சூரியனால் ஏற்படும் யோகங்கள் !
சூரியனால் உண்டாகும் யோகங்களை கண்போம். வசி யோகம்,வெசி யோகம்,உபயசர யோகம்,(வரிஷ்ட யோகம் சம யோகம், அதம யோகம்) ரவிசந்திர யோகங்கள். நிபுன யோகம், திரிலோசன யோகம், பாஸ்கர யோகம், மருத, மாருத யோகம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனால் மேல்கண்ட யோகங்கள் அமைகின்றது.
சூரியனின் தொடர்புடைய யோகங்களை வரிசையாக விரிவாக கண்போம்.
வசி யோகம் ! 1
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல் சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர் புதன், குரு, சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள் .
வசி யோகத்தில் பிறந்த ஜாதகர் /ஜாதகிக்கு உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லா மக்களாலும் விரும்பப் படுவர்கள்.நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம், அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உர்ந்த அந்தஸ்தை அடைவர்கள். சிரப்புடன் வாழ்வர்கள்.
தானென்ற இரவிக்கு பின்னே புந்தி
தரணிதனில் பேர்விளங்கும் தனமுள்ளோன்
தானென்ற யிரவிக்குப்பின்னே செயும்
தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
சூரியனுக்கு பின்னால் புதன் நின்றால் ஜாதகர் /ஜாதகி உலகில் பேரும் புகழும் பெற்று விளங்குவர்கள்.தனவான்.
சூரியனுக்கு பின்னால் செவ்வாய் நின்றால் ஜாதகனுக்கு அதிக புத்திரர்கள் உண்டாகும்.
இரவிக்குப் பன்னிரண்டில் சுக்கிரன் கூடி
இருந்த காலது வசி யோகமென விரைப்பர்
புரவலராற் பூச்சியமு நால் வகையோகசனைக்கும்
புத்தி நல்லோ செல்வம் புகழ்திரு நற்புகழம்
பரவியபூமி வெகு பரப்புகளைப்புரப்பன்
சூரியனுக்கு 12-ல் சுக்கிரன் இருந்தால் வசியோம் அரசு மரியதையும், பெரியோர்களால் புகழப்படுவர்கள், அனைத்து சுக போக வசதிகளும், நல்லோர்கள் புகழ பல பூமிகள் சம்பாதிப்பர்கள்.
பானுவின் பின் கிரக நிற்கிலது வாசி யோகம்
பேரியல் சேய் நிற்கில் வியாபர மிகு வல்லான்
பெல வித்தை தீரம் வெகுபுத்திரரு முள்ளோன்
கதிரவன் பின் புதனிற்கில் போக பாக்கிவான்
கல்வி தனம் பாக்கியமுடமை பிறர் பொருளால்
சதிருடையன் சூரியன்பின் குரு வெள்ளி நிற்கில்
சகல சஸ்திரங் கேட்கப் படிக்கவுமே பிரியன்
புதிதான வாஸ்திர வரணாலங்காரம்
பொருந்தினேன் சனி நிற்கில் விபசரீதப் பலமாம்
முதிரு மிளாங் குரும்பையெனப் புடைத்தெழந்து விம்மி
முகம் கருத்து பளபளத்து முகிழ்முடைப்பை கொடியே
சூரியனுக்கு 12-ல் கிரங்கள் இருந்தால் வசி யோகமகும் செவ்வாய் இருந்தால் வியாபரம் சிறப்புடன் அமையும். தொழில் சிறப்புடன் அமையும், அதிக குழந்தைகள் பிறக்கும்.
சூரியனுக்கு 12-ல் புதன் இருந்தால் சுக போக வாழ்வு அமையும்,கல்வி, செல்வம் பாக்கியங்கள் கிட்டும் .பிறர் பொருளால் லாபம்கிட்டும்.
குரு, சுக்கிரன் இருந்தால் சகல சஸ்திரங்கள் அறிவர்கள் புதிய ஆடைகள் ஆணிவர்கள்.
