Thursday 19 November 2015

சரம் ஸ்திரம் உபய ராசியில் சனி

நிலைமையாம் சரத்தினில் நிலனே இருக்கில்
         நிலையோடா தீனமே பேதம்
பலன் நிலை அன்னிய தேச சஞ்சாரம்
        பாலர்க்கே பூமியும் விரையம்
தலமதை விட்டே அன்னிய தேசம்
       தனம் சுயார்ச்சியமது பெறுவன்
பெலமொடு செல்வம் உண்டு அதிகாரம்
       பெண்ணினால் கலகம் என்று ஓதே
      சனி சர ராயில் இருந்தால் நட்புறவு இருக்காது .வெளியூர் பயணம், சொத்து விரையமாகும்.வீட்டை விட்டு வெளியூர் செல்வான். சுயசம்பாத்தியம் அடைவான். செல்வங்கள் கிட்டும். அதிகாரமும்கிட்டும். பெண்களால் நன்மையில்லை.

சனி திரத்தில் இருக்கின் மன்னவர் நேயன்
     சந்சல மனதுடையவன்
இனிய நற் குணவான் இருவித்தை உடையன்
      இன்மாம் அன்னிய தேசம்
தனியனாம் வர்க்கம் தன்னிலே பகைத்து
       சஞ்சலத்துடன் அன்னியர் தனையே
கனிவதாய் கூடிக்தனம் பொருள்தனையே
      கதித்த தர்மத்தினை செய்வான்
        சனி ஸ்திர ராசியில் இருந்தால் அரசு வகையில் நன்மை,  சலனமுள்ள மனம், நல்ல குணமுடையவர்கள். இருவிதமன தொழில் உள்ளவர்கள். சுகமாகும் வெளியூரில் வாழ்வு .உறவினர் பகைத்து, சலனமுடன் அன்னியர்களிடம் கூடி சம்பாத்தியம் கொள்வர்கள். இனிமையாக தர்மத்தை செய்வர்கள்.

காரியே உபயம் தன்னிலே இருக்கில்
      கடினமாம் தொழில் இருவிதத்தால்
மீறியே இருவர் பூமியை வாங்கல்
        விரையமா தீனமே சுபங்கன்
தேரிய மனையாள் வர்க்கமே தோடம்
        ஜொகமதில் புத்திர செல்வம்
கூறிய புத்தி பாக பூர்விகம்
       குணமொடு கூறிய நட்பே
      சனி உபய ராசியில் இருந்தால் கஷ்டம், இருவித தொழில் செய்வர்கள். இருவருடைய சொத்தை வங்கு வற்குவர்கள்.சுகங்கள் விரையாமகும்.மனைவிக்கு தோஷம். புத்திர பக்கியம் கிட்டும். பூர்விகத்தால் நன்மைகிட்டும்.குணமுடன் வாழ்வர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Monday 9 November 2015

சரம் ஸ்திரம் உபயராசியில் குரு

மன்னன் சரத்தில் தானிருக்க
      வலுவாய்ப் பிறந்த ஜாதகர்க்க
துன்னு மேன்மை அதிகாரம்
      சுயரச்சிதமே நிலைமையதாம்
கன்னன் மொழியான் நட்புடையன்
      கன்னி திசையில் பூர்வீகம்
அன்னை வழியால் செல்வீகம்
      ஆறைந்தனில் புத்திரனே
        குரு சர ராசியில் இருந்தால் உயார்ந்த அதிகாரம், சுயசம்பாத்தியம், குழந்தைகளால் நன்மையும், கன்னி திசையில் பூர்வீகம், அன்னை வழியில் செல்வம் கிடைக்கும் .பூகழுடைய புத்திரன் அமையும்.

