வக்ர பலவீனம் பங்கமடைதல்
சுபர்களாகிய புதன் , குரு , சுக்கிரன் வக்ரமானால் பலவீனம் .அவை தமது சொந்த மற்றும் காரகத்துவ வீடுகளுக்கு சுப பலன்களை அளிப்பதில்லை .
ஆனால்
தமது சொந்த வீட்டில் இருந்தால்தமது காரகத்துவ வீட்டில் இருந்தாலோ, தமது உச்சம் பெற்று இருந்தாலோ , வேறு சுபரால் இணைவு பார்வை மூலம் சம்பந்தம் பொற்றாலோ,வக்ர பலவீனம்பங்கமடைந்து பலம் பெறுகின்றனர் .
அதே போல
பாவபுதன் அல்லது பாவ சுக்கிரன் வக்ரமானால் பலவீனமான பாவராகி மற்றொரு பாவரோடு இணைவு ,பார்வை மூலம் சம்பந்தம் பெற்றிருந்தாலோஅல்லது
6-8-12-ல் இருந்தாலோ
நீசம் பொற்றிருந்தாலோ
வக்ர பலவீனம் பங்கமடைந்து
பலம் மிக்க பாவராகி மிகுந்த பாவ பலனை கொடுப்பர்கள் .
நீச்சம் & பங்கமடைதல்
நீசக்கோள் பலவீனமாது என்று கருதப்பட்டாலும் அது தன் பலத்தைஇழப்பதில்லை. இக் கோளின் பலம் பலவீனமானாலும் ,இந்த நீசக் கோள் சுபரானாலும் ,தன்னுடைய காரகத்துவ வீட்டிலிருந்தால் அந்த வீட்டின் பலத்தைப் பெற்று தனது வீட்டிற்கும்.சுப பயனைத்தரும் .ஒரு ஜாதகத்தில் நீச்சம் பெற்று வலுவிழுந்த சுப கிரகம் வலுவில்லாத சுப பலன்களைத் தரும். அதைப் போலவே , நீச்சம் பெற்று வலுவிழந்த ஒரு பாவகிரகம் வலுவில்லாத அசுப பலன்களைத்தரும் .
ஒரு நீச்சம் பெற்ற பாவகிரகம் ஜாதகர்களுக்கு எந்தவித தடையின்றி தொடர்ந்து சுப பலன்களைத்தரும் .
(உ ம்) மகர குரு 2-5-7-10-11-ல்
கடக செவ்வாய் 3-6-ல் பலமானவை
நீசமான சுபக்கோள் எந்த சுப கோள் இணைவு , பார்வையில் சம்பந்தம் பெற பலம் பெறுகிறது .
நீசமான பாவகோள் அல்லது சனி 6-8-12-ல் இருக்க நீசம் பங்கமாகி வலிமை மிக்க பாவராவார் ,
நீச பாவக் கோள் சனியுடன் இணைவு , எதிர்வு ,பார்வை மூலம் சம்பந்தமாக அல்லது
நீசச் சனி பாவக் கோளுடன் இணைவு எதிர்வு,பார்வை மூலம் சம்பந்தமாக வலிமை மிக்க பாவராவார் .
சூரியன் துலாம் , சந்திரன் விருச்சிகம் ,
செவ்வாய் கடகம் , புதன் மீனம் ,
குரு மகரம் , சனி மேசம்
ப.சூரியஜெயவேல்
9600607603