோகம் உண்டாகும்.
    சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்திய விசேஷம், சுபர்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்துப்பலன்கள் அளவு கூடவோ குறையவோ செய்யும்.
     சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும் போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்கத் கதியில் இருக்கும் புதன் நற்பலன்கள் தருவர்.என்றாலும் பாதிப்பு இராது.
    புதனுக்கு வக்கிரகதி ஏற்படுவதுண்டு வக்கிரத்தில் உள்ள கிரகங்கள் உச்ச பலத்தை தரும்  என்று ஒரு சாராரும் வக்கிரகதியில் உள்ள பாபக் கிரகங்களுக்கு உச்ச பலம் ஏற்படும். என்று மற்றோரு சாராரும் கூறுவர் புதன் வக்கிரகதியில் இருந்தால் மனக்குழப்பம் தருவர்.புதனும் சூரியனும் இணைந்தால் ஜோதிடத்தில் வல்லுனராவர், வானவியல், வேதசாஸ்திரம், ஞானம் உண்டாகும். சிறந்த விஞ்ஞானியாகவும், எஞ்சினீயர், சட்டவல்லுனர், அனைவரும் பாராட்டுவார்கள்.
      வளர்சந்திரன், குரு, சுக்கிரன் பார்வை இணைவு சிறப்பைத்தரும்.சனி, ராகு, கேது இணைவு பாதிப்பைத்தரும்.பாபக்கிரக இணைவு பார்வை இல்லாமல் இருப்பது அவசியம்.
     மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சிறப்பகா முழுமையாக பலன் தரும் என்று கிரகந்தங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாரப்பா ஈரிண்டு தனில்யிரு நான் கொன்றில்
      பகருகின்ற பகலவனும் புந்தி கூடில்
சீரப்பா நிதி கருமன் கண்ணுற்றாலும்
          நிலத்தின் நல்ல பூபதி போலிருப்பான் காளை
கூறப்பா குதிரைகளுங்காடியுண்டு
         கொற்றனேயே வலாள் மெத்தவுண்டு
ஆரப்பா அயிஸ்வரியம் மெத்த வாழும்
      அப்பனே ராசியோட பெலத்தால் கூறே
        லக்கினத்திற்கு 1-4-8-ல் சூரியனும்,புதனும்  இணைந்து 9-10-ஆம் அதிபதிகள் பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சிறப்புடன் இந்த உலகில் புகழ் பெற்று பெருஞ்செல்வந்தனாக இருப்பர்கள். வாகனம், பூமி லாபம், அரசுவகையில் அதயாம், உயர்ந்த பதவி அமையும். ஜாதகத்தினை நன்றகா ஆராய்ந்து கூறவும்.

கதிரோடு மதிமகன் சேர்ந்து - நல்ல
கனமுள்ள நாளிலுமிரு நாளிலொன்றில்
பதிநிதி பனையுமேயுண்டு சென்மன்
பாக்கியவானென்று பகர்ந்தாண்டித் தோழி
       சூரியனும் புதனும் இணைந்து 1-4-8-ல் பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பொன், பொருள், பூமீ புகழ் சுக பாக்கியங்கள் கிடைக்கும்.

கதிரோடு புந்தி கூடிகளித்திட உதித்த மாந்தர்
நிதி மிகப் படைத்தோரர் மற்றும் நீதியில் பிறழார்
நதி நலம் படைந்தோர் எங்கும்  மாபுகழ் பெற்றோர்
        சூரியனுக்கு புதனும் இணைந்து பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சொல்வாக்கு செல்வம் படைத்தவர், தவறான வழியில் செல்லமாட்டார். நல்ல சிந்தனையும், புகழும் அடைவர்கள்.

"ப்ராக்ஞோ பகுப்பாவி கபீநாங்கக் சூரவல்ல
                                                                    போபீதிமான்
லக்நேபுதவஸ்கர யோர்தீரக்கயுஸ்ஸம் வேத்புருஷ்
     லக்கினத்தில் சூரியனும் புதனும் இருந்தால் அறிவுடையவர்கள், அழகாய் பேசுபவர்கள் உடல் பலமுடன் இருப்பார்கள், வீரன், தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் தீர்க்கயுள் உள்ளவர்கள்.

விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டில் நான்கு ஒன்றில் வளையக் கூடின் மன்னவனாம்
        புதனும் சூரியனும் 1-4-8-ல் இணைந்திருந்தால் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகி சுகபோக வாழ்வு அமையும்.
     இனி பன்னிரண்டு  லக்கினங்களுக்கு புதன், சூரியன் இணைந்து அமையும் நிலைகளை கண்போம்.



மேஷம்  : -
                 லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 3-6-ஆம் அதிபதியாகி ஆதிபத்திய விசேடமற்று இருந்தாலும்  3-6-ல் இருக்கும்போது தன் சுயபலத்தின் அடைபயில்
நற்பலன்களைத்தருவர் .
              1-3-5- ல் அல்லது 6 ஆம் இடங்களில் யோகம்.அமையப் பெறுவது நல்லது.
    1ல் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். யோகம் சிறப்படையும். 5-ல் அமைந்தால் சிறப்படையும்.
              3-ல், 6-ல் புதன் ஆட்சி பலம் பெறுகிறார். ஜாதகர் /ஜாதகி சுய முயற்சியில் பணக்காரர் ஆவார்கள் சுக வாழ்வு அமையும் .
          அஸ்தங்கம் பெறாமலிருக்க வேண்டும். புத ஆதித்திய யோகபலனை அடைவர்கள்.
      மேஷ லக்கினத்திற்கு  4-8-ல் புதன் பலம் குறைந்து காணப்படும். 8-ல் சூரியன் பலம் குறையும்.5-ஆம் அதிபதி 8-ல் நலம் தருவதில்லை.
    ராகு,கேது,சனி, இணைவு,பார்வை இருந்தால்  நலம் தருவதில்லை .

ரிசபம்  : -
               லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 4-ஆம், புதன் 2-5-ஆம் அதிபதி ஆகிறார். இதனால் 2+4, 2+5, 4+5- ஆகிய அதிபர்களின் சேர்க்கையாகிறது. இந்த சேர்கையால் தனயோகம், மாகயோகம், வித்யா யோகம் அமையும்.
      சூரியன், புதன் இணைந்து 2-5-4-7-10-ல் இருந்தால் நற்பலன்களின் அளவு கூடும். 11-ல் இருந்தால் நீச்சபங்கம் பெற்றால் சிறப்பைத்தரும். அந்தந்த இடத்து ஆதிபத்திய விசேடங்களை பொறுவர்கள்.
    10 ல் சனி வீட்டில் சூரியன் நலம் தராது.

மிதுனம்  : -
                   1-4+3-ஆம் அதிபதி இணைவு நலம் தரும் .3-ல் பல சுக போக வாழ்வு அமையும்.
1-4-ல், 10-ல் இருப்பது நலம் தரும்.

கடகம் : -
            இந்த யோகம் ஏற்படுமானால் சிறப்பைத் தரும். சூரியனும், புதனும் 2-3-10-ல் அமைந்தால்
சிறப்பன யோகம் தரும்.திறமைசாலிகள், சிந்தனையுள்ளவர்ககள் .சங்கீதத்தில் வல்லவர்கள், வழக்கறிஞர், அரசியல்வாதி, உயர் பதவி கிட்டும்.        

சிம்மம்  : -
                 இந்த யோகம் அமைந்தால் சூரியன் லக்கினாதிபதி, புதன் 2-11-ஆம் இணைந்தால் சிறப்பான பலன்கள் ஜாதகர்கு அமையும்.
4-ல் அமையும் போது வித்யாபலம் கூடும். 10-ல்  அமையும் போது உயர்ந்த பதவி அமையும். 9-ல் அமைந்தால் உயர்ந்த பதவி அந்தஸ்து அடைவர்கள்.
  8-ல் அமைந்தால் சிறப்படையாது.

கன்னி : -
              லக்கினக்காரர்களுக்குப் புதன் லக்ன, கரும ஸ்தானாதிபதி சூரியன் விரயாதிபதியும். இருவரும் இருப்பின் விசேடமான நற்பலன்கள்
குறையும். 4-ல், 7-ல், 10-ல் அமைவது சிறப்பைத் தருவர்கள். 8-ல் அமைவது நலம் தருவதில்லை.

துலாம்  : -
                லக்னக்காரர்களுக்குப் புதன் 9-12-ஆம் அதிபதி, சூரியன் 11 ஆம் அதிபதியாகவும், அதேநேரத்தில் பாதகாதியாகவும் ஆகிறார். பாதகாதிபதியுன் கூடியிக்கும் புதன் எவ்வித நன்மையை ஜாதகருக்கு  உண்டு பண்ண முடியும்? என்றாலும் 9-11-ஆம் வீட்டுக்குடையவர்கள் ஒன்று கூடி இருந்தால் இந்த நிலையைக் கவனிக்கும்போது இச்சேர்க்கையால் ஒரளவு நற்பலன்கள் கிட்டும் வாய்ப்புள்ளது. இச்சேர்க்கை 7-9-11-ஆம் இடங்களில் அமையப்பெறுவது நல்லது 4-ல் சூரியன் இருந்தால் பலம் குறையும் நற்பலன் கிட்டாது. 8-ல் புதன் சூரியன் இணைந்து இருந்தால்  நற்பலன்கள் ஏற்படாது.
    3-6-10-ல் அமைந்தால் ஆதித்ய யோகம் அமைந்தால் நன்மைகள் அதிகம் ஏற்ப்படும். வெற்றியும், சிறந்த அந்தஸ்தும்  கிட்டும்.

விருச்சிகம் : -
           லக்கினத்திற்கு புதன் 8-11 ஆம் வீடுகளுக்கு அதிபதி அவர், சூரியன் 10-ஆம் அதிபதி அவர் 6-10-11-ல் அமைந்தால் யோகம் சிறப்படையும்.சிறந்த வியாபாரியாகவும். சுய தொழிலில் சிறப்பும். அனைவரால் புகழப்படுவர்கள். சிறந்த ஆராய்ச்சியாளர்கள்.

தனுசு  :-
             லக்கினத்திற்கு புதன் 7-10-ஆம் அதிபதி, சூரியன் 9-ஆம் அதிபதி இவ்விருவரின் இணைவு ராஜயோகத்தை தருவர்கள்.
   புதனுக்கு கேந்திராதிபதித்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் உள்ளதால் 5-9-10-ல் இருந்தால் சிறப்பன யோகம் தரும்.கல்வி, புகழ்,  அரசியல், லாபங்களும்.பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும்.

மகரம் : -
           லக்கினத்திற்கு புதன் 6-9-ஆம் அதிபதி, சூரியன் எட்டாம் அதிபதி 6-8-11-ல் இருந்தால் சிறப்பன பலனைத்தரும். விபரீத ராஜயோகம் அமையும் .தொழிலில் மேன்மையும், அரசியில் பதவியும்.செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும்.

கும்பம் : -
              லக்கினத்திற்கு புதன் 5-8 -ஆம் அதிபதி, சூரியன் 7-ஆம் அதிபதி 3-6-10-ல் இருந்தாலும் சிறப்பன யோகம் தரும்.அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கும், சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும்.

மீனம் : -
           லக்கினத்திற்கு புதன் 4-7-ஆம் அதிபதி, கேந்திராதிபத்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் பாதிப்பை தருவர்.சூரியனுக்கு 6-ஆம் அதிபதி இணைந்துதிருந்தால் 2-4-6-10-ல் இருந்தால் சிறப்புடன் அமையும்.உயர்ந்த அந்தஸ்தும், பதவி கிட்டும்.

      சூரியன் புதன் இவர்களை பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்திய விசேடம் ஆகியவற்றைக் கொண்டு பலனைச் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

    புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம், அடைவர்கள், நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும்.

      சூரிய பலம் குறைந்திருப்பவர்கள் ஆன்மபலத்தை இழப்பார்கள். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்ப்படும். நிர்வாகத்திரன் குரையும்.

Wednesday 23 September 2015

சூரியனால் ஏற்ப்படும் யோகங்கள்

சூரியனால் ஏற்படும்  யோகங்கள் !


               சூரியனால் உண்டாகும் யோகங்களை கண்போம். வசி யோகம்,வெசி யோகம்,உபயசர யோகம்,(வரிஷ்ட யோகம்       சம யோகம், அதம யோகம்) ரவிசந்திர யோகங்கள். நிபுன யோகம், திரிலோசன யோகம், பாஸ்கர யோகம், மருத, மாருத யோகம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனால் மேல்கண்ட யோகங்கள் அமைகின்றது.
     சூரியனின் தொடர்புடைய யோகங்களை வரிசையாக விரிவாக கண்போம்.

     வசி யோகம் !     1


      ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல்  சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர் புதன், குரு, சுக்கிரன், சனி  இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள் .
   வசி யோகத்தில் பிறந்த ஜாதகர் /ஜாதகிக்கு  உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லா மக்களாலும் விரும்பப் படுவர்கள்.நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம், அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உர்ந்த அந்தஸ்தை அடைவர்கள். சிரப்புடன் வாழ்வர்கள்.

தானென்ற இரவிக்கு பின்னே புந்தி
       தரணிதனில் பேர்விளங்கும் தனமுள்ளோன்
தானென்ற யிரவிக்குப்பின்னே செயும்
          தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
       சூரியனுக்கு பின்னால் புதன் நின்றால் ஜாதகர் /ஜாதகி உலகில் பேரும் புகழும் பெற்று விளங்குவர்கள்.தனவான்.
       சூரியனுக்கு பின்னால் செவ்வாய் நின்றால் ஜாதகனுக்கு அதிக புத்திரர்கள் உண்டாகும்.