சிறந்த திரத்தில் குருவிருக்குச்
      செனித்த பாலன் திறம் கேளும்
பிறந்த நிலைமை விட்டு ஏகும்
       பெரியோர் கூட்டம் உண்டாகும்
சிறந்த அன்னை வழி துக்கம்
        செல்வம் உண்டாம் பாதினாறில்
அறமும் தெய்வப்பக்தி உளான்
       அரசர் மகிழ்ச்சி உடையவனே
      குரு ஸ்திர ராசியில் இருந்தால் பிறந்த நிளைகள் மறும்.பெரியார்கள் தொடர்பு கிட்டும். அன்னை வழியில் நன்மையில்லை. 16-வயதில் செல்வம் கிடைக்கும்.தெய்வ பக்திமான், தர்மசீலன். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

மந்திரி உபயம் தன்னிலே இருக்க
         வந்த ஜாதகர்க்(கு) இனிய பலன்கேள்
தந்திர மனத்தன் பெண்களால் தனமும்
       தரணியில் இனியனாய் இருப்பன்
முந்திய பூர்வ பூமியால் வழக்கு
       முற்றிலும் வியாச்சிய மில்லை
சந்ததி விருத்தி தருமத்தில் புத்தி
        சர்ந்திடும் தாட்சன்யம் உளனே
         குரு உபய ராசியில் இருந்தால் சுப பலனைக் கேளுங்கள் .தந்திரமுடன் இருப்பார்கள். பெண்களால் செல்வம் கிட்டும்.
உலகில் அனைவருக்கும் அன்புடன் இருப்பார்கள்.பூர்வீக சொத்து வழக்கு, இழப்பு ஏற்படும். குழந்தைச் செல்வம் கிட்டும். தர்மசிந்தனை உள்ளவர்கள்.

Friday 6 November 2015

சரம் ஸ்திரம் உபயராசியில் புதன்

சரம் ஸ்திரம் உபய ராசியில்  புதன்

புந்தியே சரத்தின் நின்றிடப் பிறந்தோர்
       புந்தியும் பெண்சுகம் உடையார்
வந்திடும் அரசர் பேட்டியா (ல்) மகிழ்ச்சி
      மன்னவர் உறவு எனல் ஆகும்
சந்ததி பேதம் பெண்ணுளது அன்னியம்
      சார்ந்திடும் காலத்தில் புத்திரன்
விந்தையாம் பூமி சுயார்ச்சிதம் நிலைமை
        மிக்க செல்வங்கள் என்று ஓதே
      சரராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள். நற்சிந்தனையும், பெண்களால் நன்மையும். பேட்டியால் லாபம், பொரியோர்களின் உ றவும் கிட்டும்.பெண்குழந்தை கிட்டும். அன்னியத்தில் வாழ்வு அமையும். சரியன காலங்களில் புத்திர பாக்கியம் அமையும்.சுய சம்பாதிப்பார்கள், பூமி, சொத்து,செல்வங்கள் அமையும்.

திரமது தன்னில் மாலுமே நிற்க
       ஜனித்த ஜாதர்க்கு இனியபலன் கேள்
உர மெனும் வித்தை திரவியலாபம்
       உண்மையாம் அரசன் மகிழ்ச்சி
பரவிய பூமி புத்திரலாபம் பலதொழில்
       தன்னினும் முயற்சி
கரமது தன்னில் தழுப்பது விண்ணம்
       கருதுவர் நிலைமை இவ்விதமே
     ஸ்திர ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள் தொழில் வளம், செல்வ வளம், பல பூமி லாபம், பல தொழில் செய்வார்கள், சுய முயற்சியால் பலம் பெருவார்கள்.கையில் உணம் இருக்கும்.

