Friday 3 February 2017

தேவகுரு அசுரகுரு

எந்த அணியைச் சார்ந்த வரானாலும்
 
ஆண் ராசி லக்கினாதிபதியின் அணியினர் 1-5-9-& 4-8-12-ல் அமர்வது நலம் பலமாகும்.
3-7-11-&-2-6-10-ல் அமர்வது பலவீனமாகும்.

ஆண் ராசி லக்கினத்திற்கு எதிர் அணியினர் 3-7-11-&-2-6-10-ல் அமர்வது தீமை பலமாகும்
1-5-9-&-4-8-12-ல் தீமை பலவீனமாகிறது.

பெண் ராசி லக்கினாதிபதியின் அணியினர் 1-5-9-& 2-6-10-ல் அமர்வது பாலம் பலமாகும்.
3-7-11-&-4-8-12-ல் நலம் பலவீனமாகும்.  
பெண் ராசி லக்கினத்திற்கு எதிர் அணியினர் 3-7-11-&-4-8-12-ல் அமர்வது தீமை பலமாகும் .1-5-9-&-2-6-10-ல் தீமை பலவீனமாகிறது.

ஆண் ராசி லக்கினத்திதார்க்கு அந்த ராசியதிபதிகள் கிரக அணி எதுவோ அந்த கிரகங்கள் 1-5-9-ஆம் இடங்களுக்கு திரி கோணங்களில் அமைவது நலம் தருவர்கள்.

பெண் ராசி லக்கினத்தார்க்கு அந்த ராசியதிபதிகள் கிரக அணி எதுவோ அந்த கிரகங்கள் 2-6-10-ஆம் இடங்களுக்கு திரி கோணங்களில் அமைவது நலம் தருவர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Sunday 18 December 2016

12-ஆம்-வீடும்-காமமும்

12-ஆம்-வீடும்-காமமும்

    12-ஆம் வீடு நாம்முடைய படுக்கை அரையைக் குறிக்கும் படுக்கை அரையின் சூல்நிலைகளை குறிக்கும் இவைகளை ஆராய்ந்து பார்த்தால் பல நிகல்வுகளை அறியலாம் .

    12-ஆம் வீடு சூரியனின் வீடாகி சுக்கிரன் இருந்தால் இருவரும் பகை என்பதால் எப்போதும் அனுபவிக்க துடிப்பா்கள் திருப்தியின்மை ஏற்படும் .
    12-ஆம் வீடு சந்திரன் வீடனால் மிதமன உறவினை விரும்புவரகள் .
  12-ஆம் இடம் செவ்வாயின் வீடனால்
விகாரமான அதீத உறவினை விரும்புவர்கள்.
    12-ஆம் வீடு புதனின் வீடனால் உடல் உறவில் பலம் குறைந்து இருக்கும் .
  12-ஆம் வீடு குருவின் வீடனால் உடல் சுகமும்,மென்மை கிட்டும் திருப்தியுடன் அனுபவிப்பர்கள் .
    12-ஆம் வீடு சுக்கிரனின் வீடனால் காம விளையாட்டில் திறமைசாலிகள் அனைவரும் விரும்பும் வகையில் நடந்து கொள்வர்கள்.
  12-ஆம் வீடு சனியின் வீடனால் உடல் உறவில் திருப்தியின்மை கருத்து வோறுபடுகள் கீழ்த்தராமன உறவுகள்,எரிச்சல்,சலிப்பு ஏற்படும்

                                    பிற கிரகங்களின் இருக்கும்,இணைவு,பார்வைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும்

ப.சூரியஜெயவேல்
9600607603

இன உணர்ச்சி

                  சந்திரனை சனி,புதன் பார்த்தால் இணைந்தாலும் காலப் போக்கில் ஜாதகர்/ஜாதகிக்கு இன உணர்ச்சியை இழப்பர்கள் .
                  லக்கறனத்தில் சந்திரன் சுக்கிரன்       அமைந்து சனி இவர்களுடன் இணைந்தாலும் ,பார்த்தாலும் ஆசை அதிக முடையவர்கள் போக சக்திகுறைந்தவர்கள்.
      லக்கினத்தில் 6-8-12-ஆம் அதிபதிகளில் ஒருவர்இருந்தாலும்,பார்த்தாலும் அல்லது லக்கினாதிபதி 6-8-12-ல் எதாவது ஒன்றில் இருந்தால் காலப்போக்கில் உடலுறவு காலங்களில் களைப்படைவீர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Saturday 3 December 2016

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை


ஒன்பதாம் அதிபதி எட்டில் இருந்தால் தனது செல்வங்களை வழிப்பறியில் பறிகொடுப்பார்கள் .