இரவிக்குப் பன்னிரண்டில் சுக்கிரன் கூடி
    இருந்த காலது வசி யோகமென விரைப்பர்
புரவலராற் பூச்சியமு நால் வகையோகசனைக்கும்
      புத்தி நல்லோ செல்வம் புகழ்திரு நற்புகழம்
பரவியபூமி வெகு பரப்புகளைப்புரப்பன்
         சூரியனுக்கு 12-ல் சுக்கிரன் இருந்தால் வசியோம் அரசு மரியதையும், பெரியோர்களால் புகழப்படுவர்கள், அனைத்து சுக போக வசதிகளும், நல்லோர்கள் புகழ பல பூமிகள் சம்பாதிப்பர்கள்.

பானுவின் பின் கிரக நிற்கிலது வாசி யோகம்
       பேரியல் சேய் நிற்கில் வியாபர மிகு வல்லான்
பெல வித்தை தீரம் வெகுபுத்திரரு முள்ளோன்
      கதிரவன் பின் புதனிற்கில் போக பாக்கிவான்
கல்வி தனம் பாக்கியமுடமை பிறர் பொருளால்
    சதிருடையன் சூரியன்பின் குரு வெள்ளி நிற்கில்
சகல சஸ்திரங் கேட்கப் படிக்கவுமே பிரியன்
       புதிதான வாஸ்திர வரணாலங்காரம்
பொருந்தினேன் சனி நிற்கில் விபசரீதப் பலமாம்
         முதிரு மிளாங் குரும்பையெனப் புடைத்தெழந்து விம்மி
முகம் கருத்து பளபளத்து  முகிழ்முடைப்பை கொடியே

         சூரியனுக்கு 12-ல் கிரங்கள் இருந்தால் வசி யோகமகும் செவ்வாய் இருந்தால் வியாபரம் சிறப்புடன் அமையும். தொழில் சிறப்புடன் அமையும், அதிக குழந்தைகள் பிறக்கும்.
        சூரியனுக்கு 12-ல் புதன் இருந்தால் சுக போக வாழ்வு அமையும்,கல்வி, செல்வம் பாக்கியங்கள் கிட்டும் .பிறர் பொருளால் லாபம்கிட்டும்.
       குரு, சுக்கிரன் இருந்தால் சகல சஸ்திரங்கள் அறிவர்கள் புதிய ஆடைகள் ஆணிவர்கள்.
        சனியிருந்தால் தீய பலன்கள் நடக்கும்.
       
      தானென்றஇரவிக்கு பின்னேபுந்தி
             தரணிதனிலபேர் விளங்கும் தனமுமுள்ளோன்
     தானென்றஇரவிக்கு பின்னேசேயும்
              தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
     தானென் றகுருவோடு நீலன்மேவ
               தரணிதனில் செவிடனடா முடவன்பாரே

       சூரியனுக்கு 12-ல் புதன் இருந்தால் உலகில் புகழ் பெறுவர்கள். செல்வ வளமும் கிட்டும்.
        சூரியனுக்கு 12-ல் செவ்வாய் இருந்தால் புத்திரர்கள் அதிகம் உண்டாகும்.
      சூரியனுக்கு 12-ல் குருவும், சனியும் இணைந்திருந்தால் உலகில் செவிடனகவும், உடல் ஊனம் உள்ளவர்கள்.

அறைந்திட்டேன்னமொன்று செப்பக்கேளு
            அணலனுக்குபின்னாலே அலரிமந்தன்
பரைந்திட்டேன் பண்டுபொருள் அகமுங்கிட்டும்
        பார்தனிலேபர தார விசையனப்பா
குரைந்திட்டேன் குமரனுக்கு எட்டுபத்தில்
        குலவையிட்டுவருவனடா சண்டன்தானும்
சிறந்திட்டேன் ஜென்மனுக்கு யோகஞ்செப்பு
       சிறப்பாகப் புலிப்பாணி செப்பினேனே

     சூரியனுக்கு 12-ல் சனியிருந்தால் செல்வம், பல பொருட்களும் கிட்டும்.பிறர் தொடர்பும் ஏற்படும ஜாதகருக்கு 80 வயதில் மரணம் ஏற்படும். ஜாதகர்குசிறப்பன யோகத்தை தருவர்.சிறப்பன யோகம் கிட்டும்.

      சூரியனுக்கு 12-ல் செவ்வாய்,சனி இருந்தால் தீயபலன்கள் நடைபெறும்.
     சூரியனுக்கு 12-ல் இருந்தால் சுகபோக வாழ்வு அமையும், சுக ஜீவனம் அமையும்.தந்தைக்கு சிறப்புடன் வாழ்வர்கள்.

  சூரியன் மேசம், சிம்மம், தனுசு இவைகளில் இருந்து 12 -ல் குரு அல்லது செவ்வாய் இருந்தால் சிறப்பன யோகத்தை.அனுபவிப்பார்கள்.
      சூரியன் கடகம், விருச்சிகம் மீனம் இவைகளில் இருந்து 12-ல் புதன், சசுக்கிரன், சனி இருந்தால் சிறப்பன யோகத்தை அனுபவிப்பார்கள்.

       சூரியனுக்கு சனி, ராகு, கேது இணைவு பார்வை இருந்தால்   நன்மை இருக்காது.

வெசி  யோகம் - 2


            ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம் அமையும்.
        பலன் ஜாதகர் /ஜாதகி அழகானவர், இணிமையாக பேசுவார்கள்,தைரியசாலிகளாகவும்,சிறந்த உணவு கிட்டும்.
தந்தையர் புகழ் பெற்றிருப்பர். உறவினருக்கு உதவுவார்கள்.
இவர்கள் பணத்தை சேமிக்க பலக வேண்டும்.

தானென்ற இரவிக்கு முன்னே புந்தி
      தனித்தி ருக்கப் புதனிதனடா தரித்ர தோஷம்
            சூரியனுக்கு இரண்டில் புதன் ( தனித்திருக்க)  இருந்தால் ஜாதகர் புனிதத்தன்மையுள்ளவர்கள். தரித்திரனாக இருப்பர்கள்.

அருக்கண் முன்னே கிரகம் நிற்கில் வெசி யோகம்
       அரிய செவ்வாய் நின்றக் காற்றிட சரீரத்தான்
மருவரியை நிந்தையுள னொருவன் கீழ் அமர்ந்தோன்
        வருஞ் செலவு மாதயமுன் சரியாயிருப்பன்
ஒரு புதனின்றால் வித்தையுடையன்றரித்ரன்
        உருக்கவாசாரன் பந்து கூட்டுறவோன்
குரு நின்றாகில் வித்வான் வெகுபுத்தரருடையன்
      கூறு வியாபார வல்லன் நீர வெனக் கூறே
சூரியன் முன்னே வெள்ளி நிற்கில் தனம் பயமுந்
       துர்ச்சனன் கலவிப்பிரியன் மிடவிட பித்தன்
சீரியதோர் போக வானென்பர் சனி நிற்கின்
     செய்ய பரஸ்தீரீ கமனன் பரதாரவிஷயன்
பாரில் பரவுகாரி பந்துக்களுடையன்

  சூரியனுக்கு இரண்டில் கிரகங்கள் இருந்தால் வெசி யோகம்  சூரியனுக்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் திடமன உடல் அமைப்புள்வர்கள், தீய சிந்தனையுள்ளவன்.கிழிந்த ஆடைகளை அனிந்திருப்பான் லக்கினதிபதி நலமுடன் இருந்தால்  வாழ்வு நலமுடன் அமையும்.
      சூரியனுக்கு இரண்டில் புதன் இருந்தால் கல்வி அறிவுடையவர்கள். செல்வம் இல்லதவன், உருக்கு தலைவன், உறவினர் உறவுள்ளோன்.
   சூரியனுக்கு இரண்டில்  குரு இருந்தால் வித்தைகள் உள்ளவர்கள். அதிக புத்திரசம்பத்து உள்ளவர்கள். வியாபாரம் செய்வர்கள்.
    சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் இருந்தால் செல்வம் உள்ளவர்கள். முர்கமுடையவர்கள், சிற்றின்பப்பிரியன், சூடன உடல் உள்ளவர்கள். சுக போக வாழ்வு அமையும்.
         சூரியனுக்கு இரண்டில் சனி இருந்தால் விபச்சாரியை கூடுவர்கள் .பல திருணம் நடக்கும். உறவினர்கள் உள்ளவர்கள்.
        சூரியனுடன் சனி, ராகு, கேது இணைவு, பார்வையிருந்தாலும். இரண்டில் ராகு, கேது இருந்தாலும் யோகம் பாங்கமகிவிடும்.
   லக்கினாதிபதி நிலைகலை கவணிக்கவேண்டும்.

உபயசர யோகம்   3


  சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தே அல்லது இணைந்திருந்தால் உபயசர யோகமாகும் (இது  சந்திரனின் துருதரா யோகத்தை போன்றது)   சுபர்கள் இருந்தால் சுப பலனைத்தரும்.
   ஜாதகர் /ஜாதகி பேச்சுத்திறமையுள்ளவர்கள். கெட்டிக்காரர்கள், தைரியசாகளாகவும், உறவினர்களுக்கு உதவி செய்வர்கள், தந்தை சுகமுடன் வாழ்வர்கள். அனைவரல் பாராட்டுவர்கள்.

கதிரிரு பக்கமாகக் கணக்கனும் வெள்ளி நிற்க இதற்கெதிர் பாபர் பாராதிருக்கின் மாதே கேளாய்
பிதுர்க்கதி யோக மாகிப் பேருளோனாகி வாழ்வன் !
   சூரியனுக்கு 2-12-ல் புதனும், சுக்கிரனும் இருக்க இவர்களை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருந்தால் ஜாதகர் /ஜாதகி தந்தைக்கு அதிக யோகத்தை அனுபவிப்பார்கள். சம்பத்தும், புகழும் பெற்று சிறப்புடன் வாழ்வர்கள்.

வெய் யோனிருபக்கம் பாரு மாதே
வேந்தனும் கொவ்வான கோள்களுமேற
பையவே யிவனுக்குப் பண்டு - பொருள்
யோகமும் போகமும் பகர்ந்து சொல் தோழி - சங்கர!
          சூரியனுக்கு 2-12 -ல் குருவும், சுக்கிரன்  இருந்தால் செல்வம், புகழ்,அனைத்து வசதிகள் கிட்டும்.சுக போக வாழ்வு அமையும்.

ஒப்புடன் இரவி பக்கம் இரண்டினும் உயர்கோள்
                                                                                         உற்றால்
அப்படி உபய வெண்சா மரையுடை அரச னாமே !

             சூரியனுக்கு இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சுக போகவாழ்வும்,அந்தஸ்தும் கிட்டும்.


ரவிச் சந்திர யோகம்  (வரிஷ்ட, சம, அதம)


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் '                 622
                அறிவில்லாதவனை ஒவ்வொரு சிக்கலும்
அதிர்ச்சிக்குள்ளாக்கிச் சிறிது சிறிதாய் சிதைத்து விடும். ஆனால் அறிவு உள்ளவனை அதிர்ச்சிக் குள்ளாக்கும் சிக்கல் உலகில் இல்லவே இல்லை.
 
              ஒவ்வொரு ஜாதகத்திலும் குறைந்த பட்சம் இரண்டு,மூன்று வகையான யோகமாவது அமைந்திருக்கும்.யோகமில்லாத ஜாதகமே இல்லை எனலாம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைக்கு எற்ப்ப செயல்படும்.
    பலன் :- அரசியல் செல்வாக்கு, லாபங்கள், கிரம தலைவர்கள், நுண்ணறிவு, ஞாபகசக்தி, பேச்சுத்திறன், வெற்றி கிட்டும். சம யோகமாக இருந்தால் பலனைக் குறையும்  தீமை தரது.
       அதம யோகமானால் குருடு, மன நலம் பதிக்கும், அலித்தன்மை, மூடத்தனம், துர்மரணம் அவமானம் ஏற்படும்
              சூரியனும்,சந்திரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பர கேந்திரத்தில் இருந்தால் வரிஷ்ட யோகம்.  திரிகோணத்தில் நின்றால் சம யோகம். உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் அதம யோகம்.  ரவிச்சந்திர யோகம்.
     சூரியனும், சந்திரனும் பாரஸ்பரம் 3-6-9-12-ல் ராசிகளில் இருந்தால் அதிக சுகப் பலனைக் கொடுபார்கள்.
       சூரியனுக்கு 9- ல் சந்திரன் இருந்தால் உச்ச சுபப் பலனைத்தரும்.
      சூரியனுக்கு 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால்  ஒரளவு சுபப் பலனைக் கொடுப்பார்கள்.
        சூரியனுக்கோ,சந்திரனுக்கோ 1-3-4-5-9-6-10-11 ல் கிரகங்கள் இருந்தாலும் ரவிச்சந்தி யோகமகும்.
  சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள் செல்வம்,சாஸ்திரம்,புத்தி  ஜோதிடம் மாந்திரிகம்,எதையும் எளிதில் கிரகிக்கும் திரமையுள்ளவர்கள் காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
       சூரியனுக்கு பணபார ஸ்தானமாகி 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால் சுமரன பலன் கிடைக்கும். செல்வம்,சாஸ்திர ஞானம்,புத்தி,சாமர்த்தியம்,நல்ல குணம் அமைந்திருக்கும்.
                சூரியனுக்கு1-4-7-10ல் சந்திரன் இருந்தால் ஒரளவுக்கு நன்மை தரும். இவர்கள் அறிவாற்றலைப் பெறுவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
        பகல்/இரவு ஜெனனம்பார்க்க வேண்டும். செவ்வாய்,சுக்கிரன் பார்வை சூரியனுக்கே(அ) சந்திரனுக்கே இருந்தால் யோகம் சிறப்பு பெறும்.