சனியிருந்தால் தீய பலன்கள் நடக்கும்.
தானென்றஇரவிக்கு பின்னேபுந்தி
தரணிதனிலபேர் விளங்கும் தனமுமுள்ளோன்
தானென்றஇரவிக்கு பின்னேசேயும்
தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
தானென் றகுருவோடு நீலன்மேவ
தரணிதனில் செவிடனடா முடவன்பாரே
சூரியனுக்கு 12-ல் புதன் இருந்தால் உலகில் புகழ் பெறுவர்கள். செல்வ வளமும் கிட்டும்.
சூரியனுக்கு 12-ல் செவ்வாய் இருந்தால் புத்திரர்கள் அதிகம் உண்டாகும்.
சூரியனுக்கு 12-ல் குருவும், சனியும் இணைந்திருந்தால் உலகில் செவிடனகவும், உடல் ஊனம் உள்ளவர்கள்.
அறைந்திட்டேன்னமொன்று செப்பக்கேளு
அணலனுக்குபின்னாலே அலரிமந்தன்
பரைந்திட்டேன் பண்டுபொருள் அகமுங்கிட்டும்
பார்தனிலேபர தார விசையனப்பா
குரைந்திட்டேன் குமரனுக்கு எட்டுபத்தில்
குலவையிட்டுவருவனடா சண்டன்தானும்
சிறந்திட்டேன் ஜென்மனுக்கு யோகஞ்செப்பு
சிறப்பாகப் புலிப்பாணி செப்பினேனே
சூரியனுக்கு 12-ல் சனியிருந்தால் செல்வம், பல பொருட்களும் கிட்டும்.பிறர் தொடர்பும் ஏற்படும ஜாதகருக்கு 80 வயதில் மரணம் ஏற்படும். ஜாதகர்குசிறப்பன யோகத்தை தருவர்.சிறப்பன யோகம் கிட்டும்.
சூரியனுக்கு 12-ல் செவ்வாய்,சனி இருந்தால் தீயபலன்கள் நடைபெறும்.
சூரியனுக்கு 12-ல் இருந்தால் சுகபோக வாழ்வு அமையும், சுக ஜீவனம் அமையும்.தந்தைக்கு சிறப்புடன் வாழ்வர்கள்.
சூரியன் மேசம், சிம்மம், தனுசு இவைகளில் இருந்து 12 -ல் குரு அல்லது செவ்வாய் இருந்தால் சிறப்பன யோகத்தை.அனுபவிப்பார்கள்.
சூரியன் கடகம், விருச்சிகம் மீனம் இவைகளில் இருந்து 12-ல் புதன், சசுக்கிரன், சனி இருந்தால் சிறப்பன யோகத்தை அனுபவிப்பார்கள்.
சூரியனுக்கு சனி, ராகு, கேது இணைவு பார்வை இருந்தால் நன்மை இருக்காது.
வெசி யோகம் - 2
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம் அமையும்.
பலன் ஜாதகர் /ஜாதகி அழகானவர், இணிமையாக பேசுவார்கள்,தைரியசாலிகளாகவும்,சிறந்த உணவு கிட்டும்.
தந்தையர் புகழ் பெற்றிருப்பர். உறவினருக்கு உதவுவார்கள்.
இவர்கள் பணத்தை சேமிக்க பலக வேண்டும்.
தானென்ற இரவிக்கு முன்னே புந்தி
தனித்தி ருக்கப் புதனிதனடா தரித்ர தோஷம்
சூரியனுக்கு இரண்டில் புதன் ( தனித்திருக்க) இருந்தால் ஜாதகர் புனிதத்தன்மையுள்ளவர்கள். தரித்திரனாக இருப்பர்கள்.