உருதியாம் உபயராசியில் புந்தி
       உற்ற ஜாதகர்க்கு இனிய பலன்கேள்
கருதிய மெய்யன் யோகியர் நட்பன்
       கவிதைகள் கணித நூல் கற்பன்
இருநிலை உடையவன் இனிய தர்மங்கள்
       இடரில்லாத இயற்றி ஞானியர் பால்
பெருகிய நட்பன் அன்னியர் நேயன்
        பந்துடன் பகை உளனாமே
     உபய ராசியில் புதன் இருக்க பிறந்தவர்கள்
உண்மையானவர்கள், யோகியர்களிடம் உறவு உள்ளவர்கள்.கவிஞர்கள்,கணிதநூல் வல்லுந‌ர்
இருவித செயல்பாடுள்வர்கள்.பிறக்கு உதவிகள் செய்வர்கள். தடையில்லாமல் ஞானியர்க்கு பணிவிடை செய்வர்கள். உறவினர் பகைமையுள்ளவர்கள். அன்னியரிடம் உறவுள்ளவர்கள்.

Thursday 5 November 2015

சரம் ஸ்திரம் உபய ராசியில் சந்திரன் பலன்

உங்களுடைய சந்திரன் சரத்தில் இருந்தால் ?

கடகம் அதில் வளர் மதியே நின்றிடிலோ நன்மை
       கலை துலையாம் கடனலே நீற்கத் தீதாம்
திடமில்லை அன்னைக்கு நலிவாகும் தேகம்
      சிறப்பில்லை பூர்வம் விட்டுபிரிதால் காட்டும்
விலைமாதர் தமைக்கூடி வேதனைகள் படுவன்
     மேதினில் தேய்மதிக்கு செல்வம் மிக உளனாம்
உடை ஆடை அணியவலன் உண்மைஉடையன்
                                                                                        காண்
      உற்ற மனையாள் வழியில் செல்வம் உளன்
                                                                                 அல்லால்
          உங்களுடைய சந்திரன் உங்கள் ஜாதகத்தில்  வளர்பிறை சந்திரன் கடகத்தில் சிறப்பான  வாழ்வு அமையும் .
     மேஷம், துலாம், மகரம் இவைகளில் இருந்தால்  நன்மை தருவதில்லை அன்னைக்கு உடல் பலவீனம் அடிக்கடி நோய் ஏற்படும்.நீங்கள் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்வீர்கள். பிறர் தொடர்பு ஏற்பட்டு வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
      மேஷம், துலாம், மகரம் தேய்பிறைச் சந்திரன் இருந்தால் செல்வ வளமை கிட்டும்.சிறப்பன ஆடைகளை அணிவர்கள்.நேர்மையுடன் இருப்பார்கள். மனைவி /கணவன் வாழியில் செல்வம் கிடைக்கும்.

சடலம் அதில் பிணியிலான் யோகியர்க்கு
                                                                             அன்பன்
சாந்தகுணத் தன்மையொடு தனியர்க்குவரும்
                                                                     தொழிலான்
கடகமதில் அமர மதிக்கு அரிட்டமதுகண்டாம்
கருது சுகமில்லை அதில் கடன்அதிகம் படுவன்
மடைதிறந்த புனல் எனவே அன்னியதேசத்தின்
மாறி வருதல் பேதவலுவுடைய செல்வ
தடைல்லை அன்னியரால் பூமி நிதி சேர்க்கை
தன சவுக்கியம் உள்ளவனாம் தன்மை
                                                                        இதுவாமே
         ஜாதகர் /ஜாதகிக்கு நோய் பதிப்புகள் இருக்காது. யோகிகளுக்கு உதவிகள் செய்வார்கள். கடகந்தில் சந்திரன் இருந்தால் தாயருக்கு கண்டம் ஏற்படும்.சுகவாழ்வில்லை. அதிக கடன் ஏற்படும். வெளியூரில் வசிப்பார்கள்.செல்வம் கிட்டும். அன்னியரால் பூமி, செல்வ சேர்க்கை கிட்டும். செல்வ வாழ்வு அமையும்.

ஸ்திர ராசியில் சந்திரன் நின்ற பலன் !