பகலவன் தனக்கு மூன்று ஆறோன்பான்  
                                         பண்ணிரண்டினில் மதியமர
மிகு தனம் புத்தி வினைய நல் ஞானமேவு பல
                                                                           காரியயூகி
சகலரும் மதியும் பணபர இருக்க வியம்பிய யோகம்
                                                                                       ஆதிகம்
தகைபெறு கேந்திரந்தனில் மதியிருக்க சாற்றிய
                                                                            பலனிலையம்
   சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள்.செல்வம்,சாஸ்திரம், புத்தி காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
      சூரியனுக்கு பணபரஸ்தானத்தில் 2-5-8-11-ல் சந்திரனிருக்க யோகம் சிறப்பு பெறும்.
         சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரனிருந்தால்
எந்தவிதமன பலனையும் தாரது.

நிலவுக்கு கதிரவன் கோணம் - மாதே
நீ நிலத்தில் தனஞ் சுகவானாமில்லோன்
அலகை வணதுர்க்கை வசியன் - சென்மன்
அந்தகன் அழைப்பானாம் தெட்டாண்டில் - சங்கர
     சந்திரனுக்கு 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் சுகம் எதையும் அனுபவிக்க முடியாது.வனதோவதை துர்க்கையை வசியம் செய்வான் 68 வயதுவரை ஆயுள் உள்ளவார்கள்.
           ஆனால் சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால்
சிறப்பன யோகம் தரும்.

பாரப்பா பகலவனுக்கு அஞ்சு எட்டு
       பாக்கியத்தில் சுபர் நிற்க அதனுள்ளோர்கள்
சீரப்பா திரிகோண கேந்திரமேற
       சிவ சிவா பிதுர்க்கு தனமும்
வீரப்பா விதியுண்டு வெள்ளி புந்தி
          வீடானால் அமடில்லை ராஜ யோகம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
           கொற்றவனே புலிப்பாணி கூறினேனே
   சூரியனுக்கு5-8-9-ல் சுபர்கள் நிற்க அந்த ராசிக்கு அதிபதிகள் கோணம்,கேந்திரத்தில் இருந்தால் ஜாதகனின் தந்தைக்கு சிறப்பன யோகத்தை தரும்.
செல்வம்,ஆயுள்,பூகழ்,உண்டாகும்.
       5-8-9- வீடுகள் புதன் சுக்கிரன் வீடாக அமைந்தால்  ஜாதகருக்கு சிறப்பன ராஜ யோகம் அனுபவிப்பர்கள்.
    பகலில் பிறந்த ஜாதகருக்கு நவாம்சத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்து கட்டாயம். குருவால் பார்கப்பட வேண்டும்.
       இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனை சுக்கிரன்
பார்க்க வேண்டும்.பலம் பெற்று இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும்.
     இருவரில் ஒரு பலம் பெறுவது அவசியம்.

பாஸ்கர யோகம் 

…………………………………

        சூரியனுக்கு இரண்டில்  சந்திரனும் அமைந்திருந்தால் அல்லது லக்கினத்தில்  சூரியனும், 2ல் புதனும், 11-ல் சந்திரனும் இருந்தாலும் , குரு, சந்திரனுக்கு 4-7-10-ல்  இருந்தால் பாஸ்கர யோகம்  அமையும்.
       ஜாதகர் /ஜாதகிக்கு தைரியசாலிகளாகவும், உயர்ந்து அந்தஸ்துள்ளவர்கள்.சகல சாஸ்திரங்களை அறிந்தவர்கள், மேடைப் பேச்சுள்ளவர்கள். மனகிழ்ச்சியுள்ளவர்கள். தனது தொழிலை சிறப்புடன் செய்வர்கள்.

ஜாத அலங்காரத்தில்

அரசனார் ஏழில் செவ்வாய் ஆறில்பன்
                                                          னொன்றில் காரி
இவரியும் மூன்று நான்கில் இராகுவும் இவர்எல்
                                                                          லோரும்
பரவியே நிற்பா ராகில் பாஸ்கர யோக மென்பர்
இரவிமுன் பனிபோல் க்ரூதம் இராததென
                                                               இயம்பு மாதே !
         லக்கினத்திற்கு 7 -ல் குரு,6 -ல் செவ்வாய்,  11-ல் சனி, 3-ல் சூரியன்,4-ல் ராகு இவ்வாறு அமைந்தால் பாஸ்கர யோகம்.
    பாஸ்கர யோகத்தில் பிறந்தவர்களுக்கு துண்பங்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் உடனே விலகி இன்பங்கள் தரும்.

                இரண்டு அமைப்பில் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் யோகத்தை அனுபவிப்பார்கள்.

திரிலோசன யோகம்

……………………………………………

        சூரியன், சந்திரன், செவ்வாய் ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் இருந்தால் திரிலோசன யோகம் அமையும்.
      ஜாதகர் /ஜாதகிக்கு சிறப்ப சிந்தனை, சிறந்த பேச்சாளர், சகோதரர்களுக்கு உதவிகள் செய்வர்கள். பிறரை எளிதில் எடைபோடுவர்கள், அதிக செல்வம், நீண்ட ஆயுள்
 
சூரியன், மேஷம், சிம்மம், தனுசிலிருந்தால் இவை மாதுர்ய யோகமாகும்.
     
      சந்திரன் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் விதுர யோகமாகும்.

          செவ்வாய் மிதுனம், துலாம், கும்பத்திலிருந்தால் பரமபத யோகம்.
கிரகங்கள் அமையும் நிலைக்கு ஏற்ப யோகம் தருவர்கள்.

                         

இரவி யோகம்


……………………………
   ( இரண்டு விதமாக உள்ளாது)  !

பத்தினில் செவ்வாய் நிற்கப் பானுவேயுச்சனாகி
வைத்திடு மிரண்டில் நிற்க மதிகுரு வொண்பானெய்தில்
சித்தியா மிரவி யோகஞ் சீர்பதி நாலாண்டின்மே
லொத்திடும் வருமெட்டும் யோகத்தையுடையனாமே

(1)              லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய் இருக்க, சூரியன் உச்சம் பெற்று 2-ல் இருக்க, சந்தின், குரு 9-ல் இருந்தால் இரவி யோகம். 14 -வயது முதல் 8-வருடம் சிறப்பன யோகத்தை தரும்.

(2)   சூரியன் லக்கினத்திற்கு 10-ல் இருக்க, 10-ஆம் அதிபதி 3-ல் சனியுடன் இணைந்திருந்தால் ரவி யோகம்.
    ஜாதகர் /ஜாதகிக்கு 15-வயதிலேயே கீர்த்தி, அகன்ற மார்பும், தாமரை, போன்ற கண்களும், உயர்ந்த செல்வாக்கும், எளிமையான வாழ்வும், பல்சுவை உணவும் உட்கொள்பவராக இருப்பர்கள்.

மாருத யோகம்

…………………………………

(இரண்டு விதமாக உள்ளாது)   !

     (1)   சூரியனுக்கு திரிகோணங்களில் குரு, சுக்கிரன், சந்திரன் இருந்தாலும் அல்லது இவர்களை சூரியன் பார்த்தாலும்.
   (2)   வாவு தத்துவ ராசிகளில் மிதுனம்,துலாம், கும்பம் ராசியில்  குருவோ, சுக்கிரனோ இருக்க 5-9-ல் உச்ச பலம் பெற்று சூரியன் அல்லது சந்திரன் இருக்குமானால் மருத யோகம் அமையும்.
     இது அபூர்வமான யோகமாகும்.ஜாதகர் /ஜாதகிக்கு  சிறந்த மேடைப்பேச்சாற்றல், உடல் பலம், வியாபாரம்.கௌரவம், பல சதனைகள் புரிவர்கள்.சுக வாழ்வு அமையும். அனைவரும் பாராட்டுவர்கள்.


அமாவாசை     யோகம் 


             அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.
        ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல்  இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல்  இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல்
இருந்தால் யோகம் ஏற்படும்.
              சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.
வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும்.

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆறப்பா அமடு பயமில்லை யில்லை
அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே
          சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு,  பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.
இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.
              மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல்  இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.

 கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க
துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்
அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி
விதியுடனிருப் பனின்னோன்
                                                மேன்மையாமறிவுள்ளேனே
       சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.
     சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்
ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

      திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில்  10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்.

அனுபவத்தில் மிகச்சரியாக உள்ளது நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் .
.

Saturday 19 September 2015

விருச்சிகம் தனுசு லக்கின திருமணவாழ்வில்

விருச்சிகம் திருமணவாழ்வு 

     
         விருச்சிக ராசி லக்கினமாக அமைந்தவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். அவசரப்படாதவர்கள். கிணற்று நீரை வெள்ளமா அடித்து செல்லும் என்ற அழுத்தமான உணர்வுள்ளவர்கள். தன்னை இழக்காமழும் இழந்தால் அதில் என்ன லாபம் என்ற குறிக்கோள் உள்ளவர்கள்.இவர்களின் கணவன்/மனைவி கட்டுப்படுத்துதில் வெகு சாமார்த்தியசாலிகள் தன்னுடைய ஆரோக்கியம்.தொழில்.பணம்.புகழ் தவறுகள் போன்றவற்றில் இருக்கும் பலவீனங்களை வாழ்க்கை துணைவரிடம் வெளிப்பாடுத்தாமல் தங்களின் பலத்தை மட்டுமே காட்டுவதில் சாமர்த்தியசாலிகள்.இவர்கள் செக்ஸ் தான் வாழ்க்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்த்துதான் வாழ்க்கை என்பதிலேயே ஆர்வம் அதிகம் உடையவர்கள். இவர்களின் அன்பு நிரந்தரமானது. ஸ்திர லக்கினம் ராசியில் பிறந்த பெண்களிடம் மிகச் சரியாக இருக்கும்.குடும்ப விளக்காகத் திகழ்பவர்கள். இவர்கள்தான் கணவன்/மனைவி ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதில் சாமர்த்தியசாலிகள். என்றாலும் இவர்கள் வாழ்கையில் பிரிவு என ஒன்று நிககழுமேயானால் அது நிரந்தரமாவைதான். எதிதரப்பு மன்னிப்புக்கள் அல்லது புனர்வாழ்வு பெறமுடியாது.வசதியான இடத்தவராகவே அமையும்.மிகையாகச் செலவுகள் செய்வார்கள்.தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாகவே அமையும்.
            ஜாதகர் / ஜாதகிக்கு சந்திரன் 4-ல் இருக்க சூரியன் அல்லது சனி இணைந்திருந்தாலும், சூரியனை செவ்வாய் பார்த்தாலும்   திருமணமான பிறகே யோகபலன் கிட்டும்.
    ஜாதகர் /ஜாதகிக்கு ஜாதகத்தில் 1-2-9-11-ல் சுக்கிரன் (நீசபங்கம் பெற்றிருந்தால்) கணவன் /மனைவிக்கு பல அசையா சொத்துககிடைக்கும்.
      செவ்வாய் 1-4-7-8-ல் குரு இருந்தால் ஜாதகர் /ஜாதகி காதலனுபவங்கள் உள்ளவர்கள். சில வேளை திருமணமும் ஆகலாம்.
விருச்சிக லக்கினத்திற்கு
             ஏழில் சூரியன் இருந்தால் திருமணம் தாமதமாகும்.நல்ல வாழ்க்கைத் துணைவர்கள் அமைமைவார்கள். வரும் மனைவி/கணவன் சற்று காரசாரமாகயிருப்பார். தகுதி இருக்கின்றது.
     சூரியன் சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பணி /பதவி /தொழில் தொடர்புடையவரே வாழ்கைத்துணையாவர்கள் .
       ஏழில் சந்தின் இருந்தால்  வாழ்க்கை சோபிப்பதில்லை.சிருக்கு மறுவாழ்வில் இன்பம் கணமுடியும். ஆண்களின் நடத்தையை கொடுத்து விடுகின்றது.பெண்கள் வலிய வந்து சேருவார்கள்.
  தேய்பிறைச்சந்திரன் இருக்க, குரு பார்க்காமல், பாவிகள் பார்த்தால் ஜாதகரின் ஆயுள் குறையும்.மனைவி தீய சிந்தனை செயல்லுடையவர்கள்.
     இரண்டில் அல்லது ஐந்தில் சந்திரன் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் அமையும்.

     ஏழில் செவ்வாய் இருந்தால் என்ன செய்வது  உன்னைத்தான் நான்அடிக்க வேண்டும்.திருமணம் தாமதமாகும்.இரு திருமணம் அமையும் வாய்புள்ளது.ஆத்திரக்காராகவும் சாமர்த்தியமாக நடந்துகொள்ள தெரியாதவராக இப்பார்கள். பரவாயில்லை அடிக்கிற கைதானே அணைக்கும். வா வாழ்ந்து பார்ப்போம்.இது ஒரு ஆண்மகனின் நிலை.
   பெண்களுக்கு இருந்தால் நான் எப்படிதான் உண்னைக் கடித்து குதறினாலும். உக்கு பாதுகாப்பு நான் தான் என்று நினைக்கிற அஇல்லே  ! என்ன செய்வது குடும்ப வாழ்க்கை என்றாகி விட்டது.நம் தலையெழுது இப்படி…! என்ற நிலைதான் பிறிவுனூடே ஊடல் உண்டு இதுதாங்க இல்லறம்.

             ஏழில் புதன் இருந்தால் சிறப்பல்ல.சுவாரஸ்யமற்ற
இல்லறமாகும்.துஷ்டரும் கெட்ட நடத்தையுள்ளவார். சிலர் மறுமணம் செய்து கொள்வார்.காதலில் விருப்பம் உடையர்.
       7-8-10-11-12-ல் புதன் இருந்தாலும்  ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் நடக்கும்.