         ஒன்பதாம் வீட்டில் பாவிகள் அரசு வகையில் செல்வத்தை இழப்பார்கள்

     குருவின் பார்வை இருப்பின் நலம் தரும்
கணவன்/ மனைவி

              வியாழன் 6-8-12-ல் இருந்தாலும் அல்லது நீச்சம் ,பகை பெற்றோ 7-ஆம் அதிபதியையோ ,7-ஆம் இடத்தையோ பார்ப்பாரானால் கணவர் , மனைவி அவ்வப்போது பிாிவது அல்லது நிரந்தரப் பிாிவர்கள். நாயும் பூனையும் போல குடும்பம் நடத்துவர்கள் .
குடும்பம்

        செவ்வாய் 2-ல் இருந்தாலும் 11-ல் இருந்து 2-ஆம் வீட்டை     பார்த்தாலும் குடும்பத்தில்  ஏதவது குறைகள் இருக்கும் .
      குடும்பாதிபதி நீசமானாலும் மறைந்தாலும் மறைவு ஸ்தானதிபதிகளுடன் இணைந்தாலும் குடும்பத்தில் குழப்பமும்,குடும்ப சுகம் இருக்காது .
       தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது இருப்பின் குடும்பம் ஏழ்மையில் இருக்கும் .
       தனஸ்தானத்தில் தேய் மதிஇருந்தாலும் குடும்பம் ஏழ்மையுல் இருக்காது .
     குடும்பாதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் , பாதகாதிபதி குடும்பத்தில் இருந்தாலும் அந்த குடும்பத்தில் அருளும், பொருளும் , சுகமும் இருக்காது .
இல்லறம்

     1-7-ஆம் அதிபதிகள் இயற்க்கை சத்ருக்களானால் பொதுவாக மணவாழ்வில் நிம்மதி குறையும்.
       தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது குடும்பம் ஏழ்மையானதாய் இருக்கும் .
   தேய் மதி இரண்டில் இருக்க பார்க்க குடும்பம் ஏழ்மையாகும்
    4-ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் , 2-ஆம் அதிபதி மறைந்தாலும்,நீசக் கிரக இணைவு பெற்றாலும் , சுக்கிரன் மறைவு பெற்றாலும் ஜாதகர் / ஜாதகிக்கு குடும்பம் அமைவது கடினம்

ப.சூரியஜெயவேல் 

Sunday 6 November 2016

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம் !!