அருக்கண் முன்னே கிரகம் நிற்கில் வெசி யோகம்
அரிய செவ்வாய் நின்றக் காற்றிட சரீரத்தான்
மருவரியை நிந்தையுள னொருவன் கீழ் அமர்ந்தோன்
வருஞ் செலவு மாதயமுன் சரியாயிருப்பன்
ஒரு புதனின்றால் வித்தையுடையன்றரித்ரன்
உருக்கவாசாரன் பந்து கூட்டுறவோன்
குரு நின்றாகில் வித்வான் வெகுபுத்தரருடையன்
கூறு வியாபார வல்லன் நீர வெனக் கூறே
சூரியன் முன்னே வெள்ளி நிற்கில் தனம் பயமுந்
துர்ச்சனன் கலவிப்பிரியன் மிடவிட பித்தன்
சீரியதோர் போக வானென்பர் சனி நிற்கின்
செய்ய பரஸ்தீரீ கமனன் பரதாரவிஷயன்
பாரில் பரவுகாரி பந்துக்களுடையன்
சூரியனுக்கு இரண்டில் கிரகங்கள் இருந்தால் வெசி யோகம் சூரியனுக்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் திடமன உடல் அமைப்புள்வர்கள், தீய சிந்தனையுள்ளவன்.கிழிந்த ஆடைகளை அனிந்திருப்பான் லக்கினதிபதி நலமுடன் இருந்தால் வாழ்வு நலமுடன் அமையும்.
சூரியனுக்கு இரண்டில் புதன் இருந்தால் கல்வி அறிவுடையவர்கள். செல்வம் இல்லதவன், உருக்கு தலைவன், உறவினர் உறவுள்ளோன்.
சூரியனுக்கு இரண்டில் குரு இருந்தால் வித்தைகள் உள்ளவர்கள். அதிக புத்திரசம்பத்து உள்ளவர்கள். வியாபாரம் செய்வர்கள்.
சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் இருந்தால் செல்வம் உள்ளவர்கள். முர்கமுடையவர்கள், சிற்றின்பப்பிரியன், சூடன உடல் உள்ளவர்கள். சுக போக வாழ்வு அமையும்.
சூரியனுக்கு இரண்டில் சனி இருந்தால் விபச்சாரியை கூடுவர்கள் .பல திருணம் நடக்கும். உறவினர்கள் உள்ளவர்கள்.
சூரியனுடன் சனி, ராகு, கேது இணைவு, பார்வையிருந்தாலும். இரண்டில் ராகு, கேது இருந்தாலும் யோகம் பாங்கமகிவிடும்.
லக்கினாதிபதி நிலைகலை கவணிக்கவேண்டும்.
உபயசர யோகம் 3
சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தே அல்லது இணைந்திருந்தால் உபயசர யோகமாகும் (இது சந்திரனின் துருதரா யோகத்தை போன்றது) சுபர்கள் இருந்தால் சுப பலனைத்தரும்.
ஜாதகர் /ஜாதகி பேச்சுத்திறமையுள்ளவர்கள். கெட்டிக்காரர்கள், தைரியசாகளாகவும், உறவினர்களுக்கு உதவி செய்வர்கள், தந்தை சுகமுடன் வாழ்வர்கள். அனைவரல் பாராட்டுவர்கள்.
கதிரிரு பக்கமாகக் கணக்கனும் வெள்ளி நிற்க இதற்கெதிர் பாபர் பாராதிருக்கின் மாதே கேளாய்
பிதுர்க்கதி யோக மாகிப் பேருளோனாகி வாழ்வன் !
சூரியனுக்கு 2-12-ல் புதனும், சுக்கிரனும் இருக்க இவர்களை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருந்தால் ஜாதகர் /ஜாதகி தந்தைக்கு அதிக யோகத்தை அனுபவிப்பார்கள். சம்பத்தும், புகழும் பெற்று சிறப்புடன் வாழ்வர்கள்.
வெய் யோனிருபக்கம் பாரு மாதே
வேந்தனும் கொவ்வான கோள்களுமேற
பையவே யிவனுக்குப் பண்டு - பொருள்
யோகமும் போகமும் பகர்ந்து சொல் தோழி - சங்கர!