வேண்டிய தாரம் புந்தி மேவின்முற் றார நாசம்
         ஏழில் புதன் இருந்தால் முதல் மனைவிக்கு அற்ப ஆயுள்.

       ஏழி குரு இருப்பதும் சிரப்பல்ல குழந்தை பாக்கியம் அற்பம்.கணவன் /மனைவியின் அன்பு குறையும்.பெண்களுக்கு பெருமைமிகு வாழ்க்கையென உலகம் போற்றும். இவர்களின் உள்ளம் தான் வாழ்க்கையின் நிலையை அறியும்.
    குரு, புதன், சுக்கிரன் இனைந்தாலும், பரிவர்த்தனை பெறிருந்தால் உறவில் திருமணம் நடக்கும்.

     ஏழில் சுக்கிரன் இருந்தால் ஆண்/பெண் இருவருக்கும் இளமையியல் திருமணத்தை நடத்தி வைக்கும். அல்லது கால தாமதத்தை ஏற்படுத்தும்.அந்நி பெண்களிடம் ஆசை உள்ளவர். காலம் கடக்க கடக்க அடிக் கரும்பில் இருக்கும் சுவை நுனிக் கரும்பில் இருக்காது என்ற நிலைதான் இவர்களின்  இல்லற. வாழ்கையில் தெரியும்.
      பெண்களுக்கு!  ஏழில் சுக்கிரன் இருந்தால்  கணவனின் நடத்தை எந்த வகையிலாவது கெடும். இர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்துள்ள இன்னொருத்தி வருவாள்.
       சுக்கிரன் 6-8-12-ல் சுக்கிரன் இருக்க தனித்திருக்கவே, மிகவும் விரும்புவர்கள்.
       எட்டில் சுக்கிரன், செவ்வாய் இருந்தால் திருமணவாழ்வில்  பல குழப்பங்கலும் சட்டை சச்சரவு ஏற்படும். பிரிவினை ஏற்படும்.

பூண்டதேள் உதிப்ப ஏழில் புகர்நிற்கின்
      விபச்சா ரத்தை வேண்டிய தாரம்
            விருச்சிக லக்கினத்திற்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் நடத்தை தவறும் மனைவி அமைவாள்.

குருவின் பார்வையிருப்பின் வாழ்வில் நலம் தரும்.
   
        ஏழில் சனி இருந்தால்  மனைவியின் மௌன கோபத்திற்கு ஆளாகவும் என்றாழும் வாழ்வு சிப்றபுடன் அமையும்.இரண்டு திருமணம் நடக்கும். தைரியமில்லாதவர்கள்.
    சனியும், செவ்வாயும் இணைந்திருந்தாலும், செவ்வாய் சனியைப் பார்த்தாலும் மாமனார், மாமன் குடும்பத்துடன் அன்பு, பசம், பிரியத்துடன் இருப்பார்கள்.
    சனிக்கு 1-3-7-10-ல் புதன் இருந்தாலும், சனி 2-6-8-12-சனி இருந்தால் திருமணமாவதில் தடையும், தாமதம், பிரச்சனைகள் ஏற்படும். நிர்பந்தம், கட்டாயத்தின் பெயரில் திருமணமன் நடக்கும்.

   ஏழில் ராகு இருந்தால் துணைர்கள் நோயாளியாக இருப்ப்பார்கள்.அவமானமும்.பொருள் நஷ்டம் ஏற்படும்.வாழ்வில் மகிழ்ச்சி குறைவுள்ளவர்கள்.

      ஏழில் கேது இருந்தால் கெடுதல் எற்படும். மனைவி மக்களை பிரிந்து வாழும் சுழ்நிலை எற்படும்.மீறிய காமத்தால் தீய சகவாசம் எற்படும். மனைவி இடு மருந்து அல்லது விஷத்தை கொடுப்பாள்.செய்வினை தோஷம் பதிக்கும்.

திருமணம் நடக்கும் வயது  :- 20-25-30--35-வயதில் நடக்கும்.

ப. சூரியஜெயவேல்
       9600607603

தனுசு லக்கினத்திற்கு திருமணவாழ்வு   !!


             தனுசு ராசி லக்கினத்தில் பிறந்தவர்கள் இல்லற சிந்தனையில் "டயலமா " எனும் இரட்டை சிந்தனை
உடையவர்களாக இருப்பர்கள்.
   இவர்களின் கணவன்/மனைவி புரிந்துகொள்வது எஎளிதாயினும்.இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும்" அவள் " சரியாகப் புரிந்து  கொள்ளவில்லை என்று கறுதும் அப்பாவிகள். இவர்களின் உணர்ச்சிக்கும் கோபத்திற்க்கும் அர்த்தமே இல்லை என்று இவர்களின் மனைவி/கணவன் கூறும் பரிதாபநிலைக்குரியவர்கள்.
   இவர்களின் குடும்பம் மற்றும் செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை  இவர்களின் பலர் வயது வித்தியாசம் பாராமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உடையவர்கள் அல்லது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை அற்றவர்கள். மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மகா சமர்த்தர்கள்.குறிப்பிட்ட வயதுக்குப் பிகு இவர்களின் பாலுணர்வு சக்தி குறைய வாய்ப்புண்டு.
    இல்லறத்தை ஒர் லட்சிய நோக்கில்லாமல் நடத்துபவர்கள். தன் வாழ்க்கைத் துணையாளரின் உணர்ச்சிகளை ஒரு நோடிப்பொழுதில் தகர்த்து எறிந்துவிட்டு வெளியேறுபவர்கள்.
     கருத்துக்களை இன்று இந்த இரவு. இந்த நோரத்தில் தன் துணைவர்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டுமென்று அலுவலகத்தில் சிந்திப்பார்கள்.ஆனால் அன்று நல்ல கறுத்துக்களை,இல்லற முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன்/மனைவியிடம் பேசமுடியாத சூல்நிலையை சந்திப்பார் கொடுப்பினை இல்லாதவர்கள்.
  மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் என்னாலும் இல்லறத்தில் மரியாதைக்குரியவர்கள்தான் ! ஆனால் அது எத்தனை பேர் வாழ்க்கையில் சாத்தியமாகின்றது.
    இவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள்.ஆனால் நிரபராதிகள் !இந்த உண்மையை இவரின் வாழ்க்கைத் துணையாளர் தம் பிறவியில் உணரப் போவதில்லை. இவர்களால் உணர்த்தவும் முடியாது.
பொதுவில் இவர்கள் இல்லற வாழ்கையில் ஒளிதரும் விளக்கின் அடிபீடம் போன்றவர்கள்.
        முதலில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து தெறிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.இதற்க்கு மனே பலம் அவசியம்.
     சுக்கிரன் லக்கினம், 4-ல் இருந்தாலும்,
     புதன் 6-8-9-10-11-ல் இருந்தாலும்,
    சந்திரன், செவ்வாய் சனி இணைந்திதாலும், பார்த்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் அமையும்.
  சூரியன் 4-ல் இருந்தாலும், புதன், குரு இணைந்திருந்தாலும் புதனை செவ்வாய் பார்த்தாலும், திருமணத்திற்கு பின் யோகம் தரும்.
        தனுசு ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு "தண்டாமரையின் ஊடே தண்டே நூகரா வண்டூகம்"

     ஏழில் சூரியன் இருந்தால் தாமரையின் கீழ்  தவளை இருந்தாலும் அதன் அருமையை  உணராது. போல்  இவர்கள் கணவன் /மனைவியின் பெருமையை அறியாமல் போய்விடுவார்கள். பெண்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும். திருமணம் தாமதம் ஆகும்.

   ஏழில் சந்திரன் இருந்தால் மலரும் சுடும் பன்னீரும் நாக்கில் கொப்பளத்தை ஏற்படுத்தும். வசந்தமும் கோடை வெயிலாக மாறும்  என்ற நிலையை வாழ்கையில்  சந்திப்பார்கள். தீய நடத்தையுள்ளவர்கள் தொடர்பு கிட்டும். கணவன் /மனைவிக்கு அடிக்கடி சண்டை நடக்கும்.மனையை  இழந்து மறுமணம் செய்து கொள்வர்கள். அழகியவர்கள்  அமையும்.

     ஏழில் செவ்வாய் இருந்தால் வரும் வாழ்கைத் துணையாளரின் உள்ளம் பால் இருக்கும். பாவம் உதடுகள் தான் தேளின் விஷத்தை கக்கும். இந்த அமைப்புடையவர்கள். பாவபட்டவர்ககள் அல்லலது பரிதாபத்துக்குரியவர்கள்.

      ஏழில் புதன் இருந்தால் இல்லற வாழ்க்கையின் கதவுகளை மூடிவிடும். வாழ்கையில் இவர்கள் இல்லற சுகத்தை இலக்கியங்களில் படித்து மகிழலாம்.அன்னிய பெண்களிடம் ஆசையுள்ளவர்கள்.தந்திசாலியாகவும் இருப்பார்.

   ஏழில் குரு இருந்தால் இவர்களுக்கு நல்லதுதான் இதுவும் ஒர் இனிய இல்லறம் தான்.ஆனால் கொண்டதே கோலம்.கண்டதே காட்சி என்று வாழ்க்கைத் துணையால்  உலகம் புரியாமல் அடம் பிடிப்பார்கள். பிரிவு ஒன்று வந்தால் நிரந்தமயிவிடும்.பெண்களுக்கு ஏழில் குரு இருந்தால் கணவனை உதாசீனப் படுத்தி பேசும் குணம் இருக்கும்.தன்னைப் பற்றியே உயர்வான கருத்துக்கள் மேலோங்கிக்காணப்படும். இப்படிப்பட்டவர்களின்.இல்லறம்.
இனிய இல்லறமா  ? தீர்மானிப்பது யார்  ?

    ஏழில்  சுக்கிரன் இருந்தால்  துணைவர்களிடம் பகைமை பாராட்டுவார்.மனைவிக்கு கண்டம் ஏற்படும். திருமணம் தாமதமாகும்.இரண்டு திருமணம் அமையும்.

    ஏழில் சனி இருந்தால் வாழ்க்கையை நல்ல உறுதியோடு கொண்டு செல்வார்கள். பெண்களுக்கு அவமானம் ஏற்ப்படும். அடிக்கடி சண்டை போடுவர்கள். பிர பலர் தொடர்பு இருக்கும். மணவாழ்வில் சுகம் இருக்காது. மறுமணம் ஏற்படாலம்.அடிக்கடி நோய்வாய்ப்படுவர்கள். அலைந்து திரிவர்கள்.

   ஏழில் ராகு இருந்தால் வெளியுர் செல்லும் நிலை ஏற்ப்படும். மனைவி/கணவன் பிரிவு ஏற்ப்படும். பெண்களால் அவமானம் ஏற்ப்படும். யாரையும் ஏளிதில் நம்பமாட்டார். மணவாழ்வில் மகிழ்ச்சி குறைவுன்டாகும்.

       கேது ஏழில் இருந்தால் தீய பெண்களின் தொடர்பு ஏற்ப்படும். துணைருக்கு மன பயம் ஏற்ப்படும். அதித காமியாக இருபப்பார். குப்பங்கழுடன் வாழ்கை அமையும் .மனைவி இடுமருந்திடுவாள். அன்னியர் வைக்கும் மருந்தாள்
பதிக்கும்.

குறிப்பு  : ஏழில் கேது இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விஷத்தால் பதிப்பு ஏற்ப்படும். இவருக்கு எந்த கிரகங்கள் தொடர்புள்ளாது என்பதை கவணித்து கூரவேண்டும்.

ப.சூரியஜெயவேல்
    9600607603

Wednesday 16 September 2015

லக்கினங்களுக்கு பாதகம் செய்யும் திசைகள்


மேச லக்கினம் :-


மேச லக்கினத்தில் மேலாய்ப் பிறந்தவனை
மோட பங்கஞ் செய்திடுவன் மேதினியில் -கூறும்
சனி பத்து பதினென்றுக்குள் பாவி கொடுங்  
                                                     காரியனும் - சீமானை
செத்தவன் கை வெத்திலைபோ லாக்கிடுவன்
பெண்டு பிள்ளை தன்னுடனே புவியில் வாழ
                                                                    ஒட்டான் காண்
கண்டவர்கள் நேசங் கனங்குரைப்பன் - செல்வம்
தந்தானே யாமாகில் தரையிலிருக்க ஒட்டான்
சுந்தரனைக் கொல்லத் துணிந்திடுவன் - பொல்லா
சனி திசை யந்தியத்தில் ஜாதகனுக்கோரரிட்டம்
பண்ணிடுவன் நிச்சயமாய் பாருலகில் சுமக்கும்
       மேசலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு  பத்து, பதினென்றாம் அதிபதி சனி திசா புத்தி நடந்தால் வாழ்வை பல பதிப்பை தருவர்.இறந்தவர் கையில் வெத்திலை போல் பயனற்றதாக ஆகிவிடும். மனைவி, குழந்தைகளுடன் வாழமுடியாத சூழலைதரும், மறியாதை குறைவு ஏற்படும். செல்வம் கிடைத்தால் மரணத்தை தருவர். குழந்தைக்கு மரணம் ஏற்படலாம். சனி திசை கடைசியில் மரணத்தை தருவர்.பல துண்பங்களை அனுபவிப்பர்கள்.