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம்

       சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .
          சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும் .திரு.காமராஜா் அவா்களுக்கு கன்னியில் ராகு அதற்கு 5-ல் மகரத்தில் சனி பெருந்தலைவா் ஆனாா்.
  சனிக்கு 2-ல் சந்திரனும்,சனிக்கு 3-ல் குருவும் அதாவது சனி சந்திரன் குரு  வாிசையாகவே அல்லது மறிமறி வாிசையாக இருந்தால் சிறப்பன ராஜயேகம் அமையும்.திரு காமராஜா் அவா்களின் ஜாதகத்தில் மகரத்தில் சனி,கும்பத்தில் சந்திரன்,மீனத்தில் குரு அமைந்து ராஜயோகத்தை தந்தது .
      சந்திரனுக்கு 1-4-7-10-ல் குரு,ராகு கூடியிருந்தால் யோகத்தை அளிக்கும் முரசயோகம் .
      சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .
       சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த புகழ் பெற்ற அரச யோகம் .
       சந்திரனுக்கு 10-ல் ராகு இருந்தால் ராஜயோகம் தரும் .
     சந்திரனுக்கு 6-7-8-ல் புதன் சுக்கிரன் இருந்தால் ராஜயோகம் .
       லக்கினாதிபதி நின்ற ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திாிகேணங்களில் இருந்தால் ராஜயோகம் .
     ராகுவுக்கு 3-ல் குரு ,11-ல் சுக்கிரன் இருந்தால் அரசயோகம்.    
      சூாியனுக்கு 7-ல் சுக்கிரன் இருந்து லக்கினத்திற்கு 7-ல் சுபா் இருந்தால் யோகமுள்ள மனைவி அமைவாள்.
       சூாியனுக்கு 3-6-9-12-ல் சந்திரன் இருந்தால் வாிஷ்டயோகம் ஞானம், வித்தை,செல்வம்,புகழ்,சுகம் கிட்டும் .
      சூாியனுக்கு முன் குரு இருந்தால் வித்வன் ,கவிஞா் அமையும்.
           சூாியனுக்கு பின் செவ்வாய் இருந்தால் பராக்கிரமசாலியாவன்.  
   சனிக்கு 6-7-8-ல் சுபா்கள் இருந்தால் ஆயுள் அதிகம் .
செவ்வாய்க்கு 2-ல் அல்லது 12-ல் புதன் இருந்தால் நாலாவிதமன வித்தையுள்ளவா் பல சாஸ்திரங்கள் அறிந்தவா்கள்.
   கடக லக்கினத்தில் சந்திரன் இருக்க சப்தமஸ்தானமான மகரத்தில் செவ்வாய் இருந்தால் ராஜயோகம் .
       லக்கினாதிபதி சந்திரனுக்கு 5-ல் அல்லது 10-ல் இருந்தால் ராஜயோகம் .
   சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் நின்றால் பொருள் கிட்டும் ,கன்று காலிகள் ,வாகனம் கிட்டும் .
     
     
   
  