சூரியனுக்கு 2-12 -ல் குருவும், சுக்கிரன் இருந்தால் செல்வம், புகழ்,அனைத்து வசதிகள் கிட்டும்.சுக போக வாழ்வு அமையும்.
ஒப்புடன் இரவி பக்கம் இரண்டினும் உயர்கோள்
உற்றால்
அப்படி உபய வெண்சா மரையுடை அரச னாமே !
சூரியனுக்கு இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சுக போகவாழ்வும்,அந்தஸ்தும் கிட்டும்.
ரவிச் சந்திர யோகம் (வரிஷ்ட, சம, அதம)
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் ' 622
அறிவில்லாதவனை ஒவ்வொரு சிக்கலும்
அதிர்ச்சிக்குள்ளாக்கிச் சிறிது சிறிதாய் சிதைத்து விடும். ஆனால் அறிவு உள்ளவனை அதிர்ச்சிக் குள்ளாக்கும் சிக்கல் உலகில் இல்லவே இல்லை.
ஒவ்வொரு ஜாதகத்திலும் குறைந்த பட்சம் இரண்டு,மூன்று வகையான யோகமாவது அமைந்திருக்கும்.யோகமில்லாத ஜாதகமே இல்லை எனலாம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைக்கு எற்ப்ப செயல்படும்.
பலன் :- அரசியல் செல்வாக்கு, லாபங்கள், கிரம தலைவர்கள், நுண்ணறிவு, ஞாபகசக்தி, பேச்சுத்திறன், வெற்றி கிட்டும். சம யோகமாக இருந்தால் பலனைக் குறையும் தீமை தரது.
அதம யோகமானால் குருடு, மன நலம் பதிக்கும், அலித்தன்மை, மூடத்தனம், துர்மரணம் அவமானம் ஏற்படும்
சூரியனும்,சந்திரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பர கேந்திரத்தில் இருந்தால் வரிஷ்ட யோகம். திரிகோணத்தில் நின்றால் சம யோகம். உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் அதம யோகம். ரவிச்சந்திர யோகம்.
சூரியனும், சந்திரனும் பாரஸ்பரம் 3-6-9-12-ல் ராசிகளில் இருந்தால் அதிக சுகப் பலனைக் கொடுபார்கள்.
சூரியனுக்கு 9- ல் சந்திரன் இருந்தால் உச்ச சுபப் பலனைத்தரும்.
சூரியனுக்கு 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால் ஒரளவு சுபப் பலனைக் கொடுப்பார்கள்.
சூரியனுக்கோ,சந்திரனுக்கோ 1-3-4-5-9-6-10-11 ல் கிரகங்கள் இருந்தாலும் ரவிச்சந்தி யோகமகும்.
சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள் செல்வம்,சாஸ்திரம்,புத்தி ஜோதிடம் மாந்திரிகம்,எதையும் எளிதில் கிரகிக்கும் திரமையுள்ளவர்கள் காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
சூரியனுக்கு பணபார ஸ்தானமாகி 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால் சுமரன பலன் கிடைக்கும். செல்வம்,சாஸ்திர ஞானம்,புத்தி,சாமர்த்தியம்,நல்ல குணம் அமைந்திருக்கும்.
சூரியனுக்கு1-4-7-10ல் சந்திரன் இருந்தால் ஒரளவுக்கு நன்மை தரும். இவர்கள் அறிவாற்றலைப் பெறுவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
பகல்/இரவு ஜெனனம்பார்க்க வேண்டும். செவ்வாய்,சுக்கிரன் பார்வை சூரியனுக்கே(அ) சந்திரனுக்கே இருந்தால் யோகம் சிறப்பு பெறும்.
பகலவன் தனக்கு மூன்று ஆறோன்பான்
பண்ணிரண்டினில் மதியமர
மிகு தனம் புத்தி வினைய நல் ஞானமேவு பல
காரியயூகி
சகலரும் மதியும் பணபர இருக்க வியம்பிய யோகம்
ஆதிகம்
தகைபெறு கேந்திரந்தனில் மதியிருக்க சாற்றிய
பலனிலையம்
சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள்.செல்வம்,சாஸ்திரம், புத்தி காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
சூரியனுக்கு பணபரஸ்தானத்தில் 2-5-8-11-ல் சந்திரனிருக்க யோகம் சிறப்பு பெறும்.
சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரனிருந்தால்
எந்தவிதமன பலனையும் தாரது.
நிலவுக்கு கதிரவன் கோணம் - மாதே
நீ நிலத்தில் தனஞ் சுகவானாமில்லோன்
அலகை வணதுர்க்கை வசியன் - சென்மன்
அந்தகன் அழைப்பானாம் தெட்டாண்டில் - சங்கர
சந்திரனுக்கு 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் சுகம் எதையும் அனுபவிக்க முடியாது.வனதோவதை துர்க்கையை வசியம் செய்வான் 68 வயதுவரை ஆயுள் உள்ளவார்கள்.
ஆனால் சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால்
சிறப்பன யோகம் தரும்.
பாரப்பா பகலவனுக்கு அஞ்சு எட்டு
பாக்கியத்தில் சுபர் நிற்க அதனுள்ளோர்கள்
சீரப்பா திரிகோண கேந்திரமேற
சிவ சிவா பிதுர்க்கு தனமும்
வீரப்பா விதியுண்டு வெள்ளி புந்தி
வீடானால் அமடில்லை ராஜ யோகம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே புலிப்பாணி கூறினேனே
சூரியனுக்கு5-8-9-ல் சுபர்கள் நிற்க அந்த ராசிக்கு அதிபதிகள் கோணம்,கேந்திரத்தில் இருந்தால் ஜாதகனின் தந்தைக்கு சிறப்பன யோகத்தை தரும்.
செல்வம்,ஆயுள்,பூகழ்,உண்டாகும்.
5-8-9- வீடுகள் புதன் சுக்கிரன் வீடாக அமைந்தால் ஜாதகருக்கு சிறப்பன ராஜ யோகம் அனுபவிப்பர்கள்.
பகலில் பிறந்த ஜாதகருக்கு நவாம்சத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்து கட்டாயம். குருவால் பார்கப்பட வேண்டும்.
இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனை சுக்கிரன்
பார்க்க வேண்டும்.பலம் பெற்று இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும்.
இருவரில் ஒரு பலம் பெறுவது அவசியம்.
பாஸ்கர யோகம்
…………………………………
சூரியனுக்கு இரண்டில் சந்திரனும் அமைந்திருந்தால் அல்லது லக்கினத்தில் சூரியனும், 2ல் புதனும், 11-ல் சந்திரனும் இருந்தாலும் , குரு, சந்திரனுக்கு 4-7-10-ல் இருந்தால் பாஸ்கர யோகம் அமையும்.
ஜாதகர் /ஜாதகிக்கு தைரியசாலிகளாகவும், உயர்ந்து அந்தஸ்துள்ளவர்கள்.சகல சாஸ்திரங்களை அறிந்தவர்கள், மேடைப் பேச்சுள்ளவர்கள். மனகிழ்ச்சியுள்ளவர்கள். தனது தொழிலை சிறப்புடன் செய்வர்கள்.
ஜாத அலங்காரத்தில்
அரசனார் ஏழில் செவ்வாய் ஆறில்பன்
னொன்றில் காரி
இவரியும் மூன்று நான்கில் இராகுவும் இவர்எல்
லோரும்
பரவியே நிற்பா ராகில் பாஸ்கர யோக மென்பர்
இரவிமுன் பனிபோல் க்ரூதம் இராததென
இயம்பு மாதே !
லக்கினத்திற்கு 7 -ல் குரு,6 -ல் செவ்வாய், 11-ல் சனி, 3-ல் சூரியன்,4-ல் ராகு இவ்வாறு அமைந்தால் பாஸ்கர யோகம்.
பாஸ்கர யோகத்தில் பிறந்தவர்களுக்கு துண்பங்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் உடனே விலகி இன்பங்கள் தரும்.