திர மென்னும் ராசிதனில் தேய்மதியே நிற்கச்
     சனித்த ஜாதகனுடைய திறமையது கேளாய்   உரம் பாக்கியம் சேரும் உண்மையது எண்பால்
    உற்ற துணையால் பாக்கியம் என்ப அறிது
                                                                           கண்டாய்   விரய மந்திரி அரசர் மகிழ்ச்சி உளதாங்கே
மேதினியில் யோகமுளன் அன்றி இச்செல்வன்   பரவிய சஞ்சலம் உடையன் கோபி எனலாகும்        பலர் பெண்ணை பரவிஅனுபவிப்பன்
                                                                       எனக்கூறே
     ஸ்திர ராசி் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் தேய்பிறை சந்திரன் இருந்தால் செல்வம் பாக்கியங்களும் கிட்டும்.துணைவர்களால் பாக்கியம் கிட்டும்.உயர் பதவி, மகிழ்சியான வாழ்வு அமையும். உலகப் பூகழ் அடைவர்கள். மனசஞ்சலம் அடைவர்கள்.கோபப்படுவர்கள். பிறர் தொடர்பு ஏற்படும்.

திர ராசிதனில் வளர் மதியே நிற்க
  ஜனித்தோன் தன்திறமையது செப்பக்கேளாய்
விரவிய (வா) தீனமது வேறாய் செல்வ
மிகுந்திடுமே சுயார்ஜிதகன் நிலையாம் அன்றி
பரவிய மன்னர் நேயன் யோகி நாட்பாம்
    பலவித்தை மேலோரால்  பெருகிநிற்கும்
திரவியமும் விரையமதாம் சகோதிரங்கள்
  சிறந்திருப்பார் அன்னித்தில் என்று சொல்ளே
              ஸ்திர ராசியில் வளர்பிறை சந்திரன் இருந்தால் சிந்தனைகள் வேறாய்  இருக்கும், செல்வ வளம் கிட்டும்.சுய சம்பாதிப்பார்கள். உயர்நிலையில் உள்ளவர்கள் நட்பும் உறவு கிட்டும்.பல தொழில்கள் செய்வர்கள். சகோதரர்க்கு பதிப்புகள் ஏற்படும். வெளியூரில் சிறப்புடன் இருப்பார்கள்.

உபய ராசியில் சந்திரன் நின்ற பலன்

சிறந்த வளர்மதி உபயராசி தன்னில்
       சிறந்து நிற்கில் செல்வீகன் பெண்பால்
                                                                          தன்னால்
பிறந்த மனைபாழகும் மூன்றாம் பூமி
        பலன்என்பர் இருபாகம் பூமி ஏகன்
வரம்தனிலும் தத்து புத்திரன் ஆகும்செல்வன்
      வாலிபத்தில் சுகம்முடித்தம் மனையில் கூடி
இருந்தவர்க் (கு)  அன்னிய கர்மம் செய்வன்
                                                                                அன்றி
       ஏழில் அரசர்மெச்சும் வித்தை இனிது
                                                                       உள்ளோன்
     வளர்பிறை சந்திரன் உபயராசியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைகளில் இருந்தால் பெண்களால் பிறந்தவீடு பாழகும்.பிறருடைய சொத்தை அனுபவிப்பார்கள். இரண்டு பிரிவு இருக்கும். வரத்தில் பிறந்தவர்கள். சிலர் தத்து புத்திரர்கள் ஆவர்கள்.இளமையில் திருமணம் ஆகும்.அன்னியர்க்கு கர்மம் செய்ய சூல்நிலை ஏற்படும். பலர் பாராட்டும்படியான தொழில்நுட்பம் உள்ளவர்கள்.