Wednesday 19 October 2016

சுக யோக வாழ்வு

சுக - யோக - வாழ்வு 


ஒல்வது அறிவது அறிந்து அதன் கண்தங்கி
செல்வார்க்குச் செல்லாதது இல்
    எந்த ஒரு செயலில் இறங்கினாலும் முதலில் தன்னால் அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கமுடியும்.என்ற அளவைத் தொிந்து கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயம் செய்து சாதனை செய்தால் சுக போக வாழ்வு அமையும் .
   மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சுக வாழ்வு,வசதிவாய்புகள் வசிக்கும் வீடு,பூமி லாபம்,வாகனம், கல்வி,தொழில் இவைகள் நாமது திறமை தகுதிக்கு ஏற்ப அமையும் . அதை அறிவது எப்படி என்பதை ஆராய்வோம் .
            சுகம் தரும் பாவம் நான்காம் பாவமகும் ஒருவருடைய வாழ்வில் பெறும் சுகம் அனைத்தையும் குறிக்கும்.
தாயினால் பெறும் சுகம் ,
ஆடையால் பெறும் சுகம் ,
கல்வியால் பெறும் சுகம்,  வீடு,பூமியால் பெறும் சுகம,
கால் நடைகலால் பெறும் சுகம்,
விவசாயத்தால பெறும் சுகம்,
வாகனத்தால் பெறும் சுகம்,
உறவால் பெறும் சுகம், உதவியாளர்களால் பெறும் சுகம், வசதி வாய்ப்புகளால் பெறும் சுகங்களை அறியலாம்.
   ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீடு,வீட்டின் அதிபதியின் பலத்திற்கு ஏற்ப அனைத்து அமையும்.யாருக்கு சுக வாழ்வு அமைபும் என்பதை ஆராய்வோம் .
நான்கம் வீட்டின் காரக கிரகங்கள்
நான்காம் வீடும் சந்திரனும் தாய்,தாய் நலம்,தாயால் பெறும் வசதி வாய்ப்பு
நான்காம் வீடும் செவ்வாயும் சொத்துகளையும் ,பூமி லாபம்.
நான்காம் வீடும் புதனும் கல்வி,வசதி வாய்புகள்,நண்பர்கள்.
நான்கம் வீடும் சுக்கிரனும் வாகம், அலாங்கார வீடுகள் அறியலாம்.
தோன்றிய வியாழன் நாலாம்
                           தானமே சுகத்தை நல்கும்
வான்றிய மதியம் நாலாம் தானமும்
                                                 மாதா செய்கை
ஆன்றெழ சுங்னாலு மாகிலா சுகந்த
                                                              அஞ்சில்
போன்றிடு வாகனத்தைப் பூஷணம்
                                                        என்று பாரே
       குரு 4-ஆம் இடத்தைக கொண்டு ஜாதகனுக்கு வரும் சுகத்தைப் பற்றிக் கணக்கிட வேண்டும்.சந்திரன் 4-ஆம் இடம் தாயைப்பற்றி கணக்கிட வேண்டும்.சுக்கிரன் 4-ஆம் இடத்தைக் கொண்டு வாகனம் சுக வாழ்வையும் கணக்கிட வேண்டும்.
4-ல் நறுமணம் ,ஆபரணங்கள், வாகனம் போன்றவற்றைப் பற்றி கணக்கிடவேண்டும்.
கிாி நாலுக் குடையோனைப் பாரு
                                                                    - அவர் கிாி நாலில் திாிகோணம் கிாியிலேற
பெருங் கல்வி கன்று காலி-சென்மன்
பிரபலமாகவே வாழ்வாண்டி தோழி
                                                                  - சங்கர
            நான்காம் அதிபதியின் நிலை அறிந்து 4-ல் அல்லது 1-5-9-ல் இருந்தால் ஜாதகர்க்கு உயர் கல்வி , கன்று , மாடு,ஆடு,பூமி லாபம் கிட்டுமர்அடைவர்கள்.
பேசிடும் நாலாமாதி பெலத்திாி  
                                                கோண மேறில்
காசியத்திரையே போவான்          
                கணக்கனும் பார்வையுற்றால்
தேசமும் சுற்றி மன்னன்
                    திசையெட்டும் பேருமோங்க
வாசமாயிருக்கம் பூவில்
                 வணங்குவாாிவரைத்தனிலே
             நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் காசி யாத்திரை புனித யாத்திரைகள் செல்வர்கள். புதன் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி எட்டு திசைகளில் புகழ் அடைவர்கள் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
சுவாமி நித்தியானந்தர் ஜாதகத்தில் மீன லக்கினம் நான்காம் அதிபதி புதன் விருச்சிகத்தில் 9-ல் உள்ள
இவாின் இன்றைய நிலை அனைவருக்கும் தெறியும் .
சுக நிதி யோகனையும் ப
ஜொலிக்கும் திாி கோணம் கேந்திர
                                                                        மேற
அகம் பனை நிதி மிகவுண்டு-
                                                              சென்மன்
அவணியில் நற் போ் கொள்வன்  
                       ஆடச்சொன்னான்டி-சங்கர
4-9-ஆம் அதிபதிகளின் நிலைகளை ஆராய்ந்து 1-5-9-அல்லது 4-7-10-ல் இருந்தால் ஜாதகா்க்கு பொன், பொருள் செல்வங்கள் கிடைக்கும். உலக அளவில் பூகழ் அடைவன்.
தோன்றிய நாலில் நாதன்    
                                          சுபக்கிரகங்களாக
வான்றவன் அல்லால் இராசி
                தன்னையே அறிவால் நோக்க
ஊற்றிய விாழன் நல்ல உயிா்  
                                           பலனாகி வந்தால் வேன்றிடு பந்துக் கெல்லாம் இவன்
                                             எஜாமானாவான்
       நான்கம் இடத்தின் அதிபதி சுபக் கிரகங்களுடன் இருக்க அல்லது நான்காம் இடத்தை பார்த்தாலும்.
குரு பலம் பெற்றிருக்க ஜாதகா் மன்னவர்க்கு மன்னன சக்கரவா்த்தி யாகத்திகழ்வாா்கள்.
     நான்காம் அதிபதி ஆட்சி பெற்று லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சம்பந்த் பெற்று இருந்தால் சொந்த வீடு , வாகனம் ,நண்பா்களும் உதவுவா்கள்
நான்காம் இடத்திற்கு இருபுறபமும் சுபபா்கள் நின்றிருக்க அன்னைக்கு ஆயுள் அதிகம்.
   நான்கிற்குடையவனும் சுக்கிரனும் இணைந்து லக்கினத்திற்கு பத்தில் இருந்தால் வாகன சுகம் அடைவா்கள்
    நான்காம் அதிபதிபதியும் ,சுக்கிரன் கேந்திர,திகோணங்களில் பலமுடன் இருந்தால் ஜாதகா்கு நல்ல வீடு அமையும்.
      நான்காம் வீட்டிற்கு இருபுறமும் சுபா்கள் இருக்க,நான்காம் அதிபதி , குரு,சுக்கிரன் பலம் பெற்றிருப்பின் , கேந்திர,கோணங்களில் இருந்தால் அருமையான அழகன வீடுகள் அமையும் .
     குரு,சுக்கிரன் இணைந்து நான்கில் இருந்தால் ஜாதகா்,ஜாதகி புகழ் பெற்ற கவினாவா்கள.அழகன வீடுகள் .அரசு உயா் பதாவிகள் அமையும்.
     சந்திரனும் நான்காம் அதிபதியும் 1-4-7- 10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் பல வாகன யோகங்களையும்,செல்வாக்கும் ஏற்படும்.குருவின் பாா்வைக்கு ஏற்ப பலன் அமையும்.
    சுகஸ்தானாதிபதியான நான்காம் அதிபதி குருவுடன் 1-4-7-10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் ஜாதகா்/ஜாதகிக்கு சகலவிதமான சுக யோக/போகங்களையு