ரிசபலக்கினம் 


எருதுதன் லக்கினத்தி லியல்பாக வந்த சேயை
கருதுங் குரு திசையில் கனங்குரைப்பன் -செல்லும்
இராஜ குரு திசையில் நலமான பண்டுகளும்
தூசி போலாக்கிடுவன் சொன்னேனே -இன்னும்
இல்லுமே காடிகளு மியல்பான பூஷணங்கள்
வெல்லும் வழக்காவே விரைந்தோடும் -போக
இவன் கொடுத்த பொன்னுக்கு யீடு முரி பட்டவனம்
அவனுமிவனோ டெதிர்த்திடுவன் -அன்றும்
இராஜ சபையேறி நீதிவார்த்தை சொல்லிடினும்
உச்சாக மெதிரிக்கி யுண்டாகும் -உண்மையுடன்
சாரு ருசி சோறுருசி தானரிய மாட்டான் காண்
வெருவாயை மென்று வெளி வருவன் -விருத்தாவில்
கூலிவேலை செய்து கூக்குரலை போட்டாலும்
கூலிதர ஒட்டான் காண் குரு ராஜன் -( பின்னும்
ஒடுவன் களத்திரத்தை உபாயமாய் போகித்து
பொருள் தாரே னென்று சொல்லி புக்கிடுவன்)-மிக்க
பார விலங்குடனே பந்தனத்தில் போட்டு வைப்பன்
கோலங்கல் செயும் குரு ராஜன் -சீலமுடன்
மாடாடு கன்றுகளு மனையிலிருந்தாலும்
பாடு மிக வந்து விடும் பலுகாது -யேராரும் சீவனத்தை தந்து சிவிகை பரியேத்தி வைப்பன்
போவதற்கு முன்னே பொசிக்கிடுவன் பரிதிசையை
நிச்சயமாய் சொல்லி விட்டென்ரிஷப லெக்கினத்
                                                                                     தோர்க்கு
பச்சதாப முள்ள படுகுருவும் - உச்சிதமாய்
இந்த விதி முறையை யெடுத்துரைத் தேனெல்
                                                                               லோர்க்கும்
சுந்திரனை நிலைறிந்து சொன்னதுடன் இன்னமுங்
                                                                                               கேள்
                   ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு 8-11 ஆம் அதிபதி குரு தசையில் நல்ல பலன்களை துசிபோலக்கிடுவன் வீடு, பொன், பொருட்கள் செல்வங்கள் நீதிமன்ற வழக்கல் இழப்பும் ஏற்படும். இவர்கள் கொடுத்த பணம், பொன் பொருளுக்கு  வாழக்கு தொடுப்பர்கள் நீதி வார்த்தை பேசினலும் எதிரி உண்டாகும்.அவர்களும் எதிர்ப்பர்கள்.நல்ல உணவு கிடைக்காது.வெருவாயைய் சுவைப்பபர்கள் பல வேலைகள் செய்தாலும் கூலி கிடைக்காது. விலங்குகளால் துண்பம் ஏற்படும்.
சிறப்பன. கால்நடைகள், கன்றுகாலிகள் வீட்டில் இருந்தாலும் நோய்கள் வந்து இறந்து விடும். யாரவது வேலை கொடுத்தாலும், பதவி தந்தாலும், திசை முடிவதர்க்குள்ளே நசமக்கி விடுவான். உறுதியுடன் கூறுகிறோன்.ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை பல துண்பங்களைத் தரும்.லக்கினாதிபதியின்,குருவின் நிலையை ஆராய்ந்து கூறவும். (மனைவி நிலை பதிப்பு ஏழாம் அதிபதியின் நிலை 8-ல் சனியின் தொடர்பு இருந்தால், ஆராய்ந்து கூறவும்)


மிதுன லக்கினம் :-

             
மிதுன மென்ற லக்கினத்தில் முன்னுதித்த
                                                         பாலனுக்கு சுக முடனே
சதி செய்ய வந்திடுவன் சற் குருவும்
மேய்யாகவே யிவனு மேவு திரிகோண முற்றால்
பையவே யிவனுக்கு பலன் கொடுப்பன்
                                                                             வையகத்தில்
மற்ற விடந்தனிலே மன்ன னிருந்து விடில்
கட்டத் துணிக்கிக் கரமேந்திக் காத்திருப்பன் தொட்ட
கும்ப முலை மனையாளை கோபங் கொண்ட
                                                                                         தினமும்
துன்பந் துன்ப மென்று துலைத்திடுவன்
                                                                                 தன்னுடைய
யெல்லை விட்டு போனாலு மிழிவு வந்து நெர்ந்து
                                                                                              விடும்
கொல்ல ஒருக்கால் நினைப்பன் குரு தானே
                                                                                 கூறுகிறேன்
      மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு துண்பம்  தருவதற்க்கு குரு தசையில் துண்பம் தருவர். திரி கோணங்கலில் 5-9-ல் குரு இருந்தால் சுப பலனை தருவர்.மற்ற இடங்களில் குரு இருந்தால் உடுத்துவதற்கு துணி இல்லமால் கஷ்டப்படுவர்கள். மனைவியால் பலதுண்பங்களை அனுபவித்து. புலம்புவான் பூர்வீகம் விட்டு வெளியுர் சென்றால் அவப் பெயர் ஏற்படும். மரணத்திற்க்கு ஒப்பன கஷ்டங்களும் ஜாதகர் /ஜாதகிக்கு ஏற்ப்படும்.

கீழ் காணும் ஜாதகம் :-
                      சிறப்பன அரசு உத்தியோகம் பார்த்து வந்தர். 21 வயதில் குரு தசை ஆராம்பமானது. திருமணம் முறையாக அனாது மூன்று மாதம் தன் குடும்ப வாழ்வு அமைந்து. பிரிவு ஏற்பட்டது இன்றுவரை பிரிந்திருக்கிறர்கள். பிறகு பல தொழில் தொடங்கினார். சில காலத்தில் பதிப்பு நஷ்டம் ஏற்பட்டு பல லட்சங்களுக்கு கடனாளியாகிவிட்டார்.பூர்வீக செத்துகள் வழக்கு சிக்கி சிறமங்கள், கஷ்டகளை அனுபவித்தர்.
குரு தசை இவரை படாய் படுத்தயது.



கடக லக்கினம் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் :-


கர்க் கடக லெக்கினத்தில் காளை இந்திரஜித்து
                                                                                       வந்தான்
சற் குருவுக் கெதிரி சுக்கிரனே   உக்கிரமாய்
அவன் திசை காலத்தி லந்த இந்திரஜித்தழிய
புவனம் புகழ் ராமன் புகழ்ந்திட்டான் மேதினியில்
அவன் திசைக் குள்ளாக அகமும் துலைந்து விடும்
அவனிவனை பரதேசி யாக்கிடுவன் நயமுடனே
யேந்த இடம் போனாலும் எருள அசுரகுரு பாவி
சுந்திரனைச் சந்தியினில் விட்டிடுவன் விந்தையுடன்
பந்தனத்தில் வைத்து பார விலங் கோடமைத்து
மைந்தனையு மன முறியச் செய்திடுவன் தொண்டு
வஸ்திரம் துவைக்க வைப்பன் வாழ்வுள்ள
                                                                                மன்னனுக்கு
நத்தி கூலி கேட்கையிலே நலிந்திடுவன்
                                                                                சொன்னேன்
தென்னாட்டை யாளும் தர்மதுரை யேமனுக்கு
திண்ணகமா யிவனுயிரை சேர்த்திடுவன் சீருடனே
கஞ்சி குடிக்கையிலே கவனங்கள் கோடியுண்டு
வெஞ்சினங் களில்லாமல் விழித்திருப்பன் என்றும்
சோறு கரியுண்கையிலே சொற் குற்றாம்
                                                                                வந்துவிடும்
சாரூத்தி தின்ன தட்டிடுவன்  பேதகமாய்
அய்யய்யோ யிவன் திசையி லவதிகள்
                                                                               மேத்தவுண்டு
அய்யய்யோ யிவன் திசையு மாகாது பைய
கற் கடக லக்கினத்தில் ஆகாது சுங்கன்திசை
சொக்கட்டானாடித் தோற்றானே தர்மனுமே சொல்
                                                                                          நயமாய்
அறைந்திட்டேனவன் லபியை
                                                         அவனியிலுள்ளோரறிய
திரந்திட்டேன் திசானாதன் செயுங் கூறை தீவிரமாய்

        கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருவுக்கு பகைவர் சுக்கிரன்.கடக சுக்கிரன் சுக்கிரன் பாவி. கடக லக்கினத்தில் பிறந்த இந்திரஜித் சுக்கிரன் திசையில் அழிந்தான்.உழகம் புகழும் ஸ்ரீராமனின் அருளல் அவனது ஆணவம் அழிந்தது.சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும்  ஜாதகர், ஜாதகி பரதேசியாக அலைவர்கள்,நடுத் தொருவில் நிற்க்க வேண்டியா சூழல் ஏற்படும். மனம் பேதலிக்கும்.வாழ் வங்கு வாழ்பவர்க்கு வேலைகள் செய்வார்கள், துணிகளை துவைப்பார்கள், செய்த வேலைக்குறிய கூலி கிடைக்காது.அரசு வகையில் தண்டனையும், உணவு உண்ணும் போது சண்டையும் சச்சரவும் ஏற்படும்.மகாபராதத்தில் சூது ஆடிய தர்மன் ஆஸ்தி,  அந்தஸ்தும், நாடு, நகரம், தம்பிகள், மனைவி அனைத்தையும் இழக்கச் செய்தார். சுக்கிரனுடைய திசையில் இந்த நிலைகலை தருவார். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் திசையில் பலனை அனுபவிப்பார்கள்.

   கீழ் உள்ள ஜாதகம் பெண்ணுடையாது.
சுக்கிர தசையில் முதல் திருமணம் 3/12 /2000,
25/4/2002 கணவர் இறப்பு,
மறுமணம் 24/1/2007, விவாகரத்து 2008. சுகபோக வாழ்வை பங்கமானது.நிம்மதியாற்ற வாழ்வு அமைந்து.


சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


சிங்க லெக்கினத்தில் சீராக வந்தவனை
பங்ப்படுத்திடுவன் பவுமனவன் சங்கையயற
அவன்திசை யேழுக்குள் அவதி மெத்த பட்டிடுவன்
அவனிவனை யாக்கிடுவன் அம்பலத்தில்
                                                                                    நலமுடனே
சுக பாக்கியாதி யென்று சொல்லிடுவர் நூல்
                                                                                      வல்லோர் சுகந்தர மாட்டான் காண் சொற்பனத்தில்
                                                                                தகமையற்று
யெண்ணாது மெண்ணியே யேங்கி மன முரிவன்
பொன்னாபரண மெலாம் போக்கிடுவன் மண்ணும்
நச்சை நிலங்களெல்லாம் நாசமாய்த்
                                                                         துலைத்திடுவன்   சஞ்சலங்கள் பட்டிடுவான் சமயத்தில் கொஞ்சல்ல
சிங்க லெக்கினத்திற் காகாது சேய் திசையும்
சங்கரனைத் துதிசெய்தால் சற்று நலம்  பொங்கும்

           சிம்ம லக்கினத்தில் பிறந்த ஜாதகர், ஜாதகிக்கு  செவ்வாய் ஏழு வருடங்களில் பல துண்பங்களைத் தருவார்.5-9-ஆம் அதிபதி என்று யோகம் தரமாட்டார். கணவில் துண்பத்தை தருவார்.பொன், பொருள், நிலங்கள் எல்லாம் துலைத்ததிடுவார்கள்.மன நிம்மதி இருக்காது.சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் தசையில் அதிக துண்பத்தை தருவார்.
                     ஆனால் ஸ்திர ராசிக்கு பாதகதிபத்திய தோஷம் அதிகம் பதிப்பதில்லை.
    லக்கினாதிபதியும் சூரியனும்  4-9-ஆம் அதிபதியும்  நட்பு கிரகங்கள். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோகதிபதியாக வருகிறார்.

    சிம்ம லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் செவ்வாய் தசை நடந்தவர்கள் தங்ளுடைய அனுபவங்களை பதிவிட வேண்டுகிறோன்


கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


கன்னியா லக்கனத்தில் காளையிவன்
                                                                             வந்துதித்தால்
பன்னுங் குரு ராஜன் படுபாவி - துண்ணூம்
பாவியவன் கோணத்தில் பக்குவமா யேரி விடில்
தாவி சுப பலனைத் தந்திடுவன் - வேகமுடன்
மற்ற விடந் தனிலே மன்னனிருந்து விடில்
கெட்ட பலன் தந்திடுவன் கேட்கணுமோ - நட்டமிலா
சுக சப்த மாதியென்று சொல்லிடுவர் சோதிடர்கள்
சுக மெத்த உண்டென்றும் சொல்லிடுவர்
                                                                                 பகையுடனே
சுகம் கிட்டாது எட்டாது சொற்பனத்தில் கூடயில்லை
அக மெல்லா மடவுக்குள் போய்விடுமே -
                                                                         வெறுமையுடன்
நாடு சென்னால் தோப்பும் நலமா யிருந்தாலும்
பாடு வாசி தான் வருமே பலலில்லை  வேறு
அட்டமன் வலுமை பெற்று ஆயுளைத் தந்து விடில்
மற்று மெவன் திசை யாலு மென்ன உற்ற
மன்னன் புத்தி யந்திரத்தில் மைந்தனையுமே
                                                                                         கொல்ல
தின்னகமா யிவனவனை சிதைத்திடுவன்
                                                                             வண்ணமுடன்
கன்னியா லக்கினத்திற் காகாது தேவகுரு
சொன்னேன் அவன் விதியை சொல்லிடுவீர்
                                                                       இன்னுமுங்கேள்

              கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு பாவி 5-9-ல் இருந்தால் சுப பலனைத்தந்திடுவா...ர்.
        மற்ற இடங்களில் இருந்தால் கெடுபலனையே தருவர்.4-7-ஆம் அதிபதி அவர். கணவில் கூட சுக வாழ்வு கிடைக்காது.சொத்து,தோப்பும் இருந்தாலும் நன்மையில்லை வெறுமையுடன் வாழ்வார்கள். எட்டாம் அதிபதி பலம் பெற்று நீண்ட ஆயுளைத் தந்தாலும்.மற்ற கிரகங்களின் திசையில் குரு புத்தி, அந்தரத்தில் மரணத்திற்கு சமன கஷ்டங்களும், கண்டங்களையும் தருவார்.கன்னி லக்கினத்திற்கு தேவகுரு பாதகதிபதி ஆவார்.சுபக் கிரங்கள் கேந்தித்திற்கு அதிபதியானால் கேந்திரதிபத்தியா தோஷத்தை தருவார்கள்.
        கீழ் கணும் ஜாதகம் பெண்ணுடையாது
25 வயதிற்கு பிறகு குரு தசை வாந்தது. கணவன் விபத்தில் இரந்துவிட்டார்.இரண்டு குழந்தையுடன் தனிமையில் வாழ்கிறர்கள்.

துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


துலை யென்ற லக்கினத்தில் தோன்று சுறு
                                                                                   பாலனுக்கு
மலை போலே சூரியனும் படுபாவி நலங்குரைக்கும்
அவன்திசை யாறுக்குள் ஐஸ்வரிய மீந்தாலும்
அவனையும் கொன்றிடுவன் அண்ணலவன்
                                                                                துன்பமொடு
அன்பதுக்கு மேலே அலரிதிசை வந்திடிலோ
துன்பமில்லை துணிந்திருப்பன் வையகத்தில்
சையோக வாலிபத்தில் சூரியதிசை வந்துவிடில்
குய்ய தந்திரம் செய்தாலும் கேழ்ப்பானோ கூறும்கோவிந்த ராஜனையும் குமரனையும்  தான்
                                                                           தொழவே மேவ
ஆவலுடன் பூசை செய்தால் வலுக் குறையும்

      துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்  பாவி.சூரியன் தசை ஆறுவருடமும் செல்வ வளம் தந்தால், ஆயுளை பங்கப்படுத்தி விடுவார். துண்பத்தை தருவார். ஐய்பதுக்கு பிறகு சூரியன் தசை நடமுறைக்கு வந்தால், துண்பம் இல்லை ஆயுள் பலமுடன் உலகில் வாழ்வர்கள். வாலிபத்தில் சூரியன் தசை வந்தால் முறையாக, கோவிந்தராஜனையும், முருகக்கடவுளையும் பூஜை செய்து வந்தால் துண்பம் குறையும்.

விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


விருச்சிக லக்கினத்தில் வீரசூரன் வந்துதித்தால்
பொருமையுள்ள சுக்கிரனும் படுபாவி தரைதனிலே
பாவியிவன் திசையில் பாக்கியத்தை தந்தானால்
பூவி லுள்ள யாவருமே போற்றிடுவர் நேசமுடன்
காடி பரி இல்லுகளும் கனத்த மெத்தை மாடிகளும்
சோடிப்பாய் தந்திடுவன் சுக்கிரனும் சேஷமன்று
இந்த நல்ல வாழ்வுகளு இயல்பாக தந்தானால்
தந்த சுக்கிரன் கொன்றிடுவன் தப்பாமல் அந்த
                                                                                              முடன்
மெத்த துண்பந் தந்து மேதினியில் வைத்தானால்
சுற்றத்தார் யாவருமே துஷணிப்பர் கஷ்டமொடு
மற்று மெவன் திசையில் மன்னன் சுக்கிர புத்தி    
                                                                         தன்னில் நேறும்
சட்டமாய் கொன்றிடுவன் சுங்கன் காண்

விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்   பாவி ( 7-12-ஆம் அதிபதி) சுக்கிரன் திசையில் பாக்கியங்கள் தந்தால் உலகில் உள்ள அனைவரும் புகழ்ந்திடுவர்கள்.மெத்தைவீடுகளும், மாளிகை, கிட்டும் .இயல்பாக தந்தால். மரணத்தையும் உறுதியாக தருவார். அதிக துண்பத்தை தந்தால் உறவினர்கள் மதிக்கமாட்டார்கள். கஷ்டங்களும் அனுபவிப்பார்கள். மற்ற கிரகங்களின் திசையில் சுக்கிர புத்தியில் மரணத்தை தருவர்.

       ஆயுள் ஸ்தானம், லக்கினம், லக்கினாதிபதி, சூரியன், சந்திரன் பலமுடன் இருந்தால் மரணத்தை தரமாட்டார்கள்.அதர்கு சமமான துண்பத்தை தருவர்
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை,புத்தி நடக்கும் காலங்களில் மேல் கண்ட பலன்

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


தனுசு வென்ற வில்லுதனில் தானுதித்த பாலனுக்கு
கனத்தை குரைத்திடுவன் கணக்கனவன் -
                                                                             வணக்கமுடன்  சிந்தை கூரியனும் திரிகோண மேவிடில்
நந்து திருமாது நலளிப்பன்  -  சுந்தரமாய்
மற்ற விடந்தனிலே மதிமகனு மேவிடிலோ
கட்டத் துணியற்று கனங் குறைப்பன்  - நட்டமுடன்
இவன் திசையிலாபம் யின்பமாய் தந்துவிடில்
இவனவனைக் கொல்ல யிரைவனவன்-புவிதனிலே
சுந்தினும் யோகத்தை சொன்னபடி செய்யாவிடில்
பந்தப்படுத்தி பல்லாண்டு நீண்டிருப்பன் -எந்தவிதம்
யின்ன மெவன் திசையில் யிவன் புத்தி வந்தாலும்
நண்ணு மந்தியத்தில் நிரியாணம் சாற்றிடுவாய்

      தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திரிகோணங்களில் இருந்தால் நல்ல மனைவி /கணவன் அமைவர்கள் சுகமுடன் வாழ்வு அமையும். சந்திரனின் மகன் புதன் மற்ற இடங்களில் இருந்தால் உடுத்துவதற்கு ஆடையின்றி தவிக்கும்  நிலையைத் தருவார், சிறப்பன பலனைத்தந்தால், மரணத்தை தருவார், யோகத்தை தரவில்லை என்றால் பக்குவ படுத்தி பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் கிட்டும்.புதன் திசையில், புதன் புத்திகளில்  நடக்கும்.

  ஜாதகர் புதன் தசையில் கல்வி சிறப்பன முறையில் அமையவில்லை.தந்தையின் செல்வங்கள் படிப்படியாக குறைந்து சிறமமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறர். 42 வயதில் திருமணம் நடந்தது.

மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


மகரந்தனில் பிறந்த மைந்தன் சிறுபாலனுக்கு
மிக மோசஞ் செய்திடுவன் மங்கலனும் -மகிமையுடன்
சேய்திசை வந்தவுடன் தேடிவைத்த பொருள் நிலமும்
ஆய்ந்த புகழ் கீர்த்தி அகற்றிடுமே கூறும்
சோதிட நூல் வல்லோர் சுருதிமுறை வழுவாமல்
கூறும் சுகலாபாதி பதி யென்பர் - - சீருடனே
யெப்படியுமித்திசையில் ஜாதகருகோ வருத்தம்
தக்த மனக் கலக்கஞ் செய்திடுவன் சுத்தமுடன்
இன்னு மவனோ இணைந்த சுபக் கோள்களையும்
பண்ணுங் கொடுமை செய்யப் பகர்வான் காண்
                                                                                              அங்காரகனும்
இந்த நல்ல லக்கினத்திற் காகது செய்திசையும்
தொந்தமுள்ள ராசிபலன் சொல்லக்கேள் மற் கலசம்

            மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மிக மிக பாதகம் செய்திடுவார்.செவ்வாய் திசை வந்தவுடன் புகழ், பொருள், நிலங்ள், வீடு, மனக்கலக்கம்,  அனைத்தும் நஷமகிவிடும்.
      செவ்வாய் 4-11 ஆம் அதிபதியாவர். எப்பபடியும் இவர் திசையில் ஜாதகர்,ஜாதகிக்கு துண்பத்தை தருவர். இவருடன்  சுபர்கள் இணைந்திருந்தாலும் அவர்களின் திசையிலும் துண்பத்தை தருவர்கள். இந்த லக்கினத்திற்கு செவ்வாய் திசை ஆகாது. நன்கு ஆராய்ந்து பாருங்கள்.

கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


கும்ப மென்ற லக்கினத்திற் குமரன் சிறு பாலனுக்கு
துன்பந்தரும் பீடை துலங்கிடுவன் அசுரகுரு
பளிங்கு திசை முழுதும் பணமும் புதை பொருளும்
துலங்கும் வயல் காடு துலைத்திடுவன் - இலங்கும்
சுக பாக்கியாதி யென்று சோதிட நூல் சொன்னாலும்
மிகப்பீடை பொருள் விரையம் மேவிடுமே - ஜெகத்தில்
இந்த திசை முழுதும் ஜாதகனுக் இன்னல் பிணி
விந்தையுடன் தந்திடுவன் மேன்மை பெறான் - சொந்த

          கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு துண்பத் தரும் அசுர குருவன சுக்கிரன் பணம், பொருள், செல்வம், பூமி காடு அனைத்தும் இழந்து விடுவார்கள். சுக நான்கம், பாக்கியாதி ஒன்பாதம் அதிபதியான சுக்கிரன் அதிக துண்பத்தை நோய் தருவார் .திசை முழுவது மேன்மை கிட்டாது.

சுக்கிரன் இருக்கும் நிலைக்கு ஏற்ப பலன் நடக்கும்.

             அனுபவத்தில் ஸ்திர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதகதிபதிகள் லக்கினாதிபதிக்கு நட்பு கிரகம் வரும்.   கேந்திரம்,கோணம் வீடுகளால் அமைவதால் தீமை குறைவக கிட்டும். அனைவரும் தங்கள் அனுபவங்களை பதியுங்கள்.

மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு


மீனமென்ற லக்கினத்தில் மைந்தன் சிறு பாலனுக்கு
ஆன புதன் வெள்ளி ஆகாதாம் - நாணயமாய்
சாமன் சப்த மாதிபதி சட்டாடப் பொருள் பிணியும்
தாமத மில்லாமல் சற்றளிப்பன்            நேம முடன்
இன்னமும் தேர்ப்பாகன் யின்ப சுகந் தந்திடுவன்
திண்மையுடன் மாரகத்தை செய்திடுவன் - கன்மமொடு
அட்டமத்து சுக்கிரனு மாகாது திசை முழுதும்
கஸ்ட மெத்தக் காட்டுக் கடுங்காவல்                    மெத்த
உண்டு பண்ணித் தனச் செலவும் ஒர் காசு மில்லாமல்
தொண்டனைப் போல் கேழ்க்கத் துலைத் திடுவன்      என்றும்
யெந்தயிடம் போனாலும் பாவி கொடுந் திசையதனால்
சந்தோஷம் வாராது தரித்திரமே                        கொடிய
புகர் திசையில் தூதுவனும் புகழ் மோஷ வைகுண்டம்
நகரடையச் செய்திடுவன் நன்மையதால்          தயங்கும்
இந்த விதிப்பாகம் யியல் தூது செப்பினன் காண்
சுந்திரக் கோள் நிலை யறிந்தும் சொல்லிடுவீர்          நானும்
சோதிட நூல் தப்பாது சுருதி மொழி யாராய்ந்து
அனு போகத் தாலேயும் அறை அறை நாராயணன் யானும் பங்கமில்லா துரைத்தேன் பல நூலைக் கற்றுணர்ந்தோர்
இங்கிதனை யேற்றுக் கொண்டே யாதரிப்பீர்

           மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் அதிபதி புதன், எட்டாம் அதிபதி சுக்கிரன் ஆகாதவார்கள்.இவர்களின் திசை புத்தியில், புதன் திசை தனதான்யம் பொன், பொருள் அழிவு ஏற்படும்.பயிர்தொழிலில் நஷ்டம், நோய்கள்  ஏற்படும்.  மனைவிக்கு /கணவணுக்கு துண்பம் ஏற்படும் சுப பலனை தந்தால் மாரகத்தையும் தருவார்.
சுக்கிரன் திசையில் கஷ்டங்களும், சிறை தண்டனையும், கையில் காசு, பணம் இல்லாதவர்கள், அனைத்தையும் இழந்து விடுவார்கள்.எந்த இடங்களுக்கு போனாலும் நிம்மதியிராது.

எட்டாதி எவ்விடந்தா னிருந்திடத் தீதேகாட்டும்
எட்டாதி போலவேயாரும் இடுக்கங்கள் செய்யமாட்டார்
குட்டாக அறியமன்னா கூறுவேன் விபரமாக
கட்டாகக் கருத்தைநாட்டி கணிதங்கள் தெரிவாய்தானே

மேச லக்கினம் :-

மேச லக்கினத்தில் மேலாய்ப் பிறந்தவனை
மோட பங்கஞ் செய்திடுவன் மேதினியில் -கூறும்
சனி பத்து பதினென்றுக்குள் பாவி கொடுங்  
                                                     காரியனும் - சீமானை
செத்தவன் கை வெத்திலைபோ லாக்கிடுவன்
பெண்டு பிள்ளை தன்னுடனே புவியில் வாழ
                                                                    ஒட்டான் காண்
கண்டவர்கள் நேசங் கனங்குரைப்பன் - செல்வம்
தந்தானே யாமாகில் தரையிலிருக்க ஒட்டான்
சுந்தரனைக் கொல்லத் துணிந்திடுவன் - பொல்லா
சனி திசை யந்தியத்தில் ஜாதகனுக்கோரரிட்டம்
பண்ணிடுவன் நிச்சயமாய் பாருலகில் சுமக்கும்
       மேசலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு  பத்து, பதினென்றாம் அதிபதி சனி திசா புத்தி நடந்தால் வாழ்வை பல பதிப்பை தருவர்.இறந்தவர் கையில் வெத்திலை போல் பயனற்றதாக ஆகிவிடும். மனைவி, குழந்தைகளுடன் வாழமுடியாத சூழலைதரும், மறியாதை குறைவு ஏற்படும். செல்வம் கிடைத்தால் மரணத்தை தருவர். குழந்தைக்கு மரணம் ஏற்படலாம். சனி திசை கடைசியில் மரணத்தை தருவர்.பல துண்பங்களை அனுபவிப்பர்கள்.