கொண்ட உபயந்தனில் தேய்மதியே நிற்க
    குறித்த ஜாதகரின் பலனைக்கேள்
கண்டிடுவய்யோக முளான் கன்னியரின்
                                                                          பகைவன்
     கருத்துடையர்தமைக்கூடி கனமாக வாழ்வன்
உண்டாகும் மன்னவராற் செல்வீகன் தான்
     யோகியர் கடமைக்கூடு உண்மையாளன்
தொண்டர்களை அஞ்ஞாறும் சேர்ந்துநட்பாய்
     சூழ்ந்திருப்பன் யோகியெனச் சொல்லதாமே
     உபயராசியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைளில் தேய்பிறை சந்திரன் இருந்தால் பெண்களால் நன்மையில்லை, தலைசிறந்த அறிவுடைய பொறியோர்களிடம் தொடர்புடையவர்கள்.உயர் அந்தஸ்தை பெறுவன்.ஞானிகளுக்கு பணிவிடை செய்வர்கள். எப்போதும் இவர்களை சுற்றி பலர் இருப்பர்கள். ஞான மார்க்கத்தை அடைவர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Wednesday 4 November 2015

சரம் ஸ்திம் உபயம் ராசியில் செவ்வாய் பலன்கள்

சரத்தில் செவ்வாய் இருந்தால்

பலம் எனும் சரத்தினில் நிலமகன் நிற்கப்
       பற்றியே  பிறந்த சாதகன் தான்
குலமதில் சீலன் அரசனம் போலக்
       கொள்கை காணி யோகவன் சத்துரு
கலகி காண் களத்திதேகம் நலியும்
         கனமுடன் பொருள் உளன்என்க
விலகியே பூமி அன்னியதேசம்
         ஏவுவன் சுகமுளன் இவனே
     சரராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள்  சிறந்த தலைமை பதவிகள், அதிகார தோற்றம் உள்ளவர்கள். பூமி லாபமுள்ளவர்கள்.எதிரிகள் பயப்படுவர்கள்.மனைவியின் உடல் பலவீனமடையும்.பொருள் சேர்க்கை ஏற்படும். பிறந்த ஊரைவிட்டு வெளியுரில் சுகமுடன் வாழ்வர்கள்.

ஸ்திரத்தில் செவ்வாய் இருந்தால்

வக்கிரன் திரத்தில் நின்றிடில் பூமி
         வலுவொடு சுயார்ச்சிதம் மேன்மை
தக்கவன் செல்வன் யோகவான் தாரம்
        தரணியில் பகையுளான் ஆகும்
பக்குவமுடன் அன்னியர் தமக்குப்
      பல விதத்திலும் மிகு நட்பாம்
மிக்க பேதகன் அன்னிய தேடம்
       மேவியே இருப்பன் என்றுரையே
      ஸ்திரராசியில் செவ்வாய் இருந்தால் சொத்து, பூமி லாபம், சுய சம்பாத்தியம் சிறப்புடன் அமையும்.செல்வ வளம், யோகம் கிட்டும். உலகில் மனைவியுட பகையுணர்வு உள்ளவர்கள். பிறறுடன் நட்புறவுடன் இருப்பர்கள்.

உபய ராசியில் செவ்வாய் இருந்தால்

கூறக்கேள் நிலமகன் தான் உபயமாகிக்
   குலவிநிற்கும் வேளை தனில் ஜனிப்பாராகில்
மாறக்கேள் பூர்வம் விட்டு அன்னியதேசம்
    மாறியே கன்னிகைமருவி நிற்பன்
வேறாக மனதுள்ளும் பகையே காட்டு
     மேதினில் இருவித்தை நிலத்தால் செல்வன்
கூறு சுயார்ஜிதபூமி ஸ்திரம் என்சொன்ன
    குறியான கன்னிகை குணம் என்றுஒதே
                 உபய ராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள்.பூர்வீகத்தை விட்டு வெளியூரில் வசிப்பார்கள்.பிற பெண்கள் தொடர்பு இருக்கும்.பகையுணர்வு இருக்கும்.இருவித தொழில்களைச் செய்வார்கள். சுயமாக பூமி, சொத்து சம்பாதிப்பார்கள். பெண்களின் குணம் அமைந்திருக்கும்.