Thursday 15 September 2016

திருமணம்

திருமணம்


திருமணம் என்பது திரு மாியதைக் கூரிய சொல் ,மணம் என்றால் கலத்தல் ,கூடுதல்,பொருத்துதல் என்று பொருள். ஆணும்,பெண்ணும் உடல்ரீதியாக உளரீதியாக இணைவுக்கு திருமணமாகும்.

   திருமணச் சடங்குகளின் காரண காாியங்களை நாம் சிலவற்றை அறிந்து கொள்வேம் .

தாலி : 

பொய்யும் வழுவு தோன்றிய பின்னர்
ஐயர்யாத்தனர் கரணம் என்ப
    பழங்கலத்தில் அணிகலங்கள் இல்லாதிருந்த போதும் ஒழக்கமுடன் இருந்த போது .
     தொல்காப்பியர்  கூற்றுப்படி பின்னாளில் மனித சமுதாயத்தை நெறிபடுத்த தாலி கட்டுதல் போன்ற சடங்குகளை மேற்கெண்டனர்.
   தாலம் என்பது பனையோலையைக் குறிக்கும் அந்தப் பனையோலையை ஒழுங்கு சய்து மஞ்சள் தடவி ,அதில் பிள்ளையர்  சுழியிட்டு இன்னார் மகளை ,இன்னாா்மகள் மணந்து கொண்டார்  வாழ்க ! என்றெழுதி ,அதை சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோா்த்து மணமகள் கழுத்தில் தாிப்பர் .தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் இதற்க்கு தாலி என்ற பெயா் வந்தது.நாகாரீகம் வளா்ந்தபிறகு பனை ஓலை தண்ணீர் பட்டு நைந்து போவதால் தாலியைத் தங்கத்தினால் செய்து அணிந்துக்கொண்டனர்
                   மனைவிக்கு கணவானே தெய்வமாதலின் கணவனாருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் ஆணிந்துகொண்டனர்.
       பெண்களுக்க திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிாினும் சிறந்தது.பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும் திருமாங்கல்யத்தை மட்டும் கழற்றக்கூடது திருணத்திலே மணகள் கையை மணகன் பற்ற வேண்டும்.அதற்குப் பாணிக்கிரகம் என்று பெயர்(பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியைப் பார்த்து அவள் திருமணமானவள் என்பதை ஆண்கள் தொிந்து கொள்வான்.)