ரிசபலக்கினம்

எருதுதன் லக்கினத்தி லியல்பாக வந்த சேயை
கருதுங் குரு திசையில் கனங்குரைப்பன் -செல்லும்
இராஜ குரு திசையில் நலமான பண்டுகளும்
தூசி போலாக்கிடுவன் சொன்னேனே -இன்னும்
இல்லுமே காடிகளு மியல்பான பூஷணங்கள்
வெல்லும் வழக்காவே விரைந்தோடும் -போக
இவன் கொடுத்த பொன்னுக்கு யீடு முரி பட்டவனம்
அவனுமிவனோ டெதிர்த்திடுவன் -அன்றும்
இராஜ சபையேறி நீதிவார்த்தை சொல்லிடினும்
உச்சாக மெதிரிக்கி யுண்டாகும் -உண்மையுடன்
சாரு ருசி சோறுருசி தானரிய மாட்டான் காண்
வெருவாயை மென்று வெளி வருவன் -விருத்தாவில்
கூலிவேலை செய்து கூக்குரலை போட்டாலும்
கூலிதர ஒட்டான் காண் குரு ராஜன் -( பின்னும்
ஒடுவன் களத்திரத்தை உபாயமாய் போகித்து
பொருள் தாரே னென்று சொல்லி புக்கிடுவன்)-மிக்க
பார விலங்குடனே பந்தனத்தில் போட்டு வைப்பன்
கோலங்கல் செயும் குரு ராஜன் -சீலமுடன்
மாடாடு கன்றுகளு மனையிலிருந்தாலும்
பாடு மிக வந்து விடும் பலுகாது -யேராரும் சீவனத்தை தந்து சிவிகை பரியேத்தி வைப்பன்
போவதற்கு முன்னே பொசிக்கிடுவன் பரிதிசையை
நிச்சயமாய் சொல்லி விட்டென்ரிஷப லெக்கினத்
                                                                                     தோர்க்கு
பச்சதாப முள்ள படுகுருவும் - உச்சிதமாய்
இந்த விதி முறையை யெடுத்துரைத் தேனெல்
                                                                               லோர்க்கும்
சுந்திரனை நிலைறிந்து சொன்னதுடன் இன்னமுங்
                                                                                               கேள்
                   ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு 8-11 ஆம் அதிபதி குரு தசையில் நல்ல பலன்களை துசிபோலக்கிடுவன் வீடு, பொன், பொருட்கள் செல்வங்கள் நீதிமன்ற வழக்கல் இழப்பும் ஏற்படும். இவர்கள் கொடுத்த பணம், பொன் பொருளுக்கு  வாழக்கு தொடுப்பர்கள் நீதி வார்த்தை பேசினலும் எதிரி உண்டாகும்.அவர்களும் எதிர்ப்பர்கள்.நல்ல உணவு கிடைக்காது.வெருவாயைய் சுவைப்பபர்கள் பல வேலைகள் செய்தாலும் கூலி கிடைக்காது. விலங்குகளால் துண்பம் ஏற்படும்.
சிறப்பன. கால்நடைகள், கன்றுகாலிகள் வீட்டில் இருந்தாலும் நோய்கள் வந்து இறந்து விடும். யாரவது வேலை கொடுத்தாலும், பதவி தந்தாலும், திசை முடிவதர்க்குள்ளே நசமக்கி விடுவான். உறுதியுடன் கூறுகிறோன்.ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை பல துண்பங்களைத் தரும்.லக்கினாதிபதியின்,குருவின் நிலையை ஆராய்ந்து கூறவும். (மனைவி நிலை பதிப்பு ஏழாம் அதிபதியின் நிலை 8-ல் சனியின் தொடர்பு இருந்தால், ஆராய்ந்து கூறவும்)


மிதுன லக்கினம் :-
             
மிதுன மென்ற லக்கினத்தில் முன்னுதித்த
                                                         பாலனுக்கு சுக முடனே
சதி செய்ய வந்திடுவன் சற் குருவும்
மேய்யாகவே யிவனு மேவு திரிகோண முற்றால்
பையவே யிவனுக்கு பலன் கொடுப்பன்
                                                                             வையகத்தில்
மற்ற விடந்தனிலே மன்ன னிருந்து விடில்
கட்டத் துணிக்கிக் கரமேந்திக் காத்திருப்பன் தொட்ட
கும்ப முலை மனையாளை கோபங் கொண்ட
                                                                                         தினமும்
துன்பந் துன்ப மென்று துலைத்திடுவன்
                                                                                 தன்னுடைய
யெல்லை விட்டு போனாலு மிழிவு வந்து நெர்ந்து
                                                                                              விடும்
கொல்ல ஒருக்கால் நினைப்பன் குரு தானே
                                                                                 கூறுகிறேன்
      மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு துண்பம்  தருவதற்க்கு குரு தசையில் துண்பம் தருவர். திரி கோணங்கலில் 5-9-ல் குரு இருந்தால் சுப பலனை தருவர்.மற்ற இடங்களில் குரு இருந்தால் உடுத்துவதற்கு துணி இல்லமால் கஷ்டப்படுவர்கள். மனைவியால் பலதுண்பங்களை அனுபவித்து. புலம்புவான் பூர்வீகம் விட்டு வெளியுர் சென்றால் அவப் பெயர் ஏற்படும். மரணத்திற்க்கு ஒப்பன கஷ்டங்களும் ஜாதகர் /ஜாதகிக்கு ஏற்ப்படும்.

கீழ் காணும் ஜாதகம் :-
                      சிறப்பன அரசு உத்தியோகம் பார்த்து வந்தர். 21 வயதில் குரு தசை ஆராம்பமானது. திருமணம் முறையாக அனாது மூன்று மாதம் தன் குடும்ப வாழ்வு அமைந்து. பிரிவு ஏற்பட்டது இன்றுவரை பிரிந்திருக்கிறர்கள். பிறகு பல தொழில் தொடங்கினார். சில காலத்தில் பதிப்பு நஷ்டம் ஏற்பட்டு பல லட்சங்களுக்கு கடனாளியாகிவிட்டார்.பூர்வீக செத்துகள் வழக்கு சிக்கி சிறமங்கள், கஷ்டகளை அனுபவித்தர்.
குரு தசை இவரை படாய் படுத்தயது.



கடக லக்கினம் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் :-

கர்க் கடக லெக்கினத்தில் காளை இந்திரஜித்து
                                                                                       வந்தான்
சற் குருவுக் கெதிரி சுக்கிரனே   உக்கிரமாய்
அவன் திசை காலத்தி லந்த இந்திரஜித்தழிய
புவனம் புகழ் ராமன் புகழ்ந்திட்டான் மேதினியில்
அவன் திசைக் குள்ளாக அகமும் துலைந்து விடும்
அவனிவனை பரதேசி யாக்கிடுவன் நயமுடனே
யேந்த இடம் போனாலும் எருள அசுரகுரு பாவி
சுந்திரனைச் சந்தியினில் விட்டிடுவன் விந்தையுடன்
பந்தனத்தில் வைத்து பார விலங் கோடமைத்து
மைந்தனையு மன முறியச் செய்திடுவன் தொண்டு
வஸ்திரம் துவைக்க வைப்பன் வாழ்வுள்ள
                                                                                மன்னனுக்கு
நத்தி கூலி கேட்கையிலே நலிந்திடுவன்
                                                                                சொன்னேன்
தென்னாட்டை யாளும் தர்மதுரை யேமனுக்கு
திண்ணகமா யிவனுயிரை சேர்த்திடுவன் சீருடனே
கஞ்சி குடிக்கையிலே கவனங்கள் கோடியுண்டு
வெஞ்சினங் களில்லாமல் விழித்திருப்பன் என்றும்
சோறு கரியுண்கையிலே சொற் குற்றாம்
                                                                                வந்துவிடும்
சாரூத்தி தின்ன தட்டிடுவன்  பேதகமாய்
அய்யய்யோ யிவன் திசையி லவதிகள்
                                                                               மேத்தவுண்டு
அய்யய்யோ யிவன் திசையு மாகாது பைய
கற் கடக லக்கினத்தில் ஆகாது சுங்கன்திசை
சொக்கட்டானாடித் தோற்றானே தர்மனுமே சொல்
                                                                                          நயமாய்
அறைந்திட்டேனவன் லபியை
                                                         அவனியிலுள்ளோரறிய
திரந்திட்டேன் திசானாதன் செயுங் கூறை தீவிரமாய்

        கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருவுக்கு பகைவர் சுக்கிரன்.கடக சுக்கிரன் சுக்கிரன் பாவி. கடக லக்கினத்தில் பிறந்த இந்திரஜித் சுக்கிரன் திசையில் அழிந்தான்.உழகம் புகழும் ஸ்ரீராமனின் அருளல் அவனது ஆணவம் அழிந்தது.சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும்  ஜாதகர், ஜாதகி பரதேசியாக அலைவர்கள்,நடுத் தொருவில் நிற்க்க வேண்டியா சூழல் ஏற்படும். மனம் பேதலிக்கும்.வாழ் வங்கு வாழ்பவர்க்கு வேலைகள் செய்வார்கள், துணிகளை துவைப்பார்கள், செய்த வேலைக்குறிய கூலி கிடைக்காது.அரசு வகையில் தண்டனையும், உணவு உண்ணும் போது சண்டையும் சச்சரவும் ஏற்படும்.மகாபராதத்தில் சூது ஆடிய தர்மன் ஆஸ்தி,  அந்தஸ்தும், நாடு, நகரம், தம்பிகள், மனைவி அனைத்தையும் இழக்கச் செய்தார். சுக்கிரனுடைய திசையில் இந்த நிலைகலை தருவார். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் திசையில் பலனை அனுபவிப்பார்கள்.

   கீழ் உள்ள ஜாதகம் பெண்ணுடையாது.
சுக்கிர தசையில் முதல் திருமணம் 3/12 /2000,
25/4/2002 கணவர் இறப்பு,
மறுமணம் 24/1/2007, விவாகரத்து 2008. சுகபோக வாழ்வை பங்கமானது.நிம்மதியாற்ற வாழ்வு அமைந்து.


சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

சிங்க லெக்கினத்தில் சீராக வந்தவனை
பங்ப்படுத்திடுவன் பவுமனவன் சங்கையயற
அவன்திசை யேழுக்குள் அவதி மெத்த பட்டிடுவன்
அவனிவனை யாக்கிடுவன் அம்பலத்தில்
                                                                                    நலமுடனே
சுக பாக்கியாதி யென்று சொல்லிடுவர் நூல்
                                                                                      வல்லோர் சுகந்தர மாட்டான் காண் சொற்பனத்தில்
                                                                                தகமையற்று
யெண்ணாது மெண்ணியே யேங்கி மன முரிவன்
பொன்னாபரண மெலாம் போக்கிடுவன் மண்ணும்
நச்சை நிலங்களெல்லாம் நாசமாய்த்
                                                                         துலைத்திடுவன்   சஞ்சலங்கள் பட்டிடுவான் சமயத்தில் கொஞ்சல்ல
சிங்க லெக்கினத்திற் காகாது சேய் திசையும்
சங்கரனைத் துதிசெய்தால் சற்று நலம்  பொங்கும்

           சிம்ம லக்கினத்தில் பிறந்த ஜாதகர், ஜாதகிக்கு  செவ்வாய் ஏழு வருடங்களில் பல துண்பங்களைத் தருவார்.5-9-ஆம் அதிபதி என்று யோகம் தரமாட்டார். கணவில் துண்பத்தை தருவார்.பொன், பொருள், நிலங்கள் எல்லாம் துலைத்ததிடுவார்கள்.மன நிம்மதி இருக்காது.சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் தசையில் அதிக துண்பத்தை தருவார்.
                     ஆனால் ஸ்திர ராசிக்கு பாதகதிபத்திய தோஷம் அதிகம் பதிப்பதில்லை.
    லக்கினாதிபதியும் சூரியனும்  4-9-ஆம் அதிபதியும்  நட்பு கிரகங்கள். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோகதிபதியாக வருகிறார்.