ப.சூரியஜெயவேல்
9600607603 

Monday 2 November 2015

வண்ணங்களில் வாழ்வியல்

வண்ணங்களில் வாழ்வியால்

அனைவருக்கும் தீபாவளி நால்வாழ்த்துக்கள்

                தீபாவளி வந்துவிட்டது அனைவரும் தம்முடைய வருமானத்திற்கு ஏற்ப புதிய ஆடை, ஆபாரணங்கள் வாங்கு வதற்கு தயாரகிக் கொண்டிருக்கிறோம்.
               அம்மா,அப்பா,கணவன்,மனைவி,  குழந்தைகள்,  தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, மாமன் மகள்,மகன்,  அத்தை மகள், மகள், வேலைக்காரர்கள் இப்படி நீண்டு கொண்டோ செல்லும். ஆனால் ஒருவருடைய வண்ணம் ஒருவருக்கு பிடிக்காது.இப்படி பல மற்றங்கள் இருக்கும். யார் என்ன வண்ண ஆடை அணிந்தால் வாழ்வில் நலம் கிடைக்கும். என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்வேம்
      சிலர் பார்ப்பதற்க்கு சுமராக இருப்பர்கள் ஆனால் அற்புதம ஆடை அணிந்து சூப்பராக இருப்பர்கள். சிலர் பார்ப்பதற்க்கு அழககா இருப்பர்கள் ஆனால் ஆடைகள் பழைய கிழிந்த ஆடைகள் அணிந்திருப்பர்கள் அழகற்று கணப்படுவர்கள்.

 " ஆடையில்லா மனிதன் அரை மனிதன் "

              ஒருவருக்கு ஆடை மிக முக்கியம், அவர்களுடைய செயல் திறன், செல்வக்கு, அணியும் ஆடைகளைவைத்தே முடிவு செய்து விடாலம்.
   இவைகளை ஜோதிடத்தின் மூலம் அறிவேம்.

சூரியன் :- கிருத்திகை, உத்திரம், உத்திராடம் -
                     முதன்மை வண்ணம் : -   சிகப்பு,
                      பிற வண்ணங்கள் :ஆரஞ்சு, தங்க
                      நிறம்.

சந்திரன்  :- ரோகிணி, அஸ்தம், திருவோணம் -
                     முதன்மை வண்ணம்   :- வெள்ளை
                     பிற வண்ணங்கள் :-வெளிர் பச்சை,
                     திராட்சை வண்ணம்

செவ்வாய் :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -
                       முதன்மை வண்ணம் :- சிகப்பு,
                       பிற வண்ணம் :-சிகப்பு கலந்த
                       அனைத்து வண்ணங்கள்.

புதன் :- ஆயில்யம், கேட்டை, ரேவதி -
               முதன்மை வண்ணம் :- பச்சை
               பிற வண்ணம் :-மஞ்சள் கலந்த நீலம்
               பச்சை தொடர்புள்ளவை

குரு :- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -
             முதன்மை வண்ணம் :- வெண்மஞ்சள்
             பிற வண்ணம் :- சந்த நிறம், இளம்
             சிவப்பு,

சுக்கிரன் :- பரணி, பூரம், பூராடம் -
                     முதன்மை வண்ணம் : வெண்நீலம்
                     பிற வண்ணம் :-வெளிர்ப் பச்சை,
                     சிவப்பு கலந்த மஞ்சள்

சனி :- பூசம், அனுசம், உத்திரட்டாதி -
            முதன்மை வண்ணம் :- கறுப்பு
             பிற வண்ணம் :-அடர் நீலம், அடர் பச்சை,
             சாம்பல் நிறம், கருமை கலந்த வண்ணம்.