முன்று முடிச்சு : மணமகள் கழுத்தில் மணமகன் மங்கல நான்பூட்டும்போது மூன்றுமடிச்சு இடுவார் இதன் தாத்பாியம் கணவன் மனைவி இருவரும் மனமொழிமெய் ஆகிய தாிகரணசுத்தியோடு இருக்க வேண்டும் என்பதாகும்.
பெண் தலைவகிடு எடுக்கும் போது நேர்வகிடுதான் அந்நாளில் எடுப்பார்கள் *துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதி * என்று திருமுருகாற்றுப்படை கூறுவது சமமாக இருபிாிவாகக் கூந்தலைப் பிாித்துச் சடை பின்னுவாரம் ,இதன் குறிப்பு கணவனுக்கு வரும் சுகதுக்கத்தில் சாிபாதி எற்றுக்கொள்வேன் என்பதாகும்..
மங்கல நாண் அணிவிக்கும் போது மணமகளை இடப்பாகத்தில் அமர்ரச் செய்துதிட வேண்டும் .அர்த்தநாதீஸ்வா் வடிவம் சக்திக்கு சிவபெருமான் இடப்பாகத்தை தாந்துள்ளார் லெட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களின் இடது பக்கத்தல் அவரவர் துணைவியார்கள் அமர்ந்திரப்பதைக் காணலாம் .

அட்சதை : திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள் . ஷதம் என்றால் குத்துவது என்று பொருள் அகரம் என்றால் அன்மைப்பொருளைத் தொிவிக்கிறது .அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்ற பொருள்.குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றால் உள்ளாது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து,முறையாக மஞ்சள்பொடி தூவி , பன்னீர் தெத்து அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவன்களை உண்டாகும் .

அம்மி மிதித்தல் : மணமக்கள் அக்னியை வலமாக வருகிற போது வடபுறத்திலே ஒரு கல் இருக்கும் , மணமக்களின் வலது பாதத்தை அந்தக்கல்லின் மீது வைக்குமாறு மனமகள் செய்வாள் ,அதன் பொருள் " இந்தக்கல்லைப்போல் உறுதியாக இரு "என்பதாகும் (அதிக பாரம் கல் தாங்கும் .)இன்பம்,துண்பங்களில் ஒரே மதிாியாக இருக்கவேண்டும் .

அருந்ததி பார்த்தல் : அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள் , அருந்ததி (அருந்ததி கணவனின் சொல்லுக்கு கட்டுப் பட்டாவள் கற்புடையவள் மனைமான்புடைய மகளி ரெல்லாம் தினமும் வணங்கும் பெருமை உடையவள் ) இன்னும் இவ்வுலகில் திருமணம் ஆனதும் கணவனாாின் கைத்தலத்தைப் பிடித்து மணவறையைச்சுற்றிவரும் சமயம் மணமகள் அருந்ததியை நினைத்து வாழ்த்தி வணங்குவது வழக்கம்.இச்சடங்குகள் அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல் என்று வழங்கப்படுகிறது.
      கற்பு நிலை குலைந்த அகலிகை கல்லாய் மண்ணில் இருந்தாள்,நிலைகுலையாத நட்சத்திரமாய் விண்ணில் உயர்ந்தாள்,ஆதலால் இழிவுக்கும் உயர்வுக்கும் உதாரணமாக ஒவ்வொரு மணமகளுக்கும் இவ்வுண்மை உணா்த்தப்படுகிறது .
     ( 2700 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றி வரும் இயல்புடைய மண்டலத்திற்கு சப்தாிஷி மண்டலத்தில் ) அதன் முற்பகுதியின் அடுயில் இருப்பது வஷிட்ட நட்சத்திரம் ,அதனை அடுத்து நுண்ணியதாய் தெறிவது அருந்ததி நட்சத்திரம் .இதனை மணமகள் தலைநிமிா்ந்து பார்ப்பது அருந்ததி பார்த்தல் என்பார்கள்.

மெட்டி அணிதல் : எதிாில் வரும் ஆண்கள் திருமணமானவர்கள் என்று பெண்கள் (அடுத்தவா்) அறிந்து கொள்ள ஆண்களுக்கு மெட்டி அணிவிப்பார்கள். (ஆண்களுக்கு மட்டுமே மெட்டி )