இரண்டு அமைப்பில் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் யோகத்தை அனுபவிப்பார்கள்.
திரிலோசன யோகம்
……………………………………………
சூரியன், சந்திரன், செவ்வாய் ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் இருந்தால் திரிலோசன யோகம் அமையும்.
ஜாதகர் /ஜாதகிக்கு சிறப்ப சிந்தனை, சிறந்த பேச்சாளர், சகோதரர்களுக்கு உதவிகள் செய்வர்கள். பிறரை எளிதில் எடைபோடுவர்கள், அதிக செல்வம், நீண்ட ஆயுள்
சூரியன், மேஷம், சிம்மம், தனுசிலிருந்தால் இவை மாதுர்ய யோகமாகும்.
சந்திரன் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் விதுர யோகமாகும்.
செவ்வாய் மிதுனம், துலாம், கும்பத்திலிருந்தால் பரமபத யோகம்.
கிரகங்கள் அமையும் நிலைக்கு ஏற்ப யோகம் தருவர்கள்.
இரவி யோகம்
……………………………
( இரண்டு விதமாக உள்ளாது) !
பத்தினில் செவ்வாய் நிற்கப் பானுவேயுச்சனாகி
வைத்திடு மிரண்டில் நிற்க மதிகுரு வொண்பானெய்தில்
சித்தியா மிரவி யோகஞ் சீர்பதி நாலாண்டின்மே
லொத்திடும் வருமெட்டும் யோகத்தையுடையனாமே
(1) லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய் இருக்க, சூரியன் உச்சம் பெற்று 2-ல் இருக்க, சந்தின், குரு 9-ல் இருந்தால் இரவி யோகம். 14 -வயது முதல் 8-வருடம் சிறப்பன யோகத்தை தரும்.
(2) சூரியன் லக்கினத்திற்கு 10-ல் இருக்க, 10-ஆம் அதிபதி 3-ல் சனியுடன் இணைந்திருந்தால் ரவி யோகம்.
ஜாதகர் /ஜாதகிக்கு 15-வயதிலேயே கீர்த்தி, அகன்ற மார்பும், தாமரை, போன்ற கண்களும், உயர்ந்த செல்வாக்கும், எளிமையான வாழ்வும், பல்சுவை உணவும் உட்கொள்பவராக இருப்பர்கள்.
மாருத யோகம்
…………………………………
(இரண்டு விதமாக உள்ளாது) !
(1) சூரியனுக்கு திரிகோணங்களில் குரு, சுக்கிரன், சந்திரன் இருந்தாலும் அல்லது இவர்களை சூரியன் பார்த்தாலும்.
(2) வாவு தத்துவ ராசிகளில் மிதுனம்,துலாம், கும்பம் ராசியில் குருவோ, சுக்கிரனோ இருக்க 5-9-ல் உச்ச பலம் பெற்று சூரியன் அல்லது சந்திரன் இருக்குமானால் மருத யோகம் அமையும்.
இது அபூர்வமான யோகமாகும்.ஜாதகர் /ஜாதகிக்கு சிறந்த மேடைப்பேச்சாற்றல், உடல் பலம், வியாபாரம்.கௌரவம், பல சதனைகள் புரிவர்கள்.சுக வாழ்வு அமையும். அனைவரும் பாராட்டுவர்கள்.
அமாவாசை யோகம்
அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன், சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.
ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல் இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல் இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல்
இருந்தால் யோகம் ஏற்படும்.
சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.
வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும்.
பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆறப்பா அமடு பயமில்லை யில்லை
அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே
சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு, பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.
இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.
மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல் இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.
கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க
துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்
அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி
விதியுடனிருப் பனின்னோன்
மேன்மையாமறிவுள்ளேனே
சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.
சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்
ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.
திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில் 10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்.
அனுபவத்தில் மிகச்சரியாக உள்ளது நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் .
.