ராகு :- திருவாதிரை, சுவாதி, சதையம் :-
             முதன்மை வண்ணம் :- கருமஞ்சள்
              பிற வண்ணம் :-சாம்பல் நிறம்
           
கேது :-அசுவினி, மகம், மூலம் -
             முதன்மை வண்ணம் :-கரும்பச்சை
              பிற வண்ணம் :-பச்சை கலந்த நீலம்
              மஞ்சள் கலந்த நீலம்.

      கிரகங்கள் வழியே ஏற்படும் தாக்கங்கள் ஒரு மனிதன் பிறக்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்தால் சில நன்மைகளை அடையமுடியும்.
   ஒவ்வொரு கிரங்களுக்கு உறிய வண்ணங்களும் உள்ளாது.

        மேல் கண்ட நட்சதிரங்களில் பிறந்தவர்கள் அதர்க்கூறிய வண்ணங்களை பயன்படுத்தல் நலம் கிடைக்கும்.
          உங்களுடைய நட்சத்திரத்திற்கு எற்ற வண்ணங்களை அதிகம் இக்கும்படி தேர்ந் தெடுங்கள்.உங்கள் உடலுக்கு தேவையான நன்மையான அதிர்வுகளை நீங்கள் அடைய வாய்புள்ளது.
    உங்கள் ஆடைகள்,படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையனை உறைகள்,பல இடங்களில் பயண்படுத்துங்கள்.
                             அனைத்து வண்ணங்களில் மிக அடர்த்தியான வண்ணங்களை தவிர்த்து இளம் வண்ணங்களை உபயோகிப்பது அதிக பலன்களைத்தரும்.

      நீங்கள் பயண்படுத்தும் வண்ணங்களால் பதிப்பு ஏற்படும். பச்சத்தில் தகுந்த ஆலோசனைப்படி வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கவணத்தில் கொள்ள வேண்டும். அனைவரும்.

            யார்? யார் ஆடை அணியும் தன்மைகள் அவர்களின் ஜாதக அமையும் நிலைகளை ஆராவேம்.

4-ஆம்  வீடும் சந்திரனுக்கு தொடர்பிருக்கும் கிரகத்தின் நிலை போறுத்து ஆடை அணிவர்கள்.

சந்திரன் பலவானாகில் சாற்றும்வத்      
                                                           திரமே நன்றாம்
சந்திரனுடனே ராகு சார்ந்திடச் சீலை பீறல்
சந்திரன் வியாழத் தோட சலவையும் சிவப்புமாகும்                                                                      சந்திரன் சுங்கனோடு பலவர்ணம் சாற்ற லாமே

                சந்திரன் ஆட்சி. உச்சம் பலம் பெற்றிருந்தால் ஜாதகர்/ஜாதகி நல்ல ஆடைகளை அணிவர்கள்.
         சந்திரன் குருவுடன் இணைந்திருந்தாலும். பார்த்தாலும்,சலவைசெய்யப்பட்ட சுத்தமான ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் சுக்கிரன் இணைந்திருந்தாலும் பார்த்தாலும் விதவிதமான வண்ணம், புதிய ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் ராகு இணைந்திருந்தாலும் பார்த்தாலும் கிழிந் ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் சனி இணைந்திருந்தாலும் பார்த்தாலும் அழுக்கடைந்த ஆடைகளை அணிவர்கள்

புனைகழல் மதியும் தெய்வமந்திரி புகர்மால் கூடி
அனைவரும் செயும் கூட வச்சிரா பரண மாகும்

         சந்திரனுடன் குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபர்கள் கூடியிருக்க இவர்களுடன் செவ்வாயும் கூடினால் ஜாதகர்/ஜாதகிக்கு பொன் அணிகலன், வைர அணிகலன்களும் அணிவர்கள்.
      ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்திற்கு தொடர்பு உள்ள கிரகங்கள் நிலைகலைப் பொருத்து என்ன வகையான அணிகலன்கள் அணிவர்கள் என்பதை தெளிவாக கணமுடியும். ஆராய்ந்து பார்க்கவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ப.சூரியஜெயவேல்
9600607603