    சிம்ம லக்கினத்தில் பிறந்த நண்பர்கள் செவ்வாய் தசை நடந்தவர்கள் தங்ளுடைய அனுபவங்களை பதிவிட வேண்டுகிறோன்


கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

கன்னியா லக்கனத்தில் காளையிவன்
                                                                             வந்துதித்தால்
பன்னுங் குரு ராஜன் படுபாவி - துண்ணூம்
பாவியவன் கோணத்தில் பக்குவமா யேரி விடில்
தாவி சுப பலனைத் தந்திடுவன் - வேகமுடன்
மற்ற விடந் தனிலே மன்னனிருந்து விடில்
கெட்ட பலன் தந்திடுவன் கேட்கணுமோ - நட்டமிலா
சுக சப்த மாதியென்று சொல்லிடுவர் சோதிடர்கள்
சுக மெத்த உண்டென்றும் சொல்லிடுவர்
                                                                                 பகையுடனே
சுகம் கிட்டாது எட்டாது சொற்பனத்தில் கூடயில்லை
அக மெல்லா மடவுக்குள் போய்விடுமே -
                                                                         வெறுமையுடன்
நாடு சென்னால் தோப்பும் நலமா யிருந்தாலும்
பாடு வாசி தான் வருமே பலலில்லை  வேறு
அட்டமன் வலுமை பெற்று ஆயுளைத் தந்து விடில்
மற்று மெவன் திசை யாலு மென்ன உற்ற
மன்னன் புத்தி யந்திரத்தில் மைந்தனையுமே
                                                                                         கொல்ல
தின்னகமா யிவனவனை சிதைத்திடுவன்
                                                                             வண்ணமுடன்
கன்னியா லக்கினத்திற் காகாது தேவகுரு
சொன்னேன் அவன் விதியை சொல்லிடுவீர்
                                                                       இன்னுமுங்கேள்

              கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு பாவி 5-9-ல் இருந்தால் சுப பலனைத்தந்திடுவா...ர்.
        மற்ற இடங்களில் இருந்தால் கெடுபலனையே தருவர்.4-7-ஆம் அதிபதி அவர். கணவில் கூட சுக வாழ்வு கிடைக்காது.சொத்து,தோப்பும் இருந்தாலும் நன்மையில்லை வெறுமையுடன் வாழ்வார்கள். எட்டாம் அதிபதி பலம் பெற்று நீண்ட ஆயுளைத் தந்தாலும்.மற்ற கிரகங்களின் திசையில் குரு புத்தி, அந்தரத்தில் மரணத்திற்கு சமன கஷ்டங்களும், கண்டங்களையும் தருவார்.கன்னி லக்கினத்திற்கு தேவகுரு பாதகதிபதி ஆவார்.சுபக் கிரங்கள் கேந்தித்திற்கு அதிபதியானால் கேந்திரதிபத்தியா தோஷத்தை தருவார்கள்.
        கீழ் கணும் ஜாதகம் பெண்ணுடையாது
25 வயதிற்கு பிறகு குரு தசை வாந்தது. கணவன் விபத்தில் இரந்துவிட்டார்.இரண்டு குழந்தையுடன் தனிமையில் வாழ்கிறர்கள்.

துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

துலை யென்ற லக்கினத்தில் தோன்று சுறு
                                                                                   பாலனுக்கு
மலை போலே சூரியனும் படுபாவி நலங்குரைக்கும்
அவன்திசை யாறுக்குள் ஐஸ்வரிய மீந்தாலும்
அவனையும் கொன்றிடுவன் அண்ணலவன்
                                                                                துன்பமொடு
அன்பதுக்கு மேலே அலரிதிசை வந்திடிலோ
துன்பமில்லை துணிந்திருப்பன் வையகத்தில்
சையோக வாலிபத்தில் சூரியதிசை வந்துவிடில்
குய்ய தந்திரம் செய்தாலும் கேழ்ப்பானோ கூறும்கோவிந்த ராஜனையும் குமரனையும்  தான்
                                                                           தொழவே மேவ
ஆவலுடன் பூசை செய்தால் வலுக் குறையும்

      துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்  பாவி.சூரியன் தசை ஆறுவருடமும் செல்வ வளம் தந்தால், ஆயுளை பங்கப்படுத்தி விடுவார். துண்பத்தை தருவார். ஐய்பதுக்கு பிறகு சூரியன் தசை நடமுறைக்கு வந்தால், துண்பம் இல்லை ஆயுள் பலமுடன் உலகில் வாழ்வர்கள். வாலிபத்தில் சூரியன் தசை வந்தால் முறையாக, கோவிந்தராஜனையும், முருகக்கடவுளையும் பூஜை செய்து வந்தால் துண்பம் குறையும்.

விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

விருச்சிக லக்கினத்தில் வீரசூரன் வந்துதித்தால்
பொருமையுள்ள சுக்கிரனும் படுபாவி தரைதனிலே
பாவியிவன் திசையில் பாக்கியத்தை தந்தானால்
பூவி லுள்ள யாவருமே போற்றிடுவர் நேசமுடன்
காடி பரி இல்லுகளும் கனத்த மெத்தை மாடிகளும்
சோடிப்பாய் தந்திடுவன் சுக்கிரனும் சேஷமன்று
இந்த நல்ல வாழ்வுகளு இயல்பாக தந்தானால்
தந்த சுக்கிரன் கொன்றிடுவன் தப்பாமல் அந்த
                                                                                              முடன்
மெத்த துண்பந் தந்து மேதினியில் வைத்தானால்
சுற்றத்தார் யாவருமே துஷணிப்பர் கஷ்டமொடு
மற்று மெவன் திசையில் மன்னன் சுக்கிர புத்தி    
                                                                         தன்னில் நேறும்
சட்டமாய் கொன்றிடுவன் சுங்கன் காண்

விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்   பாவி ( 7-12-ஆம் அதிபதி) சுக்கிரன் திசையில் பாக்கியங்கள் தந்தால் உலகில் உள்ள அனைவரும் புகழ்ந்திடுவர்கள்.மெத்தைவீடுகளும், மாளிகை, கிட்டும் .இயல்பாக தந்தால். மரணத்தையும் உறுதியாக தருவார். அதிக துண்பத்தை தந்தால் உறவினர்கள் மதிக்கமாட்டார்கள். கஷ்டங்களும் அனுபவிப்பார்கள். மற்ற கிரகங்களின் திசையில் சுக்கிர புத்தியில் மரணத்தை தருவர்.

       ஆயுள் ஸ்தானம், லக்கினம், லக்கினாதிபதி, சூரியன், சந்திரன் பலமுடன் இருந்தால் மரணத்தை தரமாட்டார்கள்.அதர்கு சமமான துண்பத்தை தருவர்
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை,புத்தி நடக்கும் காலங்களில் மேல் கண்ட பலன்

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

தனுசு வென்ற வில்லுதனில் தானுதித்த பாலனுக்கு
கனத்தை குரைத்திடுவன் கணக்கனவன் -
                                                                             வணக்கமுடன்  சிந்தை கூரியனும் திரிகோண மேவிடில்
நந்து திருமாது நலளிப்பன்  -  சுந்தரமாய்
மற்ற விடந்தனிலே மதிமகனு மேவிடிலோ
கட்டத் துணியற்று கனங் குறைப்பன்  - நட்டமுடன்
இவன் திசையிலாபம் யின்பமாய் தந்துவிடில்
இவனவனைக் கொல்ல யிரைவனவன்-புவிதனிலே
சுந்தினும் யோகத்தை சொன்னபடி செய்யாவிடில்
பந்தப்படுத்தி பல்லாண்டு நீண்டிருப்பன் -எந்தவிதம்
யின்ன மெவன் திசையில் யிவன் புத்தி வந்தாலும்
நண்ணு மந்தியத்தில் நிரியாணம் சாற்றிடுவாய்

      தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திரிகோணங்களில் இருந்தால் நல்ல மனைவி /கணவன் அமைவர்கள் சுகமுடன் வாழ்வு அமையும். சந்திரனின் மகன் புதன் மற்ற இடங்களில் இருந்தால் உடுத்துவதற்கு ஆடையின்றி தவிக்கும்  நிலையைத் தருவார், சிறப்பன பலனைத்தந்தால், மரணத்தை தருவார், யோகத்தை தரவில்லை என்றால் பக்குவ படுத்தி பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் கிட்டும்.புதன் திசையில், புதன் புத்திகளில்  நடக்கும்.

  ஜாதகர் புதன் தசையில் கல்வி சிறப்பன முறையில் அமையவில்லை.தந்தையின் செல்வங்கள் படிப்படியாக குறைந்து சிறமமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறர். 42 வயதில் திருமணம் நடந்தது.

மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

மகரந்தனில் பிறந்த மைந்தன் சிறுபாலனுக்கு
மிக மோசஞ் செய்திடுவன் மங்கலனும் -மகிமையுடன்
சேய்திசை வந்தவுடன் தேடிவைத்த பொருள் நிலமும்
ஆய்ந்த புகழ் கீர்த்தி அகற்றிடுமே கூறும்
சோதிட நூல் வல்லோர் சுருதிமுறை வழுவாமல்
கூறும் சுகலாபாதி பதி யென்பர் - - சீருடனே
யெப்படியுமித்திசையில் ஜாதகருகோ வருத்தம்
தக்த மனக் கலக்கஞ் செய்திடுவன் சுத்தமுடன்
இன்னு மவனோ இணைந்த சுபக் கோள்களையும்
பண்ணுங் கொடுமை செய்யப் பகர்வான் காண்
                                                                                              அங்காரகனும்
இந்த நல்ல லக்கினத்திற் காகது செய்திசையும்
தொந்தமுள்ள ராசிபலன் சொல்லக்கேள் மற் கலசம்

            மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மிக மிக பாதகம் செய்திடுவார்.செவ்வாய் திசை வந்தவுடன் புகழ், பொருள், நிலங்ள், வீடு, மனக்கலக்கம்,  அனைத்தும் நஷமகிவிடும்.
      செவ்வாய் 4-11 ஆம் அதிபதியாவர். எப்பபடியும் இவர் திசையில் ஜாதகர்,ஜாதகிக்கு துண்பத்தை தருவர். இவருடன்  சுபர்கள் இணைந்திருந்தாலும் அவர்களின் திசையிலும் துண்பத்தை தருவர்கள். இந்த லக்கினத்திற்கு செவ்வாய் திசை ஆகாது. நன்கு ஆராய்ந்து பாருங்கள்.

கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

கும்ப மென்ற லக்கினத்திற் குமரன் சிறு பாலனுக்கு
துன்பந்தரும் பீடை துலங்கிடுவன் அசுரகுரு
பளிங்கு திசை முழுதும் பணமும் புதை பொருளும்
துலங்கும் வயல் காடு துலைத்திடுவன் - இலங்கும்
சுக பாக்கியாதி யென்று சோதிட நூல் சொன்னாலும்
மிகப்பீடை பொருள் விரையம் மேவிடுமே - ஜெகத்தில்
இந்த திசை முழுதும் ஜாதகனுக் இன்னல் பிணி
விந்தையுடன் தந்திடுவன் மேன்மை பெறான் - சொந்த

          கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு துண்பத் தரும் அசுர குருவன சுக்கிரன் பணம், பொருள், செல்வம், பூமி காடு அனைத்தும் இழந்து விடுவார்கள். சுக நான்கம், பாக்கியாதி ஒன்பாதம் அதிபதியான சுக்கிரன் அதிக துண்பத்தை நோய் தருவார் .திசை முழுவது மேன்மை கிட்டாது.

சுக்கிரன் இருக்கும் நிலைக்கு ஏற்ப பலன் நடக்கும்.

             அனுபவத்தில் ஸ்திர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதகதிபதிகள் லக்கினாதிபதிக்கு நட்பு கிரகம் வரும்.   கேந்திரம்,கோணம் வீடுகளால் அமைவதால் தீமை குறைவக கிட்டும். அனைவரும் தங்கள் அனுபவங்களை பதியுங்கள்.

மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு

மீனமென்ற லக்கினத்தில் மைந்தன் சிறு பாலனுக்கு
ஆன புதன் வெள்ளி ஆகாதாம் - நாணயமாய்
சாமன் சப்த மாதிபதி சட்டாடப் பொருள் பிணியும்
தாமத மில்லாமல் சற்றளிப்பன்            நேம முடன்
இன்னமும் தேர்ப்பாகன் யின்ப சுகந் தந்திடுவன்
திண்மையுடன் மாரகத்தை செய்திடுவன் - கன்மமொடு
அட்டமத்து சுக்கிரனு மாகாது திசை முழுதும்
கஸ்ட மெத்தக் காட்டுக் கடுங்காவல்                    மெத்த
உண்டு பண்ணித் தனச் செலவும் ஒர் காசு மில்லாமல்
தொண்டனைப் போல் கேழ்க்கத் துலைத் திடுவன்      என்றும்
யெந்தயிடம் போனாலும் பாவி கொடுந் திசையதனால்
சந்தோஷம் வாராது தரித்திரமே                        கொடிய
புகர் திசையில் தூதுவனும் புகழ் மோஷ வைகுண்டம்
நகரடையச் செய்திடுவன் நன்மையதால்          தயங்கும்
இந்த விதிப்பாகம் யியல் தூது செப்பினன் காண்
சுந்திரக் கோள் நிலை யறிந்தும் சொல்லிடுவீர்          நானும்
சோதிட நூல் தப்பாது சுருதி மொழி யாராய்ந்து
அனு போகத் தாலேயும் அறை அறை நாராயணன் யானும் பங்கமில்லா துரைத்தேன் பல நூலைக் கற்றுணர்ந்தோர்
இங்கிதனை யேற்றுக் கொண்டே யாதரிப்பீர்

           மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் அதிபதி புதன், எட்டாம் அதிபதி சுக்கிரன் ஆகாதவார்கள்.இவர்களின் திசை புத்தியில், புதன் திசை தனதான்யம் பொன், பொருள் அழிவு ஏற்படும்.பயிர்தொழிலில் நஷ்டம், நோய்கள்  ஏற்படும்.  மனைவிக்கு /கணவணுக்கு துண்பம் ஏற்படும் சுப பலனை தந்தால் மாரகத்தையும் தருவார்.
சுக்கிரன் திசையில் கஷ்டங்களும், சிறை தண்டனையும், கையில் காசு, பணம் இல்லாதவர்கள், அனைத்தையும் இழந்து விடுவார்கள்.எந்த இடங்களுக்கு போனாலும் நிம்மதியிராது.

எட்டாதி எவ்விடந்தா னிருந்திடத் தீதேகாட்டும்
எட்டாதி போலவேயாரும் இடுக்கங்கள் செய்யமாட்டார்
குட்டாக அறியமன்னா கூறுவேன் விபரமாக
கட்டாகக் கருத்தைநாட்டி கணிதங்கள் தெரிவாய்தானே