Thursday 21 July 2016

சுகர் நாடியில் அரசியல் யோகம்

இராவியயும்புதனுஞ்சுகத்திலேயிருக்க
       விந்துவுஞ்சனியும்பத்திடத்தே
இருக்கிலக்கினத்திற்குனுறக்குருவங்
      கிசத்திலேசுக்கிரனிருக்கச்
சிரமிசையரசனிருக்கமாமதியஞ்
     சிறந்துபூரணவடிவடையத்
தீயர்சட்டாட்டவியத்திலேமறையச்
      செழித்துலகுதித்தசாதகவான்
அரசனாயுகமடிதொழப்பலநா
      ளாயுளோடிருந்துநாமகளும்
அலைகடல்மகளுந்தனதிடம்வாழ
      வன்னசத்திரம்பலநடத்தி
வரைபுரைதிருத்தோளிடைப்பிரதாப
     மாமகநண்டஞ்செயக்கனக
மணிமுடிசூடியரியணைமேவி
   மகத்துவம்பொருந்திவாழ்வானே   428
        சூரியனும்,புதனும் நாலில் இருக்க, வளர் பிறைச் சந்திரனும்,சனியும் கூடி பத்தில் இருக்க, லக்கினத்தில் செவ்வாய் இருக்க , குருவுக்கு 1-5-7-ல் சுக்கிரன் இருக்கவும் , பாவர்கள் 6-8-12-ல் இருக்கப் பெற்றவர்கள் .உலக பூகழ்  பெற்ற அரசனாக நீண்ட ஆயுளோடு தனம் தர்மஞ் செய்து மகத்துவம் பொருந்தி வாழ்வர்கள் .

தலையிறைநான்கினிறைநிதிறையித்
     தலைவர்கண்மூவரும்பாக்யத்
தலத்திலேநிலைத்துத்தசத்திறைதலைமேற்
       சரித்துநல்லேனார்களெல்லோரும்
மறையிலேகருணைத்திருக்கணோக்
கேற்றி
       மற்றவரற்றவராகி
வாய்ந்திடக்கண்டசாதகன்புவிக்கு
      மன்னவனேயென்பர்வல்லோர்
நிலையிறைவாபத்திறைநிதியிறையிந்
     நிருபர்ஊகண்மூவரும்பத்தி
னிற்கவத்தசத்தோனிலக்கினத்தலத்தே
     நேருறத்தீயவர்நோக்கந்
தொலைவுறநல்லோர்கரூணையாரமுதந்
      தோய்ந்துறக்கிடைத்தசாதகவான்
சுடர்முடிசூடியரியணையேறுந்
       துரகதகெசரததுரையே      429
       லக்கினாதிபதியும் ,4-ஆம் அதிபதியும் ,   9-ஆம் அதிபதியும்,மூவரும் கூடி 9-ல் இருக்க,10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க சுபர்கள் பார்க்கப்பட்டால் ஜாதகர் இப்பூமிக்கு அரசனாவார்கள்.
         லக்கினாதிபதியும்,9-ஆம் அதிபதியும், 11-ஆம் அதிபதியும் மூவரும் 10-ல் இருக்க , 10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க , இவரை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருக்க பிறந்த ஜாதகர் நவரத்தினம் பதித்த சிம்மாசனத்தில் அர்ந்து இப்பூமி முழுதும் அரசாள்வான்.

பண்ணவர்சாமிதானவர்சாமி
      பாக்கியசாமியிம்மூவர்
பரவறுகோணகேந்த்ரமாளிகையிற்
      பதிவுறவவ்வர்க்கவையே
திண்ணமாமாட்சியுச்சங்களாகச்
      சிறந்திடத்தீயவர்பார்வை
திகைக்கப்பாலொழியநல்லவர்கரணை
      செழித்திடக்கிடைத்தசாதகவான்
வண்ணமாமகுடஞ்சூடியிராச
       மாளிகையரியணைமேவி
மதகெசதுரகரதபதாதிகள்சூல
     வாழ்விடைத்தாழ்விலாதிருந்து
தெண்ணிலாவனையசத்ரசாமரபூ
       சிதையுறீஇவதைபுரியாது
செந்தனிப்பெருங்கோல்செலுத்துவா
னென்று
       செப்புவரொப்புவர்தீர்ந்தோர்     430

குருவும்,சுக்கிரனும்,9-ஆம் அதிபதியும் முவரும் தனித்தனியாக கேந்திர, கோணங்களில் ஆட்சி உச்சமாக இருக்க இவர்களை பாவர்கள் பார்கமால் இருக்க பெற்ற ஜாதகர் ரத்தின மகுடம் சூடி சிம்மாசனத்தில் அர்ந்து அரசள்வார்கள்